Saturday, December 31, 2005

கேப்டனுக்கு புத்தாண்டில் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்

புதிதாக அரசியலுக்கு வந்த விஜயகாந்த் கட்சி ஆரம்பித்த புதிதி்ல் "என்ன செய்வீர்கள் பெரிதாக...இன்கம்டாக்ஸ் ரெய்டு செய்து தொந்தரவு செய்வீர்கள்..அவ்வளவுதானே" என்று வூடு கட்டினார். அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார். உண்மையிலேயே அவர் கட்டிய வீட்டை இடிக்க முயற்சி நடைபெறும் என்று. LINK கண்கள் சிவக்க மத்திய அரசு அதிகாரிகளை பார்த்து விஜயகாந்த பேசும் வீர வசனங்களை தமிழக மக்கள் எதிர்பார்க்கலாம்.

தனித்து போட்டியிட தயாரா என்றெல்லாம் வூடு கட்டினாலும் தேர்தல் நேரத்தில் அம்மா அழைத்து நாலு சீட் கொடுத்தால் அம்மாவுடன் சேர்ந்து கொள்வார் என்றே தோன்றுகிறது.( நாலு சீட்: இவர்: மனைவி:மச்சினர்:ரசிகர் மன்ற தலைவர்)


காமெடி


இது ஒருபுறமிருக்க எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதா விஜயகாந்த அரசியலுக்கு வருவதற்காக கூறிய காரணத்தை கிண்டல் செய்திருந்ததை படிக்க நேர்ந்தது. எனக்கு உண்மையிலேயே புரியவில்லை.அப்படி என்னதான் சொல்லியிருக்கிறார் விஜயகாந்த?

" எனக்கு எப்போதுமே ஏழைகளுக்கு உதவுவது பிடிக்கும். நான் ரொம்ப நாளாக அயர்ன் பாக்ஸ்,மூணு சக்கர வண்டி,வேட்டி சேலை என்று ஏழைகளுக்கு வழங்குகிறேன். அதன் தொடர்ச்சியாக ஏழைகளுக்கு சேவை செய்யவே அரசியலுக்கு வருகிறேன்"

இதுதான் விஜயகாந்த் பேச்சின் சாராம்சம். இதில் சாரு நிவேதிதா கிண்டல் செய்வதற்கு என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. அரசியலுக்கு வருவதற்கு ஒருவர் பாலஸ்தீன பிரச்சினைக்கோ அல்லது ஈராக் பிரச்சினைக்கோ தீர்வு சொல்ல வேண்டியதில்லை என்றே நினைக்கிறேன். ஏன் சாரு அவ்வாறு கூறினார் என்று யாராவது விளக்கமுடியுமா?

Friday, December 30, 2005

ஜீவராசிகள் - 2005

இந்த 2005 பல புதிய ஜீவராசிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இவர்களை உங்களிடம் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

1. உரலரசன்:

இவர் இணையம் நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இல்லையென்றால் கூகுள் கம்பெனி பல நாட்களுக்கு முன்பே இழுத்து மூடப்பட்டிருக்கவேண்டும்.இது சம்பந்தமாக கூகிள் இவருக்கு கொடுத்த சான்றிதழை இவர் ஃபிரேம் பண்ணி வைத்துள்ளார்.இவர் தன்னோடு கருத்துரீதியாக மோதுபவர்களை எதிர்கொள்ள பல உரல்களை (URL)அனுப்பி அதிர வைப்பார் என்பதால் இந்த பெயர் இவருக்கு ஒட்டிக்கொண்டது.

2.கற்பு வெட்டியான்

இவர் கட்டுடை தலைவி குஷ்பு நமக்கு அளித்த கொடை என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவரிடம் இளைஞர்களும் இளைஞிகளும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.இவர் சிம்பு போல பப்(pub), ஐந்து நட்சத்திர ஹோட்டல்,பீட்ஸா கார்னர் போன்ற இடங்களில் சுற்றி திரிவார்.பார்ப்பதற்கு மிகவும் பேஷனாக இருப்பார். ஆனால் இளவட்டங்கள் யாராவது பீர்,பிராந்தி போன்றவைகளை குடிக்காமலோ அல்லது ஜோடி இல்லாமல் தனியாகவோ இருந்தால் அவர்களை போட்டு தள்ளி விடுவார். இளைஞர்களும் இளைஞிகளும் கல்யாணத்திற்கு முன்பே கண்டிப்பாக தவறு செய்யவேண்டும் என்பது இவர் கொள்கை.இவருக்கு இந்த பெயர் எப்படி வந்தது என்பது வெளிப்படை.


3.தமிழ்மண போலி்+ஆபாச பின்னூட்ட அனானி

இவர்(கள்) ஒரு விசித்திர பிராணி. ஆனால் ஒரு மிகப்பெரிய கணிணி வல்லுனர்(கள்) ஆக இருக்கக்கூடும். ஒரு சமுதாயமே( இது தமிழ்மண சமுதாயம்தான்) கூடி விரட்டி விரட்டி தாக்கினாலும் அசராமலும் மாட்டிக்கொள்ளாமலும் திருப்பி தாக்குகிறார்(கள்).
பல பேர் வலைப்பதிவை விட்டே வெளியேற காரணம் என்று கூறப்படும் இந்த அனானி(கள்) இவ்வருடத்திய சிறந்த வில்லன் பரிசை போட்டி இல்லாமல் தட்டி செல்கிறார்.இந்த அனானி(கள்) தாமே முன்வந்து 2006 முதல் விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் தமிழ்வலைப்பதிவு உலகை அழியாமல் ரட்சிக்க வேண்டுகிறோம்.

4.சேப்பல்

இவரை இந்திய தேர்தல்கமிஷனுக்கு தலைவராக்க வேண்டும் என்ற பல கோரிக்கைகள் மன்மோகன்சிங்குக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இரக்கமே இல்லாமல் இந்திய அணியில் இருந்து ஓடமுடியாத நடக்கமுடியாத பலபேரை கதற கதற வெளியே எறியும் சேப்பல் தேர்தல் கமிஷனுக்கு தலைவரானால் பல தலைவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்பதால் அனைத்து கட்சி தலைவர்களும் இதை எதிர்த்துள்ளனர்.

5.குரங்கு குப்புசாமி

வந்தேறிகள் யார் என்று கண்டுபிடிக்க வேர்களை தேடி அலைந்த ஆராய்ச்சியாளர் குப்புசாமி இப்போது மனித குரங்குகளை பிடித்து DNA ஆராய்ச்சி செய்து உள்ளார்.அதன்மூலம் அனைவருமே வந்தேறிகள் தான் என்பது நீருபிக்கப்பட்டுள்ளது. இந்த சரித்திர புகழ்வாய்ந்த ஆராய்ச்சியை டுனீசியாவில் கிக்காயோ மாகாணத்தில் ஏற்றுக்கொண்டவி்ட்டபடியால் இங்கேயும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.இவருக்கு பெயர் காரண்ம் விளக்கப்பட வேண்டியதில்லை.


(தொடரும்)

Thursday, December 29, 2005

எந்திரிச்சா பொல்லாதவன் கதை தெரியுமா?

நான் முதன்முதலில் வேலைக்கு சேர்ந்த வங்கிக்கிளையில் ஒரு நண்பர் இருந்தார். அவர் பெயர் சத்தியசீலன். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால் சரியான நேரத்தில் பொறுத்தமாக பழமொழிகளை எடுத்துவிடுவார்.மிகவும் சுவாரசியமாக இருக்கும் அந்த பழமொழிகளில் இருந்து சாம்பிளுக்கு சில.

எந்திரிச்சா பொல்லாதவன்

அடிக்கடி எங்கள் வங்கியின் மண்டல அலுவலகத்தில் இருந்தோ மத்திய அலுவலத்தி்ல் இருந்தோ பல நினைவூட்டு கடிதங்கள் வரும். மாதாந்திர ஸ்டேட்மெண்டுகள் சரியான நேரத்தில் அனுப்படவில்லையென்றால் சம்பந்தப்பட்டவர் பொறுப்பாக்கபடுவார் (Accountability fixing) என்றெல்லாம் வரும் கடிதங்களை பார்த்து நான் பதட்டபடுவேன்.அவரோ ஹாயாக இருப்பார்.எப்படிங்க கவலையேபடாமல் இருக்கீங்க என்று நான் கேட்டதற்கு ஒரு நாள் இவ்வாறு கூறினார்.

"பயப்படாதீங்க..இதெல்லாம் எந்திரிச்சா பொல்லாதவன் கதைதான்"

"அது என்ன சார் கதை?", என்றேன்.

"ஒண்ணுமில்லீங்க...அவனோ எந்திரிக்க முடியாம நொண்டியா இருப்பான்.ஆனா அடிக்கடி நான் எந்திரிச்சா என்ன நடக்கும்னே தெரியாது என்றெல்லாம் மிரட்டுவான்", என்றார்.

சில தினங்களுக்கு முன் ஒரு புத்தகத்தில் இதே கதையை முழு நீள சுவையான கதையாக கி.ரா கூறியிருந்ததை படிக்க முடிந்தது.ஒரு கிராமத்தையும் மெயின் ரோட்டையும் இணைக்கும் பாதையில் ஒரு மேடான இடத்தில் ஒரு மரத்தினடியில் அவன் அமைதியாக அமர்ந்திருப்பான். கையில் ஒரு நீளமான அரிவாள் வைத்திருப்பான்.அந்த வழியாக போகும் வண்டிகள் அவனுக்கு பணம் கொண்டுப்போய் அவனிடம் கொடுக்கவேண்டும்.தண்டல் வசூல் மாதிரி இது பல நாட்களாக நடந்து வந்தது.

ஒரு குறிப்பிட்ட நாளில் விஷயம் தெரிந்த சிலர் ஒரு வண்டியில் அவ்வழியாக வந்தனர்.வந்தவன் வண்டியை நிறுத்திவிட்டான்.ஆனால் பணத்தை கொண்டு வரவில்லை.

"அய்யா வந்து வாங்கிக்கொங்க"

"டேய், கொண்டு வாடா இங்க..நான் எந்திரிச்சா என்ன நடக்கும் தெரியுமில்ல.."

"என்ன ஆவும்"

"டேய் உன் தலையை தனியா எடுத்திருவேண்டா"

"மொதல்ல எந்திரி பார்ப்போம், எங்களுக்கு தெரியும்டேய்"

அவமானத்தில் சுண்டவனாக அழ ஆரம்பித்தான் அவன் என்பதாக கதையை கொண்டு போயிருப்பார்.


அவனை காலை எடுக்க சொல்லு


சில நேரம் நம்முடைய மேலதிகாரிகள் தம்மால் சுலபமாக செய்யக்கூடிய காரியத்தை பொறுத்தமற்ற காரணம் (சப்பை காரணம்,நன்றி: கவுண்டமணி) கூறி தட்டி கழிக்கும்போது உபயோகப்படுத்தகூடிய பழமொழிதான் மேற்சொன்னது.

இது கடவுளையே கிண்டல் செய்யும் பழமொழி. கோவிலில் இருக்கும் சாமி சிலையின் மீது ஒருவன் காலை வைத்தானாம். உடனே சாமி பூசாரியை அழைத்து அவனை காலை எடுக்க சொல்லு..இல்லை உன்னை தொலைச்சுருவேன் என்றதாம்..இது ஒரு நுண்ணிய பழமொழி. இது பல இடங்களில் பல வழிகளில் உபயோகப்படுத்தக்கூடியது. எனக்கு மிகவும் பிடித்ததும் இதுதான்.


இனி கேள்வி நேரம்

யாராவது இந்த பழமொழியின் கதையை சொல்லலாம். செத்தும் சிரிச்ச மாதிரி

Tuesday, December 27, 2005

லேட்டஸ்ட கிரெடிட் கார்டு மோசடி

யார் சொன்னது நமது இந்திய மென்பொருள் நிபுணர்கள் சொந்த தொழில் செய்யமாட்டார்கள் என்று...மும்பயை சேர்நத இரண்டு மென்பொருள் நிபுணர்கள் வெறும் இருபதாயிரம் முதலீட்டில் மூன்று லட்சம் ரூபாய்களை சம்பாதித்து உள்ளனர்.

மும்பயை சேர்ந்த கல்லூரி மாணவர் ஜேக்கப்(பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). இரண்டாம் வருடம் தொழிற்கல்வி பயின்று வருகிறார். அவர் தன் நண்பர் பிரகாஷின் உதவியோடு அமெரிக்காவில் இருந்து ஒரு கருவியை இறக்குமதி செய்கிறார். கருவியின் விலை பதினெட்டாயிரம் (இந்திய மதிப்பில்).அதன் மேல் ஒரு கிரெடிட் கார்டை உரசினால் அந்த கார்டில் உள்ள அனைத்து விஷயங்களையும் உள்வாங்கிக்கொள்ளும். அது போல பனிரென்டு கார்டுகளின் தகவல்களை அதில் சேமிக்கலாம் என்பது உபரி செய்தி.
இருவரும் மும்பய் ஜுகுவில் உள்ள ஒரு ஓட்டலில் ஒரு சர்வர்(வெயிட்டர்) ஒருவரையும் தங்களுடன் சேர்த்துக்கொள்கிறார்கள். யாராவது கிரெடிட் கார்டை உபயோகித்து பணம் செலுத்தினால் அந்த கார்டை கையடக்கமான அந்த கருவியில் உரசிக்கொள்கிறார் அந்த வெயிட்டர்.(ஆறு இன்ஞ் நீளம் மட்டுமேயுள்ள அந்த கருவியை பாக்கெட்டில் வைத்துக்கொள்ளலாமாம்)
பிறகு நமது கணிப்பொறி வல்லுனர் அந்த கருவியில் இருந்து தகவல்களை கம்ப்யூட்டரில் இறக்கி கள்ள மார்கெட்டில் கிடைக்கும் பழைய கார்டுகளில் ஏற்றுகிறார்.

அப்புறமென்ன அந்த காட்டுகளை எங்கு வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம். படுத்தினார்கள்.பணத்தை இழந்த அனைத்து வாடிக்கையாளர்களும் அந்த குறிப்பிட்ட ஓட்டலுக்கு சென்றதை வைத்து காவல்துறை அந்த வெயிட்டரை அமுக்கி பிறகு நமது மென்பொருள் நிபுணர்களை பிடித்தனர். நான்கு பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.அதில் ஒருவர் அமெரிக்காவில் பெரிய மென்பொருள் கம்பெனியில் வேலை கிடைத்து இன்னும் சிறிது நாட்களில் பிளைட் ஏற இருந்தாராம். அதற்குள் மாமியார் வீட்டுக்கு செல்ல வேண்டியதாகிவிட்டது.

அடுத்த முறை கார்டு உபயோகப்படுத்துமுன் உஷாராக இருக்கலாமே.

தகவல் நன்றி:TIMES NEWS NETWORK

Saturday, December 24, 2005

சாகித்ய அகாடமியும் பின்நவீனத்துவமும்

சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வழக்கமாக இதுப்போன்ற விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன் பரிசு கிடைக்காத மற்ற எழுத்தாளர்கள் விருது வாங்கியவரை பொளந்து கட்டுவார்கள். தமிழிலேயே என்னுடைய நாவல்கள் மட்டும்தான் நாவல்கள் என்று கூறும் எழுத்தாளர்கள் முதல் பிரான்சில் நான் பிறந்திருந்தால் இலக்கியத்திற்கான நோபல் பரிசு வருடா வருடம் எனக்கு மட்டும்தான் கிடைக்கும் என்று சொல்லும் எழுத்தாளர் வரை எல்லோரும் இந்த விஷயத்தில் கைக்கோர்த்துவிடுவார்கள்.

குறிப்பிட்ட அந்த பரிசுக்குரிய படைப்பை அக்கு வேறு ஆணிவேறாக பிரித்துப்போட்டு தரிசனம் இல்லை என்ற குற்றச்சாட்டு முதற்கொண்டு பின்நவீனத்துவம், விளிம்புநிலை என்றெல்லாம் வார்த்தைகளை போட்டு விளையாடிவிடுவார்கள்.

இந்த முறை அவ்வாறு செய்யும்முன் பரிசு பெற்ற படைப்பாளி ஒரு போலீஸ் டி.ஜி.பி என்பதை மனதிற்கொண்டு புத்திசாலிதனமாக நடந்துக்கொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கலாம். பொறுத்து இருந்து பார்ப்போம்.

Thursday, December 22, 2005

வூடு கட்டுதல் தொடர்பாக -கடைசி பதிவு

இந்த பதிவில் சொல்லப்படும் அசடாகிய நான் எழுதுவது...

திரு.டோண்டு பதிவில் கூறப்படும் திரு.அருண் அவர்களின் பதிவை அடிப்படையாக கொண்டுத்தான் நான் சொக்க தங்கம் சீரிஸை எழுதினேன். அப்துல் கலாமை பற்றி நான் எழுதியுள்ள ஒரு பத்தியை ஊன்றி படித்தாலே இது புரியும்.

திரு.டோண்டுவின் பதிவு மற்றும் அருணின் பதிவு ஆகிய இரண்டிற்கும் ஆன பதில்கள் என்னுடைய மூன்று பதிவுகள் மற்றும் பின்னூட்டங்களில் உள்ளன.( குறிப்பாக மூன்றாவது பதிவின் பின்னூட்டங்கள்)

நண்பர் ஒருவர் கேட்டுக்கொண்டபடி பின்னூட்டங்களை முன்னே கொண்டு வருகிறேன்.அப்போது தேவையில்லை என்று நினைத்தேன்.இப்போது தேவைப்படுகிறது என்று உணர்கிறேன்.திரு.டோண்டு அவர்கள் தர்க்க முறை பற்றியெல்லாம் எழுதுவதின் ரகசியம் என்ன என்று தெரிந்துக்கொள்ள மக்கள் ஆர்வமாக இருப்பார்கள்.அவர்களின் நன்மையை முன்னிட்டு இது கிறிஸ்துமஸ் சிறப்பிதழாக மலர்கிறது.

கடைசியாக பேசுபவர் கூறுவதுதான் சரி என்பதாக மக்கள் நினைத்துவிடக்கூடாது என்பதும் ஒரு முக்கிய காரணம். இந்த பதிவிற்கு நான் பின்னூட்ட விளக்கமும் கொடுக்கபோவதில்லை.விருப்பப்பட்டவர்கள் வழக்கம்போல் தங்கள் பதிவுகளில்வூடு(காலி கிரவுண்டில் வாளை வீசுவது) கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.




OVER TO பின்னூட்டம்
_________________________________________________________________



//உங்களைச் சேலஞ்ச் செய்கிறேன். சோ பார்ப்பனர் என்பதால்தான் நான் அவரை ஆதரித்தேன் என்பதை என் எழுத்துக்களிலிருந்து காட்டுங்கள் //


அண்ணா விட மாட்டீங்க போல...உங்கள் எழுத்துக்களில் இருந்து நீங்கள் நடுநிலையாளர் என்று தெரிகிறது. உங்கள் சாதி மட்டுமல்ல நீங்கள் ஆணா பெண்ணா என்றே கண்டுக்கொள்ளமுடியவில்லை.. போட்டோவை வைத்துத்தான் கண்டுபிடித்தேன்.அந்தளவிற்கு நீங்கள் ஜெண்டிலாக எழுதியிருக்கிறீர்கள். பலரும் இங்கே அதே கருத்து கொண்டு இருக்கிறார்கள். இதை படிப்பவர் ஜட்ஜ்மெண்டுக்குத்தான் விடவேண்டும்.நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.

நீங்கள் மேலும் ஊடுகட்டிக்கொண்டே இருப்பதால் மற்றதையும் பார்க்கிறேன்.

ஒரு சின்ன கதை கூறுகிறேன். ஒருவர் (அருண்) கூறுகிறார் சோ சுத்தமானவர் என்று.

நான் கூறுகிறேன் இல்லை அவர் பல் கூட துலக்குவதில்லை, குளிப்பதில்லை என்று.
நீங்கள், நான் கூறியபல் துலக்குவதில்லை குளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டை கண்டுக்கொள்ளவில்லை.ஆனால் நீங்கள் சொல்லுகிறீர்கள் அவர் ரொம்ப காலமாக செண்ட் உபயோகபடுத்துகிறார்( 1975 முதல்). எனக்கு அது நன்றாக தெரியும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறீர்கள்.

ஊடு கட்டுகிறீர்கள். இதை படிக்கிறவர்கள் எல்லாமே கோயிஞ்சாமிகளாக இருந்தால் உங்கள் வாதத்திற்கு கை தட்டுவார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக தமிழ்மணத்தில் கோயிஞ்சாமிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.(பி.கு)அவர் செண்ட் போடுவதை பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.ஏன் குளிப்பதில்லை.பல் துலக்குவதில்லை என்பதுதான் என் கேள்வி.உடனே இதையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு அவர் உபயோகப்படுத்தும் பேஸ்ட், சோப் எல்லாம் போட்டோ பிடித்து காட்டி ஏதாவது சொல்லவேண்டாம்.(இது உங்களுடைய பிரஞ்சு டூரிஸ்ட் ஸ்டோரிக்கும் பொருந்தும்)



அண்ணா, அவரை அவரே விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு டெம்பிளேட்டை விலக்கிவிட்டு யாரும் அவரை விமரிசித்துவிட முடியாது. ராவணன் கூட சிறந்த சிவபக்தனாம்.அதுக்காக ராமன் சீதையை அவன்கிட்டேயா விட்டுட்டான்.எல்லார்கிட்டயும் சில நல்ல குணங்கள் இருக்கும்.அதை பத்தி நான் எதுவும் சொல்லவில்லை.விஷ விதைகளை தூவுகிறாரே அதைப்பற்றி தான் சொல்கிறேன்.

என் பதிவுகளை படிக்கவே இல்லையா?

சோ என்ற வார்த்தையை பார்த்துவுடன் வரிந்துக்கட்டி வீட்டீர்களா?

75 மற்றும 76 எல்லாம் நான் பிறக்கவேயில்லை என்பது ஒருபுறமிறுக்க அவர் ஏதாவது உருப்படியாக செய்திருந்தாலும் அதையும் எதிர்த்து ஆகவேண்டும் என்பது என் தலையெழுத்து இல்லை.எல்லாம் ஆரம்பத்தில் நல்லாதான் இருப்பாங்க..அப்புறம் தான் வரவர மாமியார் கதை ஆயிடுது.......


கிசுகிசு பற்றி: நீங்களே தினமலரை பற்றி இவ்வளவு கேவலமாக எழுதினால் எங்களை மாதிரி ஆட்கள் எல்லாத்துக்கும் வாய்ப்பு ஆகிவிடாதா? நிற்க...துக்ளக் காப்பாற்றி வரும் தரம் என்ன என்பதே யாருக்கும் தெரியாது.என் பதிவுகளில் நான் கூறி உள்ள தயானந்த சரஸ்வதி கட்டுரை போன்றவை தான் தரம் என்றால் ஸாரி இதற்கு என்னிடம் பதில் இல்லை...


எம்பிக்கள் நிதி விஷயத்தை பற்றி ஒரு விமர்சனமும் இல்லை.பாராட்டுக்கள்.(கடமையை சரியாக செய்வதே சாதனை ஆயிடுச்சு என்பது துரதிஷ்டவசமானது சார்)


ஏதோ அவர் கூட்டம் நடத்துகிறார் என்றெல்லாம் சொல்கிறீர்கள். திண்டுக்கல் லியோனியும் கூட்டம் நடத்துகிறார். கூட்டம் பிய்த்துக்கொண்டு போகிறது. (எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் தான்.இதில் என்ன சந்தேகம்?) அவரும் பிரியாணி பொட்டலம் தருவதில்லை.இதெல்லாம் ஒரு பொழுதுப்போக்கு சார். எல்லோரும் வருவாங்க. சிரிப்பாங்க. சீரியஸா யாரும் எடுத்துக்கறதில்லை. நீங்க எடுத்துகிட்டீங்கன்னா அது உங்க தப்பு. அங்க என்ன நீங்க உலகத்தை மாத்தி அமைக்கிறீங்களா?(அவரை கடுமையா விமரிசிக்கறவங்களும் துக்ளக் படிப்பதை இங்கே நினைவுபடுத்தி கொள்ளவும்.)

அதே மாதிரி அவர் கூட்டத்தில எப்படி சார் பிரியாணி போடமுடியும்? தயிர்சாதம், புளிசாதம், வெஜிடபிள் பிரியாணி போன்றவை தான்.எனிவே உங்கள் ஆதங்கத்தை அவருக்கு சொல்கிறேன்.அடுத்த முறை ஆவன செய்வார்.பி.ஜெ.பி பற்றிய அவர் விமர்சனங்கள் பற்றி எல்லாம் என் பதிவில் பதில் இருக்கிறது.(முதல் பதிவு).



தன்னைத்தானே கிண்டல் செய்வது எல்லாம் ஒரு சாதனையா? வலிக்கிற எடத்துல அடிக்கிறதுன்னு ஒண்ணு இருக்குதுங்க.அது எல்லோருக்கும் புரியாது. அடி வாங்கினாதான் புரியும்.அடிமட்டத்து ஆளுங்களுக்குதான் அது.மேட்டுகுடிக்கு புரியாது.... குழந்தைங்களுக்கு விளையாட்டு காட்டறதுக்காக நாம நம்மளை அடிச்சிக்குவம்ல.. அதெல்லாம் இதுல வராது அய்யா.....மற்றபடி தனிமனித தாக்குதல் என்பதெல்லாம் பற்றி பலர் கூறிவி்ட்டார்கள்.தனிமனித தாக்குதல் விஷயத்தை நீங்கள் எப்படி விளங்கி வைத்துள்ளீர்கள் என்று விளக்க முடியுமா?நான் சோ உத்தி என்றால் என்ன என்று என் சோ மூன்றாம் பாகத்தில் எழுதியுள்ளேன். அதை படித்து அப்டேட் ஆகவும்.



மெல்ல பதிவுகளை போடவும் நான் ஆன்லைன்லயே உங்களுக்காக வெயிட் பண்ணலை. முடிந்தவரை உடனே எழுத முயற்சி செய்கிறேன்.கவுண்ட் டவுன் எல்லாம் எண்ணிட்டு இருக்க வேண்டாம்.

END OF பின்னூட்டம்


முழு கதையும் இங்கே (see comments area)
_______________________________________________________________



மேற்கண்ட கடைசி பத்திக்கு பிறகு அவர் தனியாக வூடு கட்ட போய்விட்டார்.

Wednesday, December 21, 2005

ராஜதந்திரம் --- சரத்பவாரும் தமிழக அரசும்

என்னடா இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும முடிச்சு போடறாங்களேன்னு பாக்கறீங்களா? மேலே படிங்க..

நேற்று சென்னையில் தி.மு.க வை சேர்ந்த கிளை செயலாளர் தனசேகரன்(இவர் கவுன்சிலராகவும் இருக்கிறார்) என்பவரை தமிழக அரசு கைது செய்தது. இவர் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது ஆனவர். மேலும் பல குற்றச்சாட்டுக்கள் இவர் மேல் உள்ளதாக போலீஸ் தெரிவித்தனர். குற்றச்சாட்டு என்னவென்றால் வெள்ள நிவாரண வாங்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி 42 பலியாக காரணமாக இருந்தது.இவர் பரப்பிய வதந்தி காரணமாகத்தான் மக்கள் அந்த அதிகாலை நேரத்தில் அங்கு கூடினார்களாம்.
பிரச்சனை நடந்து இரண்டு நாட்களுக்கு அப்புறம் அரசு சுதாரித்துக்கொண்டு இப்படி ஒரு பாயிண்டை (கவுண்ட்டர்) வீசினாலும் கேள்விகள் தொடர்கின்றன.

அரசு அறிவிக்காமல் அத்தனை பேர் கூடியதை அரசு ஏன் அனுமதித்தது?

அங்கே சில காவலர்களும் இருந்ததாக தகவல்.அவர்களும் வதந்தியை நம்பி வந்தவர்கள்தானா?

முன்பு நடந்த சம்பவமும் அதிகாலையில் தான் நடந்தது.அதுவும் அப்படித்தானா?

தி.மு.க தரப்பு இன்னும் பல கேள்விகளை எழுப்பி இதை திசை திருப்பும் செயல் என்று கூறுகிறது. யார் சொல்வது சரி..யார் சொல்வது தவறு என்பதை பிறகு பார்ப்போம்.விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்னும் பல தகவல்கள் வெளிவரலாம்.ஆனால் 42 பேர் இறந்ததிற்கு இவர்தான் காரணம் என்று ஒருவர் மீது பழி போடுவது சம்மந்தப்பட்டவருக்கு மிகவும் மனஉளைச்சலாகத்தான் இருக்கும்.

இப்போது இன்னொரு சம்பவத்தை பார்ப்போம். சவுரவ் கங்குலி அணியில் நீக்கப்பட்ட உடன் பலரும் அவருக்கு ஆதரவாக திரண்டதை நாம் அறிவோம்.அப்போது வாரியத்தலைவர் திரு.சரத்பவார் விட்ட பஞ்ச் குறிப்பிடத்தக்கது.

எனக்கு தெரியாமல் இது நடந்துவிட்டது..தேர்வுக்குழு தலைவரிடம் நான் இதுப்பற்றி பேச இருக்கிறேன் என்றார் பவார்.எல்லோருக்கும் தெரியும் இவருக்கு தெரியாமல் கங்குலிக்கு கல்தா கொடுத்திருக்க முடியாது என்று. இவரை கேட்காமல் தேர்வாளர்கள் அணியை முடிவு செய்வார்களா?.அதுவும் கங்குலி விஷயம் ஏற்கனவே புகைந்து கொண்டிருக்கும்போது..அப்படியிருக்க அவர் ஏன் அவ்வாறு கூறினார்?

இங்குதான் சரத்பவார் தான் எப்படிப்பட்ட ராஜதந்திரி என்பதை காண்பிக்கிறார். கங்குலிக்கு ஆதரவாக எழுந்தவர்களை ஆதரிப்பதுபோல ஒரு தோற்றம் காண்பித்து அவர்கள் எதிர்ப்பை பிசுபிசுக்க வைத்தார் அவர்.எதிர்தரப்பு நிலைகுலைந்து போனது.அதற்குள் அடுத்த ஆட்டம் ஆரம்பித்து விட்டது.

இந்த மாதிரியான திறமைகளை எதையும் காட்டாமல் சம்பவம் முடிந்து இரண்டு நாட்கள் கழித்து ஒரு படுவீக்கான கவுண்ட்டர் அட்டாக்கை தமிழக அரசு செய்துள்ளது..

இது வேலை செய்யுமா என்பதை போக போகத்தான் பார்க்கவேண்டும்.

Monday, December 19, 2005

மானம் காத்த தமிழ் தனயன் பாலமுருகன்

நண்பர்களே, ஸ்டார் தொலைக்காட்சியில் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் கோன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை பற்றிய என் முந்தைய பதிவு (புலம்பல்) இங்கே.

கடந்த சனியன்று ஒளிப்பரப்பபட்ட நிகழ்ச்சியில் கோயமுத்தூரை சேர்ந்த சென்ட்ரல் எக்ஸ்சைஸ் அதிகாரி திரு.பாலமுருகன் அருமையாக பதில் சொல்லி இருபத்திஐந்து லட்சத்தை வென்று தொடர்ந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்.

விஜய் டிவியில் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிப்பரப்பபட்டு வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழர்கள் கலந்துக்கொள்வதே அரிதாக இருந்தது. சேலத்தில் இருந்து கோயமுத்தூரில் இருந்து என்றெல்லாம் அறிவிப்பார்கள். ஆனால் பார்த்தால் சர்மா, சிங் என்று ஏதாவது வடநாட்டு ஆசாமிகள் அமர்ந்திருப்பார்கள். இதற்கு முன்பு தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் இரண்டு மூன்று பேர் மட்டுமே ஹாட் சீட் வரை வந்திருந்தனர்.ஆனால் பெரிய தொகை ஏதும் வெல்லவில்லை.

அனைத்து வருத்தங்களையும் போக்கும் வகையில் திரு.பாலமுருகன் திறமையாக பதில் சொல்லி இருபத்தி ஐந்து லட்சங்களை வென்று தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார். வழக்கம் போல அல்லாமல்,கடினமாக அமைந்த கேள்விகளையும் கண்டு மிரளாமல் சிரித்து முகத்தோடு அலசி அவர் பதில் கூறிய விதம் அருமையிலும் அருமை.அவருக்கு தமிழக வலைப்பதிவாளர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Saturday, December 17, 2005

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசியும் வலைப்பதிவும்

(இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலகேசியின் அரசவை)

இம்சை அரசன் இருபத்திமூன்றாம் குலிகேசி இட்ட ஆணையின்படி மந்திரிசபை அவசர அவசரமாக கூட்டப்படுகிறது.

அரசன்: மந்திரியாரே, நான் இந்த அரசவையை கூட்டியுள்ள நோக்கம் என்ன தெரியுமா?

மந்தி்ரி:(மனதிற்குள்)ஏதாவது வெட்டி காரணமாகத்தான் இருக்கும்.(சத்தமாக) சொல்லுங்கள் பிரபோ

அரசன்: நீர் சொன்னீர் என்பதற்காக நான் வலைப்பதிவு தொடங்கினேன்

மந்திரி: (மெதுவாக) உன் இம்சை அரசவையில் தாங்க முடியவில்லை என்பதற்காகத்தானே நான் சொன்னேன்...

அரசன்:என்ன மந்திரி?

மந்திரி:ஒன்றுமில்லை மன்னா..

அரசன்: ஒரு வருடம் ஆகியும் என்னுடைய பிளாக்கிற்கு மக்கள் வருகை குறைவாகவே உள்ளது. பின்னூட்டங்களும் நிறைய இல்லை.யாரும் என்னுடைய கட்டுரைகளை நட்சத்திர பரிந்துரைப்பதும் இல்லை. பல நல்ல தலைப்புகளில் எழுதினாலும் யாராவது அதே சப்ஜெக்ட்டில் எழுதிடறான்.எல்லா பயலும் அங்கே தான் பின்னூட்டம் இடறான்.நட்சத்திர பரிந்துரை செய்யறான்.என் பதிவை ஒதுக்கிடறாங்க...இது அநியாயமில்லையா?

மந்திரி:(மெதுவாக) உன் லட்சணம் அப்படி(சத்தமாக)மன்னா, தாங்களே தங்கள் கட்டுரையை பரிந்துரைக்கலாமே.

அரசன்: அதுவும் செய்து பார்த்தேனே.ஆனால் ஒரே ஒரு பரிந்துரை மட்டும் இருந்தாலே மக்களுக்கு நன்றாக தெரிந்துவிடுகிறது. நானே என்னுடைய பதிவையே பரிந்துரைக்கிறேன் என்று.

மந்திரி:(மனதிற்குள்)சில்லறை பயல்தானே நீ

அரசன்: மேலும் இரவு நேரமாக பார்த்து யாரோ சிலர் (-) குத்துக்களை இட்டு அதையும் அமுக்கிவிடுகின்றனர். எப்படியாவது என் வலைப்பதிவை பிரபல்யபடுத்தி முகமூடி,குழலி,டோண்டு ஆகியோர் அளவிற்கு எதை எழுதினாலும் நிறைய பின்னூட்டங்களும் நட்சத்திர பரிந்துரைகளும் வர வழி சொல்லுங்கள்.

(அதுவரை எதுவும் பேசாமல் இருந்த சேனாபதி வாயை திறக்கிறார்)

சேனாபதி : அரசே, நீங்களே சில பின்னூட்டங்களை வேறு பெயர்களில் அளிக்கலாம். உதாரணத்திற்கு அனானிமஸ் என்ற பெயரில் வந்து அரசகுடும்பத்தை விமரிசித்து படிக்கவே அறுவெறுப்பூட்டும் வகையில் ஏதாவது எழுதலாம். நீங்களே அதற்கு பதிலும் அளிக்கலாம்...இது பரபரப்பாகும்..

அரசன்: அடப்பாவி, அரசியாரை பக்கத்து நாட்டு இளவரசனுடன் இணைத்து வயது வித்தியாசம் கூட பார்க்காமல் விமரிசித்து அனானிமஸ்ஸாக வந்து பின்னூட்டம் இட்ட துரோகி நீதானா?

சேனாபதி:(மெதுவாக)அதைத்தான் நீ ரீமுவ் பண்ணிட்டயே (சத்தமாக)இல்லை மன்னா...இல்லவே இல்லை..

அரசன்: பின்னூட்டம் அதிகமாக வரவேண்டும் என்பதற்காக காமெண்ட் மாட்ரேஷன் கூட வைக்காமல் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அரசியாரை கேவலமாக விமரிசிக்கும் அற்பப்பதர்களை கடுமையாக எச்சரிக்கிறேன். மந்திரியாரே..உடனடியாக ஐ.பி அட்ரஸ்களை ஒற்றறிய ஒற்றர்களை அனுப்புங்கள்....

மந்திரி:மன்னா கோபப்படாதீர்கள்.ஒரு யோசனை.பரபரப்பான கருத்துக்களை சொல்லுவது தான் உங்கள் பிளாக் பிரபலமாக ஒரே வழி.

அரசன்:என்ன அது?

மந்திரி:அப்போது நாட்டில் பரபரப்பாக நடந்திருக்கும் ஏதாவது சம்பவத்தை பற்றி கருத்து கூறவேண்டும். அது யாரும் சொல்லாத கருத்தாக இருக்கவேண்டும்.இது ரொம்ப முக்கியம்.அபத்தமாக இருந்தாலும் தப்பில்லை....

அரசன்: புரியவில்லையே..சற்று விளக்கமாக சொல்லும்...

மந்திரி: உதாரணத்திற்கு நமது அரசவை நாட்டியக்காரி குபிஷாம்பிகை கடந்த வாரம் ஒரு ஓலைக்கு (பத்திரிக்கைதான்) பேட்டி கொடுக்கும்போது மன்னனின் அந்தப்புரத்தில் இளவரசி உள்பட எந்த பொண்ணும் யோக்கியம் இல்லை என்று கூறினாளே...

அரசன்:(வாளை உறுவியபடி)அப்படியா கூறினாள்?

மந்திரி:அரசே அவசரப்படாதீர்கள்..இங்கேதான் நீங்கள் தப்பு பண்ணுகிறீர்கள்...வழக்கம்போல சிந்தித்து லூசுத்தனமாக கருத்து கூறினால் யார் உங்கள் வலைப்பதி்வை படிப்பார்கள்?நீங்கள் முற்போக்குவாதி என்று காட்டவேண்டாமா?

அரசன்: என்ன மந்திரியாரே...மரியாதை குறைகிறது...ம்...
மந்திரி:மன்னியுங்கள் மன்னா...இப்படி யோசித்து பாருங்கள்...நீங்களோ போர், சுயம்வரம் என்று போய்விடுகிறீர்கள்....என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்?

அரசன்:(மீசை துடிக்க) மந்திரி...

சேனாபதி:இங்கே தான் நீங்கள் புரட்சிகர கருத்துக்களை அள்ளிவிடவேண்டும்.அந்தப்புர பெண்கள் மட்டுமல்ல நாட்டில் எந்த பெண்ணுமே யோக்கியம் அல்ல என்று ஒரு போடு போடவேண்டும்...நீங்கள் இரவு நகர்வலம் குஜிலி தெரு வழியாகத்தானே போகிறீர்கள்?

அரசன்:யோவ் சேனாபதி..அதை எதுக்குய்யா இப்போ சபையில போட்டு உடைக்கிற?

சேனாபதி:இல்லை மன்னா நீங்கள் போகிற தெருவைத்தானே கேட்டேன்..யார் வீட்டுக்கு போகிறீர்கள் என்றா கேட்டேன்? அவ்வாறு போகும்போதுக்கூட முன்ஜாக்கிரதையாக போகும் நான் அந்தப்புரத்தை அழிய விட்டுவிடுவேனா என்று கேட்க வேண்டும்.... மேலும் சுயம்வரத்திற்கு முன்பே புங்க நாட்டு இளவரசனுடன் டேட்டிங் அனுப்பியவன் நான் என்று முழங்க வேண்டும்....

அரசன்:யோவ் கேட்கவே நாராசமா இருக்கேய்யா..

மந்திரி:சரி..இதுவும் ஒத்து வரலியா இதை பாருங்க.... தமிழ்மணம் காசி வலைப்பதிவுகளில் சில நெறிமுறைகளை கொண்டுவந்துள்ளாராம்....கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அதை விமர்சித்து.....

அரசன்:யோவ்..நீ முதலுக்கே மோசம் பண்ண பாக்கறே.....

மந்திரி:இதுக்கு ஒரே ஒரு வழி தான் இருக்கு..நீங்க உடனடியாக முற்போக்குவாதி மற்றும சர்வ சமாதானவாதியாக மாறவேண்டும்.

அரசன்:அது என்ன?

மந்திரி:அது ஒண்ணுமில்லை மன்னா...நீங்கள் டெல்லி நவாபுக்கு கப்பம் கட்டுகிறீர்கள் அல்லவா?

அரசன்:ஆம்..அதற்கென்ன...

மந்திரி:அதை பெருமையாக சொல்லிக்கொள்ளவேண்டும்....டெல்லி நவாபும் நம்மளமாதிரி மனுசன்தான். இன்னிக்கு நாம அவனுக்கு அடிமைன்னாலும் நாளைக்கு நாமளும் அவன் பாஷையை கத்துக்கிட்டு அவனை மாதிரியே மாறிட்டா அவன் யாரை அடிமையா வைச்சிருப்பான் என்று எழுதி மக்களை குழப்பினீர்கள் என்றால்.....

அரசன்:(குழம்பி)என்ன சேனாபதி, தலையை சுத்துதே... அடுத்த வாரம் படை திரட்டி நவாபை தாக்கலாம் என்று கூறினீர்கள்..இப்பொது அவரை போற்றவேண்டும் என்று மந்திரியார் கூறுகிறாரே...

மந்திரி:அரசே..உங்களுக்கு முக்கியம் எது என்று பாருங்கள்...டெல்லி நவாபை போற்றவேண்டும். பாரசீக மொழியை கற்கவேண்டும்....

அரசன்:அப்புறம்...

மந்திரி: தமிழை பற்றி திட்டவேண்டும்.எப்படியும் வலைப்பதிகளில் தமிழ்,தமிழர் என்று முழங்கும் கும்பல் இருக்கும்.அவர்கள் உங்களை எதிர்ப்பார்கள்...ஆரம்பத்தில் உங்களுக்கு சற்று சிரமமாக இருக்கும்..ஆனால் அதே குழுவிற்கு எதிராக எப்படியும் ஒரு குழு இருக்கும்.அவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.நட்சத்திர மற்றும் பின்னூட்ட சப்போர்ட்டும் கிடைக்கும்....

அரசன்:இது ரொம்ப சுவாரசியமா இருக்கே.....

மந்திரி: அல்லது தமிழ்,தமிழர் என்று புலம்பும் கும்பலில் சேருங்கள்.தமிள்மொலி, தமிளர் என்றெல்லாம் உங்களுக்கே உரிய பாணியில் தவறாக எழுதினாலும் அதனால் யாராவது உங்களை கிண்டல் செய்தாலும் தமிழ் பாதுகாப்பு குழு உங்களுக்கு சப்போர்ட் பண்ணும்...

அரசன்:பலே..அப்படியா....

மந்திரி:ஆமாம்..ஆனால் ஒன்று எந்த கும்பலில் சேர்ந்தாலும் உங்க கும்பலை சேர்ந்தவங்க என்ன சொன்னாங்க,சரியா சொன்னாங்களா தப்பா சொன்னாங்களா என்றெல்லாம் பார்க்காமல் சப்போர்ட் பண்ணணும். முதல்ல (+) குத்து குத்திட்டுத்தான் படிக்கவே ஆரம்பிக்கணும். எதிர்குழு என்றால் (-)
குத்து மற்றபடி படிக்கலேன்னாலும் பரவாயில்லை...யாருக்கும் தெரியாது....

அரசன்:சேச்சே அது நல்லாயிருக்காது....

மந்திரி: (டென்ஷனாகி) அப்புறம் என்னதான் எங்களை செய்ய சொல்றீங்க? பேசாம வலைப்பதிவை மூடிடுங்க...இல்லாட்டி பின்னூட்டங்கள் அதிகம் பெறுவது பற்றி டோண்டு எழுதிய பதிவையும் ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி என்று முகமூடி எழுதிய பதிவையும் படிங்க.எங்க உயிரை எடுக்காதீங்க...


மந்திரியும் சேனாபதியும் கோபமாக அரசவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறார்கள்.

( திரை )

Friday, December 16, 2005

அது மற்றும் இது பற்றி பேசி எதை நோக்கி போகிறோம்?

நண்பர்களே...திரு.சோ பற்றி ஒரு தொடர் பதிவை போட்டாலும் போட்டேன். தமிழ்மணம் பற்றியெறிகிறது. நான் அப்படி ஒன்றும் திரு.சோ பற்றி புதிதாக எதுவும் கூறிவிடவில்லை.ஏற்கனவே பலர் பல்வேறு சர்தர்ப்பங்களில் அவர் மேல் கூறியுள்ள அவர் பதில் சொல்லாத சொல்ல தவிர்க்கும் விஷயங்கள் தான் அதில் பேசப்பட்டுள்ளன.

நான் தமிழ்மணத்திற்கு மிக்ப்புதியவன்.எனக்கு இங்கு யாரையும் தெரியாது. தனிப்பட்ட மின்னஞ்சல் கூட ஓரிருவருக்கு ஒற்றை வரியில் தான் அனுப்பியுள்ளேன்.யார் எந்த சாதி என்பதெல்லாம் நான் யோசித்ததில்லை.(ஆனால் என்னுடைய சில பதிவுகளில் ஒரு அனானிமஸ் இங்கே யார் யார் எந்த சாதி என்று பிட்டுபிட்டு வைத்துள்ளார். ஆடிப்போனேன் நான்.எப்படி...எப்படிய்யா இப்படியெல்லாம் முடியுது...)நான் இந்த மூன்று மாதங்களில் ஏறககுறைய முப்பது பதிவுகள் போட்டுள்ளேன்.அதில் சிறந்த பதிவுகள் என்று நான் கருதிய சில பதிவுகளுக்கு நான் எதிர்பார்த்த வரவேற்பு இல்லை.(உதாரணம்:கம்யூனிஸ்ட் கோபால்). ஆனால் "சோ" வை பற்றிய பதிவுகளுக்கு உள்ள வரவேற்பு திக்குமுக்காட வைக்கிறது. முதன்முதலாக பின்னூட்ட எண்ணிக்கை ஐம்பதை தாண்டியுள்ளது. இது தற்செயலானது அல்ல.ஐம்பதாவது பின்னூட்டத்தை கொடுத்த அருட்பெருட்கோவிற்கு நன்றி..
ஆனால் இங்கு வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால் இதில் ஒரு பி்ன்னூட்டத்தில் கூட அவர்மீதான என் விமர்சனத்திற்கு பதில் இல்லை.திரு.டோண்டு கூட நான் அவரின் பல பதிவுகளில் இருந்து நான் டோண்டுவை பற்றி INFER செய்து எழுதிய ஒரு கருத்தைத்தான் மறுத்தாரே ஒழிய 'சோ' பற்றிய கருத்துக்களுக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.
ஆனால் பலருக்கும் இங்கே பிராமணர்களுக்கு எதிராக ஒரு போர் நடப்பது போல் ஒரு எண்ணம்.இது எப்படி உருவானது என்று எனக்கு புரியவில்லை.நானும் என் பதிவுகளை திரும்ப திரும்ப படித்துப்பார்த்தேன். அப்படி எதுவும் நான் எழுதியதாக தெரியவில்லை. நான் எழுதிய சில ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு கூட எந்த பதிலும் இல்லை.
என்னுடைய பதிவின் பின்னூட்டங்களிலும் அருண் வைத்தியநாதன் பின்னூட்டங்களிலும் சிலர் அவ்வாறு எழுதி இருக்கலாம்.பேசி இருக்கலாம். அருண் வருத்தப்படுவதில் ஒரு அர்த்தம் உள்ளது என்பதை நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்.ஆனால் திரு.சோ வை பற்றி பேசும்போது சோவே ஏற்று ஒழுகும் இந்த ஐடென்டிடி பற்றி பேசாமல் அவரை விமர்சித்துவிட முடியாது. இதுதான் நடந்தது.

மற்றபடி பொதுவாக இழிபிறவிகளும் நடமாடும் இந்த தமிழ்மணத்தில் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளாத பலர் அனானிமஸ்ஸாக திரிகின்றனர்.அவர்களை புறக்கணிப்பதே நாம் செய்யக்கூடிய வேலை.
பொதுவாக அமைதியாக எல்லாரையும் "அன்பின்" "அன்பின்" என்றே போட்டு எழுதும் திரு.மூர்த்தி நேற்று பொங்கி எழும்படி நிலைமை ஏன் உருவானது?.நாம் எல்லாரும் சிந்திக்கவேண்டும்.ராகவன் மிகவும் வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.மூர்த்தியே வருத்தப்பட்டார் என்றுதான் நினைக்கிறேன்.ஏன் இது நடந்தது?

யோசித்து பார்க்கும்போது பிரகாஷ் என்பவர் ஒரு பதிவில் கூறியிருந்தபடி ஒரு டெம்பிளேட் மனோபாவம் நம்மிடையே இருக்கிறது.ஒரு தனிப்பட்ட நபரை பற்றியோ ஒரு அமைப்பை பற்றியோ விமர்சிக்கும்போது அந்த நபரின் நிறைகுறைகளை அல்லது கருத்துக்களை மட்டும் விமர்சிப்பதற்கு பதிலாக நம் சாதியையும் இனத்தையும் அதனுடன் சேர்த்து குழப்பிக்கொள்கிறோம்.
சோ பற்றி பேசினாரா..பிராமணரை தாக்கிவிட்டார்.அவரை போட்டு தாக்கு....
கருணாநதியை பற்றி பேசிவிட்டாரா...தமிழ் சமுதாயத்தையே தாக்கிவிட்டார்..தமிழ் துரோகி...அவனை பேசவிடாதே....
இஸ்லாமிய தீவிரவாதத்தை மற்றும் இஸ்ரேலிய தீவிரவாதம் பற்றி பேசும்போதும் இந்த மனோபாவம் நம்மிடையே தோன்றுவதை பல சந்தர்ப்பங்களில் பார்க்கிறோம். தவறை யார் செய்தாலும் அது தவறுதான் என்று சுட்டிக்காட்டும் பழக்கம் ஏன் நம்மிடையே இல்லை...ஒரு தனிப்பட்டவரின் மீது அல்லது ஒரு தனிப்பட்ட அமைப்பின் மீது (நான் இதில் மதத்தையும் சேர்த்துக்கொள்வேன்)சந்தேகமற்ற அல்லது விமர்சனமற்ற பற்று, சிந்தனை வளர்ச்சியை தடுக்கும் என்பது தமிழ்மண நண்பர்களுக்கு நான் கூறி தெரியவேண்டியது இல்லை..

உஷா கூறினார்..குருபீடங்களை மனதில் வைத்து ஆராதித்தால் பிரச்சனை இல்லை என்று.சரியான கருத்து.

குருபீடங்களை எழுப்ப ஆசைப்பட்டால் ரவுண்ட் த கிளாக் காவல் இருக்க முடியுமா?.

சிலர் குருவை சுண்டிப்பார்ப்பார்கள்.(நான் செய்ததுமாதிரி).

சிலர் ரசனை அலாதியானது.பீடத்தை மட்டும் சுரண்டி பார்ப்பார்கள்.(நைட் வந்து (-) குத்து போடுவார்கள்).

காக்கா வந்து தலையில் "கக்கா" போகும்.(அனானிகள் சிலரின் பின்னூட்டங்கள்).சிலைகளின் தலையில் காக்கா இடும் "கக்கா" வை என்ன பண்ண முடியும்.காக்காக்களை சுட்டு வீழ்த்த முடியுமா? சிலையை கழுவி விடுவது தான் வழி.(என்னா உதாரணம்..கலக்கறே சந்துரு)

இதற்கெல்லாம் வருத்தப்பட்டால் குருவை பீடத்தில் ஏற்றவே கூடாது. நான் குருவை பீடத்தில் ஏற்றி விடிய விடிய காவல் இருப்பேன் என்றால் இருங்கள்.இல்லாவிட்டால் இன்னொரு வழி உள்ளது.குருவை சபையில் ஏற்றுங்கள். பேசுவோம். முடிவில் குருவை பீடத்தில் ஏற்றுவீர்களோ முச்சந்தியில் எறிவீர்களோ அது உங்கள் இஷ்டம்.இது எல்லா குருபீடங்களுக்கும் பொருந்தும்.

ஒரு அனானிமஸ் நான் கூறிய சாதிப்பற்று விஷயம் பா.ம.க விற்கும் பொருந்துமா என்றார்.இதில் என்ன சந்தேகம்..கண்டிப்பாக பொருந்தும் என்றே கூறினேன்.

பின்லேடனை எதிர்க்க பி.ஜே.பி யில் உறுப்பினர் கார்டு வைத்திருக்க வேண்டுமா? ரஜினியை கண்டிக்க பா.ம.க கட்சியை சேர்ந்தவருக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா என்ன? இதுவெல்லாம் நாமே போட்டுக்கொள்ளும் மாய வேலி.

இப்படி சகட்டுமேனிக்கு எல்லாரையும் நாம் எப்படி எதிர்க்கமுடியும்? யாரையாவது சப்போர்ட் செய்தால்தானே நம் சப்போர்ட்டுக்கு யாராவது வருவார்கள் என்று மென்டாலிட்டி உள்ளவர்கள் அடுத்தவரை விமர்சனம் செய்யும் தார்மீக உரிமையை இழக்கிறார்கள் என்றே கூறுவேன்.
மனிதன் முரண்பாடுகளால் பின்னப்பட்டவன். எல்லோருக்கும் நல்ல பிள்ளை கலியுகத்தில் சாத்தியம் இல்லை.பல்வேறு சந்தர்ப்பங்களில் தனிப்பட்ட சுயநலத்தினாலும்,சில சமயம் நேர்மையான காரணங்களுக்காகவும் சமரசம் செய்துக்கொள்ளும் பிரபலங்களை கண்மூடித்தனமாக DEFEND செய்வதை பற்றி நாம் மறுபரிசீலனை செய்யவேண்டுகிறேன்.

( இந்த பதிவிற்கு பிறகு நடுநிலைவாதிகளின் நாற்பது குணாதிசயங்கள்,ஆடு ஓநாய், எலி,எள், எலிபிளக்கை என்ற தலைப்புகளில் பதிவுகள் வந்தால் நான் பொறுப்பல்ல.)

Tuesday, December 13, 2005

சொக்க தங்கம் சோ பாகம் -3(இறுதி)

மற்ற இரண்டு பதிவுகளையும் இங்கே படிங்க....

பதிவு -1

பதிவு -2


அவரின் தி.மு.க எதிர்ப்பு வெறிக்கு ஒரு உதாரணம். நேற்று சில பி.ஜே.பி எம்பிக்கள் உட்பட பல எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில கேள்வி கேட்க லஞ்சம் வாங்கி சிக்கிக்கொண்டனர். இதை கிண்டலாக விமர்சிக்க வேண்டுமென்றால் நீங்களும நானும் நேரடியாக செய்வோம். இவர் என்ன பண்ணுவார் தெரியுமா?

கலைஞரும் அன்பழகனும் அல்லது கலைஞரும் துரைமுருகனும் பேசிக்கொள்வது மாதிரி ஒரு படத்தை போட்டு..."இந்த பி.ஜே.பி எம்.பிக்கள் நம்ம கிட்டே வந்திருந்தா எப்படி மாட்டிக்காம விஞ்ஞான ரீதியாக லஞ்ச ஊழல் செய்யறதுன்னு சொல்லி கொடுத்திருப்போம்" என்று கலைஞர் சொல்வதுபோல கார்ட்டூன் போடுவார்.

இப்ப என்ன ஆச்சு? ஒரே கல்லுல பல மாங்காய். லஞ்சத்தை எதிர்த்துவிட்டாராம்.(நேர்மையானவரில்லையா). பிஜே.பியை தாக்கிட்டாராம்.(அப்படி நேர்மையா இருக்கும்போது யாரை வேணாலும் எதிர்ப்பாராம்)அப்படியே தனக்கும் மற்ற பலருக்கும் தடவிக்கொடுத்த(சரியான வார்த்தையான்னு தெரியலை) மாதிரியும் ஆச்சு இல்லையா...

சரி.எல்லாத்தையும் விடுங்க ...செத்துப்போன சங்கரராமனை பிளாக்மெயிலர் என்றார் இவர். பிளாக்மெயில் செய்து சங்கரராமன் சேர்த்த கோடி ரூபாய் சொத்து எங்கே என்று சொல்வாரா?

இனி திரு.சோ ராமசாமி யாரும் புகழ்ந்து எழுதவோ பேசவோ வருவதற்கு முன்பு இதை மற்றும் இதன் பின்னூட்டங்கள் ஆகியவற்றை படித்துவிட்டு பிறகு எழுதலாமா என்ற மனசாட்சியை தொட்டு கேட்டுவிட்டு அப்படியே எழுதினாலும் இதற்கெல்லாம் இந்த குற்றசாட்டுக்கெல்லாம் பதில் சொல்ல முயற்சி செய்யலாமே...(இது சிந்தனை தளத்தை உயர்த்திக்கொள்ளவும் பயன்படும்)


இதுப்போல பல பதிவுகள் உள்ளன. டோண்டு அண்ணாவும் போட்டுள்ளார்.அதையும் படிக்கலாம். திரு.டோண்டு அவர்களின் கருத்துக்களை பற்றியெல்லாம நாம் எதுவும் சொல்வதற்கில்லை.அவர் தெளிவாகவே இருக்கிறார். அவர் கூறுவது என்னவென்றால் சோ பிராமணர்களை ஆதரிக்கிறார்.ஆகவே நான் அவரை ஆதரிக்கிறேன் என்பதுதான்.மூத்தவர் என்ற வகையில் அவர் மீது நம் அனைவருக்கும் மரியாதை உண்டு. நானும் சிறுவயதி்ல் துக்ளக் பத்திரிக்கையை ரெகுலராக படித்து வந்தவன் தான். ஆனால் என் தந்தை அடிக்கடி சொல்வார்.உனக்கு எப்படா சொந்த புத்தி வரும் என்று. சொந்த புத்தி வந்தது. துக்ளக் ரெகுலராக படிக்கும் பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.


திரு.சோ வை பற்றி விமர்சிப்பதற்கும் பிராமணர்களை விமர்சிப்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. பிராமணர் , பிராமணீயம் இந்த இரண்டை பற்றியும் கருணாநிதியும் சோவும் நிறைய விவாதித்திருக்கிறார்கள். "சோ" த்தனம் என்றால் என்ன என்ற குழப்பத்தில் இருப்பவர்கள் இதுப்பற்றி சோ கூறிய கருத்துக்களை ஊன்றி படிக்கவேண்டும்.

மேலும் கைபர் , போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்ற கருத்தே பொய் என்று உரத்து கூறும் சிலர் மனதிற்குள் உண்மையிலேயே தாங்கள் அப்படித்தான் வந்ததாக நினைத்துக்கொண்டு இருப்பது துரதிஷ்டவசமானது. யார் தமிழர்கள் என்று BAPTISE செய்யும் தகுதி இங்கு யாருக்கும் கிடையாது. அப்படி BAPTISE செய்யும் தகுதி தனக்கு இருப்பதாக கூறுபவர்கள் முட்டாள்கள் மட்டுமல்ல.வடிகட்டின அயோக்கியர்களும் கூட.இதை சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.தம்மை தமிழராக உணர யாருக்கும் உரிமை உண்டு. யாரோ லைசென்ஸ் கொடுக்கவேண்டும் என்று யாரும் நினைக்க தேவையில்லை.

தமிழ் சமுதாயத்திற்கு பிராமண சமூகத்தின் பங்கு கணிசமானது. அப்படி இருக்கும்போது யாரையோ எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு தமிழ் அடையாளத்தை மறுத்துக்கொண்டு அதை மறைப்பதற்காகவே "தேசியம்" பேசுவது தவறு என்றுதான் எனக்கு தோன்றுகிறது.

ஆகவே நண்பர்களே, திரு.சோ அவர்கள் நிஜமாகவே போற்றுதலுக்குரிய பல்கலை வித்தகர் என்பது உங்களுக்கு எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாமல் புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.நினைவில் நின்றவைகளை மட்டும் எழுதியுள்ளேன். இன்னும் எழுதலாம் நிறைய அவரைப்பற்றி.தேவைபட்டால் எழுதுவேன்.

பொறுமையாக படித்ததற்கு நன்றி.

முற்றும்

சொக்க தங்கம் "சோ" வை உரசிப்பார்ப்போம் -பாகம் -2

முதல் பாகத்தை பார்க்க

அப்துல்கலாம் பற்றி எல்லோரும் பேசினார்களாம்.உடனே இவர் தைரியமாக கிண்டல் செய்தாராம்.ஆகா என்ன அரிய தொண்டு. அப்துல்கலாம் பற்றி மக்கள் நிறைய பேசினால் என்னய்யா தப்பு? ஒரு நடிகர், அவரின் பாஸிடிவ் பங்களிப்பு என்னன்னு யாருக்கும் தெரியாது. நெகடிவ் பங்களிப்பு என்ன என்று மனசாட்சி உள்ள அனைவருக்கும் தெரியும். அவரின் பிறந்தநாளுக்கு தலைவா தலைவா என்று கூச்சல்.கும்மாளம். இளைஞர்கள் முன்னேற வேண்டும் என்று கூறும் அப்துல்கலாம் பத்தி பேசினால் நக்கல் பண்ணுவாராம். என்னய்யா தமாசு இது? இதே அப்துல்கலாமிற்கு பதில் ஆர்.வெங்கட்ராமன் என்றால் என்ன சொல்லி இருப்பார்?

இன்றைய அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு கிண்டல், கேலி எல்லாம் யார் வேணாலும் பண்ணலாம். உலகம் கெட்டு போச்சு என்று ஈஸி சேர்ல உட்கார்ந்துகிட்டு சொல்றது சுலபம். பாஸிடிவ்வாக நீங்க என்ன பண்ணீங்க என்று கேட்டால் பதில் இல்லை. வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தினார் என்ற ஒரு காரணத்தினாலேயே அவரை மனதார வெறுத்தவர் சோ.

புத்திகூர்மை உண்டு . இல்லையென்று மறுக்கமுடியாது. உள்ள சுத்தியோடு கூடிய நேர்மையான புத்திக்கூர்மையை தலைவணங்கலாம்.ஆனால்
இவர் ? இதையும் படிக்கவும். இன்றைய இந்தியாவை பிடித்து ஆட்டுகிற வினையாக இந்த மாதிரி புத்திசாலித்தனங்களை குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன்.


பெண்களை பற்றி இவரின் கருத்துக்களை வைத்து ஒரு புத்தகமே போடலாம்.எப்போதோ அவர் மனதில் உருவாக்கி வைத்துள்ள கருத்துக்களை இன்றும் பிடிவாதமாக மாற்றிக்கொள்ளாமல் வைத்துக்கொண்டு அதை நியாயப்படுத்துவது , அதையும் சிலர் புகழுவது( ironically பெண்களுக்கு நிறைய உரிமை கொடுக்கவேண்டும் என்று சொல்பவர்களும் இவர்கள்தான்) காலக்கொடுமைதான்.

தீவிரவாதிகளை அவர் கண்டிப்பதை யாரும் தவறு சொல்லவில்லை. ஆனால் யார் கண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதி என்ற அவர் கருத்தைத்தான் எதிர்க்கவேண்டி இருக்கிறது. இவரின் கருத்துப்படி சுபாஷ் சந்திர போஸ் கூட தண்டிக்கப்படவேண்டிய தீவிரவாதிதான். விடுதலைப்புலிகளை இவர் கண்மூடித்தனமாக எதிர்க்க ஒரே காரணம் தமிழ் என்ற வார்த்தை அவர்கள் பெயரில் இருப்பது தான் என்று நினைக்க வேண்டி உள்ளது.( LIBERATION TIGERS OF TAMIL EELAM).

சுனாமி வந்தப்போது இவர் கூறியது புகழ்பெற்றது. ஏன் சுனாமி வருகிறது என்று யாரும் கூற இயலாதாம். பூகம்பம் வந்ததால் சுனாமி வந்தது என்றால் ஏன் பூகம்பம் வந்தது என்கிறார். பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்ததால் பூகம்பம் வந்தது என்றால் ஏன் பூமிக்கு அடியில் தகடுகள் நகர்ந்தது என்று கேட்கிறார்.இதற்கெல்லாம பதில் யாராலும் கூறமுடியாது என்றெல்லாம் கூறி செல்கிறார். அதாவது அறிவியலின் எல்லையை இவர் தொட்டு பார்க்கிறாராம். அப்போது யாரையோ பிடித்து உள்ளே போட்டதினால் தான் பூகம்பம் வந்தது என்றால் ஒத்துக்கொள்வாரா?


தொடரும்

Monday, December 12, 2005

சொக்க தங்கமா "சோ" ராமசாமி-- பாகம் 1

ஒரு சமுதாயத்தின் ஒலிபெருக்கியாக இருப்பது தான் அவரின் ஒரே சாதனை. அதை சொன்னால் அய்யோ அம்மா என்று ஒப்பாரி ஏன்? இதையெல்லாம் சொல்வதற்கு ஒருவர் பிராமணர்களை எதிர்ப்பவராக தான் இருக்கவேண்டும் என்றெல்லாம் அவசியம் இல்லை.தலையில் இருக்கும் அரைக்கிலோ சமாச்சாரத்தை உபயோகப்படுத்தினால் போதும்.

மூப்பனாருடன் தி.மு.க கூட்டணிக்கு பேச்சுவார்த்தைக்கு ஏன் சென்றார்?..
96 ல் ஜெயலலிதாவை எதிர்ப்பதற்கு யாருக்கும் காரணம் தேவையில்லை.அ.தி.மு.க ஆடிய ஆட்டம் அப்படி. அ.தி.மு.க வின் தோல்வி நிச்சயமாகிவிட்ட ஒன்று. ரஜினிகாந்த கூட மக்கள் எல்லாம் நினைத்த ஒரு விஷயத்தை சொல்லப்போய் தான் பிரபலமானாரே தவிர ரஜினி சொல்லித்தான் ஜெயலலிதா தோற்றார் என்று கூறுபவர்கள் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறார்கள் என்றே கூறலாம்.ஆகவே தான் சோவும் வேறு வழியின்றி மூப்பனாரையும் தி.மு.க வையும் ஆதரிக்க நேர்ந்தது. பாவம் சோ...அவரின் ஒரே லட்சியம் தி.மு.க வை ஒழிப்பது தான். அது அவர் வாழ்நாள் முடியும் வரை நடக்கபோவதில்லை. அதற்காகத்தான் ரஜினியை எல்லாம் மகாபுருஷன் என்றெல்லாம் பேசி திரிந்தவர் தான் இந்த சோ.


.அவருக்கு வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் பாண்டித்யம் உண்டு என்று புளகாங்கிதம் அடைகிறீர்கள். எத்தனையோ புத்தகங்கள் உள்ளன. அதை பார்த்து எழுதுவது ஒன்றும் சாதனை இல்லை. இன்றைய வாழ்க்கைமுறைக்கு ஒத்துவராத விஷயங்களை வாந்தி எடுப்பதில் என்ன ஐயா சாதனை உள்ளது?அவர் ஒரு உள்நோக்கத்தோடு (சில்லறைத்தனம்) தான் இதுப்போன்று எழுதி வருகிறார். துக்ளக்கில் சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ஒரு விஷயம் ரொம்ப பிரபலம். அவரவர் அவரவர் கடமையை மட்டும் செய்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லை என்றார் அவர்.இது சோவின் பார்வையை மீறி துக்ளக்கில் வெளிவந்து விட்டது என்று எந்த முட்டாளும் நினைக்கமாட்டான்.( அவரவர் கடமை என்பது வர்ணாஸ்ரமத்தை பற்றிய கேள்விக்கான பதில்தான்.)

மூடநம்பிக்கைகளை பரப்பி திரிவதும் அவர் பத்திரிக்கை தான். சோதிடம், சாமியார்கள் பற்றி அவர் பத்திரிக்கைகளில் வருவதில்லையா? ஒருவன் இதையெல்லாம் நம்ப தொடங்கி விட்டால் பிறகு இந்த தத்துவங்களின்படி பிராமணர்களை கும்பிடவேண்டும். இதுவெல்லாம் நுணுக்கமான விஷயங்கள். நுனிப்புல் மேய்பவர்களுக்கு புரிவது கடினம்.

தமிழ் பற்று உள்ளவர்களை அவர் எதிர்க்கிறார் என்பதில் என்ன ஐயா சந்தோஷம்?
சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை பண்ணினால் தான் கடவுளுக்கு புரியும். தமிழில் செய்தால் கடவுளுக்கு புரியாது என்ற அரிய கருத்தை வாந்தி எடுத்தவர் தான் அவர். பிற்போக்கு என்பது இதுதான் ஐயா.......

தெரியாமல் தான் கேட்கிறோம்.தமிழ்பற்று என்றால் ஏனய்யா ஒரு குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கிண்டலாகவே தெரிகிறது. வ.வே.சு அப்படி நினைக்கவில்லை.பாரதியார் அப்படி நினைக்கவில்லை.சுந்தர ராமசாமி அப்படி நினைக்கவில்லை. மத்த சில்வண்டுகளுக்கு ஏன் இந்த எண்ணம்.(இங்கு மொழிப்பற்று பத்தி மட்டும்தான் பேசப்படுகிறது. தாய்மொழியை அழித்துவிட்டு அடுத்த மொழி வரும்போது போராட்டம் தேவையாகத்தான் இருக்கிறது.)

பி.ஜே.பியை ஆதரிப்பதற்கு எல்லாம் காரணம் நாம் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. விமரிசித்தால் கூட ஒரு பரிவோடு தான் அவர்களை விமரிசிப்பார்.அய்யோ இப்படி பண்ணீ்ட்டீங்களே? ஏன் ராசா என்பது போலத்தான் அவர் விமரிசனம் இருக்கும்.தி.மு.க ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை எதிர்ப்பதையே முழு மூச்சாய் கொண்டு வாழ்கிறார். அவர் எழுத வேண்டியது. அவருக்கு வேண்டியவர்கள் மட்டும் படித்து சிரித்துக்கொள்ளவேண்டியது. என்ன காமெடி அது?



(தொடரும்)

Saturday, December 10, 2005

சிறுமை கண்டு பொங்குவோம்

சிறுமை கண்டு பொங்குவோம்

ஃபிளைட் லேண்ட் ஆக அனுமதி கிடைக்கவில்லை என்று முகமெல்லாம் வெளுத்த குட்டை பாவாடை ஏர்ஹோஸ்டஸ் அறிவித்தாள். அவள் அருகில் வந்த போதெல்லாம் ஒரு சுகந்த மணம் வீசியது. சென்ட்டை தடவுவாளா அல்லது சென்ட்டில் குளிப்பாளா? ஒரு நிமிடம் என் மனது அவள் குளியலறையை தொட்டு மீண்டது.விமானம் ஒரு மணி நேரமாக சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருக்கிறது என்று நான் நினைத்தது சரியாக போய்விட்டது. யாராவது வீணாய் போன மந்திரி வருவதற்காக ஏதாவது ஃபிளைட் விமான நிலையத்தில் டேக் ஆஃப் ஆகாமல் காத்துக்கொண்டிருக்கும். அதுதான் லேட் என்று தானாக ஒரு காரணம் கற்பித்துக்கொண்டு 'பொறுக்கி பசங்க' என்று திட்டினேன். மனதில் சிறு ஆறுதல் ஏற்பட்டது.

சட்டென்று விமானத்தின் உயரம் குறைந்து குறைந்து கீழே உள்ள கான்கீரிட் கட்டிடங்கள் குப்பைகள் போல் தெரிய ஆரம்பித்தன.முழுதாக இரண்டு வருடங்களுக்கு பிறகு சென்னை மண்ணை மிதிக்க போகிறோம் என்ற எண்ணமே மனதில் தென்றலாய் மிதந்தது.

அண்ணா பல்கலையில் பொறியியல் படித்த கையோடு ஒரு பன்னாட்டு மெனபொருள் நிறுவனத்தில் நல்ல வேலை கிடைத்து பிறகு அந்த நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா சென்ற நான் இரண்டு வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக இந்தியா திரும்புகிறேன். விமானத்தில் இருந்து இறங்கி லக்கேஜ் ரீசீவ் செய்ய சென்றால் அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. என்னுடைய லக்கேஜ் மட்டும் மும்பயிலேயே தங்கி விட்டதாக வருத்தத்தோடு சொன்னார்கள். இந்த மாதிரியான இம்சைகள் இங்கு இருக்கும் என்று அறிந்தவன்தான் என்றாலும் ஏற்கனவே பிளைட் லேட் ஆனதில் அப்செட் ஆகியிருந்த நான் மேலும் அப்செட் ஆனேன்.அடுத்த விமானத்திலேயே லக்கேஜ் வந்துக்கொண்டு இருப்பதாகவும் சிரமம் பார்க்காமல் சிறிது காத்திருக்க வேண்டினார்கள்.

தீடிரென்று செல் ஒலித்தது. அம்மாதான்.விமானம் லேட் ஆன விஷயத்தை சொல்லி சீக்கிரம் வந்துவிடுவதாக கூறினேன். நான் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் ஒரு புதுவீடு வாங்கியிருந்தோம்.அந்த வீட்டிற்கு வரும் அட்ரஸ், லேண்ட்மார்க் ஆகியவற்றை அம்மா குழந்தைக்கு விளக்குவது போல் விளக்கினாள்.நான் இன்னும் குழந்தை என்றே நினைத்துக்கொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறி வைத்தேன்.

இந்தியா எத்தனை வருடம் ஆனாலும் முன்னேறாது என்று என்னுடன் வேலை பார்க்கும் மற்ற நண்பர்கள் கிண்டல் அடிக்கும்போதெல்லாம் நான் அவர்களுடன் விவாதம் செய்வேன்.இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனும் தன் கடமையை உணர்ந்து கேள்வி கேட்டு வாழ பழகிக்கொண்டார்கள் என்றால் இந்தியா வல்லரசு ஆகும் நாள் ரொம்ப தூரத்தில் இல்லை என்பேன்.என்னுடைய எத்தனையோ நண்பர்கள் இந்த கணிப்பொறி துறையில் அதிர்ஷ்டத்தினாலோ அல்லது சொந்தக்காரர்களின் பரிந்துரையிலோ வேலையை வாங்கிக்கொண்டு அடுத்தவன் முதுகில் சவாரி செய்து வாழும்போது நான் கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆனவன். என்னுடைய பிராஜக்ட்டில் என்னை விட ஊன்றி வேலை செய்பவர் யாரும் இல்லை என்று எங்கள் துணை சேர்மனாலேயே பாராட்டப்பட்டவன்.என்னை நம்பியே என் பிராஜக்ட்டில் சிலர் வாழ்ந்துக்கொண்டு இருப்பதும் எனக்கு தெரிந்துதான் இருந்தது. கல்லூரி காலத்திலேயே நான் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவற்றில் கலக்குவேன்.மகாத்மா காந்தியும் தேச விடுதலையும் என்ற என் கட்டுரை ஒன்று தேசிய அளவிளான ஒரு கட்டுரை போட்டியில் பரிசு பெற்றுள்ளது.இவ்வளவு பெருமை உள்ள நான் இதுப்போன்ற ஒரு சூழ்நிலையில் என்ன செய்யவேண்டும்? இந்த ஏர்லைன்ஸ் கம்பெனியை உண்டு இல்லை என்று செய்துவிடவேண்டாமா?

ஆவேசத்துடன் எழுந்தேன். கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் ஆங்கிலத்தில் ஆரம்பித்தேன்.

"சோ,ஈஸ் திஸ் த சர்விஸ் யூ ஆர் கிவ்விங் டூ எலைட் கஸ்டமர்ஸ்?"

"வெரி ஸாரி ஸார்" என்ற அந்த பெண் எந்த உணர்ச்சியும் இல்லாமல் டேப்பில் பதிவு செய்தது போன்ற ஒரு குரலில் தானும் வருந்துவதாக தெரிவித்தாள்.உங்கள் வருத்தம் என் கஷ்டத்தை போக்காது என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே போன் அடித்தது.எடுத்து பேசியவள் என் லக்கேஜ் வந்துவிட்டதாக அறிவித்தாள்.

********************************************

சரியான மழை. நசநசவென்று இருந்தது சிட்டி முழுக்க. ஒரு சிறிய மழை அடித்தாலும் அத்தனை சாலைகளும் பல்லை இளிக்கின்றன. இந்த நாட்டை எத்தனை காந்தி பிறந்தாலும் திருத்த முடியாது. யாராவது தட்டி கேட்டால்தானே அரசாங்கத்தை. எது நடந்தாலும் கண்டுக்காமல் அவரவர்க்கு தேவையானதை பார்த்துக்கொண்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். என்னுடைய லட்சியமே ஒரு அரசியல்வாதி ஆவதுதான். இவர்கள் ஆடுகிற ஆட்டத்துக்கெல்லாம் வைச்சுக்கிறேன் அப்ப என்று நினைத்துக்கொண்டேன்.

ஆட்டோ போய்க்கொண்டிருந்தது.நான் மெதுவாக ஆட்டோ டிரைவரிடம் பேச்சு குடுத்தேன்.

"இப்ப மெட்ராஸில அய்யா கை ஓங்கி இருக்கா இல்லை அம்மா கை ஓங்கி இருக்கா"

"நமக்கு எதுக்கு சார் அரசியலெல்லாம்" என்றான்

பொதுவாக இதுப்போன்ற கேள்விக்களுக்கெல்லாம் சுவாரசியமாக பதில் சொல்லும் ஆட்டோக்காரர்களுக்கு என்ன ஆச்சு என்று தெரியவில்லை.உம்மென்று வந்தான்.நான் இறங்க வேண்டிய இடம் வந்தாகிவிட்டது.ஆட்டோ நின்றது.

"நூறு ரூபாய் கொடுங்க சார்",என்றான்

"என்னங்க இது பகல் கொள்ளையா இருக்கு, நாலு கிலோமீட்டர் தூரத்திற்கு நூறு ரூபாயா? மீட்டர் சார்ஜ் எவ்ளோ?"

"தோடா, நீ என்ன ஊருக்கு புச்சா?, இங்க மீட்டரெல்லாம் இல்லை. மழை வுழுவுது பாத்தையில்ல"

கடந்து சென்ற சிலர் திரும்பி பார்த்துவிட்டு சென்றனர். எனக்கு அவமானமாக இருந்தது.ஆனால் இந்த அச்சுறுத்தலுக்கு பணிந்து இவனுக்கு நூறு ரூபாய் கொடுக்கபோவதில்லை என்று முடிவு செய்துக்கொண்டேன்.

"கிலோமீட்டருக்கு பத்து ரூபாய்னு பாத்தாகூட நாப்பது ரூபாய்தானே",என்றேன்.

ஆட்டோடிரைவர் இதுப்போன்ற பல உரையாடல்களில் அனுபவப்பட்டவன்.நான் கொடுத்த ஐம்பது ரூபாய் நோட்டையும் வாங்காமல் நின்றுக்கொண்டிருந்தான்.

"உங்களையெல்லாம் யாரும் தட்டி கேக்காததால் தான் நீங்கள்ளால் ஆடறீங்க"

"யோவ், என்ன ஆடற கீடற என்றெல்லாம் பேசினா மரியாதை காணாம போயிடும்"

பேச்சு வார்த்தை முற்றியது."சரி, நீ சரிப்பட மாட்டே, எங்க மாமா கூட பேசு", என்று கூறிய நான் என் மொபைலை எடுத்தேன்.அவர் E-3 போலீஸ் ஸ்டேஷன்ல இன்ஸ்பெக்டராக இருக்கிறார் என்ற நான் கற்பனையாக போட்ட குண்டு வேலை செய்தது.

"சரியான சாவு கிராக்கிய்யா நீ, கொடுக்கறதை கொடு"

முப்பது ரூபாய் கொடுத்தேன். அதை சற்றும் எதிர்பார்க்காத ஆட்டோக்காரன் என்ன சார் என்கிற மாதிரி ஒரு பார்வை பார்த்தான்.

"கொஞ்சம் போட்டுகுடு சார்"

"ஒரு லிட்டர் பெட்ரோல் எவ்ளோ? ஐம்பது ரூபாயா? எத்தனை கிலோமீட்டர் தரும் உன் வண்டி?. இருபத்திஐந்து கிலோமீட்டர்னே வச்சுக்கலாம்.நாலு கிலோமீட்டர் வந்திருக்கோம்.அப்ப ஏழு அல்லது எட்டு ரூபா தான் உனக்கு அதிகபட்சம்.ரிட்டர்ன் ஒரு எட்டு ரூபா.மொத்தம் பதினைந்து ரூபாய்.அப்படி பார்த்தாலும் உனக்கு நான் ரெண்டு மடங்கு கொடுத்திருக்கேன்."

"சார் , நான் பிள்ளைக்குட்டிக்காரன்"

"எனக்கும் கல்யாணம் ஆகியிருந்தா இன்னேரம் நானும் பிள்ளைக்குட்டிக்காரன்தாம்பா, உழைச்சு பிழைக்க கத்துக்கோ, எல்லோரும் நேர்மையா நடந்தா நம்ம நாடு எங்கேயோ போயிரும், உனக்கு உண்டான காசை தவிர அடுத்தவன் காசை ஒரு பைசா கேட்க உனக்கு உரிமையில்லை, எல்லோருக்கும் தான் கஷ்டம் வாழ்க்கையில, என்னமோ நீ மட்டும்தான் கஷ்டபடுற மாதிரி பேசற?"

"என்ன துரை, ஏழைக்கிட்டே சட்டம் பேசறே", ஆட்டோக்காரன் குரல் தாழ்ந்துவந்தது.

"ஆமாய்யா, சட்டம்தான்.சட்டம்கிறகு எல்லோருக்கும் பொதுவானது.நம்ம சுயநலத்திற்காக சட்டத்தை வளைக்ககூடாது.இதே மாதிரி எல்லோரும் அவங்கவங்க சுயநலத்திற்காக சட்டத்தை மீறினா என்ன ஆகும்? அப்புறம் சட்டம் போடறதுக்கு என்ன அர்த்தம்?" எனக்கு மூச்சு வாங்கியது.

என்னை வித்தியாசமாக பார்த்த ஆட்டோக்காரன் எதுவும் சொல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு போனான்.

*************************************


இரண்டு நாட்கள் போனதே தெரியவில்லை.நண்பர்கள்,உறவினர்கள் என்று பலரும் வந்திருந்ததால் டைம் போனதே தெரியவில்லை.இன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் வீட்டிற்கு சென்றுவிட்டு நானும் என் இன்னொரு நண்பனும் திரும்பிக் கொண்டிருந்தோம். பஸ் ஸ்டாப்பில் இறங்கி வந்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று தான் கவனித்தேன்.பாக்கெட்டில் இருந்த என் மொபைல் போனை காணவில்லை.மிகவும் காஸ்ட்லியான செட் அது. அனைத்து நவீன வசதிகளும் கொண்ட அந்த மொபைல் இந்திய மதிப்பில் கண்டிப்பாக இருபதாயிரத்திற்கு மேல் வரும்.

நண்பனை உடனடியாக தொடர்புக்கொண்டு ஒருவேளை அங்கே மறந்து வைத்து விட்டேனா என்று கேட்டேன்.அங்கு இல்லை என்றான் அவன். என் உடன் இருந்த நண்பன் யோசனைப்படி என் மொபைல் நம்பருக்கு டயல் செய்தேன்.முதல்முறை ரிங் போய் கட் ஆனது. இரண்டாம் முறை ரிங் போகவில்லை. இந்த எண் சுவிட்சு ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் என் மொபைல் திருடு போய்விட்டதை உணர்த்தியது.

அருகில் இருந்த காவல்நிலையத்தில் புகார் செய்வதுதான் உத்தமமான யோசனை என்று புலப்படவே
அங்கே சென்று காவல்துறை அதிகாரியிடம் கூறினேன்.

"மொபைல் போனை தொலைச்சுட்டியா? ஏய்யா பார்த்தா படிச்சவன் மாதிரி இருக்க..உங்களுக்கெல்லாம் பொறுப்பே இருக்காதா, பஸ்ஸிலே எவளையாவது பார்த்துட்டு வாயை பொளந்துட்டு இருந்திருப்பே, எவனாவது பிக்பாக்கெட் அடிச்சிருப்பான்"

எனக்கு சுர்ரென்று கோபம் தலைக்கேறியது."சார்,சட்டப்படி உங்க கடமையை மட்டும் செய்யுங்க,நான் யாரை பார்த்து வாயை பொளந்தேங்கறது உங்க விசாரணை எல்லைல வராது" என்றேன் சூடாக.

"ஓ அப்படியா,சரி சரி, ஒரு ஸ்டேட்மெண்ட் எழுதி அதுகூட மொபைல் போன் வாங்கின பில்லை இணைச்சி கொண்டு வாங்க, பாக்கறோம்."

"சார், புகார் கடிதம் சரி.ஆனால் மொபைல் வாங்கின பில்லெல்லாம் என்கிட்டே இல்லை இப்ப".

"சார், அதெல்லாம் இங்க பேசவேண்டாம், நீங்க சொன்னபடி சட்டப்படி என் கடமையை நான் செய்யறேன்.நீங்களும் சட்டப்படி நடந்துக்கங்க", என்ற ஆய்வாளர் அதற்குமேல் பேச ஒன்றும் இல்லை என்பதுபோல ஒரு பைலை எடுத்து புரட்ட ஆரம்பித்தார்.

செய்வதறியாது தவித்து நின்ற என்னை அதுவரை ஒதுங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்த காவலர் அணுகினார்.

"என்ன தம்பி,இவ்ளோ விவரம் இல்லாம இருக்க, இங்கெல்லாம் வந்து சட்டம் பேசலாமா? மொபைல் போனெல்லாம் காஸ்ட்லி சமாச்சாரமாச்சே"

"என்ன பண்ணலாம்னு நீங்களே சொல்லுங்க சார்", என்றான் அதுவரை பேசாமல் இருந்த என் நண்பன்.

"ஒரு முன்னூறு ரூபாயை கொடுங்க, எஃப.ஐ.ஆர் புக் செய்துரலாம்.ரெண்டு நாள் கழித்து வாங்க.பார்ப்போம்".

பணத்தை எடுத்துக்கொடுத்தேன்.புகாரை எழுதிக்கொடுத்துவிட்டு ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தோம். தற்செயலாக நிமிர்ந்து பார்த்தேன். E-3 காவல் நிலையம் என்று எழுதியிருந்தது.என் நினைவில் ஏனோ அந்த ஆட்டோடிரைவர் வந்து போனான்.

Monday, December 05, 2005

பதிலைத்தான் சொல்லிடுங்களேன் சார்

நேர்மையானவன்(நல்லவன்) * நேர்மையில்லாதவன்(கெட்டவன்)

புத்திசாலி * முட்டாள்



மேற்கண்டவை இரண்டுவிதமான முரண்பாடான குணச்சித்திரங்கள். மனிதர்களை எளிமையாக வகைப்படுத்தினோம் என்றால் இந்த இரண்டு விதமாக காம்பினேஷன்களில் அடக்கலாம்.ஒவ்வொன்றாக பார்ப்போம்.

நேர்மையான புத்திசாலி

நேர்மையான முட்டாள்

நேர்மையில்லாத முட்டாள்

நேர்மையில்லாத புத்திசாலி


இதில் முதல் இரண்டு வகையும் பெரிய ஆபத்தை கொடுத்துவிடாது.நேர்மையில்லாத முட்டாள்கூட எதாவது முட்டாள்தனமாக செய்து மாட்டிக்கொண்டுவிடுவான்.நான்காவது பகுப்பாடான நேர்மையில்லாத புத்திசாலி தான் நமக்கு பிரச்சினை.இந்த வகையான மனிதர்கள் மிகமிக ஆபத்தானவர்கள்.இந்த வகையினரை எப்படி எதிர்கொள்வது என்பது இன்று சமுதாயத்தை எதிர்நோக்கிஇருக்கும் பிரச்சனைகளில் ஒன்று.மேற்படி சிந்தனை கீற்று(?) நான் அடிக்கடி நண்பர்கள் வட்டாரத்தில் உதிர்க்கும் தத்துவ முத்துக்களில் ஒன்றாகும்.சிலர் பாராட்டிய அதே வேளையில் என் தத்துவ கீற்றுக்களை தாங்க முடியாமல் நட்பை முறித்துக்கொண்டு சென்றவர்களும் உண்டு.

சரி.சரி.விஷயத்திற்கு வருவோம்.சமீபத்தில் அ.தி.மு.க எம்பிக்கள் குழு ஒன்று பிரதமரை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் திரு.சிதம்பரத்தின் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளது.திடுக்கிட வைக்கும் பல புகார்களை அடக்கியுள்ள அந்த குற்றச்சாட்டை பற்றி நிதி அமைச்சர் எந்த பதிலும் கூறாமல் இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.இதைவிட கொடுமை நம் மீடியாக்களின் செயல்பாடு. ஜெயா டிவி தவிர வேறு எந்த டிவியிலும் இதை பற்றி கேட்க முடியவில்லை.திரு.சிதம்பரம் ஆங்கில மட்டும் வடஇந்திய மீடியாவின் செல்லப்பிள்ளை என்பது உண்மைதான் என்றாலும் இது கொஞ்சம் ஓவர்.

திரு.சிதம்பரம் கிளீன் இமேஜ் உள்ள ஒரு அரசியல்வாதி. ஒரு வேளை சூரியன் மேற்கில் உதித்து காங்கிரஸ் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்தால் முதல்வர் பதிவியில் அமர தகுதியானவர் என்றெல்லாம் மக்களிடம் அவர்மேல் ஒரு எதிர்பார்ப்பு உண்டு.குற்றம் சாட்டியிருப்பது அ.தி.மு.க என்பதாலேயே இவை பதில் கூற தேவையில்லாதது என்பதான நிலைப்பாடு தவறானது.ஊழலில் உலகச்சாதனை பண்ணியவர்கள் அ.தி.மு.க வினராக இருக்கலாம்.அதற்காக அவர்களுக்கு அடுத்தவர் ஊழலைப்பற்றி புகார் சொல்ல தகுதியில்லையா என்ன?.இன்றைய இந்தியாவில் அடுத்தவர் மீது குற்றம் சாட்டும் ஒருவர் அப்பழுக்கில்லாமல் இருக்கவேண்டும் என்றால் யாரும் யார் மீதும் குற்றம் சாட்ட முடியாது ( மகாத்மா காந்தி உட்பட).

சிறிது காலம் முன்புவரை பாமரர்களின் கட்சியாக மட்டுமே இருந்த அ.தி.மு.க பல விதங்களிலும் வளர்ந்து வருகிறது.அங்கங்கே சில அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரமுகர்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவதும் தெரிகிறது.தி.மு.க வை ஒப்பிடும்போது இந்த மாதிரி விஷயங்களில் பின்தங்கி இருந்த அ.தி.மு.க இப்பொது நன்றாகவே முன்னேறியிருப்பது தெரிகிறது.இப்போது அவர்கள் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளான செபி விதிமுறை மீறல்,ரேபோ வங்கியிடம் கடன் வாங்கியுள்ள விவகாரம், ஐ.டி.பி.ஐ செக்யூரிட்டி விதியை தளர்த்திய விவகாரம் ஆகியவை மிகவும் தீவிரமானவை. நிதி அமைச்சருக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது.

திரு.சிதம்பரம் புத்திசாலி என்பது பரவலாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு உண்மை.ஆனால் நேர்மையானவரா என்பதற்காக பதிலை ஒரு சாதாரண குடிமகன் எதிர்பார்க்கிறான்.(அப்பாடா, எப்படியோ என் தத்துவத்திற்கும் இந்த விஷயத்திற்கும் முடிச்சு போட்டாச்சு)

Thursday, December 01, 2005

ஒரு செய்தியும் சில பின்னூட்டங்களும்

தினமலர் 01.01 .2006
தேசிய தமிழ் நாளிதழ்

திருப்பம்

தமிழக அரசியலில் ஒரு திடீர் திருப்பமாக டாக்டர் இராமதாஸ் நேற்று தி.மு.க கூட்டணியில் இருந்து விலகினார்.அன்பு சகோதரியின் ஆட்சி நிலைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் தி.மு.க தலைவர் கலைஞர் கடந்த தேர்தலில் தனது கோவணத்தை உருவியதைப்போல் இந்த தேர்தலி்ல் அன்புமணி கோவணத்தையும் சேர்த்து உருவ சதி செய்வதாகவும் அதனாலேயே தான் கனத்த மனத்துடன் விலகுவதாகவும் கூறிய டாக்டர் மத்திய அரசில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார். மத்தியில் தேர்தலுக்கு இப்போதைக்கு வாய்ப்பு இல்லை என்பதும் அன்புமணி பதவியில் இருப்பதும்தான் இதற்கு காரணமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்ததுடன் பின்னால் அமர்ந்திருந்த காடுவெட்டி குருவை அர்த்தபூஷ்டியுடன் திரும்பி பார்த்ததால் குறிப்பிட்ட கேள்வியை கேட்ட நிருபர் தலைமறைவாக வேண்டி இருந்தது.சித்தியின் ஆட்சி சிறப்பாக இருப்பதாக டாக்டர் அன்புமணி கவித்துவமாக கூறியது ரசிக்கும்படியாக இருந்தது.

இதுப்பற்றி கருத்து தெரிவித்த கலைஞர் அம்மையார் விரித்திட்ட வலையில் இராமதாஸ் விழுந்திட்டார் எனவும் தனக்கு இதுப்பற்றி முன்பே தகவல் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுப்பற்றி கருத்துக்கேட்க திரு.வை.கோ வை தொடர்புக்கொள்ள முடியவில்லை.இலங்கையில் மீண்டும் சண்டை வரலாம் என்று செய்திகள் வந்துள்ள நிலையில் வைகோ காணாமல் போயிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.



தினமலர் வாசகர் கடிதம் பகுதி


புளுகனூரில் இருந்து செட்டப்பு செல்லப்பா எழுதுகிறார்


எதிர்பார்த்தது போலவே அண்ணன் கலைஞர் இராமதாஸ் மற்றும் அன்புமணியின் கோவணத்தை உருவ முயன்றதினால் இராமதாஸ் மனம் கனத்து விலகுகிறார்.கருணாநிதி 1967 ல் இருந்து இதுப்போல பலரின் கோவணங்களை உருவி இருக்கிறார்.இதற்கு சர்க்காரியா கமிஷனில் சாட்சி உள்ளது. இப்படி உருவிய கோவணங்களைத்தான் மஞ்சள் சாயம் போட்டு துண்டுகளாக உபயோகப்படுத்திக்கொண்டு இருப்பதற்கு சாட்சிகள் உள்ளன்.கருணாநிதி உருவிய பல கோடிகள் எண்ணிக்கையிலான கோவணங்களை பற்றிய விசாரணைக்கு தமிழக அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும் .ஜெயேந்திரர் மீது அபாண்டமாக பழி சுமத்தி விசாரணை என்ற பெயரில் அலைகழிக்கும் அரசாங்கம் உடனடியாக அந்த வழக்குகளை வாபஸ் பெறவேண்டும்(இதை முன்பே செய்திருந்தால் சுனாமியை தவிர்த்திருக்கலாம்.இப்போதாவது இதை செய்து, தற்போதைய புயல்,மழை சேதம் ஆகியவைகளை தவிர்க்கலாம்).தமிழக அரசு ஆவன செய்யுமா?




இனி சில தமிழ்மண பின்னூட்டங்கள்

முதுகுமூடி

எனக்கு இது ஒன்றும் ஆச்சரியமாக இல்லை.ஆனால் நான் சொல்ல விரும்புவது என்னவெனில் நான் தர்மபுரி மாவட்டத்தில் பா.ம.க.வினர் பஸ்ஸை எரிக்கும்போது பஸ்ஸின் சீட்டுக்கடியில் ஒளிந்திருந்தேன்.அப்போது பா.ம.க.வினர் தொடர்ந்து இரு தேர்தல்களில் ஒரே கூட்டணியில் இருப்பது தன் தலைவருக்கு பிடிக்காது என்று பேசியதை என் காதால் கேட்டேன்.மற்றபடி டாக்டர் இராமதாஸ் கைவசம் நிறைய கோவணங்கள் உள்ளன.கலைஞருக்கு சில கோவணங்களை கொடுப்பதின் மூலம் ஒன்றும பெரிய நஷ்டம் வந்துவிடாது.

மேலும் புரட்சித்தலைவி குஷ்புவை அபாண்டமாக கலாய்த்த டாக்டரிடம் முதல்வர் மன்னிப்பு கடிதம் வாங்க வேண்டும்.


காண்டு

போலி் காண்டு என்ற இழிபிறவி பின்னூட்டம் இடுவதற்கு முன் நான் பின்னூட்டம் இடவேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகத்தான் நான் இரவெல்லாம் விழித்திருந்து பின்னூட்டம் இட்டு வருகிறேன்.இரண்டு பிளாக்குகளில் மீண்டும் மீண்டும் ஒரே பின்னூட்டம் இட்டு பார்த்தால் தான் தெரியும் என் கஷ்டம்.மற்றபடி நண்பர் முதுகுமூடி சொல்வதை நான் ஆதரிக்கிறேன்.

(இதற்கு பிறகு நண்பர் முதுகுமூடியை ஆதரித்து (வழக்கம்போல எனன சொல்கிறார் என்று படிக்காமலே) சில பின்னூட்டங்கள் விழுகின்றன)

மழலி

யாரோடும் சண்டை போடுவது என் நோக்கம் அல்ல. ஆனால் கருத்துக்களின் மூலம் வன்முறை பரப்பப்படும்போது நான் அதை மறுக்கவேண்டி உள்ளது. நண்பர் முதுகுமூடி பஸ் எரிந்த அன்று சற்று பின்னால் திரும்பி பார்த்திருந்தால் தெரிந்திருக்கும் ஒகேனக்கல் சுற்றுலா வந்திருந்த இந்த கடலூர்காரன் பின்சீட்டில் தான் ஒளிந்திருந்தான் என்பது.ஜெயிக்கிற கூட்டணியில்தான் இருக்கவேண்டும் என்பதுதான் தமிழ்குடிதாங்கியின் லட்சியம் என்று பா.ம.க காரர்கள் பேசினார்களே தவிர முதுகுமூடி கூறுவது போல அல்ல .இது உண்மையை திரிக்கிற செயல். டாக்டர் அய்யாவிடம் நிறைய கோவணத்துணிகள் உள்ளன என்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்கு எதாவது ஆதாரம் கொடுக்க முடியுமா?

முதுகுமூடி

டாக்டர் இராமதாஸ மற்றும் டாக்டர் அன்புமணி ஆகியோர் நிறைய கோவணம் வைத்துள்ளனர் என்பது சிலுக்குவார்ப்பட்டியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட சொல்லிவிடுமே.இதற்கு ஆதாரம் தேவையா?


ரமணி சீனிவாஸ்

டாக்டர் இராமதாஸ் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவது சீட்டோபோபியா என்ற வியாதியினால்தான். இந்த வியாதி வந்த உகாண்டா நாட்டு அமைச்சர் அண்டாகுண்டா பற்றி என் பதிவில் ஏறகனவே நான் எழுதியுள்ளது நண்பர்கள் அறிந்திருக்கலாம். இந்த வியாதியின் ஆரம்ப அறிகுறிதான் இது. இந்த வியாதி தீவிரமாகும்போது தினமும் ஒரு கூட்டணி மாறுவார்.ஒருவேளை தமிழ்நாட்டில் தேர்தல் இல்லை என்றால் அண்டைமாநில தேர்தல்களிலும் தேவைப்பட்டால் வெளிநாட்டு தேர்தல்களிலும் பங்கு பெற்று கட்சி மாறுவார் என்பது திண்ணம்.மற்றபடி கோவணம் பற்றி டாக்டர் கூறுவது ஒரு குறியீடுதான்.


தமிழ்கிறுக்கன்

தமிழர்களை பற்றி கேவலமான முறையில் பிராக்ஸிகளை வைத்து எழுதி புனிதச்சுடர் போல் காட்டிக்கொள்ளும் தினமலர் ஏடு தன்னுடைய வாரமலர் இதழில் நடிகைகளை பற்றி படுகேவலமாக எழுதுவது எந்த விதத்தில் நியாயம்?


(தமிழ் என்ற வார்த்தையை பார்த்தவுடன் கத்து, சோ ஆகியோர் (வழக்கம் போல என்ன என்று படிக்காமலே) ஆதரித்து சில பின்னூட்டங்கள் இட்டுள்ளனர்.



ANONYMOUS

அதற்குத்தான் தினமலர் அடுத்தப்பக்கத்திலேயே கோவில்களை பற்றியும் பக்தியை பற்றியும் இரண்டு பக்கம் போட்டு பேலன்ஸ் பண்ணிடறாங்களே..அப்புறம் என்ன?(யோவ் உன்னுடைய பதிவை பத்தி தினமலரில் வராது .பரவாயில்லையா?)



கடைசியாக
முத்து

தமிழ்மணம் நண்பர்களுக்கு ,
குஷ்பு விவகாரத்தால் சற்றே சூடாகிப்போன மனங்கள் ஆறுவதற்காக போடப்பட்ட பதிவு இது.இது யாருடைய மனத்தையும் புண்படுத்த இல்லை.சிரிப்பு வந்தா சிரிங்க.சீரியஸாய் எடுத்துக்காதீங்க.

(பரிந்துரைகள் மற்றும் பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன.)

Monday, November 28, 2005

ஜெயமோகன், சுந்தர ராமசாமி மற்றும் நான்

நேற்று சென்னையில் ஜெயமோகனின் புத்தக வெளீயிட்டு விழா நடந்தது. சுந்தர ராமசாமி இறந்து இரண்டு மாதங்களுக்குள்ளாகவே இந்த நூல் வெளியிடப்படுவது சுந்தர ராமசாமியை விற்பதற்கான முயற்சிதான் என்று பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.திரு.ரவி சீனிவாஸ் கூட இதைப்பற்றி எழுதியிருக்கிறார்.திண்ணையில் கூட திரு.பாரதி என்பவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.இந்த சர்ச்சையை பற்றி எழுதுவது இந்த பதிவின் நோக்கம் இல்லை.அந்த சர்ச்சையையும் அந்த நூலைப்பற்றியும் இன்னும் பல காலத்திற்கு பலரும் எழுதுவார்கள் பேசுவார்கள் என்பது உறுதி.

அறிமுக இலக்கிய வாசகனான என் பார்வையில் ஜெயமோகனின் உயிர்மை கட்டுரையின் அடிப்படையில் எனக்கு தோன்றிய சில சிந்தனை கீற்றுக்களை பதிவிடலாம் என்பது தான் என் நோக்கம்.

எனது நோக்கில் ஜெயமோகன் சுந்தர ராமசாமி பற்றி ஒரு நூல் எழுத தகுதியானவர்தான். கட்டுரை நெடுக ஜெயமோகன் தன்னை சுந்தர ராமசாமியுடன் ஒப்பிட்டு தன்னை ஒரு சிறந்த படிப்பாளியாக, படைப்பாளியாக மற்றும் இன்னபிறவாக முன்னிலைப்படுத்துகிறார்.அது அவர் எப்போதும் செய்வதுதான். ஏற்கனவே தன்னுடைய விஷ்ணுபுரமும் பின்தொடரும் நிழலின் குரலும் தான் தமிழில் வந்ததிலேயே சிறந்த நாவல்கள் என்று தன்னம்பிக்கையுடன் கூறியவர்.ஆகவே அதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

ஜெயமோகன் தொடர்பாக திண்ணையில் தொடர்ந்து வெளிவந்துக்கொண்டிருந்த கட்டுரைத்தொடர்களை பார்த்து பரவசம் அடைந்து பின்தொடரும் நிழலின் குரலை வாங்கினேன்.கதையின் களத்தை ஒரளவு நன்றாகவே அமைத்த கதாசிரியர் கதையின் நடுப்பகுதியில் நீதிபதியின் சீட்டிலும் தானே வந்து அமர்கிறார்.அங்கேதான் அந்த கதையின் விழ்ச்சி ஆரம்பமாகின்றது.

விஷ்ணுபுரம் நாவலைப்படிக்க நான் துணியவில்லை.அவரே கூறியபடி இந்திய மரபு தெரியாதவர்களுக்கு இந்த நாவல் உவக்காது என்பதால்.இந்திய மரபை கற்கும முயற்சியில் இருக்கிறேன்.ஆனால் பொதுவாக விவாதங்களில் தெரியும் ஜெயமோகனின் அறிவு பரிமாணங்களை அவரது படைப்புகளில் என்னால் காண முடியவில்லை. விவாதங்களுக்கும் தனக்கென சில கொள்கைகளை வைத்துக்கொண்டு மற்றவர்களின் பார்வையை நிராகரிக்கிறார்.

ஆனால் இது போல ஒரு நூலை எழுதுவதின் மூலம் தன்னை திரு.சுந்தர ராமசாமியின் இலக்கியவாரிசாக முன்னிறுத்துகிறார் என்று கூறிவிடமுடியாது. சுந்தர ராமசாமியின் பாணியும் ஜெயமோகனின் பாணியும் வேறுவேறுதான்.அவரே கூறியுள்ளபடி உள்ளுணர்வு * தர்க்கமனம்.சுந்தர ராமசாமியின் பாணியை தர்க்கமணம் என்று வரையறுக்கும ஜெயமோகன் தன் பாணியை உள்ளுணர்வு என்று வரையறுப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
இங்கேதான் இந்த நூல் என்னை பொறுத்தவரை முக்கியத்துவம் பெறுகிறது.

இருவரும் நேர்மாறான கொள்கைகளை உடையவர்கள். ஜெயமோகனே கூறியுள்ளபடி இருவரும் ஒருவரையொருவர் மாற்றவும் முயன்றுள்ளனர்.நேர்பழக்கம் நிறைய கொண்டவர்கள்.சுந்தர ராமசாமியின் கருத்துலகை அவரை அவர் கருத்துக்களை கொண்டாடும் ஒருவர் சொல்வதை விட அவரை நிராகரிக்கும் ஒருவர் பார்வையில் இருந்து சொல்வது பல புதிய பார்வைகளை வாசகர்களுக்கு தரலாம்.ஆயிரம் காரணங்களை சொல்லி ஜெயமோகன் சுந்தர ராமசாமியின் பார்வைகளை நிராகரிக்கலாம். அதற்கு அவர் சொல்லும் காரணங்களை மார்க்சிய பார்வை உள்ள ஒருவர் அலசிப்பார்க்கலாம்.

எழுத்தாளர்களுக்கென்றே தவிர்க்க முடியாமல் வரும் வியாதியின் கூறுகளின்படி அடுத்தவரை சிறுமைப்படுத்தி( அவருக்கு படிப்பு பத்தாது போன்ற விஷயங்கள்) தன்னை முன்னிலைப்படுத்தி சில வாக்கியங்கள் இருக்கின்றன். அது தவிர்க்கமுடியாதது.அடிப்படை சிந்தனைத்திறன் இல்லாமல் ஒருவர் தமிழ் இலக்கிய உலகில் வாசகராக இருக்க முடியாது. அப்படி திறன் உள்ள ஒருவர் இதுப்போன்ற வாக்கியங்களின் முழு அர்த்தத்தையும் விளங்கிக்கொள்ளமுடியும்.வேண்டுமென்றால் தவிர்க்கவும் முடியும்.

இனி ஜெயமோகன் கட்டுரையில் என்னை கவர்ந்த ஒரு பகுதியை பற்றி சொல்லி முடிக்கிறேன்.மேற்படி உயிர்மை கட்டுரையில் ஓரிடத்தில் தஸ்தயேவ்ஸ்கிவின் கரம்சேவ் நாவலி்ல் வரும் இவான் என்ற கதாபாத்திரத்தை பற்றி எழுதுகிறார்.

"இவான் சுந்தர ராமசாமிக்கு மிக முக்கியமான கதாபாத்திரம்.ஒரு பக்கம் அல்யோஷாவின் களங்கமின்மையின் வசீகரம்,மறுபக்கம் திமித்ரியின் இச்சையின் மூர்க்கம்,இரண்டுக்கும் நடுவே கட்டிய சரடு மீது தன் தர்க்கபுத்தியின்,சிந்தனையின் கைக்கோல் கொண்டு சமன்செய்து நடந்துபோகும் இவான் சுந்தர ராமசாமியின் ஆளுமையேதான்."

சுந்தர ராமசாமியின் பற்றி பலருக்கும் தெரியாத இது போன்ற பல பரிமாணங்களை என்னை போன்ற சு.ரா வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதற்கு ஜெயமோகன் சரியானவர்தான்.


இனி என்னைப்பற்றி கொஞ்சம். தலைப்புக்கு நியாயம் பண்ணணும்ல.தஸ்தயேவ்ஸ்கி பற்றி அதே உயிர்மை இதழில் திரு.எஸ். ராமகிருஷ்ணன் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அதில் ஓரிடத்தில் அவர் எழுதுகிறார்.

"கரமசோவ் சகோதரர்கள் நாவலில் இவான் தனது சகோதரன் அல்யோஷாவிடம் தான் ஒரு கவிதை எழுதியிருப்பதாகவும், அது சற்றே உரைநடைத்தன்மை கொண்டது என்றும் விவரிக்கிறான்.இவான் எழுதிய கவிதை The Grand Inquisitor கிறிஸ்துவை பற்றியது.கடவுள் பூமிக்கு வருவதை பற்றியது இந்த கவிதை".

இதை படித்த நான் ஆச்சரியம் அடைந்தேன். நான் எழுதி இங்கே என்னுடைய பிளாக்கில் வலையேற்றியுள்ள "தேவி தோன்றியபோது" என்ற சிறுகதை இதுப்போல ஒரு கருவை கொண்டதுதான்.ஒரு நண்பர் கூட இதை படிக்கும்போது புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் மற்றும் ஆதவனின் கடவுள் வந்தார் ஆகிய கதைகள் நினைவுக்கு வருகின்றன் என்று பின்னூட்டம் இட்டிருந்தார்.எனக்கு தோன்றியது என்னவெனில் பக்தி மயமாக்கப்பட்ட இந்த உலகத்தில் ஏதோ ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் ஏதோ ஒரு விதத்தில் தோன்றும் ஆசைதான் கடவுள் நேரில் வருவது.அதுதான் தஸ்தயேவ்ஸ்கிக்கு தோன்றியிருக்கிறது.புதுமைபித்தனுக்கு தோன்றியிருக்கிறது.ஆதவனுக்கு தோன்றியிருக்கிறது.எனக்கும்(?) தோன்றியிருக்கிறது.

நான் அடுத்து படிக்கவேண்டியது தஸ்தயேவ்ஸ்கிதான் என்று முடிவு செய்துவிட்டேன். கரமசேவ் சகோதரர்கள் புத்தகம் எங்கு கிடைக்கும் என்று தெரிந்த நண்பர்கள் கூறலாம்.அல்லது புத்தகம் வைத்திருக்கும் நண்பர்கள் தந்து உதவலாம்.

நேற்றைய விழா பற்றி எந்த வலைப்பதிவரும் பதிவேற்றவில்லை.ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Monday, November 21, 2005

கம்யூனிஸ்ட் கோபால்---வங்கி அனுபவங்கள் -2

THE WORD "GHERAO" IS OUR CONTRIBUTION TO THE OXFORD DICTIONARY
-west bengal Chief Minister Buddhadeb Bhattacharjee


ஊர்வலம் போவது,கோஷ்டி சேர்ந்து கோஷம் போடுவது என்பதெல்லாம் வீணாண வேலை என்பதாக பலருக்கு நினைப்பு இருக்கிறது. நானும் அந்த மாதிரியான எண்ணத்தை கொண்டிருந்தவன் தான். அதை நான் தவறு என்று உணர்ந்தது ஒரு சந்தர்ப்பத்தில்.அதை பற்றி இங்கு எழுதுவது தான் இந்த பதிவின் நோக்கம்.

நான் முதன்முதலில் வங்கி பணியில் சேர்ந்தது ஒரு கிராமத்து கிளை.அதிகம் படித்தவர்கள் நிறைந்த ஊர் என்று சொல்லிவிடமுடியாது. தலித் சமுதாயத்தை சேர்ந்த விவசாய கூலிகள்,மலைவாழ் பழங்குடியினர் நிறைய இருந்த அந்த கிராமத்தில் அதிக அளவு சிறு மற்றும் குறு விவசாயிகளும் இருந்தனர்.

நான் அன்று கையெழுத்து போட்டு வேலைக்கு சேர வேண்டும். ஆனால் நான் வங்கி உள்ளேயே நுழைய முடியாதபடி வங்கி வெளிப்புற கேட் முன்னால் ஒரே கூட்டம். எப்படியோ உள்ளே நுழைந்துவிட்டேன். ஆனால் மேலாளர் வரவில்லை.கிராம கிளையாதலால் ஒரே ஆபிசர்தான்.அவரிடம் தான் ரிப்போர்ட் செய்யவேண்டும்.மேலாளர் வரும்போது கெரோ தொடங்கிவிட்டது. வெளியே கூடியிருந்த கூட்டம் அவரை உள்ளேயே வரவிடவில்லை. எனக்கு அதிர்ச்சியாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது.எங்கள் வங்கி கிளை மாடியி்ல் அமைந்திருந்ததால் மாடியில் இருந்து கி்ழே நடக்கும் களேபரங்களை பார்க்கமுடிந்தது. சுமார் 45 முதல் 50 வயதுள்ள ஒரு குட்டையான ஒரு ஆள் தான் ஆர்பாட்டத்தை தலைமை தாங்கி நடத்திவந்தார்.

எங்கள் கிளை மேலாளருடன் சூடான வாக்குவாதம். எங்கள் மேலாளர் போலீஸை கூப்பிடுவேன் என்று சொல்லி பார்க்கிறார். இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட வேண்டாம் சார் என்ற அந்த நபர் புறங்கையால் அந்த மிரட்டலை சமாளிக்கிறார். அன்றே அருகிலிருந்தவர்களிடம் கேட்டதில் அவர் பெயர் கோபால் என்பதும் உள்ளுர் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் என்றும் தெரியவந்தது.

கிராமத்து பெரிய மனிதர்கள் உதவியுடன் எங்கள் மேலாளர் அன்று கெரோவில் இருந்து மீண்டதும் எதற்கும் அயராத கோபால் வங்கிக்கு எதிரில் மைக் செட் கட்டி மேலாளருக்கு எதிராக கோஷம் போட்டதும் பின்னர் மீண்டும் ஊர்பெரியமனிதர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடந்து எங்கள் மேலாளர் கோபால் கேட்டுக்கொண்டபடி சிலருக்கு லோன் வழங்க ஒப்புக்கொண்டதையும் பார்த்த எனக்கு அந்த வயதில் அது கண்டிப்பாக ஒரு புதிய அனுபவம் என்றே சொல்லவேண்டும்.

IRDP(ஒருங்கிணைந்த கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம்)திட்டத்தின் கடைசி நாட்கள் அவை. எங்கள் கிளை மேலாளர் சற்றே கெடுபிடியானவர். இது போன்ற கடன்திட்டங்களில் வழங்கப்படும் கடன்கள் பெரும்பாலும் திரும்பசெலுத்தப்படுவதில்லை என்பதால் இது போன்ற கடன்களை அவர் ஊக்கப்படுத்துவதில்லை பிறகு சில காலம் கழித்து நான் அறிந்துக்கொண்டது என்னவெனில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் அரசாங்கம் ஸ்பான்சர் செய்கிற கடன்களில் (இதில் குறிப்பிட்ட சதவீத பணம்தான் அரசுடையது)பணம் திரும்ப வராது என்ற காரணத்தால் கிளை மேலாளர் ஒருவருக்கு கடனை மறுத்தாலும், புகார் என்று போனால் வங்கி மேலிடம் கிளை மேலாளருக்கு சப்போர்ட் செய்யாது என்பதுதான்.கிளை மேலாளர் என்பவர் எவ்வாறு இவ்வகையாக குறுக்கீடுகளை சமாளிக்கிறார் என்பதும் முக்கியம்.இதுபோன்ற சமயங்களில் சில கடன்கள் வசூல் ஆகாமல் போகலாம்.இதன்பொருட்டு அந்த மேலாளர்களும் கேள்வி கேட்கப்பட மாட்டார்கள். (இதைப்பற்றி தனிப்பதிவை பின்னொரு முறை இடுகிறேன்)

விஷயத்திற்கு வருவோம்.அன்று தொடங்கி கம்யூனிஸ்ட் கோபாலை பல சமயங்களில் பார்த்துள்ளேன். காலை எட்டு மணிக்கு வங்கி முன் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் வெறும் பனியனோடு லுங்கியை கட்டிக்கொண்டு பல்குச்சி வாயில் இருக்க பஞ்சாயத்து பண்ணிக்கொண்டு இருப்பார். ஒரு தீர்ப்பையாவது அவர் கூறுவார் என்று நானும் காத்திருந்து பார்த்தது உண்டு.ஆனால் என் கண் பார்த்து அவர் தீர்ப்பு சொன்னதில்லை.ஆனால் எப்படியும் தினமும் பஞ்சாயத்து உண்டு.

திடீரென்று காலை பத்து பதினொரு மணிக்கு சிலருடன் வங்கிக்கு வருவார்."நம்ப பசங்கதான்,வெளியே பத்துரூவா வட்டிக்கு கடன் வாங்கி வட்டி கட்டிக்கிட்டு இருந்தான்.நான்தான் நம்ப மானேஜர் இருக்கார்னு கூட்டிக்கிட்டு வந்தேன்", என்பார்.எங்கள் கிளை மேலாளரும் எப்படியாவது ஒரு லோனுக்காவது அவரை ஜாமீன் கையெழுத்து போட வைக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்.அந்த கடன் வசூல் ஆகவில்லையெனில் அதை சொல்லி அவருடைய மற்ற பரிந்துரைகளை மறுத்துவிடலாம் என்பது திட்டம்.ஆனால் அதற்கெல்லாம் மசிகிறவரா நம்ப கோபால்.கூட்டிக்கொண்டு வருகிற ஆட்களிலேயே ஒருவருக்கு ஒருவர் மாற்றி ஜாமீன் போட வைப்பார்.

ஒருநாள் ஏதோ காரணத்திற்காக அந்த கிராமத்தில் உள்ள ஒரே அரசு மருத்துவமனையை கண்டித்து பேரணி, ஆர்பாட்டம் என்று அறிவித்தார்.காலை பத்து மணிக்கு பேருந்து நிறுத்தத்தில் துவங்கும பேரணி ஊர்வலமாக சென்று அரசாங்க ஆஸ்பத்திரி முன்னால் கோபாலின் பேருரைக்குப்பின் மகஜர் கொடுப்பது என்பது நிகழ்ச்சிநிரல்.பயந்துப்போன நான் அன்று பஸ் எல்லாம் ஊருக்குள் போக முடியாது என்று முடிவு செய்து என்னுடைய இரு சக்கர வாகனத்தில் வங்கிக்கு சென்றேன்.எங்கள் வங்கிக்கு முன்னால்தான் பேருந்து நிறுத்தம் ஆதலால் எதையும் நன்றாக பார்க்கமுடியும். பத்துமணிக்கு எந்த ஒரு சலசலப்பையும் காணோம்.கோபால் தான் வழக்கமாக உட்காரும் இடத்தில் அமர்ந்திருக்கிறார்.அமைதியாக இருக்கிறார். ஒரே மாற்றம் துவைத்த வேஷ்டி,சட்டை அணிந்திருக்கிறார்.ஒரு பேரணி நடக்கப்போகிற அறிகுறி எதுவுமே அந்த இடத்தில் இல்லை.நான் பேரணி கேன்சல் ஆகிவிட்டதோ என்று சந்தேகப்பட்டேன்.நேரம் கூடக்கூட எனக்கு பதட்டமாக இருந்தது.சரியாக பத்து மணி பத்து நிமிடத்திற்கு கோபால் தன் சட்டை பையிலிருந்து ஒரு துண்டு சீட்டை எடுத்து படித்துக்கொண்டே நடக்கிறார். ஆங்காங்கே உட்காந்திருந்த நான்கு பேர் ஆம் ,நம்பினால நம்புங்கள்.நான்கே பேர். அவரை கோஷம் போட்டபடி பின்தொடருகிறார்கள். ஊர்வலமும் பேருரையும் மகஜர் சமர்பித்தலும் கண்டிப்பாக நடந்திருக்கும்.சந்தேகம் என்ன?

போலீஸ் ஸ்டேஷன் என்பது சர்வ சாதாரணம் அவருக்கு.கிராமத்தில் ஏற்படும் சில சில்லறை சண்டை,திருட்டு போன்ற விஷயங்களில் போலீஸ் ஸ்டேஷன் போய் கிராம மக்கள் சார்பாக பேசுவதும் அவர் வேலைகளில் ஒன்று.பணம் எதுவும் வாங்குவது இல்லை.மக்கள் அன்புடன் வாங்கிக்கொடுப்பதை சாப்பிடுவார்.

வரலாற்று பொருள்முதல்வாதம் என்றால் என்ன என்று இவருக்கு தெரியுமா? எங்கெல்ஸ்,மார்க்ஸ் பற்றியெல்லாம் மக்களுக்கு இவர் சொல்வாரா? என்றெல்லாம் நான் சிந்தித்ததுண்டு.அவரிடம் நான் அதிகம் பேசியதில்லை.அவர் என்னை பூர்ஷ்வா வர்க்கம் என்று கூட நினைத்து கொண்டிருக்கலாம்.ஆனால் நான் உள்ளூர அவரை ரசித்துக்கொண்டிருந்தேன். அவருடைய நடவடிக்கைகளை ஒருவர் எப்படி வேண்டுமானாலும் தன் பார்வையை கொண்டு அர்த்தப்படுத்திவிடமுடியும். ஒருவர் இந்த பதிவை வெறுமே ஒரு சிரிப்பு துணுக்காகவும் படித்துவிடமுடியும் ஆனால் சற்றே சிந்தித்தால் இதுபோன்ற ஆட்கள் படிப்பறிவில்லாத அப்பாவி ஜனங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு ஆக்கபூர்வமாக பங்களிக்கிறார்கள் என்பதையும் புரிந்துக்கொள்ள முடியும். இன்றைய கிராமங்களில் இவர்களுடைய பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிட்டுவிடமுடியாது.இவர்களின் சாதனை என்பது வெளிஉலகிற்கு தெரியாமல் போகலாம். ஆனால் இந்த மாதிரியான போராட்டங்களால் சிறிய அளவிளாவது சில மாற்றங்களை இவர்கள் உருவாக்கி வருகிறார்கள்.

ஆனால் நம் கல்வி முறையில் பட்டபடிப்பு வரை ஒருவர் மார்க்சியம் என்றால் என்ன என்று தெரியாமலே படித்துவிடமுடியும் என்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.ஒருவர் அந்த சிந்தாந்தத்தை ஏற்றுக்கொள்கிறாரா மறுக்கிறாரா என்பது அவரவர் மனப்பான்மையை பொறுத்தது. ஆனால் ஒரு அறிவியலை அடிப்படையாக கொண்டதாக சொல்லப்படுகின்ற ஒரு சிந்தனை முறை பற்றிய படிப்பு நம் பள்ளிகல்வியில் இல்லை என்பது நம் கல்விமுறையின் பற்றாக்குறையை சொல்கிறது என்றே நான் நினைக்கிறேன்.ஒரு புறம் அறிவியல் பாடம் எதையும் அறிவியல் பூர்வமாக பார்க்கும் கல்வி. இன்னொருபுறம் அதற்கு சம்பந்தமே இல்லாமல் மூடநம்பிக்கைகளில் ஊறிய வாழ்க்கை முறை.குறைந்தபட்சம் மார்க்சியத்தின் அடிப்படைகளாவது தெரிந்த இளைஞர்கள் இங்கு எத்தனை பேர்?கம்யூனிஸ்ட் என்றாலே ஸ்ட்ரைக் பண்ணுகிறவர்கள் என்றும் கூட்டம் சேர்ந்து கோஷம் போடுகிறவர்கள் என்று எண்ணம்தானே இங்கு பல இளைஞர்களுக்கும் உள்ளது.இது மறுபரிசீலனைக்குரியது.

Saturday, November 19, 2005

என்னதான் நடக்கிறது இலங்கையில்?

நேற்று நடந்த தேர்தலில் மகிந்தா வெற்றி பெற்றார். இங்கே இந்தியாவில் எங்களுக்கு தெரிந்ததெல்லாம் விக்கரமசிங்கே வெற்றி பெற்றிருந்தால் அமைதி பேச்சுவார்த்தைக்கு
புத்துயிர் கொடுத்திருப்பார். இப்போது விடுதலைபுலிகளும் தமிழர்களும் தேர்தலை புறக்கணித்திருப்பதன் காரணமாக மகிந்தா வெற்றி பெற்றிருக்கிறார். மகிந்தா விடுதலைபுலிகளை எதிர்ப்பவர்.

ஏன் விடுதலைபுலிகள் இப்படி ஒரு முடிவு எடுத்தார்கள்? இதை அவர்கள எதிர்பார்க்கவில்லையா? அவர்கள் பக்க நியாயம் என்ன?

இங்கே தமிழ் மணத்தில் பல இலங்கையை சேர்ந்த நண்பர்கள் பதிவிடுகின்றனர்.பல விஷயங்களை எழுதுகிறார்கள். என்னுடைய இந்த குழப்பத்திற்கு தெளிவான பதிவை யாராவது இடுவார்களா?

Monday, November 14, 2005

என் வரலாற்று கடமை

குஷ்பு விவகாரத்தை பயன்படுத்தி தன்னுடைய முற்போக்குத்தனத்தை எல்லோரும் காட்டிவிட்டனர்(சிலர் தங்கள் பிற்போக்குதனத்தையும்).இதை பற்றி நான் பேசி என்ன ஆகப்போகுது என்றுதான் இத்தனை நாள் நினைத்து இருந்தேன்.நான் என்னுடைய வரலாற்று கடமையை ஆற்றவில்லையென்றால் வருங்கால சமுதாயம் என்னை தூற்றும் என்பதால் நானும் என்னுடைய பிற்போக்குத்தனத்தை காட்டிவிடலாம் என்று முடிவு செய்துவிட்டேன்.

பல புரட்சிகர கருத்துக்களையும்(உண்மையில் அந்த கருத்துக்களிலெல்லாம் தவறு இல்லை..சில ஆலோசனைகளும் உண்டு அதில்) சொன்ன குஷ்பு பின்னர் ஒரு நிருபரின் கேள்விக்கு "இங்கே எத்தனை பேர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் வைச்சுக்கலை என்று எனக்கு தெரிந்தாகணும்" என்றாராம்.அதற்கு அர்த்தம் தமிழகத்தில் பெரும்பாலானோர் கல்யாணத்திற்கு முன்னால் செக்ஸ் அனுபவம் பெற்றுள்ளார்கள் என்பதுதான்.

ஆண்களுக்கு எப்படியோ பெண்களுக்கு இது கண்டிப்பாக அவமானம் தரும் பேச்சுத்தான். சராசரி தமிழ் பெண் (தமிழ் பெண் மட்டும் அல்ல..சராசரி இந்திய பெண் என்றும் சொல்லலாம்.ஏன் உலக பெண்களை சொல்லவில்லை என்று ஒரு அறிவுஜீவி பின்னூட்டம் இடக்கூடும் அதையும் சேர்த்துக்கலாம்.) இதனால் வருத்தப்படுவதற்குரிய நியாயம் உள்ளது.அது தான் கொஞ்சம் ஓவரான பேச்சு என்று நான் நினைக்கிறேன்.தன் சொந்த வாழ்க்கையை நியாயப்படுத்த அடுத்தவரையும் அசிங்கப்படுத்துவது என்பது பல மனிதர்களின் இயல்பு.குஷ்பு அதில் விதிவிலக்கு அல்ல.

சுகாசினி ஏற்கனவே அறிவுஜீவி என்று பெயர் எடுத்தவர். தன் அறிவை காட்ட தமிழர் கொம்பு என்றெல்லாம் பேசிவிட்டார். தமிழர்களுக்கு என்ன கொம்பா முளைத்து இருக்கிறது என்ற வார்த்தை ரொம்ப ஓவர்.எந்த ஒரு இனத்திற்கும் தங்களை உயர்வாக நினைக்க,பேச உரிமை உண்டு.

அடுத்தவரை கிண்டல் பண்ணியே டைம் பாஸ் பண்ணி பழக்கப்பட்ட தமிழன் கிண்டல் பண்ண ஆள் கிடைக்காமல் தன்னையே யாராவது கேவலமாக நக்கல் செய்தாலும் பல்லை இளித்து ஏற்றுக்கொள்ள பழகி விட்டான்.(அடுத்த கவுண்டமணி படத்தில் கவுண்டமணி செந்திலை போடா தமிழ் தலையா என்று திட்டுவார். தமிழன் அதற்கும் வெடிச்சிரிப்பு சிரிப்பான்)

தமிழர் சார்பாக மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னும் கேவலம். தமிழர்களின் ஏகபோக பிரதிநிதியா இவர்? ஆனானப்பட்ட ஜெயலலிதாவே இவ்விவகாரத்தில் பொறுப்பாக கருத்து சொல்லி இருக்கும்போது இவர் ஏன் இப்படி பேசுகிறார்?

Saturday, November 12, 2005

மசாலா தமிழ் திரைப்படங்களும் தமிழர்களும்

மசாலா திரைப்படங்கள் அடையும் வெற்றி தரமான திரைப்படங்களின் வருகையை தடுக்கிறது என்பது என்னுடைய கருத்து. இதுவெல்லாம் ஏற்கனவே பலர் சொல்லிய கருத்துதான் என்றாலும் இங்கே தமிழ்மணத்தில் மசாலா படங்களை பலரும் பாராட்டி எழுதுவதை சகித்துக்கொள்ள முடியாமல் எழுதப்பட்ட பதிவுதான் இது.

சங்கரின் திரைப்படங்களில் வரும் கதாநாயகன் லஞ்சம் வாங்குபவர்களை துவம்சம் செய்வதை பார்க்க பிளாக்கில் டிக்கெட் வாங்கி கொஞ்சம் கூட ரோஷம் இல்லாமல் கை தட்டுகிறோம்.
சங்கரும் படத்திற்கு கோடிக்கணக்கில் பணம் பண்ணுகிறார். இன்கம்டாக்ஸ் கணக்கு எல்லாம் பார்த்தால் தான் தெரியும்.பாரதியார் பற்றி படம் எடுத்தால் காத்து வாங்குகிறது. எங்கே போகிறோம் நாம்?

விஜய் நடிக்கும் படங்களின் கொடுமை ஆண்டவனுக்கே அடுக்காது. மிகச்சாதாரணமான நடிப்பு. வெற்று சவாடல்.படிக்காத பாமர தமிழன் இந்த மாதிரி படங்களை பார்த்து எப்படிய்யா முன்னேறுவான்?.அவனுக்கு வாழ்க்கை திரைப்படத்தில் ஆரம்பித்து திரைப்படத்தில் முடிகிறது. கோடிக்கணக்கில் சம்பாதிக்கறதில் ஒரு துளி பிச்சைப்போட்டு சமூக அக்கறையையும் காட்டிக்கொள்கிறார்கள் இந்த வீரர்கள்.

பறந்து பறந்து ஒரே சமயத்தில் நூறு பேரை அடித்துத்தான் எந்தவொரு அநியாயத்தையும் கதாநாயகன் முடிவுக்கு கொண்டுவருவான்.அது நிஜ வாழ்க்கையில் சாத்தியம் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும்.ஆகவே தவறு செய்பவர்களும் கூச்சப்படுவதில்லை.யதார்த்த வாழ்க்கையை ஒட்டி வராத எந்த ஒரு திரைப்படத்தையும் பார்க்கும் மக்கள் அதையும் யதார்த்த வாழ்வையும் பிரித்து வாழும் ஒரு பக்குவத்திற்கு வந்து விட்டார்கள. திரைப்படம் என்பது ஒரு கனவு வாழ்க்கை என்பது போல.

உண்மையில் நமது வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது பற்றி நமக்கு அக்கறையில்லை. பொழுதுப்போக்கு மீடியம் தானே அதில் என்ன போதனை என்று வேறு ஒரு குழு. பொழுதுப்போக்கு மீடியம்தான்.ஆனால் உங்கள் சிந்தனைப்போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. கேட்டால் மக்கள் கேட்பதைத்தான் தாங்கள் கொடுப்பதாக சப்பைக்கட்டு. புளு பிலிம் கூடத்தான் மக்கள் கேட்பார்கள்.(சூரியா என்ற இயக்குனர் மக்களின் இந்த அரிப்பை தான் உபயோகப்படுத்தி பணம் பண்ணுகிறார்) டேஸ்ட எல்லாம் படைப்பாளிகள் தான் உருவாக்க வேண்டும். வானத்தில் இருந்து குதிக்காது தரமான ரசனை என்பது.மசாலா குப்பையை எடுக்கும் எந்த ஒரு இயக்குனரையும் கேளுங்கள். என்னுடைய கனவு திரைப்படம் இதோ வருகிறது. அதுக்கு முன்னால் ஒரு குப்பையை பாருங்கள் என்பார்கள். ஆனால் இவர்களிடம் இருப்பது எல்லாம் நாற்றம் பிடித்த குப்பைகள்தான்.

இந்த நடிகைகள்,நடிகர்கள் தீபாவளி பொங்கல் போன்ற நாட்களில் தொலைக்காட்சிகளிலும் வந்து தங்கள் அறிவை காட்டும்போது தமிழன் புளகாங்கிதம் அடைகிறான். ஒரு சிறந்த எழுத்தாளனோ சிந்தனையாளனோ பேசமுடிவதில்லை. மட்டமாக சினிமா எடுக்கும் சினிமாகாரர்கள் ஒருவரை ஒருவர் புகழ்வதை காணும்போது பற்றிக்கொண்டு வருகிறது.

படித்தவர் படிக்காதவர் என்று வித்தியாசம் இல்லாமல் சினிமா கலாச்சாரம் நமது சிந்தனையை ஆக்ரமி்த்துக்கொண்டிருக்கிறது. சேரன்,தங்கர்பச்சான் போன்று சிலர் இந்த சூழ்நிலையில் சற்றேனும் மாற்றத்தை கொண்டுவர முயற்சி செய்கின்றனர். ஆனால் இந்த மசாலா திரைப்படங்களின் வெற்றி இவர்களின் முயற்சியை முடக்கிவிடக்கூடாது என்பதே நமது ஆதங்கம்.

Thursday, November 10, 2005

உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும்

சமீபத்தில் சென்னையில் ஒரு இலக்கிய விழாவை பார்க்க நேரிட்டது. உண்மையில் நான் அங்கு ஒதுங்க நேரிட்டது மழைக்காகத்தான்.(நிஜமாங்க). இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கல்லூரியில் நடைபெற்ற பன்னாட்டு தமிழ் கருத்தரங்கு அது.

ஒரு தேர்வின் நிமித்தம் சென்னை செல்லவேண்டி இருந்த நான் அப்படியே சென்னையை சுற்றி பார்க்கலாம் என்ற எண்ணத்தில், எங்கள் வங்கியி்ல் உள்ள ஒரு சலுகையை பயன்படுத்தி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ரூம் புக் செய்திருந்தேன். சிங்கார சென்னையின் மழை என் அனைத்து திட்டங்களையும் தவிடு பொடியாக்கிவிட்டது.

ஞாயிற்றுக்கிழமை அன்று மிக அருகில் இருக்கும் கல்லூரிக்கு ஆட்டோவிற்கு நூறு ரூபாய் கொடுத்து சென்றோம். ( மழை பெய்வதால் சார்ஜ் அதிகமாம்.ஆனால் மீட்டர்படி வாடகை என்பது எங்கள் வரலாற்றிலேயே இல்லை என்கிறார்கள். மும்பய்ல கூட ஆட்டோக்கள் மீட்டர் படி தான் ஒடுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மீட்டர் போடும் ஆட்டோகாரர்களை பார்க்க முடிவதில்லை.மீட்டரை இம்ப்ளிமெண்ட் பண்ணவேண்டிய போலீஸ்காரங்க தான் நிறைய ஆட்டோக்களை வைத்திருக்காங்களாமே.இதைப்பற்றி சென்னைவாழ் நண்பர்கள் தனிப்பதிவே போடலாம் )

மழை வலுத்த நேரம் என் மனைவி தேர்வு ஹாலுக்குள் சென்றுவிட கையில் ஒரு வயது மகளுடன் நான் மழைக்கு ஒதுஙகவேண்டி நுழைந்த இடம்தான் அந்த கல்லூரியின் ஆடிட்டோரியம்.அங்குதான் மேற்படி இலக்கிய விழா.அதென்ன தலைப்பு உலக தமிழ் இலக்கிய வகையும் வடிவும் வெறுமனே தமிழ் இலக்கிய வகையும் வடிவும் என்று இருந்தால் பத்தாதா என்று கேட்பவர்களுக்கு பதில் பின்னால் வருகிறது.


பிள்ளைத்தமிழ் பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சாதாரணமாக அனைவருக்கும் தெரிந்த தகவல்களையே கருத்தரங்க கட்டுரையாக முன்வைக்கப்பட்டது சலிப்பை ஊட்டியது. ஒரு மாணவர் சைவ சிந்தாந்தத்தை பற்றி அருமையாக உரையாற்றினார்.சைவ சிந்தாந்தத்தை பற்றி எதுவும் தெரியாத என்னை போன்றவர்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.சம்ஸ்கிருததிலும் பிள்ளைத்தமிழ் இருப்பதாகவும் அதற்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பை பற்றி சில கட்டுரைகள் படிக்கப்பட்டன. சங்க இலக்கியத்தில் எனக்கு புலமை கம்மியாதலால் நவீன இலக்கியத்தை பற்றி எதாவது கட்டுரை வரும் என காத்துக்கொண்டு இருந்தேன்.

கடைசியாக வந்தது ஒரு கட்டுரை. மணிக்கொடி காலத்து பரிசோதனை கதைகள் என்ற தலைப்பில் ஒரு அருமையாக கட்டுரை. கல்வித்துறைக்கே உரிய பாணியில் அமைந்த பிரஸன்டேஷனை தவிர்த்துவிட்டு பார்த்தோமென்றால் ந.பிச்சமூர்த்தி கு.பா.ரா.புதுமைபித்தன் போன்றவர்களின் பரிசோதனை முயற்சிகளை பற்றி அழகாக கூறினார் என்று கூறலாம். புதுமைபித்தனை தவிர வேறு மணிக்கொடி எழுத்தாளர்களை பழக்கம் இல்லாத எனக்கு இந்த கட்டுரை சுவையாக இருந்தது. மற்ற மணிக்கொடி எழுத்தாளர்களையும் படிக்க தூண்டியது. மணிக்கொடி எழுத்தாளர்களின் தேர்தெடுத்த சிறுகதைகள் என்று ஏதாவது தொகுப்பு இருந்தால் நண்பர்கள் எனக்கு தெரியபடுத்தலாம்.

பிறகு லேட்டஸ்ட்டாக வந்த நாவல்களின் வடிவங்களை பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை படிக்கப்பட்டது. சல்மாவின் இரண்டாம் ஜாமங்களின் கதை,உமா மகேஸ்வரியின் யாரும் யாருடனும் இல்லை உள்பட 2000 முதல் 2004 வரை வெளிவந்த நாவல்களை எடுத்துக்கொண்டு வடிவம், வட்டார சொற்கள்,அத்தியாயங்கள் அல்லது கதை போக்கு முன் பின் முரணாக இருப்பது போன்ற விஷயங்களை பேசினார். நல்லவேளை பாலகுமாரன், ரமணிசந்திரன் முதலான நாவல்களை அவர் கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை.சந்தோஷபடவேண்டிய விஷயம்தான். பிறகு பிற்பகல் உணவு இடைவேளை விட்டவுடன் இங்கு தேர்வு முடிவடைந்து விட்டதால் நானும் வெளியேற வேண்டியதாகிவிட்டது.

இத்தனை ஆய்வுக்கட்டுரைகளையும் புலவர்கள் சமர்ப்பிக்கும்போது கரகோஷம் எழுப்பிய ஒரே ஜீவன் என் ஒரு வயது மகள்தான். தன் தாயை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரியாத அவள் தொடர்ந்து மூன்று மணிநேரம் என்னுடன் இருக்க நேர்ந்ததை ஏற்றுக்கொள்ளமுடியாமல் சத்தம் எழுப்பிக்கொண்டிருந்தாள்.


என்னை போலவே மற்றவர்களுக்கு தேர்வுக்கு துணையாக வந்து மழைக்கு ஒதுங்கிய சிலர் தான் பார்வையாளர்கள்.கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த பேராசிரியை இது போன்ற பல கருத்தரங்குகளை பார்த்திருக்கவேண்டும். பத்துப்பேரை வைத்துக்கொண்டு மேடையில் பேசுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும். போன் ஆண்டு வெறும் தேசிய கருத்தரங்காக நடந்த கருத்தரங்கு இந்த ஆண்டு பன்னாட்டு கருத்தரங்காக முன்னேறியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார் அவர். இதையெல்லாம் எப்படி, யார் தீர்மானிக்கிறார்கள் என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.சிங்கப்பூரில் இருந்து ஒரு கட்டுரை வந்துள்ளதால் இது பன்னாட்டு கருத்தரங்காக மலர்நதுள்ளதாக அகமகிழ்ந்தார்.
பன்னாட்டு கருத்தரங்கு அடுத்த ஆண்டு இதே அழகில் நீடித்தால் கருத்தரங்கை துறை தலைவர் தனியாக நடத்த வேண்டி வரும் என்றுதான் நினைக்கிறேன்.

பன்னாட்டு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படும்போது சக ஆய்வாளர்கள் மட்டும்தான் பார்வையாளர்கள் என்பது தமிழின் எதிர்காலத்தை நன்றாகவே படம் பிடித்துக்காட்டுகிறது. ஏற்கனவே நான் கூறியிருந்தபடி தமிழ் ,தமிழ் வளர்ச்சி என்றெல்லாம் பேசுவதே கேவலம் என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலைமை. இம்மாதிரியான இலக்கிய விழாக்களுக்காவது மாநகரத்தில் உள்ள அனைத்து கல்லூரி தமிழ்த்துறை மாணவர்களும் அழைக்கப்பட்டிருக்கலாம்.குறைந்தபட்சம் அந்த கல்லூரி துறை மாணவிகளாவது அனைவரும் வந்திருக்கலாம். எனவே என்னுடைய இந்த பதிவால் இந்த இலக்கிய விழாவானது தமிழ் கூறும் நல்லுலகில் ஒரு நூறு பேராவது படிப்பார்கள் என்று நினைக்கிறேன்.(comprehensive coverage). விழா நிர்வாகிகள் அடுத்த முறை என்னை சிறப்பு விருந்தினராக அழைக்கலாம்(?) அல்லது ஆள் அனுப்பி உதைக்கலாம்.



tamil literature

Wednesday, November 09, 2005

நெஞ்சில் எட்டி உதைத்த காப்கா...

ஒரு வார தீபாவளி விடுமுறையை உபயோகமாக பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்திருந்தேன்.மதுரை நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்று இரண்டு இந்திய எழுத்தாளர்கள்,இரண்டு வெளிநாட்டு எழுத்தாளர்கள் என்ற கணக்கின்படி நான்கு புத்தகங்கள் வாங்கினேன்.பி.ஏ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்,காப்காவின் விசாரணை மற்றும் ஆல்பெர் காம்யுவின் அந்நியன் ஆகியவையே அந்த புத்தகங்கள்.

புரிந்ததோ இல்லையோ நான்கு புத்தகங்களையும் ஒரு வாரத்தில் படித்து முடித்துவிட்டேன். முதலில் வெளிநாட்டு நாவல்களை பற்றி சில வார்த்தைகள். ப்ரன்ஸ் காப்காவின் விசாரணை என்ற நாவல் க்ரியாவின் வெளியீடு. சற்றே பெரிய அந்த நாவலை எப்படி அப்படி அச்சு கோர்க்க முடிந்தது அந்த பதிப்பகத்தால் என்று என்னால் விளங்கிக்கொள்ளமுடியவில்லை. பக்கங்களை குறைக்கிறோம் என்ற பெயரில் வாக்கியங்களை மிகவும் நெருக்கி படிக்க முடியாதபடி செய்திருந்தார்கள். அதனால் தான் எனக்கு நாவல் புரியவில்லை என்றெல்லாம் நான் சொல்லவில்லை.

நாவலுக்குள் என்னால் நுழைய முடியவில்லை. ப்ரன்ஸ் காப்காவும் அந்த நாவலின் கதாநாயகனான "யோசப் க"வும் என் நடு நெஞ்சில் எட்டி எட்டி உதைக்கின்றனர். உள்ளே நுழையாதே என்கின்றனர். உதையையும் வாங்கிக்கொண்டு படித்து முடித்தேன். முதன்முதல் என் நெஞ்சில் எட்டி உதைத்த சுந்தர ராமசாமி ,ஜெயமோகன் போன்றோரை நினைத்தேன். எப்படியும் இன்னும் சிறிது காலம் கழித்து படித்தால் புரிந்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் புத்தகத்தை பரணில் போட்டுவிட்டேன்.

இரண்டாவது புத்தகம் ஆல்பெர் காம்யுவி்ன் அந்நியன்.(ஞாபகம் இருக்கிறதா காம்யுவை? ஜே.ஜே சில குறிப்புகளில் ஆல்பெர் காம்யு பற்றி எழுதி இருப்பார் சு.ரா.)
காப்கா போல் அல்லாது காம்யு என்னை அரவணைத்து ஏற்றுக்கொண்டார். என் அப்படி என்று யோசித்து பார்த்தேன். என்னுள்ளும் அந்த அந்நியனின் சில கூறுகள் இருப்பதினால் தான் எனக்கு சற்றேனும் இந்த கதை புரிந்தும் பிடித்தும் உள்ளது என்று தோன்றுகிறது.இந்த கதையையும் திரும்ப படிக்கத்தகுந்த கதைதான்(புரிதலுக்கு அல்ல,சுவைத்தலுக்கு)

மூன்றாவதாக புலிநகக்கொன்றை. இந்த நாவலை பற்றி ஒரு அருமையான நாவல் என்று சொன்னால் அது சாதாரணமான வார்த்தையாகிவிடும். இந்த நாவலில் எனக்கு என்ன பிடித்தது என்பதை கூறப்போனால் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை பகைத்துக்கொள்வதாக ஆகிவிடும். ஆனால் நேர்மையான இலக்கியம் என்பதற்கு உதாரணமாக இந்த நாவலை கூறலாம்.இது நான் நாவலை படித்தவரை, புரிந்துக்கொண்டவரை, உள்வாஙகிக்கொண்டவரை என்னுடைய கருத்து.

முக்கியமாக நான் கூறவந்தது சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் என்ற நாவல். சற்றே பெரிய சிறுகதை என்று கூறலாம். மிகவும் நன்றாக எழுதியுள்ளார். ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஒரு கதையின் மூலம் நம் கண் முன்னே கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

சற்றே காப்பிய தன்மை கொண்ட இந்த கதை முன்முடிவு கொண்டது. ஆனால் நடை அத்தனை குறைகளையும் போக்கி இதை ஒரு அருமையான கதையாக தூக்கி நிறுத்தி உள்ளது.இந்த நாவலின் கதாநாயகனான பிச்சி,அவன் கூட்டாளியும் மச்சினனுமான மருதன், அவர்கள் ஜல்லிக்கட்டின் போது சந்திக்கும் கிழவன், காரி காளையை வைத்திருக்கும் ஜமீன்தார் என்ற அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக வடிவமைக்கபட்டிருக்கின்றன.

ஒரே நாளில் நடைபெறும் சம்பவமாக இந்த கதை சித்தரிக்கப்பட்டு இருப்பது கதையின் விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது.தன் தந்தையின் உயிர் பிரிய காரணமாக இருந்த காளையை அடக்க வரும் ஒரு வீரனின் கதையை கச்சிதமாக வார்த்தைகளில் கூறுவதில் வெற்றி பெற்றுள்ளார் கதாசிரியர்.

மனிதனுக்கு இது விளையாட்டாக இருந்தாலும் காளைக்கு இது விளையாட்டு அல்ல என்று கூறும் கதாசிரியர் மாடு பிடிக்கும் நுட்பங்களையும் அழகாக பதிவு செய்துள்ளார்.இந்த நாவலை ஒரு நல்ல தரமான சினிமா டைரக்டர் சினிமாவாக எடுக்கலாம் என்பது என் கருத்து. ஜமீன்தார் பாத்திரத்திற்கு நாசரை சிபாரிசு செய்கிறேன்.


நான் பார்த்த ஜல்லிக்கட்டை பற்றி என்னுடைய வங்கி பதிவு-2 எழுதலாம் என்றுள்ளேன்.

Tuesday, November 08, 2005

விட்டுப்போனது எல்லாம்,,,,

ஆல்பெர் காம்யு வின் அந்நியன், காப்கா வின் விசாரணை, பி.எ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்.

ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் தமிழ் மணத்திற்கு வர முடிந்தது.ஒரு வார தமிழக பயணத்தில் மதுரை மற்றும் சென்னை (மழையோ மழை) அனுபவங்கள் , நான் புதிதாக படித்த நான்கு புத்தகங்கள் (மேலே குறிப்பிடபட்டுள்ளவை ) ஆகியவைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

முதலில் கடந்த ஒரு வார தமிழ்மண கட்டுரைகளை படித்துவிட்டு பிறகு என்னுடைய கட்டுரைகளை சபையில் ஏற்றலாம் என்று நான் படித்ததில் பிடித்தது,பாதித்தது பற்றி .

தில்லி குண்டுவெடிப்பை பற்றி ஒரு பாமரனாக நம் கருத்து என்னவென்றால் அப்பாவிகளை கொல்லுதல் கோழைத்தனம் என்பதே.தைரியம் இருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகள் போல் அரசாங்கத்தை எதிர்த்து ராணுவத்தையோ போலீசையோ எதிர்த்து போர் புரியலாம். போராட எத்தனையோ வழிகள் உள்ளன. இதையும் சப்போர்ட் செய்யும் நண்பர்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும் தங்கள் உயிரையோ அல்லது தங்கள் உற்றார் உறவினர் உயிரையோ இந்த மாதிரி கோழை தாக்குதலில் இழந்தால் தான் தெரியும் .

பிரபலம் எழுதும் பதிவுக்கு பல பின்னூட்டங்கள் வருகின்றன என்பது போலவும் அந்த பிரபலங்களையும் சந்திக்கு இழுத்து சீரழித்து சிலர் மகிழ்கிறார்கள் என்பது போலவும் ஒரு பிரபலத்தின் பதிவின் பின்னூட்டத்தில் யாரோ எழுதி பார்க்க நேர்ந்தது.

1.பிரபலங்கள் வலைபதிவிற்கு வந்துவிட்டால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல

2.பின்னூட்டங்கள் இங்கு பெரும்பாலும் கருத்துக்களுக்கோ தரத்திற்கோ இல்லை என்பது உண்மைதான். பரஸ்பர பின்னூட்டங்கள்,நட்புக்காக பின்னூட்டங்கள், வம்புக்காக பின்னூட்டங்கள்,இனமானத்தை காக்கும் பின்னூட்டங்கள்(தமிழ் இனமானம்,ஆரிய இனமானம், முஸ்லிம் இனமானம் என்பது உதாரணங்கள்) என பல வகைப்படும். இது இயற்கையானது தான். உதாரணத்திற்கு நானெல்லாம் சில பின்னூட்டங்களை கேட்டே பெற்றுள்ளேன்(?).


தீபாவளி கொண்டாடுவதா வேண்டாமா என்ற ஸ்டேஜ் எல்லாம் தமிழன் கடந்து பல நாட்கள் ஆகின்றன.யாராவது ஏன் கேரளாவில் தீபாவளி இல்லை என்று எழுதக்கூடாதா?

இன்னும் படிக்கவேண்டி உள்ளது.ஆகவே தொடரும்.

Friday, October 28, 2005

கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்கத்தெரியுமா?

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதிலேயே ஏதோ குளறுபடி இருப்பதாக சில வட்டாரங்களில் பிரச்சனை எழுப்பப்பட்டது. தமிழின் தொன்மை குறைவாகவும் தவறாகவும் கணிக்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் கூறிவந்தன.நேற்று மீண்டும் ஒரு அறிவிப்பு வந்துள்ளது.இதை பற்றிய விஷயங்கள் வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெவ்வேறு விதமாக கொடுக்கப்பட்டுள்ளது. செம்மொழி தகுதி ஆயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக அதிகரிகப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் இரண்டாயிரம் ஆண்டுகளில் இருந்து ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவலும் தெரிவிக்கின்றன.எது உண்மை என்பது தமிழன்னைக்குத்தான் வெளிச்சம். இப்பொழுது தேசிய அளவில் உள்ள கூட்டணி அரசால்தான் இது போன்ற அங்கீகாரம் தமிழுக்கு சாத்தியம் ஆகியுள்ளது. இதை பயன்படுத்தி இந்திய தேசிய மொழிக்கொள்கையையே மறுபரிசீலனை செய்ய சொல்லி கேட்பது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.

சமீபத்தில் கன்னட மொழிக்கு கூட செம்மொழி அந்தஸ்தை கேட்டு கோரிக்கைகளை இங்கு பார்த்தேன்.அப்படியென்றால் கன்னடம் தமிழில் இருந்து தான் பிரிந்தது என்பது உண்மையா? பொய்யா? என் பிரச்சனை கன்னட மொழி செம்மொழி ஆவது இல்லை.
கன்னடர்களின் புத்திசாலித்தனத்தின் மேல் எனக்கு நம்மவர்களின் புத்திசாலித்தனத்தை விட மதிப்பு உள்ளது.கண்டிப்பாக அவர்கள் தங்கள் மொழிக்கு அந்த அந்தஸ்தை நம்மை விட சுலபமாக பெற்றுவிடுவார்கள.ஆகவே சர்வ சமாதான வாதிகள் கச்சை கட்ட வேண்டாம். கன்னடம் மற்றும் தெலுங்கும் செம்மொழி ஆக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இத்தனை செழுமை உள்ள தென்னிந்திய மொழிகள் இந்தி ஆதிக்கத்தால் அழிய வேண்டுமா?

எங்கள் வங்கியில் என்னுடன் வேலை பார்க்கும் ஒருவர் கன்னடம் மட்டும் அல்ல.தமிழும் கூட சம்ஸ்கிருதத்தில் இருந்து பிறந்ததே என்பதாக கூறினார். நானும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை இணையத்தில் படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதெல்லாம் சம்ஸ்கிருதத்தால் மிகவும் குறைவாக பாதிக்கப்பட்ட மொழி என்றே தமிழை கூறியிருக்கிறார்கள். கன்னடம்,தெலுங்கு மற்றும் மலையாளம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன்.

இந்தி இந்தியா முழுவதற்குமான மொழியாக அறிவிக்கப்பட்டு பரப்பப்பட்டதின் நோக்கம் நாட்டு மக்கள் அனைவரும் ஒரே மொழி பேசவேண்டும்,அது நமது மொழியாக இருக்கவேண்டும்,ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டும் என்பது தான் என்றால் சுதந்திரம் கிடைத்து இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் ஆங்கிலத்தை ஒழித்து விட்டோமா?அல்லது ஆங்கிலத்தைத்தான் ஒழிக்க முடியுமா?எதற்காக ஒழிக்கவேண்டும் ஆங்கிலத்தை?

இன்று இந்தியா முன்னேறி விட்டது .2020 ஆம் ஆண்டு வல்லரசு ஆகி விடும் என்றெல்லாம் கூக்குரல்கள் எழுகின்றன. முன்னேற்றம் என்று நம்மால் கூறப்படும் இந்த விசயங்கள் எதனால் சாத்தியப்பட்டது? கணிப்பொறி துறைக்கு ஒரு முக்கிய பங்கு என்றால் அதில் இந்தி என்ற மொழியின் பங்கு என்ன? ஆங்கிலத்தின் பங்கு என்ன?

மற்ற தொழில்துறைகளும் உலகளாவிய போட்டி,சந்தை பொருளாதார சூழ்நிலை இவற்றில் தாக்குப்பிடித்து நன்றாக செயல்படுகின்றன என்றால் அதில் ஆங்கிலத்தின் பங்கு என்ன? இந்தியின் பங்கு என்ன?இந்திய அளவில் வேலைவாய்ப்பில் தமிழன் இந்தி தெரியாததால் பின்னுக்கு தள்ளப்படுகிறான் என்பதாக ஒரு பேச்சு உண்டு.ஒரு சாரார் அதை முனைந்து பிரச்சாரமும் செய்து வருகின்றனர். பலரும் அதை நம்பவும் செய்கின்றனர். சமீபத்தில் கட்சி தொடங்கிய விஜுயகாந்த் கூட அந்த எண்ணத்தை ஓட்டுக்களாக்க எண்ணி தமிழும் படிப்போம்,இந்தியை வரவேற்போம் என்று சூளுரை(!)த்திருக்கிறார் இந்தி தெரியாததால் தமிழன் வேலை வாய்ப்புகளை இழந்துக்கொண்டு இருப்பது எந்தெந்த துறைகளில்? அந்த துறைகளில் ஆங்கிலமே இல்லையா? வேலை வாய்ப்புக்காக மட்டும் இல்லாமல் ஒரு தொடர்பு மொழியாகவும் இந்தியை பயன்படுத்தலாமே என்றால் ஏன் ஆஙகிலத்தை வடஇந்தியர் உடபட அனைவரும் பயன்படுத்தக்கூடாது? யாரும் யாருடைய தாய்மொழியை படிக்கவேண்டாம் என்று கூற வில்லையே. விருப்பமுள்ளவர்கள் எந்த மொழியையையும் படிக்க எந்த தடையும் இருக்கக்கூடாது.எத்தனையோ பேர் பிரஞ்சு,ஜெர்மன்,இத்தாலியன் போன்ற மொழிகள் தனிப்பட்ட முறையில் கற்றுக்கொள்ளவிலலையா?

சிந்திக்க தெரிந்த தமிழர்களை பார்த்து நான் கேட்கும் கேள்வி என்னவென்றால் ஆங்கிலத்தை ஒழிக்க முடியாது என்பதை சுதந்திரம் கிடைத்த இந்த ஐம்பது ஆண்டுகளில் நாம் அனைவரும் உணர்ந்திருப்போம். ஆங்கிலத்தை ஒழிக்க வேண்டிய அவசியமும் இல்லை. எந்த ஒரு இனத்திற்கும் தன் தாய்மொழியை தவிர அனைத்து மொழிகளும் அன்னிய மொழிகள் தான்.தமிழனுக்கும் அப்படித்தான்.தமிழை தவிர மற்ற அனைத்து மொழிகளும் அவனுக்கு அன்னிய மொழிகள் தான். அவற்றில் அவன் எதை தேர்ந்தெடுத்து கற்கிறான் என்பது அவனின் விருப்பத்தை பொறுத்தது. அரசாங்கத்தின் பொதுவான நிலைப்பாடு தன்னுடைய அனைத்து மக்களுக்கும் ஒரு பொதுவான தளத்தை அமைத்துக்கொடுப்பதாக இருக்கவேண்டும். அந்த பொதுவான மொழியானது அவர்கள் வாழ்வுக்கு வளம் சேர்க்கவேண்டும்.

அவரவர்கள் அவரவர் தாய்மொழியை கண்டிப்பாக கற்க உரிமை உண்டு. பொது மொழியாக ஆங்கிலத்தை,வைத்துக்கொள்வோம். இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் உபயோகப்படுமே.(சில அறிவு ஜுவிகள் கேட்பார்கள், பிரான்ஸில் நீ ஆங்கிலத்தில் பேச முடியாது என்று. நான் கேட்கிறேன், பிரான்ஸில் இந்தியை வைத்துக்கொண்டு நீ என்ன புடுங்குவாய்? எந்த ஊருக்கும் உன் தேவைக்கு நீ போனால் நீதான் அவர்கள் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்.(நான் பணி நிமித்தமாக பம்பாயில் இருந்தபோது தேவையான இந்தி வார்த்தைகளை கற்றுக்கொண்டேன்.இப்போது கன்னட வார்த்தைகள்)

மும்பயில் நாரிமன் பாய்ண்டில் இட்லி விற்று பிழைக்கும் தமிழன் பள்ளியிலா படித்தான் அவன் இந்தியை?. வடநாடுகளில் எண்ணற்ற உள்ளடங்கிய இடங்களுக்கு போர்வெல் லாரிகளில் ராடு தூக்கும் தமிழர்கள் இந்தியை பள்ளிகளிலா படித்தார்கள்?

தமிழை நம்மை விட புலம் பெயர்ந்த தமிழர் தமிழை நன்கு காப்பாற்றுவதாக ஒரு கருத்து உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம். பிரச்சனை நாம் நினைப்பதை விடவும் தீவிரமானது. இப்பொழுதே சென்னை போன்ற மெட்ரோக்களில் இளைய தலைமுறையினர் பல பேர் தமிழ் எழுத் படிக்க தெரியாமல் வளர்ந்துவருகின்றனர்.(நடிகர் பார்த்திபன் தன் மகள் கீர்த்தனாவிற்கு தமிழ் எழுத படிக்க தெரியாது என்று குமுதத்தில் கூறி வாங்கி கட்டி கொண்டது தெரிந்திருக்கலாம்.எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூட இதை பற்றி வருத்தப்பட்டதை இவ்வார திண்ணையில் சிவக்குமார் எழுதியுள்ள கலந்துரையாடல் பதிவில் படிக்கலாம்)இது கொஞசம் கொஞசமாக அதிகரித்து ஒரு கட்டத்தில் எதற்கு தமிழ்? ஆங்கிலமும் இந்தியுமே போதுமே என்பார்கள். அதற்கும் ஒத்து ஊத மக்கள் இங்கு உள்ளனர் என்பது அனைவருக்கும் தெரியும்.எங்குமே அப்படிப்பட்ட ஒரு குழு உண்டு. மொழி விஷயத்தில் இவ்வளவு சீரியஸாக இருக்கவேண்டியதில்லை என்று இவர்கள் கூறுவார்கள்.இந்த பதிவில் உள்ள ஆங்கில வார்த்தைகளை பட்டியல் இடுவார்கள். அவர்களுக்காக இது எழுதப்படவில்லை. தமிழ் மணத்தில் தமிழின் மேல் பற்றுள்ளவர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக எழுதப்பட்டது.

வாழ இடம் இல்லை என்றாலும் கூட ஒரு இனம் பிழைத்துக்கொள்ளும். ஆனால் ஒரு இனத்தை ஒழிக்க வேண்டுமானால் அதன் மொழியை ஒழித்தால் போதும் என்பார்கள்.பல்லாயிரம் வருட பாரம்பரியம் உள்ள மொழி இது.வள்ளுவன்,கம்பன்,பாரதி கண்ட மொழி இது .இதை காப்பது நமது கடமை. வேற்று மொழியை எதிர்க்க வேண்டாம்.ஆனால் தாய்மொழியை மிதித்து மற்ற மொழியை கொண்டாடவும் வேண்டாம்.

பொதுவாக தமிழ்,தமிழ் என்று ரொம்ப மொழி பற்றில் ரொம்ப உருகுவதாக நம் மேல மற்ற மாநிலத்து காரர்களுக்கு ஒரு எண்ணம் உண்டு. அதை அவர்கள் சொல்லவும் செய்கிறார்கள்.அதை அவர்கள் கிண்டலாக நினைக்கிறார்களா அல்லது நமக்கு நம் மொழி மேல் இருக்கும் பிடிப்பை பாராட்டுகிறார்களா என்று தெரியவில்லை. இந்தியாவிலேயே வெளி மாநிலங்களில் வாழ நேர்பவர்களுக்கு இந்த அனுபவங்கள் ஏற்பட்டிருக்கலாம்.இப்போதெல்லாம் மொழியை பற்றியும் மொழிபற்றை பற்றியும் பேசுவது எழுதுவது என்பது ஏதோ கெட்டவார்த்தை என்பது போல் சில அறிவுஜுவிகளால் கட்டமைக்க பட்டுள்ள நிலையில் இதை பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல்.

Thursday, October 27, 2005

தேவை ஒரு சங்கம்

சமீபத்தில் மிகவும் பேசப்படுகிற ஒரு விசயம் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தொழிற்சங்கத்தை அனுமதிக்கலாமா என்பது பற்றியது.

இப்பொழுது எங்கும் இது போன்ற தொழிற்சங்கம் இந்த துறையில் இல்லை என்றே கூறலாம்.கல்கத்தாவில் மட்டும் சில இடங்களில்,அதுவும் பெயருக்கு இருப்பதாக கூறப்படுகிறது.நேற்று மார்க்ஸிஸ்ட் பொலிட்பீரோவில் இது பற்றி பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன்.

பொதுவாக கணிப்பொறி துறை என்றால் ஏ.சி யில் உட்கார்ந்து கொண்டு பெப்ஸி,கோக் குடித்துக்கொண்டு ஜாலியாக வேலை செய்துக்கொண்டு இருப்பார்கள் என்றே பலரும் எண்ணுகிறார்கள். உண்மையில் அவர்கள் வேலை எப்படிப்பட்டது? வேலை எனனும் போது செய்யும் வேலை மட்டும் இல்லாமல் அனைத்து சூழ்நிலைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.

செய்யும் ஒவ்வொரு பிராஜக்ட்க்கும் ஒரு டெட்லைன் கொடுத்து அதற்குள் முடிக்கவேண்டும் என்ற பிரஷர் ஜாஸ்தியாக உள்ளது என்று ஒரு பேச்சு உள்ளது. சக்கையாக பிழியபடுவதாக ஒரு சாரார் கருதுகின்றனர்.இவ்வாறான உயர்அழுத்த சூழ்நிலைகளில் பணிபுரிபவர்களின் மனநிலை பாதிக்கப்படுகிறதா? அவர்களின் சொந்த வாழ்க்கை இதனால் பாதிக்கப்படுகிறதா?டைவர்ஸ் நிறைய ஆவதாக எங்கோ படித்த ஞாபகம்.பலர் மன அழுத்த நோய்களுக்கு ஆளாவதாக ஒரு டாக்டர் பேட்டி கூட பார்த்தேன்.ஒரு தொழிற்சங்கம் என்று வந்தால் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிர்வாகத்துடன் பேசி தீர்வு காண முடியுமா?

பொதுவாக நல்ல சம்பளம் கொடுக்கப்படுவதாக ஒரு அபிப்பிராயம் உள்ளது. ஆகவே அந்த தளத்தில் முதலாளிகளின் சுரண்டுதல் என்பது இல்லை என்றே நான் நினைக்கிறேன்.ஆயினும் இது பற்றி எனக்கு அதிகம் தெரியவில்லை.அந்த துறையில் உள்ளவர்கள் கூறலாம்.

மேலும் குழுமனப்பான்மை(தமிழ் மணத்திலேயே இத்தனை குழு இருக்கும்போது) மற்றும் போட்டி பொறாமை(போட்டுக்கொடுப்பது) முதலிய காரணங்களால் வேலை பறிகொடுப்பவர்கள் பரிகாரம் பெறுவதற்கு இது வகை செய்யுமா?

நானும் ஒரு வகையில் மென்பொருள் தொழில்நுட்பத்துறையில் தான் உள்ளேன் .கணிணி தொழில்நுட்பத்துறை என்று எல்லா வங்கிகளிலும் ஒரு பிரிவு உள்ளதால் இது போன்ற விஷயங்கள் இங்கு எப்படி செயல்படுகின்றன என்பதனையும் நான் சொல்லிவிடுகிறேன்.

இது பொதுத்துறை என்பதால் இங்கு தொழிற்சங்கம் உள்ளது. பொதுவாக அனைத்து வங்கிகளுமே தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை வெளியே வாங்குகின்றன. எங்களை போன்ற ஆட்களுக்கு பொதுவாக மென்பொருள் வழங்கும் நிறுவனத்தின் மென்பொருளை சோதனை செய்வது மற்றும் பராமரிப்பு வேலைதான்.மென்பொருள் உருவாக்குதல் சம்மந்தப்பட்ட வேலைகள் பெரும்பாலும் கிடையாது. சில வங்கிகள் தங்களுக்கு தேவையாக மென்பொருள்களை அவர்களே உருவாக்குவதாக கூறுகிறார்கள். ஆனால் பெரும்பாலான வங்கிகள் வெளியே வாங்குகின்றன்.

ஆயினும் கடைசியாக நடந்த ஊதிய ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தின்படி கணிப்பொறி வல்லுனர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடக்கூடாது என்ற வங்கி நிர்வாகங்களின் கோரிக்கையை தொழிற்சங்கங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டன.அதாவது முக்கியமாக ஆட்கள் தேவைபடுகின்ற இடங்களில் (உ.தா. hub's,core centres,Distribution Centres)வேலை செய்பவர்கள் வேலைநிறுத்தம் செய்யக்கூடாது.ஆனால் தொழிற்சங்கங்களில் உறுப்பினராக இருக்கலாம். தம்முடைய பிரச்சனைகளுக்கு தொழிற்சங்கங்கள் மூலமாக தீர்வு காணலாம்.

பணி உயர்வு போன்ற விசயங்களிலும் ஒரு குறிப்பிட்ட கேடர்(CADRE) வரை தான் தொழிற்சங்கத்தில் இருக்கலாம். அதன்பிறகு அவர்கள் நிர்வாகத்தின் ஒரு அங்கம் என்பது தான் அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள நிலைமை.

சிறிய நிறுவனங்களுக்கு இந்த தொழிற்சங்கம் என்பது ஒத்துவராது. ஆனால் இப்போது பல நிறுவனங்கள் வளர்ந்து சர்வசாதாரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வைத்திருப்பதால் தொழிற்சங்கத்தின் தேவைப்பற்றி சிந்திக்கலாம் என்றே தோன்றுகிறது.

இங்கு வலைபதிவுகளில் எழுதும் பல நண்பர்கள் இந்த துறையில் பணியாற்றுபவர்கள் என்பதால் இது பற்றிய நண்பர்களின் கருத்துக்களை அறிய ஆவல். ஏதோ நீங்களும் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்து சீரழிந்து போக் வேண்டும் என்பதற்காக நான் கூறவில்லை. உங்கள் கருத்துக்களை அறிந்துக்கொள்ளலாம் என்றுதான் எழுதுகிறேன்.

Monday, October 24, 2005

சிறுகதை-தேவி தோன்றியபோது,,,

முதலாளி என்னை சீக்கிரமாக வீட்டுக்கு போக அனுமதி கொடுத்துவிட்டார். சம்பள நாள் வேறு. சொல்லவா வேண்டும்? அன்று எனக்கு மி்கவும் சந்தோஷமாக இருந்தது. எப்போதும் என்னை பார்த்து சிரிக்காத எங்கள் டைப்பிஸ்ட் லலிதா கூட என்னை பார்த்து சிரித்தாள்.மாலை நான்கு மணிக்கே கிளம்பி விட்டேன். டவுண்பஸ் பிடித்து எங்கள் ஸ்டாப் வந்து சேர சரியாக முக்கால் மணிநேரம் தான். பஸ்ஸில் சரியான கூட்டம். அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஏதோ விசேஷம் என்று பேசிக்கொண்டார்கள். எனக்கு அதை பற்றி எல்லாம் கவலை இல்லை. கிடைத்திருக்கும் நேரத்தை எப்படி அனுபவிக்க வேண்டும் எப்படி உபயோகித்துக்கொள்ள வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. பஸ் மெல்ல மெல்ல ஊர்ந்தது.

இறங்கியவுடன் பாய் கடைக்கு சென்று ஆற அமர பஜு்ஜூ சாப்பிட வேண்டும்.பின்பு இரயில்வே ஸ்டேஷன் சென்று இரவு பத்து மணி வரை யாருமற்ற அந்த அமைதியில் ஆழ்ந்துவிட வேண்டும்.நமது நாட்டை எப்படி முன்னேற்றி உலகத்தின் வல்லரசாக மாற்றுவது என்பது பற்றி எனக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவில் நான் இந்த நாட்டின் சர்வாதிகாரியாக இருக்கிறேன். எப்படி சர்வாதிகாரி ஆக போகிறேன் என்ற என் கனவு தனி. அதை பிறகு சிந்திக்கலாம் என்று இருக்கிறேன்.இப்போதைக்கு சர்வாதிகாரி ஆனப்பிறகு நான் செய்ய வேண்டிய காரியங்கள் என்ன என்பதை பற்றி சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன். இரவு யாருமற்ற எங்கள் ஊர் இரயில்வே ஸ்டேஷனில் சொரசொரப்பான சிமெண்ட பெஞ்சில் படுத்துக்கொண்டு வானில் உள்ள நிலாவையும் நட்சத்திரங்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு நான் சிந்தனை உலகில் உலா வருவது என் வீட்டில் உள்ளவர்களுக்கு பிடிக்காமல் போனது. முதன்முதலாக பக்கத்து வீட்டு ஓய்வு பெற்ற தமிழய்யா என்னை இரயில்வே ஸ்டேஷனில் மோன நிலையில் பார்த்துவிட்டு வீட்டில் போட்டுக்கொடுத்துவிட்டார்.

என் தந்தை புலம்ப ஆரம்பித்து விட்டார்.

"படிப்பிலும் கெட்டி இல்லை,பொறுப்பும் இல்லை" என்றார்.

"இப்ப என்ன பண்ணிட்டேன்னு இப்படி கத்தறீங்க"

"ஸ்டேஷனில் என்னடா பண்ணறே நைட்டெல்லாம்"

"யார் சொன்னா"

"யார் சொன்னா என்னடா,டிகிரி பெயிலாகிவிட்டு வீட்டில் சும்மா இருக்காம வேலைக்கு போடான்னா இரயில்வே ஸ்டேஷனில் தனியாக உட்கார்ந்து பத்து மணி வரை என்னடா பண்றே"

நான் மெளனமாக இருந்தேன்.முந்தின நாள் இரவு பக்கத்து வீட்டு தமிழ் வாத்தியார் நாராயணன் யாரோ சில பல் போன் கிழடுகளோடு இரயில்வே ஸ்டேஷனில் உட்கார்ந்து வரப்போகும் கம்பன் கழக விழாவை பற்றி பேசிக்கொண்டு இருந்தது ஞாபகம் வந்தது.எனக்கு அவர் மேல் கடுங்கோபம் வந்தது. இரண்டு திருக்குறளையும் சில கம்பராமாயண பாட்டுக்களையும் வைத்துக்கொண்டு தன் காலத்தையே ஓட்டி விட்ட நன்றிகெட்ட நாராயணன்.(அடைமொழி எங்கள் பள்ளியில் நாங்கள் வைத்த பெயர் அது போன்ற பல பெயர்கள் உண்டு.ஒரு வாத்தியார் பெயர் பூட்ஸ்மேன்.தினமும் பூட்ஸ் போட்டுக்கொண்டு வரும் அவர் கோபம் வந்தால் பூட்ஸ் காலால மாணவர்களை உதைப்பார் என்று ஒரு வதந்தி உண்டு.)

"ஒழுங்காக கடைக்கு வேலைக்கு போயிட்டிருக்கியா? டிகிரி முடிச்சிட்டு எதாவது வேலைக்கு போற வழியை பாரு", பேங்க் கிளார்க் பரிட்சை அப்ளிக்கேஷன் வாங்கிட்டயா"

"இல்லை"

"துரைக்கு வேற என்ன வேலை,நாட்டை முன்னேத்தற வேலையோ" சலித்துக்கொண்டார் அப்பா.

உண்மையில் அதுதான் என் வேலை என்று நினைத்துக்கொண்டேன்.

அவரின் நண்பர் கடைக்கு தான் நான் வேலைக்கு போகிறேன்.வேலையை எல்லாம் கட் அடிக்க முடியாது என்று அப்பாவுக்கு தெரியும்.சட்டென்று ஒரு திருப்பத்தில் விழித்துக்கொண்டேன்.என் அருகில் நின்ற ஒருவரின் தோளில் சாய்ந்து நின்றுக்கொண்டிருந்திருக்கிறேன். அவரும் ஏதும் சொல்லவில்லை. பரவாயில்லை மனித நேயம் இன்னும் முற்றாக அழிந்துப்போய்விடவில்லை என்று எண்ணிக்கொண்டேன். கடை வீதி முக்கில் பஸ் திரும்பியது.அடுத்து ஸ்டாப் என்னுடையது. இறங்கிக்கொண்டேன்.

மெயின் ரோட்டில் இருந்து சற்று திரும்பினால் கேசவன் தியேட்டர். அதற்கு எதிரில் பாய் கடை. பஜு்ஜூ ஞாபகம் வந்து எச்சில் ஊறியது. என்னை பார்த்ததும் பாய் சிரித்துக்கொண்டார். ரெகுலர் கஸ்டமர் அல்லவா?

"வாங்க ஸார்"

வெட்கமாக சிரித்தேன். இவன் நம்ப பஜு்ஜூக்கு அடிமை என்ற எண்ணம் அவருக்கு இருப்பதாக எனக்கு தோன்றியது. ஒரு பஜு்ஜூயை எடுத்து என்னிடம் கொடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சொல்லும்படி கேட்டுக்கொண்டார் பாய்.ஒரு பஜு்ஜுயை வாயில் போட்டுப்பார்த்தேன்.பாய் எமத்திருடன். எல்லாம் செக் செய்து தான் வெளியே விடுவான் என்று எனக்கு தெரியும் .

உண்மையில் பஜு்ஜூயை அனுபவித்து சாப்பிட வேண்டும்.என் ஸ்டைல் என்னவென்றால் அது வெங்காய பஜு்ஜூ என்றாலும் சரி.வாழைக்காய் பஜு்ஜூ என்றாலும் சரி. மாவு தனியாகவும் உள்ளிருக்கும் வாழைக்காய் தனியாகவும் பிரி்த்துவிடுவேன்.பிறகுதான் சாப்பிடுவேன். முட்டைதோசை சாப்பிடும்போதும்கூட முட்டையை தனியாகவும் தோசையின் மாவு பகுதி தனியாகவும் பிரித்து சாப்பிடுவது தான் எனக்கு பிடிக்கும்.பாய் என்னை பார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படி என்னால் சாப்பிட முடியாமல் போனது. பிறகு இரண்டு பஜு்ஜூயை எடுத்துக்கொண்டு ஒதுங்கினேன்.கேசுவலாக சட்டை பாக்கெட்டை தொட்டு பார்த்த நான் அதிர்ந்துப்போனேன். பர்ஸை காணோம்.

எல்லா பாக்கெட்டையும் தேடிப்பார்த்தேன். இல்லை. பஸ்ஸில் தான் யாராவது எடுத்திருக்க வேண்டும். சம்பள பணம் வேறு. முழுசாக ஆயிரத்து முன்னூறு ரூபாய்.பிக்பாக்கெட் விட்டு பார்த்தால் தான் அதில் உள்ள மனக்கஷ்டம் புரியும்.குற்றங்களை பற்றி பேசும் போது கூட சாதாரண பிக்பாக்கெட் என்கிறோம். ஆனால் அது பணத்தை பறிக்கொடுத்தவரின் மனதில் ஏற்படும் பாதிப்பை சொல்லி புரியவைக்க முடியாது. அதனால்தான் பொதுஇடத்தில் மாட்டிக்கொள்ளும் பிக்பாக்கெட்டை மக்கள் சவட்டி எடுத்துவிடுகிறார்கள. இத்தனை எண்ணமும் என் மனதில் ஒரு கணத்தில் வந்துப்போனது.சரி .இப்போது பஜு்ஜுக்கு என்ன பண்ணுவது? ஒரு துண்டை ஏற்கனவே பிய்த்து வாயில் போட்டிருந்தேன். இல்லையென்றாலும் திருப்பி கொடுத்து விடலாம். கடன் சொல்லுவது என்றாலும் வெட்கமாக இருக்கிறது.பாய் தெரிந்தவன்தான் என்றாலும் யாராவது தெரிந்தவர் நண்பர் வந்தால் வாங்கிக்கொள்ளலாம் என்று நின்றிருந்தேன்.பழிகார பாவிகள்.யாரையும் காணோம்.இந்த மாதிரி நேரத்தில் எவனும் வரமாட்டான். ஆனால் அன்று லலிதாவுடன் நூலக வாசலில்(லலிதாவும் அகஸ்மாத்தாய் அந்த பக்கம் கோயிலுக்கு வந்தவள் வேறு வழியில்லாமல் நின்று பேசினாள் என்பது தான் உண்மை)பேசிக்கொண்டிருந்தபோது சொல்லி வைத்த மாதிரி இந்த பாவிகள் அந்த பக்கமாக வந்ததும் இல்லாமல் அதில் ஒருவன் அப்பாவிடமும் போட்டுக்கொடுத்ததும் நடந்தது.

பலத்த யோசனைக்கு பிறகு பாயிடம் சரணடைய முடிவு செய்தேன். விஷயத்தை கூறினேன். பாய் எதுவும் சொல்லவில்லை.பரவாயில்லை,அதனாலென்ன,நாளைக்கு குடுத்தால் போயிற்று என்று கூறிவிட்டான்.பாயிக்காக இல்லாட்டியும் பஜு'ஜூக்காக நான் வருவேன் என்று அவன் நினைப்பது போல் நினைத்து பார்த்தேன்.

என் சந்தோஷமே போயிற்று. இரயில்வே ஸ்டேஷன் வந்து என் ஆஸ்தான சிம்மாசனத்தில் படுத்தேன்.வழக்கமாக இருக்கும் கிழவர்கள் கூட அன்று இல்லை. பணத்தை தொலைப்பது என்பது எனக்கு புதிதில்லை என்றாலும் நான் உழைத்து சம்பாதித்த பணம் இப்படி அநியாயமாக பிக்பாக்கெட் கொடுத்ததை என்னால் ஜுரணித்துக்கொள்ள முடியவில்லை.அப்பாவுக்கு பதில் சொல்வது என்பதும் கடினமாகி விட்டது. இன்று என்னுடைய சிந்தனையை தொடர்வது என்பது சாத்தியமில்லை என்று பட்டது. லஞ்ச லாவண்யங்களை நேற்று இரவே ஒழித்துக்கட்டி விட்டதால் இன்று மதக்கலவரங்களை ஒழிப்பது என்று முடிவு செய்திருந்தேன்.அது இன்று முடியும் என்று தோன்றவில்லை.

"கடவுளே என்னை இப்படி சோதிக்கிறாயே இது நியாயமா?உண்மையில் நீ இருந்தால் இப்படி எல்லாம் நடக்குமா" என்று வாய் விட்டு அழுதேன்.

"தம்பி குமார் அழாதே" என்று ஒரு பெண் குரல் மரத்தின் பின்னிருந்து கேட்டது.

"யார்,யாரது"

"நான் தான் அம்மன்"

"பொய்,யாரோ பெண் குரலில் பேசி என்னை ஏமாத்தறீங்க"

சட்டென்று மரத்தின் பின்னாலிருந்து வெளிப்பட்டாள் அம்மன்.சர்வலாங்கரங்கலோடும் கையில் ஒரு வேலோடும்.கண்ணில் கனிவு.தலையில் கிரீடம்.கண்ணை பறிக்கும் சேலை,உடம்பெங்கும் மின்னும் நகைகள்.எனக்கு உடம்பெங்கும் ஒரு நடுக்கம் ஒடியது.

"நிஜுமாகவே நீதானா தாயே"

"ஆம் மகனே, உன் குரல் கேட்டே யாம் வந்தோம்"

எனக்கு சுயஉணர்வு வந்துக்கொண்டிருந்தது.மெல்ல கேட்டேன்.

"யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணாமல் நாட்டை முன்னேற்ற பாடுபடும் எனக்கு ஏன் தாயே சோதனைகள் வருகின்றன?"

"கஷ்டங்கள் யாம் உமக்கு அளிக்கும் சோதனைகள்"

"எங்கப்பாவுக்கு பதில் யார் சொல்லுவது?"

சட்டென்று சிரித்துவிட்டாள் தேவி."சரி,உனக்கு என்ன வேண்டும்", என்று வினவினாள்

நான் பதில் எதுவும் சொல்லவில்லை.கடவுளின் வருகையை வைத்து நான் என்ன செய்யமுடியும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன்.

அப்போது அந்த பக்கமாக ஒரு சாமியார் ஊர்வலம் போனது. எல்லோரும் நீல வண்ண உடை அணிந்திருந்தனர்.அவர்கள் வணங்கும் அந்த சாமியாரை எனக்கு நன்றாக தெரியும். அவர் ஒரு இயக்கமாகவே வளர்ந்துக்கொண்டிருக்கிறார்.அந்த சாமியார் எங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்.அவருக்கு தேவி மீதான பக்தி அளவிடற்கரியது.நாங்கள் அந்த ஊர்வல கூட்டத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே கூட்டத்திலிருந்த ஒருவர் "என்னம்மா வேஷம் இன்னும் கலைக்கலியா? நைட் இரயில்வே ஸ்டேஷன் பக்கம் நிக்காதே" என்று கூறியவாறே சென்றார்.

"உன்னை நாடக கம்பெனியை சேர்ந்த பெண் என்று நினைத்துக்கொண்டிருக்கிறான்" என்றேன் நான்.

உடனடியாக சாதாரண உருவத்தில் வரவேண்டியதின் அவசியத்தையும் இல்லாவிட்டால் தேவியின் நகைகளுக்கு நான் பொறுப்பாக முடியாது என்றும் அவளுக்கு உணர்த்தினேன். தேவியும் ஒத்துழைத்தாள்.

"உனக்கு தேவை உன் பர்ஸ்தானே" ,என்றாள் தேவி.

"எனக்கு உன் சித்து விளையாட்டுக்கள மேல் எல்லாம் ஆர்வம் இல்லை " என்றேன்.

"மனித உருவம் எடுத்து வரும்போது என்னாலும் சித்து விளையாட்டுக்கள் செய்யமுடியாது,மீண்டும் நீயாக என்னை கடவுளாக சொன்னால் தான் நான் கடவுளாக முடியும், என்ன வேண்டும் என்று சீக்கிரம் சொல்லு குழந்தாய்"

"நான் குழ்ந்தை இல்லை,எனக்கு வயது 20,இந்த நாட்டை எவ்வாறு முன்னேற்றுவது என்று சிந்தித்துக்கொண்டிருக்கிறேன்.எனக்கு நீ செய்யக்கூடிய ஒரு உதவி இருக்கிறது"

"என்ன அது?சொல்,நான் மேலுலகுக்கு செல்லவேண்டும்,தேவன் காத்துக்கொண்டிருக்கிறார்"

கடவுள் இருப்பது யாருக்கும் உறுதியாக தெரியாததாலும்,ஆகவே மனிதன் செய்யும் தவறுகளுக்கு கடவுள் தண்டனை கண்டிப்பாக தருவார் என்ற கோட்பாட்டின் மேல் நம்பிக்கை யாருக்கும் இல்லாததாலும் தான் தவறுகள் நடக்கின்றன் என்று நான் தேவியிடம் கூறினேன்.ஆகவே பொதுவாக அடுத்தவர் தவறு செய்யும் போது மட்டுமே கடவுளை மனிதன் நினைப்பதாகவும் தான் தவறு செய்யும் போது வசதியாக கடவுளை மனிதன் மறந்துவிடுவதை நான் ஆதாரங்களுடன் கூறியதை தேவியும் ஏற்றுக்கொண்டாள்.

"நீ எனக்கு செய்யவேண்டிய உதவி ஒன்று உள்ளது" என்றேன் நான்.

"நீ உன் இருப்பை உலகுக்கு ஓங்கி ஒலிக்கவேண்டிய நாள் வந்துவிட்டது.நீ நான் சொல்வதை செய்யவில்லையென்றால் அடுத்து வரும் விரைவு வண்டியில் நான் விழுந்து என் உயிரை மாய்த்துக்கொள்ளவேண்டியிருக்கும்" என்றேன்.விருத்தாசலம் பேசஞ்சர் கேன்சல் ஆன விவரம் எனக்கு முன்னமே தெரியும்.தேவிக்கு தெரியாது என்றே எண்ணுகிறேன்.நம் இரயில்வே என்கொயரில யாராச்சும் ஏதாவது தகவலை சுலபமாக வாங்கிடமுடியுமா என்ன?

"நீ சொல்ற மாதிரி நான் செய்கிறேன்,நீ அந்த மாதிரி வீபரித முடிவை தேடவேண்டாம்"

"உடனடியாக கடவுள் நேரடியாக வருவதாக ஒரு விளம்பரம் கொடுப்போம்.குறிப்பிட்ட நாளில் மக்கள் கூடியுள்ள சபையில் நீ தேவனையும கூட்டிக்கொண்டு சர்வலங்காரமாக தோன்றவேண்டும் " ,என்று என் யோசனையை தெரிவித்தேன்.

"இதுவெல்லாம் நடக்கற கதையா? எப்படி விளம்பரம் கொடுப்பது?யார் இடம் தேர்தெடுத்து புக் பண்றது? செலவெல்லாம் யார் செய்வது?"

"தேவி,நீ கேட்பதும் சரியான கேள்விதான்.நானும் என் பணத்தை பிக்பாக்கெட் விட்டுள்ள நிலையில் இது யோசிக்க வேண்டிய விசயம்தான்"

சட்டென்று எனக்கு சற்றுமுன் போன ஊர்வலமும் அந்த சாமியாரும் நினைவுக்கு வந்தனர்.கண்டிப்பாக அவர் செய்வார்.தேவிக்கு அவர் செய்யும் தொண்டு உலகிற்கே தெரியும்.என்னை தெரிந்த தேவிக்கு அவரை தெரியாதது ஆச்சரியமாக இருந்தது.அவரை பார்ககலாம் என்று நான் தெரிவித்த யோசனையை தேவி ஏற்றுக்கொண்டாள்.ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த ஆசிரமத்திற்கு சென்றோம்.சாமியாரிடம் தனியாக பேச வேண்டும் என்றோம்.சாமியும் பெரிய மனது பண்ணி ஒத்துக்கொண்டது.

விஷயத்தை எல்லாம் அமைதியாக கேட்ட சாமியார் யாரையோ அழைக்க ஒரு இளைய சாமி சில பழங்களை கொண்டு வந்து வைத்து சாப்பிட சொன்னது. உடனடியாக அட்வடைஸ்மெண்ட் கொடுக்கலாம் என்னுடன் வா என்று என்னை அழைத்துக்கொண்டு தன்னுடைய ஆபிஸ்க்கு சென்று சாமியார் யாருக்கோ போன் செய்தார்.நான் ரூமிற்கு வெளியே உட்கார்ந்து இருந்தேன்.ஏதோ உள்ளுணர்வு உறுத்த சாமியார் பேசுவதை சன்னல் ஓரமாக சென்று உற்றுக்கேட்டேன்.உள்ளே சாமியார் பேசுவது கேட்டது.

"ஆமாம் சார் , பையனுக்கு இருபது வயதிருக்கும்,"

"......"

"பொண்ணும் ரொம்ப அழகு"

"......"

"பைத்தியம் மாதிரி நடிக்கிறாங்கன்னு நெனைக்கிறென்.அந்த பொண்ணை ரூமிலே போட்டு அடைச்சிட்டேன்,பையன் வெளியே உட்கார்ந்திருக்கான்

"......."

"திருடங்க இப்படி கூட வருவாங்களா "


அதற்கு மேல் என்னால் உட்கார முடியவில்லை.ரத்தம் தலையில் வேகமாக பாய்ந்தது.நான் பொங்கி எழுந்தேன்.அடப்பாவிங்களா,தேவியை யாடா அடைச்சி வைக்கறீங்க என்றவாறு சாமியாரை அடிக்க பாய்ந்தேன்.எங்கிருந்தோ தோன்றிய சிஷ்ய கோடிகள் சிலர் என்னை பிடித்துக்கொண்டனர்.நான் அவர்கள் பிடியில் இருந்து தப்ப துள்ளினேன்.

"நான் சொல்லாம தேவியால கடவுள் ஆகமுடியாதுடா..என்னை விடுங்கடா" என்று கூச்சலிட்டேன்.சட்டென்று பெஞ்சில் இருந்து உருண்டு விழுந்தேன்.

"தம்பி பத்து மணிக்கு மேல இங்க இருக்கக்கூடாது,எத்தனை முறை சொல்றது உனக்கு" என்றவாறு ஸ்டேஷன் மாஸ்டர் என்னை எழுப்பினார்.அப்போதும் என் உடம்பு நடுங்கிக்கொண்டே இருந்தது.