Tuesday, March 30, 2010

என்ன பண்ணி தொலைக்கறது?

இன்னுமொரு இடைத்தேர்தல். இந்த இடைத்தேர்தலில் சம்பாதித்த பணத்தை வைத்து அந்த தொகுதி மக்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு சாப்பிட போகிறார்கள் என்று பார்ப்போம்.

திமுக ஆயிரம்,
அதிமுக ஐநூறு,
பா.ம.க முன்னூறு
ஆகமொத்தம் ஆயிரத்து எண்ணூறு.

பா.ம.க ஏதோ மூக்குத்தி, தோடு என்று திட்டம் போட்டதாகவும் அதில் யாரோ மடப்பயக மாம்பழம் சின்னத்தை பதித்துவிட்டதால் அது செயல்படுத்தப்படவில்லை என்று நக்கீரன் சொல்லியிருக்கிறது.அதை விட்டுவிடுவோம். விஜயகாந்த் கட்சிகாரர்களும் டெபாசிட் வாங்கும் நோக்கத்தோடு ஓரளவு பணத்தை செலவு செய்ததாகவும் அதனால்தான் கடந்த முறை வாங்கிய அளவு ஓட்டு மீண்டும் வாங்க முடிந்தது எனவும் தகவல்கள் வருகின்றன.

பிரியாணி(?) எல்லாம் எல்லா தொண்டர்களுக்கும் கிடைக்கறதுதான். அது வயித்தோட மறுநாள் காலைல வரைக்கும்தான்.மத்தபடி மேற்கண்ட கணக்குப்படி வரும் ஆயிரத்து எண்ணூறு (1800) எல்லாருக்கும் கிடைச்சிருக்காது. ஆக ஆவரேஜ் ஆயிரத்து ஐநூறு ரூபாய். ரொம்ப கம்மி.அடுத்த தேர்தலில் தலைக்கு ஐயாயிரமாவது இல்லாமல் எவனும் ஓட்டு போடவே போகக்கூடாது என்று மக்கள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்.

வழக்கம் போல் அதிமுக ஆரம்பித்த ஒரு அரைகுறை வழக்கம் திமுகவினரால் முழுமை படுத்தப்பட்டு உள்ளது. விவரம் தெரியாதவர்கள் ஓட்டுக்கு பணம் கொடுப்பதை அதிமுக தான் ஆரம்பித்தது என்பதை நி்னைவு படுத்தி கொள்வது நலம். இல்லாவிடில் சில லூசு பசங்க வேற மாதிரி சொல்லிடுவாங்க. பலமுறை இதை செஞ்சவங்கதான் நம்மாளுங்க. தப்பையும் சரியாக பண்றவன்தான் திமுக காரன் என்று எங்கள் ஊர் பெரிசு ஒன்று சொன்னது ஞாபகம் வருகிறது(?).

டாக்டர் அய்யா இரண்டாம் இடம கிடைத்ததை தைலாபுரத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார் என்பதில் சந்தேகம் இல்லை. மூன்று மாதமாக குடும்பம், மாமன், மச்சான் எல்லாருடனும் சென்று சாதிக்கார பசங்க 70 சதவீதம் இருக்கற ஒரே தொகுதியில் வேலை செய்தால்தான் இவர் நாற்பது ஆயிரம் ஓட்டு வாங்குவார். கடந்த முறை தனியாக நின்று வாங்கியதை விட இது எததனை ஓட்டு அதிகம்?

வரும் சட்டமன்ற தேர்தலில் தனியாக போட்டியிட்டால் என்ன ஆவார்? அதிகபட்சம் பத்து இடங்களில் இரண்டாவது இடம் கிடைக்கலாம். தனியாக போட்டியிட்டு முதலிடம் மற்றும் இரண்டாமிடம் எத்தனை இடங்களில் இவர் வாங்கினார் என்று பார்க்கவேண்டும்.....அது எல்லாம் அந்த காலம் என்பதையும் கணக்கில் வைத்துத்தான் இதை பார்க்க வேண்டும். விருத்தாசலத்தில் விஜயகாந்த் சொருகிய ஆப்பு வேறு நினைவுக்கு வருகிறது.

கலைஞருக்கும் வெட்கம் கிடையாது. அடுத்த தேர்தலில் அவரை கூட்டணியில் சேர்த்துக்கொண்டால் ஆச்சர்யப்பட ஒன்றுமே இல்லை.ராம்தாசுக்கும் என்னைக்குமே எதுவுமே இல்லை என்பது எல்லாருக்கும் தெரியும். ராம்தாஸ் நாளைக்கே காங்கிரசு கூட்டணிக்கு போகமாட்டார்னு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு கூறமுடியாது.

நேரம் கிடைச்சா இந்த பணம் கொடுக்கற விவகாரம் எங்க வந்து முடியும்னு எனக்கு தோண்றதை எழுதலாம்னு இருக்கேன்.

Thursday, March 04, 2010

நித்தியானந்தரும் உண்மைத்தமிழன்

சாமியார் அகப்பட்டு கொண்டது தமிழ்நாட்டு வாய்க்கு குறைந்தது இன்னும் ஒரு பத்து நாளைக்கு அவலை போடும் என்று தெரிகிறது. முன்பெல்லாம் இதுபோன்ற ஒரு விசயம் வெளிவந்தால் பின்நவீனத்துவ கருத்துக்கள் சில நாட்கள் கழித்துத்தான் வலையுலகில் வெளிவரும். இப்போதெல்லாம் முதல் நாளிலேயே வருகின்றன.


உண்மைத்தமிழன், செந்தழல் ரவி ஆகியோர் பதிவுகளை படிக்கும்போது எனக்கு ஏமாற்றமே வருகிறது. பல லட்சக்கணக்கான மக்களை ஏமாற்றி கொண்டு இருந்துள்ளார் இந்த சாமியார். காவி உடையில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு உள்ளார். அப்பாவி ஆத்மாவின் வாழ்க்கையில் அநியாயமாக மீடியாக்கள் தலையிட்டு விட்டதாக எழுதுகிறார்கள். நித்யாவை நம்பி பல லட்சம் கொட்டிய பக்தர்கள் இதைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை கொஞ்சம் கவனிக்க வேண்டும்.


சன் டிவி மிட்நைட் மசாலா போடுவது பற்றி எழுதுவது எல்லாம் காமெடி. அப்படி பேசினால் அய்யா உண்மைத்தமிழன் அவர்களே அஜீத் பலகோடி சம்பளம் வாங்கிக்கொண்டு தமிழ்நாட்டு மக்களின் பணத்தில் வாழ்ந்துக்கொண்டு தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்க மறுப்பதை ஆதரிப்பது ஏன்? நடிகனுக்கு நடிப்பு மட்டும்தான் தொழில் அதில் கயவாளித்தனம் செய்துக்கொண்டு மற்றபடி உத்தம புத்திரன் வேடம் போடலாம் ( மிரட்டறாங்கய்யா) என்பதை ஒத்துக்கொண்டால மீடியாவிற்கும் எது தொழில் என்பது என்பது உங்களுக்கே தெரியும். பல காலம் மீடியாவில் காலூன்ற முயற்சிக்கும் உங்களுக்கு தெரியாததல்ல. ஒரு ஒப்புமைக்காகத்தான்.


நடந்துள்ளது ஒரு மிகப்பெரிய நம்பிக்கை மோசடி. இதை கோர்ட்டில் சாமியாரோ நடிகையோ பேசினால் அதை டிவிக்காரர்கள் எதிர்க்கொள்வார்கள். நாம் இதிலிருந்து என்ன எடுத்துக்கொள்வது என்பதுதான் முக்கியம்.சன் டிவி இவ்வளவு பில்ட் அப் கொடுக்காவிட்டால் இது இவ்வளவு பரபரப்பாகி இருக்காது. சுரணை கெட்ட ஜனங்கள் இதுபோன்ற சாமியாரை தேடிக்கொண்டு சென்று கொண்டு தான் இருப்பார்கள. துரதிஸ்டவசமாக இவ்வளவிற்கு பிறகும் இன்னமும் போகத்தான் செய்வார்கள்.


நாமெல்லாம் உத்தமர்கள் இல்லை உண்மைத்தமிழன். ஆனால் நீங்களும் நானும் காவி உடை கட்டிக்கொண்டா ரோட்டில் திரிகிறோம்? அல்லது வாழ்ந்தால் உண்மைத்தமிழன் போல வாழவேண்டும் என்று குறைந்தது ஒரு நூறு பேர் கே.கே.நகரில் வாழ்கிறார்களா? ரஞ்சிதா நித்தியானந்தம் காதல் ஒரு அக்மார்க் காதல் என்கிறீர்கள். பேசாமல் கல்யாணம் செய்திருக்கலாமே. பணம், புகழ் மரியாதை, அஜால் குஜால் எல்லாம் வேண்டும்.நம்பிக்கை மோசடி செய்யலாம். ஆனால் அதை வெளிப்படுத்துபவர்களுக்கு எல்லா ஒழுக்க விதிகளும் வேண்டும்.என்னங்க இது? எல்லாவற்றையும் விட ஒரு நிறுவனத்தின் சம்பளத்தை வாங்கிக்கொண்டு அந்த நிறுவனத்தை தயாரிப்பினை வாங்காதீர்கள் அல்லது பார்க்காதீர்கள் அல்லது பயன்படுத்ததாதீர்கள் என்று நீங்கள் கூறியதாக எழுதி இருந்தீர்கள்..என்ன கொடுமை சார் இது?


http://truetamilans.blogspot.com/2010/03/blog-post_04.html