Sunday, May 17, 2009

டிட் பிட்ஸ் - சில சுவையான தகவல்கள்

ராஜ கண்ணப்பனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக கூட ஆகலாம். கண்ணப்பன் என்ன செய்வார் பாவம்? ஏதோ நடந்திருக்கிறது.

விஜயகாந்த் 100 கோடி முதல் 220 கோடி வரை காங்கிரசிடம் வாங்கிக்கொண்டு தான் தனியாக தேர்தலை சந்தித்ததாக தமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சராசரியாக 60000 ஓட்டு வாங்கியுள்ளார் கேப்டன். ஏழைகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட கல்லூரி அதிபர் விஜயகாந்த். இருந்தாலும் அவர் தில்லை நான் பாராட்டுகிறேன். திமுக ஓவராக ஆடினால் விஜயகாந்த் பக்கம் தமிழக மக்கள் திரும்பினாலும் தவறிலலை என்றுதான் நான் நினைக்கிறேன்.

பா.ம.கவினருக்கு ஆப்பை அதிமுகவும் திமுகவும் பேசி வைத்துக்கொண்டே சொருகியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கபாலு அவரே ஆப்பில் போய் அமர்ந்துக்கொண்டதாக நாடார் சங்கத்தினரும் காங்கிரசு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

தோழர்களுக்கு ஒரே கேள்வி. திமுக வையும் அதிமுக வையும் எதிர்த்தே மூன்றாவது சக்தியாக வந்துள்ள விஜயகாந்த் இரண்டே தேர்தலில் 10 சதவீத வாக்கு வாங்கும்போது பல வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் ஏன் விஜயகாந்த வீட்டு வாசல், ஜெ வீட்டு வாசல் என்று காவல் காக்கிறீர்கள்?
சந்திப்பு அப்ஸ்காண்ட் என்று எனக்கு தெரியும். தேசிய அளவில் ஆப்பு என்றால் சும்மாவா என்ன?

நக்கீரன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

சில கலக்கலான சம்பவங்கள். வட மாவட்ட ஒன்றில் திமுகவினர் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பா.ம.கவினர் கைப்பற்றி வெற்றி பெருமிதப்பட்டனராம். ஆனால் அது நெல் விற்ற பணம் என்றும் திருடப்பட்டது என்றும் உடன்பிறப்பு புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பா.ம.கவினர் கைது செய்யப்பட்டனராம்.


கடைசிகட்டத்தில் அதிமுகவும் பா.ம.கவும் பணத்தை இறக்கிவிட்டாலும் பட்டுவாடா செய்யும் தொழில்நுட்ப திறனும் ஆள்பலமும் இல்லாமல் போயிற்றாம்.


கொங்குமுன்னேற்றபேரவை சில ஓட்டுக்களை வாங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற ரமேஷ் என் பள்ளித்தோழன். எல்.கே.ஜீ முதல் 12 ம் வகுப்பு வரை. சுமார் பதினைந்தாயிரம் ஓட்டு வாங்கியுள்ளான். எல்லா கவுண்டர்களும் சாதி பார்த்து ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.இந்த சமூகத்தினர் பா.ம.கவை பார்த்து அது போல் தாங்களும் ஆகவேண்டும் என்றே அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர். பி.சி.ஆர் சட்டம் ஒழிப்பு ( தலித்துக்கள் இவர்கள் மேல் பொய் புகார் கொடுப்பதை தடுக்கணுமாம்), கள் இறக்க அனுமதி ( காட்டை வித்து கள்ளை குடிச்சாலும் ஹிஹி ) போன்ற உயரிய கொள்கைகளோடு களத்தில் இறங்கினர். சட்டசபை தேர்தலிலும் கலக்குவோம் என்கிறார்கள். ஜனநாயகம் நாடு. அவங்களுக்கும் உரிமை உண்டு.

ஆங்கில தொலைக்காட்சி பரதேசிகள் இன்னமும் திமுக வெற்றியை ஜீரணிக்கமுடியாமல் கழிந்துக்கொண்டி இருக்கின்றனர். ( வார்த்தை பிரயோகம் கேவலமாக தான் இருக்கிறது.ஆனால் காண்டு அதற்கு மேல் உள்ளது). எல்லா ஆங்கில சேனலிலும் வந்துகொண்டிருந்த அதிமுக தகவல் தொடர்பாளர் சோவை காணோம். அடுத்த துக்ளக் இதழ் படிக்க நான் ஆவலாக உள்ளேன்.


அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர். திமுக அது போல் லூசுத்தனங்களை செய்யக்கூடாது. கனிமொழி அன்புமணியின் இலாகாவை வாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.


இந்த கூட்டணி வென்றதை வைத்து இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவே கூடாது என்று மக்கள் கூறுவதாக மத்திய காங்கிரஸ் கேனத்தனமாக எடுத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். கருணாநிதி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி செயலாற்ற வேண்டும்.

Saturday, May 16, 2009

ஆட்டம் ஆர்ப்பாட்டம் - தொடர்ச்சி

ராமதாசு படுதோல்வியை சந்தித்து இருப்பது இந்த தேர்தலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ( கவுண்டணுங்க புண்ணியத்துல கணேசமூர்த்தி கரைசேர்ந்தார். கூடவே ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் வாய்கொழுப்பும்). வைகோ இதோ அதோ என்று தொங்குகிறார்.மத்தபடி பா.ம.க வாஷ் அவுட் என்பது மிக மிக தேவையான ஒன்று.

என் கூட்டணி தான் வெற்றி கூட்டணி என்று பினாத்தி திரி்ந்த ராமதாஸ் என்ன பதில் ( காரணம்) சொல்லப்போகிறார் என்று உலகே எதிர்ப்பார்க்கிறது. அம்மா உறுதி கொடுத்த ராஜ்யசபா பதவியும் கிடைக்காது. (இந்த முறை தலைமை செயலகம் என்ன...போயஸ் தோட்டம் கேட்டுக்குள்ளே கூட போகமுடியாது டாக்குடர் அய்யா). அன்புமணி கடுப்பு ஆயிருப்பார். இவர் அடிச்ச கூத்தில் பாவம் சின்னய்யா. ஒரு நல்ல மத்திய அமைச்சரை இந்தியா இழக்கிறது. ஈழத்தமிழர்களுக்கு கருணாநிதி ஒண்ணுமே பண்ணலைன்னு சொன்ன புண்ணியவானுங்க ஒன்று தனிக்கூட்டணி கண்டிருக்கணும் அல்லது தேர்தலை புறக்கணிச்சிருக்கணும். அவங்களுக்கு வக்காலத்து வாங்கிய எணைய அறிவுசீவிகள் திமுக, அதிமுக இருவரையும் புறக்கணித்து குறைந்தபட்சம் கேப்டனை ஆதரிக்கலாம்னு எழுதியிருந்தா கூட இவங்களுக்கு ஒரு தார்மீக பலம் இருந்திருக்கும். புர்ச்சிதலைவியை நம்பி...ஹிஹிஹி.....

திமுக எப்பவுமே பா.ம.கவை உள்குத்துமாம். அதுனால் செயற்குழுவே அதிமுக கூட்டணின்னு முடிவு செஞ்சதாம். அய்யா இப்ப அதிமுக உள்குத்து, உள் நடுக்குத்து, வெளிக்குத்து, குருக்குத்து என்று ஏகப்பட்ட குத்து குத்திருச்சே. என்ன பண்ணலாம்?இருக்கவே இருக்கு அம்மா ஸ்டைல் பல்டி. எதையாவது சொல்லுங்க. கள்ள ஓட்டு. பணம் கொடுத்தாங்க அப்படின்னு காரணமா இல்ல. இவிங்க கொடுத்த பணத்தை நானும்தான் பார்த்தேன்.

அப்புறம் புரட்சிதலைவியும் உங்க மேல கோவமா இருக்காங்களாம். சும்மா இருந்த புரச்சிதலைவியை ஈழ பிரச்சினையை பேசவச்சி உண்மையான உணர்வாளர்களின் ஓட்டை திமுக பக்கம் திருப்பியதற்கு காரணம் நீங்கதானாமே?

அப்புறம் முதல்ல விஜயகாந்த்கிட்டே மோதிட்டு அப்புறம் கருணாநிதியை ஒண்டிக்கு ஒண்டி வரசொல்லுங்க அய்யா....

எப்பவுமே கருணாநிதியை எதிர்க்கும் பிராமண ஆதரவாளர்கள் கள்ள மெளனம் காத்தனர். தமிழ் உணர்வாளர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சாகும்போது சத்தமில்லாமல் அம்மா ஜெயிப்பார் என்று நினைத்துக்கொண்டு இருந்தனர். புரட்சிதலைவி செட்டியார் கடையில் ஈழம் வாங்கித்தருவேன் என்று கூறியதை இவர்கள் ஒரு ஜோக்காக மட்டுமே எடுத்துக்கொண்டு கருணாநிதியின் தோல்வியை ஆவலோடு எதிர்ப்பார்த்தார்கள். சோவின் பேச்சு, பேட்டிகளை கவனிப்பவர்களுக்கு இது புரிந்திருக்கும். பதிவுலகிலும் சில பதிவுகள் இந்த அப்ரோச் செய்திருந்தன. அவர்களுக்கும் கு** கிழிக்கப்பட்டது தெரியாமல் கிழிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்த தமிழர்கள் தமிழக அரசியலை சரியாக கணிக்கவில்லை என்பதும் தமிழக மக்களின் எண்ணவோட்டத்தை சரியாக கணிக்கவில்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகளில் தெள்ளந்தெளிவாக தெரிகிறது. கருணாநிதியை திட்டி இணையத்தில் எழுதுவது தீர்வாகாது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். கடந்த சில மாதங்களில் இந்த மனுசனை எல்லாரும் திட்டியது அவர் சொல்லுவது போல் எருவாகிவிட்டது.

கொஞ்ச நஞ்சமாவாடா ஆடுனீங்க....

தமிழின துரோகிகளுக்கு மரண அடி கிடைத்திருக்கிறது. ஈழ தமிழர்களை கிள்ளுக்கிரையாக நினைத்த அரசியல்வாதிகளுக்கு ஆப்பை ஆழமாகவும் அகலமாகவும் தந்துள்ளனர் தமிழக வாக்காளர்கள்.

சில பதிவுகளில் சொல்லப்பட்டிருப்பதை போல் கருணாநிதியை படு கேவலமாக எழுதி தள்ளினார்கள். நண்பர் குழலி போன்ற ஒரு கட்சி சார்பானவர் என்று கூறப்படுபவர்களுக்கு கருணாநிதியை திட்ட காரணம் உள்ளது. கூட்டணி மாறப்போவதை முன்னமே கணித்து அதற்கு ஏற்றாற் போல் அவர் களத்தை அமைத்துக்கொண்டார். மற்ற பல நண்பர்களுக்கும் என்ன காரணம் என்பது உளவியல் ரீதியாக ஆராயப்படவேண்டியது.

நான் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால் நினைத்தது நடக்கவில்லை என்பதால் மேலும் கருணாநிதியை திட்டுவது கவைக்குதவாது. நல்லவேளை விடுதலைப்புலிகள் இந்த காகித புலிகளை நம்பி கருணாநிதியை எதிர்த்து எதுவும் கடைசி நேர அறிக்கை எதையும் விட்டு விடவில்லை.

இனி ஆயிரம் வியாக்கியானங்கள் வரும். விளக்கங்கள். பா.ம.க வை பற்றி மட்டும் பத்து பதிவு எழுதும் அளவிற்கு விஷயம் இருக்கிறது. ஆனால் ஒன்று நிச்சியம். அரசியல் விபச்சாரத்திற்கு ஆப்படித்த தேர்தல் என்ற வகையில் இந்த தேர்தல் மிக முக்கியமானது. பணம் கொடுத்தார்கள் என்றெல்லாம் புலம்புவது முட்டாள்த்தனம். என்னவோ இந்த தேர்தலில்தான் அதுவும் திமுக மட்டும்தான் பணம் கொடுத்தது என்பது போல் வெட்டி(நொண்டி) சாக்கு சொல்வார்கள். இது கலைஞர் தமிழக வாக்காளர்களை சோற்றலாடைத்த பிண்டங்கள் என்று சொன்னதற்கு ஒப்பானது.(நான் நடுநிலைவியாதி யாக்கும்)


தமிழின ஆர்வலர்கள் என்றும் உணர்வாளர்கள் என்றும் தீடிரென்று கிளம்பிய இவர்கள் புரட்சித்தலைவியை ஆதரித்ததுதான் இந்த தேர்தலில் அலையை திமுக பக்கம் திருப்பியது. ( ஒரு வேளை இதுவும் கலைஞரின் திட்டமோ:)


என்னை தேர்தெடுத்தால் மூணாவது குறுக்கு சந்தில் கக்கூஸ் கட்டுவேன். ஈழம் பெற்றுத்தருவேன். வெள்ளாளகுண்டம் கிராமத்திற்கு பாலம் அமைப்பேன் என்ற ரீதியில் ஈழ பிரச்சினையை தமாசாக அணுகிய புர்ச்சிதலைவியை ஆதரித்த அறிவுசீவிகளின் அரசியல் அறிவின் மீதே எனக்கு சந்தேகம் வருகிறது. ( நண்பர்கள் மன்னிக்க).சில வாரங்களுக்கு முன்பு புலிகளின் அரசியல் அறிவை நான் கேள்வி கேட்டபோது என்னை பெயர் சொல்லாமல் தாக்கினார்கள். இன்று ஓபாமாவையே வேலையை பாருய்யா வெங்காயம் என்ற அளவில் இலங்கை பேசுகிறது.

இன்று அதையே தமிழ்சசி எழுதுகிறார். என்ன பதில்?


( தொடரும்)


http://muthuvintamil.blogspot.com/2009/05/blog-post_2423.html