Friday, May 05, 2006

காளையை அடக்கிய முத்து(தமிழினி)-பரபரப்பு

முரட்டு காளையை அடக்கிய முத்து (தமிழினி). பரபரப்பு. பதட்டம்.ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவம்.இதயம் பலவீனம் உடையவர்கள்,ரத்தத்தை பார்த்தால் மயக்கம் போடுபவர்கள், ஆஸ்பத்திரி வாசம் பிடிக்காதவர்கள் படிக்கவேண்டாம்.அப்புறம் முதலில் ஏன் சொல்ல வில்லை என்று வருத்தப்படக்கூடாது என்பதால் முன்னரே சொல்லிவிட்டேன்.இது நான் ஜல்லிக்கட்டில் கலந்துக்கொண்ட அதிரடி அனுபவம்.


நான் முதலில் வேலைக்கு சேர்ந்த அந்த ஊரில் பல நாட்களுக்கு பின் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழா என்பதால் இளவட்டங்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. பொதுவாக இதுப்போன்ற உள்ளூர் விழாக்களின் போது யாரும் வங்கிப்பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள்.நாங்கள் பழைய பெண்டிங் ஃபைல் எல்லாம் பார்த்து காலத்தை ஓட்டுவோம். ஊர் பெரியவர்கள் எங்கள் எல்லோரையும் ஜல்லிக்கட்டு பார்க்க அழைத்தார். நாங்கள் நாலேபேர் தான் ஊழியர்கள் என்பதாலும் நான்தான் இருந்ததிலேயே இளவட்டம் என்பதாலும் என்னை மட்டும் மேனேஜர் அனுப்பினார்.


நானும் போய் ஓசி பிரியாணியை ஒரு கை பார்த்துட்டு அங்கே போனேன். ஒரு சிறிய தெருவின் ஒரு பகுதியை அடைத்து மேடை போடப்பட்டிருந்தது. அந்த மேடைக்கு அடியில் வாடி வாசல். வாடி வாசல் என்னவென்றால் ஜல்லிக்கட்டு மாடு வெளியே வரும் இடம்.அங்கிருந்து மாட்டை விரும்புவோர் பிடிக்கலாம்.மதியம் சுமார் 12 மணியளவில் ஜல்லிக்கட்டு ஆரம்பம் ஆனது. அனுபவசாலிகள், என்னை மதியம் இரண்டு மணிக்குமேல் வந்தால் போதும் என்றிருந்தார்கள். ஆனால் நான் ஆர்வத்தில் (பிரியாணி) முதலிலேயே போய்விட்டேன்.நான் அப்போது ஒரு சாதாரண கிளார்க் தான் என்றாலும் பேங்க்காரர், பேங்க்காரர் என்று பயங்கர மரியாதை இருந்தது ஊரில்.


கேஷ் கவுண்ட்டரில் பணத்திற்கு மத்தியில் அமர்ந்து கேஷ் எண்ணுவதை பார்த்துவிட்டு அத்தனை பணமும் என்னுடையது என்று கிராம மக்கள் தவறாக நினைத்துக்கொள்வதால் உருவாகும் மரியாதை இது என்பேன். நான் அப்போது பேச்சிலர் ஆக் இருந்ததும் ஒரு காரணம் என்று எங்கள் மேனேஜர் சொல்லுவார். என் பெயரை சொல்லி பெண்ணை பெற்றவர்களிடம் டெபாஸிட் வாங்கிய கில்லாடி அவர்.நான் புரட்சி(?) செய்தவுடன் பலபேர் அந்த ஊர்ல அப்செட் ஆனதாக சொல்லி என்னை ஓட்டுவார் அவர்.



வாடிவாசலுக்கு அருகில் ஊர் பெரியவர் ஒருவரின் மொட்டை மாடியில் சேர் போட்டு என்னை அமர வைத்தனர்.மேடைமேலே ஒரு ஆள் கமெண்டரி கொடுத்துவந்தார்.அந்த ஊர் பஞ்சாயத்து சேர்மனின் மகன் என்னுடன் கோவை ராமகிருஷ்ணா மிஷனில் படித்தவன் ஆதலால் அருகில் அமர்ந்து ஜல்லிக்கட்டின் பல நுணுக்கங்களை என்னுடன் பேசிக் கொண்டிருந்தான்.



கமெண்டரி கொடுக்கும் ஆளின் முக்கியத்துவத்தை நான் அப்பொது தான் தெரிந்துக் கொண்டேன். தொடர்ச்சியாக நாலு ஐந்து மணிநேரம் பேசக்கூடியவனாக இருத்தல் வேண்டும். நம்முடைய கிரிக்கெட் கமெண்டரி போல அல்ல. டோனி கிரெய்க் மாதிரி உச்சத்ஸதாயில் கத்தவேண்டும். அனைத்து மாடுகளை பற்றிய விளக்கங்களை தெரிந்திருக்கவேண்டும். அப்போதைக்கப்போது சரக்கு (சாராயம் தான் அய்யா) உள்ளே இறங்கிக்கொண்டே இருக்கவேண்டும்.ஜல்லிக்கட்டை உற்சாகமாக கொண்டு போவதில் அவரின் பங்கு இன்றியமையாதது.


முதலில் கோயில் மாடு விடப்பட்டது. யாரும் அதை தொட மாட்டார்களாம். சாவதானமாக வெளியே வந்த அது மக்கள் கூட்டத்தை பார்த்து மிரண்டு ஓரமாக ஒதுங்கியது. பிறகு சில கன்றுகுட்டிகள் விடப்பட்டன.இந்த கன்றுகுட்டிகள் எல்லாம் ரியல் சிட்சுவேஷனில் ட்ரெயினிங் எடுக்கின்றனவாம். ஆரம்பத்தில் கூட்டமே இல்லாதிருந்த தெரு கொஞ்சம் கொஞ்சமாக களை கட்டியது.


சற்று அளவில் பெரிய காளைகள் பாய்ந்து வர ஆரம்பித்தன.கிழவர் முதல் குமரர் வரை அனைவரும் வீதியிலேயே பயமில்லாமல் நின்றுக்கொண்டு இருந்தனர்.அனைத்து பெண்களும் அருகில் உள்ள வீடுகளின திண்ணையிலோ மொட்டைமாடிகளிலோ இருந்தனர்.பஸ் ஸ்டாப்பிலோ டீக்கடையிலோ நான் அன்றாடம் பார்க்கும் குப்பன், சுப்பன், கோவிந்தன் எல்லோரும் மாட்டை ஒரு கையில் பிடித்து தூக்கி எறிந்து விடுபவர்களை போல் வேட்டியை தார்ப்பாய்ச்சி கட்டிக்கொண்டு நின்றிருந்தனர்.சிலர் நான் மாடியில் அமர்ந்திருந்ததை பார்த்து நக்கலாக சிரித்தாற்போல தெரிந்தது. ஆனால் நான் தெளிவாக இருந்தேன்.


பலபேரின் லட்சியம் ஓடிவருகிற மாட்டின் முதுகில் ஒரு தட்டு தட்டிவிடுகிற ஆர்வம் தான்.ஒரு முறை ஒரு தட்டு தட்டிவிட்டவுடன் லட்சியத்தை சாதித்த நிறைவுடன் பெண்கள் அமர்ந்திருக்கிற பகுதிகளை பலர் ஏறிட்டு பார்ப்பதும் நடந்தது. கொஞ்ச நேரத்தில் கொம்பு கூர் சீவப்பட்ட முரட்டு காளைகள் வர ஆரம்பித்தன. விவரமான பலர் ஒதுங்க ஆரம்பித்தனர். ஆனால் தெருவில் கூட்டம் சேர்ந்துக்கொண்டேதான் இருந்தது.


சுற்று வட்டார அனைத்து கிராமங்களிலும் இருந்து பல வீரர்களும் வந்து களத்தில் குதிக்க சூழ்நிலை பரபரப்பானது. இதற்கிடையே ஒரு நண்பரின் தூண்தலுக்கேற்ப நானும் கீழே இறங்கிச்சென்று இருப்பதிலேயே சாதுவாக ஓடி வந்துக் கொண்டிருந்த ஒரு மாட்டை தேர்தெடுத்து அதன் முதுகில் தட்டினேன். திரும்பிப்பார்த்த மாடு (அந்த செகண்ட் என் மூச்சே நின்னுடுச்சிய்யா) என்னை மன்னித்துவிட்டேன் என்பதுபோல பார்த்துவிட்டு ஓடியது.பெண்கள் பகுதியை ஏறிட்டு பார்க்கவேண்டும் என்று தோன்றிய ஆவலை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு (பேங்க்காரர் அல்லவா) மீண்டும் மாடியில் அடைக்கலமானேன்.



நண்பர் கூறிக்கொண்டிருந்தார். வழக்கமாக இந்த மாதிரி ஜல்லிக்கட்டுகளில் மாடு பிடிக்க வருபவன் மாட்டிடம் இருந்து தப்பிவிடுவானாம். வேடிக்கை பார்க்க வருபவனை மாடு தூக்கிவிடுமாம். மாடு பிடிக்க வருபவன் எப்படி சிக்கலானால் மாட்டிடம் இருந்து பாய்ந்து தப்பிக்கவேண்டும் என்று அறிந்திருப்பான்.வேடிக்கை பார்க்க வரும் ஆர்வகோளாறுகள் டெக்னிக் தெரியாமல் மாட்டிக்கொண்டு விடுமாம்.


பல மாடுகள் வாடிவாசலை விட்டு வெளியே வந்தவுடன் ஒரே ஓட்டமாக ஓடிவிடும். இந்த இடத்தில் ஒரு சுவையான சொற்பிரயோகம் உள்ளது. அதுதான் "நின்று விளையாடுதல்" என்பது. அதாவது சில மாடுகள் வாடி வாசலை விட்டு வெளியே வந்தவுடன் நேராக கூட்டத்தை வி்ட்டு வெளியே ஓடாமல் அங்கேயே நிற்கும் சுத்தி சுத்தி நடக்கும். நமது வீரமறவர்களும் அதை சுற்றி சுற்றி ஓடுவார்கள். மாடு அசந்த நேரம் பாய்வதற்கு. அந்த கணம் உண்மையிலேயே நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டும்.நின்று விளையாடும் மாடுகள் தான் சூப்பர் மாடுகள்.


ஊரில் உள்ள அனைத்து மக்களும் அந்த ஒரு தெருவில் கூடி இருக்கும்போது சூழ்நிலை மிகவும் எலக்ட்ரிஃபைடாக இருக்கும். வாடி வாசலில் மாடு வெளியே வந்தவுடன் அதன் தோளை பிடித்து தொங்கிக்கொண்டுவிடுவர் சிலர். அது அவர்களையும் தூக்கிக்கொண்டு தெரு முனை வரை கொண்டுவரும். தெருமுனை வரை பிடியை விடாமல் விழாமல் தொங்கிக்கொண்டு வந்தாலே அவன் வீரன் என்பதை மக்கள் ஒத்துக்கொண்டு விடுவார்கள்.



பிறகு தெருமுனையில் மாட்டின் சொந்தக்காரன் ஒரு பெரிய சுருக்கு கயிறுடன் நிற்பான். ஓடிவரும் மாட்டின் கழுத்தில் போட்டு மாட்டுடன் சிறிது தூரம் ஓடி மாட்டை நிறுத்துவான்.


ஒரு மாடு பிடிபட்டுவிட்டால் அந்த மாட்டின் சொந்தக்காரனுக்கு அதைவிட அவமானம் ஏதுவுமில்லையாம். அவனுடைய சொந்த வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் அதன் பிறகு நசிவுதானாம். இதுவெல்லாம் மூட நம்பிக்கைகள் என்று புரிந்தாலும் நான் ஆர்க்யூ செய்யவில்லை.


நான் பார்த்த அன்று பெரிதாக காயம் என்று யாருக்கும் இல்லை. ஒரு ஆளை மட்டும் மாடு சுமார் 100 மீட்டர் தூரம் தரையில் இழுத்து சென்றது. மயக்கமாகி கோமா ஸ்டேஜுக்கு போன அந்த நபர் இரண்டு நாள் கழித்துத்தான் கண் விழித்ததாக கேள்விப்பட்டேன்.


இரண்டு மணிநேரம் சுவாரசியமாக பார்த்துவி்ட்டுத்தான் வந்தேன்.நான் எந்த மாட்டை புடிச்சேன்..நீங்க வேற....தொட்டு பார்த்ததற்கே ஆடிப்போயிட்டேன்.


ஜல்லிக்கட்டை பற்றி சி.சு.செல்லப்பா எழுதிய வாடி வாசல் என்ற நாவலை பற்றி நான் ஏற்கனவே எழுதியுள்ள பதிவு இங்கே....

39 comments:

அருண்மொழி said...

Super Star முத்து வாழ்க!!!. (ரஜினி ராம்கி object பண்ண மாட்டார் என்று நினைக்கிறேன்)

என்ன ஒற்றுமை.

அவரும் முரட்டுக்காளையில் act கொடுத்திருக்கிறார். நீங்களும்.

அவரும் கர்நாடகா. நீங்களும்.

அவரும் முத்துவில் act கொடுத்திருக்கிறார். உங்க பேரே அதான்.

எனவே நீங்களே எங்கள் SUPER STAR (ஹி ஹி ஹி ). அப்படியே அந்த தளபதி postஐ நம்பளுக்கு தள்ளிவிட்டால் நல்லா இருக்கும்)

தருமி said...

முதல் பாராவைப் படித்ததும் உட்கார்ந்திருந்த சேரின் கைப்பிடியை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு படிக்க ஆரம்பிச்சால்....

பொன்ஸ்~~Poorna said...

என்ன முத்து, இப்படி சிம்பிளா முடிச்சிட்டீங்க.. ஒரு கன்னுக்குட்டியையாவது அடக்குவீங்கன்னு பார்த்தேன்.. :)
பரபரப்பு.. ம்ஹும்.. !!!

- யெஸ்.பாலபாரதி said...

உங்க பார்ட்டியின் கொ.ப.செ நான் தானாக்கும்...
நீங்க என்ன கொடுக்குறது நானே எடுத்து கிட்டேன்..
ஆனாலும் கலக்குறீங்க தலிவா... :)

கவிதா | Kavitha said...

வேடிக்கை தான் பார்த்தீங்களா... ?

Muthu said...

கவிதா,

மாட்டை தொட்டு பார்த்தேனாக்கும்...

அருண்மொழி said...

கன்னுக்குட்டி அடக்குவது தலைவர் வேலையில்லை. அதுக்கெல்லாம் நிறைய இளிச்சவாய் Fans இருக்காங்க. என்ன தலைவா சரிதானே?

Muthu said...

ARUNMOZHI,

நோ ஃபேன்ஸ்..ஒன்லி ஃபிரண்ட்ஸ்

ஓகே.யா

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா... அருண்மொழி..
தளபதி போஸ்ட்-ஐ வாங்காம விடுறதில்லைன்னு கங்கனம் கட்டுன மாதிரி இருக்கு...
;)

சந்திப்பு said...

முத்து படிக்க ரொம்ப சுவரா°யமாக இருந்தது. நேரடி அனுபவமாக இருந்ததால் படம் பார்த்த மாதிரி இருந்தது. சரி! நீங்க ஏதாவது உணர்ச்சி வசப்பட்டு களத்துல இறங்க மாட்டை அடக்கிட்டீங்களோன்னு படிச்சிக்கிட்டே வந்தேன்.... அப்புறம்தான் தெரிந்தது ...:)))

இந்த மாடு விரட்டளையும், காளை விளையாட்டையும் தடை செய்ய வேண்டும் என்று பல தரப்பும் குரல் கொடுத்து வருகிறது. நானும்தான். இது ஒரு பாரம்பரிய கிராமிய விளையாட்டாக இருந்தாலும், வருடத்துக்கு 5 பேர் உசுர விடுறது சரியில்லை... இதெல்லாம் ஆண்டைகளை சந்தோஷப்படுத்துகிற விளையாட்டு... அதன் தொடர்ச்சிதான்...

இளங்கோ-டிசே said...

முத்து, இப்படி உண்மையைச் சொன்னால் எல்லோரும் உங்களை இப்படிப் போட்டுத்தாக்குவார்கள் என்பதை முன்பே அறிந்தே, ஆக்ககுறைந்தது, ஜல்லிக்கட்டு முடிந்துபோகும்போது, தெருவில் நின்ற (கட்டாக்காலி) காளையையாவது அடக்கி வெற்றிவாகை சூடினேன் என்று பின்னிணைப்பாகவேனும் இணைத்திருக்கலாம் :-). இந்தப் பதிவை வாசித்தபின் தான் ஏன் உங்களுக்கு மதுரையில் பெண் தந்தார்கள் என்ற காரணம் புரிகிறது :-).

Muthu said...

டி.சே,


மதுரையில் எங்க பொண்ணு குடுத்தாங்க? தூக்கிட்டம்ல :)

Muthu said...

தருமி,

பயந்துட்டீங்களா..நான் எந்த மாட்டை..( அடிவயிற்றை கலக்கிடுச்சில்ல ஒரு நிமிஷம்)

Muthu said...

சந்திப்பு,

இதை தடை செய்வதுப்பற்றி ஒரு விவாதம் அந்தந்த பகுதி மக்களிடையே நடத்தலாம் என்று நினைக்கிறேன்.

Muthu said...

நன்றி பொன்ஸ்,

பாலபாரதி,

கெ.பா.செ பெண்களுக்கு, வேறு பதவி கேளும்...

நாமக்கல் சிபி said...

// (ரஜினி ராம்கி object பண்ண மாட்டார் என்று நினைக்கிறேன்)//

அவர் பண்ணாட்டா என்ன? நான் object பண்ணுறேன்.

முத்து: "Objection Sustained"

சிபி : "Thank You Your Honour"

Sivabalan said...

// என்னுடன் கோவை ராமகிருஷ்ணா மிஷனில் படித்தவன் // Is it? I am also from SRMKV, CBE-20.

// கிராமிய விளையாட்டாக இருந்தாலும், வருடத்துக்கு 5 பேர் உசுர விடுறது சரியில்லை... // Yes it is true. May be banned.

பொன்ஸ்~~Poorna said...

//நன்றி பொன்ஸ்,

பாலபாரதி,

கெ.பா.செ பெண்களுக்கு, வேறு பதவி கேளும்...
//

எனக்கு நன்றி சொன்ன கையோட, அதே பின்னூட்டத்துல, பாலாகிட்ட கொ.ப.செ பெண்களுக்குன்னு சொல்லி இருக்கீங்களே, அதுக்கு ஏதாச்சும் காரணம் இருக்கா??

சீக்கிரம் சொல்லுங்க குரு, வேற கட்சியில கொ.ப.செ, வ.வா.சென்னு ஏதோ பதவி குடுக்கறேன்னு இருக்காங்க.. "மரியாதை இல்லை, மனம் நொந்து போனேன்னு" எதாவது சொல்லிட்டு வர்றதுக்கு வசதியா இருக்கும் :)

Muthu said...

sivabalan,

me 93-96 physics dept..2 years hostel and one year room..

krk warden...desikathmanandaji regime..

yours?

Muthu said...

sibi.

thanks..no objection..proceed

Muthu said...

பொன்ஸ்

திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற கழகம் கொஞ்சம் ஸ்ரிக்ட்..

ஒரு நேரத்தில் ஒரு பதிவிதான்வகிக்கமுடியும். எந்த பதவி வேண்டும்?

Sivabalan said...

I studied in 89-92. Sorry I forgot the swamiji name.

But I like the Friday Sweet (Laddu).. after the prayer.

If possible put a separate blog on "whether SRMV's impact on young students - is good or bad"

I feel it is good though I am atheist.

Muthu said...

ஜல்லிக்கட்டு வீரன் .... முத்து வாழ்க.. வாழ்க... !!

பொன்ஸ்~~Poorna said...

குரு, ஒரு பதவி தானா? ..

சரி அப்போ யோசிச்சி சொல்றேன் :)

Priya said...

//மாட்டை விரும்புவோர் பிடிக்கலாம்//
But it goes the other way. It selects whom to hit first.

//பேங்க்காரர், பேங்க்காரர் என்று பயங்கர மரியாதை //
appo "O" mariyadha dhana.

You are a warrior without a sword!!!

பட்டணத்து ராசா said...

உங்கள் திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாழ்த்துக்கள்

பெருசு said...

ஐய்யா

நீங்களும் பெரியநாயக்கன்பாளையம் ப்ரொடக்டா.

நாம் 1985- 1988 B.Sc. Chemistry.

Senior அப்படிங்கறதால நாந்தேன்

பெருசு.

Sivabalan said...

Mr.பெருசு.


It is happy to know , " you are also from SRMV"

Good.

Anonymous said...

நான் 91-94 கம்ப்யூட்டர் சயின்ஸ் வித்யாலய கலைக்கல்லூரியில படிச்சேன்.

முத்து: அதே அனானிமஸ்தான் ;-}

பொன்ஸ்~~Poorna said...

காளையை அடக்கியன்னு பேர் வச்சிட்டு, எல்லாரும் அவங்க அவங்க படிச்ச காலேஜ் பத்தியே பேசிக்கிட்டு இருக்காங்க!!!

Muthu said...

சிவபாலன் அண்ணா,

(வித்தியாலயம் என்றவுடன் இந்த அண்ணா வந்துருச்சி)

எந்த டிபார்ட்மெண்ட்ணா நீங்க? ராமகிருஷ்ணர் இம்பேக்ட்? ஒரு பதிவு இல்லை..தொடர் பதிவு போடும் எண்ணம் உண்டு...

Muthu said...

பொன்ஸ்,

ஆதாயம் தரும் பதவிகள் ஏதும் ஏற்கனவே உண்டா? மற்ற கட்சிகளின் பதவியை ராஜினாமா செய்தால் டெல்லி மேல்சபைக்கு உன்னை அனுப்புகிறேன்...
41 கோடி தருகிறோம்...

Muthu said...

ஜெர்மன் முத்து,

நன்றி...(உங்களுக்காவது மனசு வந்ததே)

Muthu said...

ப்ரியா,

நன்றி...

Muthu said...

ராசா,

கட்சியில் பதவிகள் காலியாக உள்ளன.ஐடியா உள்ளதா?

Muthu said...

பெருசு.

கட்சி ஆரம்பித்துவிடலாமா? ( CJB, MAK இவங்கள்ளாம் ஞாபகம் இருக்கா?)

Muthu said...

அனானி என்ற அனானிமஸ்,

உங்க பெயரை சொல்லுங்க..நைட் எல்லாம் தூக்கம் இல்லை..யாருன்னு தெரியாமல்....

மொட்டை அடிச்சி காது குத்தி உங்களுக்கு வெச்ச பேரே அதுதானா?( நான் பர்ஸ்ட் இயர் அப்போ நீங்க பைனல் இயர்)

பொன்ஸ்~~Poorna said...

//மற்ற கட்சிகளின் பதவியை ராஜினாமா செய்தால் டெல்லி மேல்சபைக்கு உன்னை அனுப்புகிறேன்...
41 கோடி தருகிறோம்... //

மேல்சபையாவது, கீழ் சபையாவது.. நீங்க கேட்டதே போதும்.. எல்லாம் நேத்திக்கே ராஜினாமா செய்தாகி விட்டது... :)

பேங்கர் குரு, கோடிக்கு எவ்வளவு சைபர்..:) ??? !!

இறையழகன் said...

சிறப்பாகச் சித்தரிக்கபட்ட காளையை அடக்கும் வீரர்கள் பற்றிய பதிவு.