Thursday, May 04, 2006

அற்புதங்கள் என் விசிட்டிங் கார்டு-சாயிபாபா

நீயெல்லாம் ஒரு மனுசனா என்று நேரடியாகவோ அல்லது அப்பாவிதனமாக வந்து அனானியாக திட்டுபவர்கள் இல்லாமலோ நட்சத்திர வாரத்தை முடிக்கமுடியுமா?அப்படி முடித்தால் வரலாறு என்னை மன்னிக்குமா?

என்னடா ரொம்ப பீடிகை போடறானே? வம்பிழுக்க போறானோ என்று நினைத்தீர்கள் என்றால் நீங்கள் ரொம்ப சரி.கடவுளின் நேரடித்தொண்டர்களைப்பற்றிய பதிவு இது.புட்டபர்த்தி பரட்டை என்று அன்பொழுக நம் பொட்டீக்கடையால் அழைக்கப்பட்ட சத்ய சாயிபாபாவின் அணுக்க தொண்டன் என் நண்பன் ஒருவன். நான் அவனை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கலாய்ப்பது வழக்கம். இதையும் மீறி நட்பு என்னவோ தொடருகிறதுதான்.

"ஏண்டா இந்தாள் மேட் இன் சுவிஸ் வாட்சை எல்லாம் வானத்தில் இருந்து வரவழைக்கிறான்? கடவுள் கொடுத்த வாட்ச்சில் மேட் பை காட் என்றுதானே இருக்கவேண்டும்" என்பேன் என் நண்பனிடம்.

அதற்கு அவன் கூறிய பதில்தான் இந்த பதிவின் தலைப்பு.

www.exbaba.com என்ற தளத்திற்கு எந்த முன்முடிவும் இல்லாமல் செல்லுங்கள். பல சேதிகள் உண்டு ஆதாரங்களுடன்.

***************
எல்லா சாமியார்களையும் சாமியாரிணிகளையும் சகட்டு மேனிக்கு தாக்குவது என்பது என் நோக்கம் அல்ல.(ஜக்கி,ரவிசங்கர் ஆகிய சிலரை மதிக்கிறேன் நான்.வாழும் வழி என்பதாக சில வழிமுறைகளை இவர்கள் வைப்பதாக அறிகிறேன்)

இந்த சாமியார்கள் 100 கோடி இருநூறு கோடி என்று சமூகத்திற்கு உதவுகிறார்கள் என்று பலரும் நினைக்கிறோம்.ஆகவே அவரை ஏன் எதிர்க்க வேண்டும் என்பது ஒரு வாதம். இந்த உதவி செய்ய பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே.

பணம் சம்பாதிக்க ஆயிரம் வழி உள்ளது.ஆனால் எந்த வழியில் சம்பாதித்தீர்கள் என்பது முக்கியம் இல்லையா?மாயம் மந்திரம் செய்வதாக பம்மாத்து செய்யும் இவர் பலகோடி மக்களின் மனதில் ஒரு தவறான முன்னூதாரணம் ஆகிறார்.இதை பார்க்கும் நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம். பணத்தை கொடுக்கிறோம்.இது பக்தி இல்லை.கேவலமான வியாபாரம்.மேலும் மாயமந்திரம் என்பதையெல்லாம் மற்றவர்கள் எல்லாம் நம்புவதால் நம்பவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு போய் கடைசியில் ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது.

மந்திரத்தில் மாங்காய் விழுந்தால் நாம் ஏன் மாங்கு மாங்கென்று உலகம் பூரா சுத்தி திரவியம் தேடவேண்டும்?

அமிர்தானந்தமயி அம்மாவெல்லாம் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய பீடத்தை எழுப்பிக்கொண்டு வருகிறார் என்பதெல்லாம் கவனிக்கத்தக்கது. சிந்திக்கத்தக்கது. பம்பாயில் வீடு வீடாக வந்து இலவசமாக வேன் அமர்த்தி கூட்டத்திற்கு கூட்டி செல்கிறோம் என்று கேட்டார்கள்.அப்படியானால் உங்கள் நோக்கம் என்ன?

*******************

கார்பரேட் சாமியார்களின் அசிரமத்தில் எப்போதும் சில வெளிநாட்டு ஆசாமிகளும் இருப்பதை காணலாம்.நம் டான்ஸ் புகழ் கல்கி, செக்ஸ் புகழ் பிரேமானந்தா முதற்கொண்டு எல்லா சாமியார் மடததிலும் சில வெளிநாட்டு ஆசாமிகள் இருப்பார்கள்.இதுவும் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்தான். நமக்கு எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. வெள்ளைகாரர்கள் மேல ஒரு கவர்ச்சி.இதை சரியாக புரிந்துகொண்ட இந்த ஆட்கள் அங்கிருந்து சில ஆட்களை இறக்குமதி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். வெள்ளைகாரனே கும்பிடறான்னா ஏதாச்சும் இருக்கும் என்று நம் ஆட்களும குவிவார்கள்.

********************

வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது. அவர்கள் எல்லாம் அமைதி தேடி இந்தியா வருகிறார்கள் என்பது.இதுவெல்லாம் சுத்த ஹம்பக்.ஓரிரண்டு கேஸை வைத்துக்கொண்டு ஜல்லியடிக்கக்கூடாது.அப்படி எத்தனை பேர் வந்திருக்கிறார்கள்?காலையில் விஜய் டிவி பாருங்கள்.ஒரு கிழவி லெக்சர் அடிக்க கிறிஸ்தவ மத பிரச்சாரம் அரங்கு நிறைந்து காட்சிகளாக படம் ஓடிக்கொண்டிருக்கும். வெள்ளைகாரனுக்கு அவனுக்குரிய ஆன்மிக தேடல் உண்டு.ஏதோ ஒரு பதிவில் ஹரே ராமா இயக்கததினர் கொடுதத பகவத் கீதை புத்தகம் குப்பைத்தொட்டிக்கு போவதை பற்றி எழுதி இருந்தார்கள்.அதுவும் நடக்கிறது.ஆகவே உங்கள் மதத்தின் மேன்மையை நீங்கள் கூறுங்கள். அதற்காக மற்ற எல்லோரும் சட்டையை கிழித்துக்கொண்டு ரோட்டில் அலைவதாக எழுத வேண்டாம். உண்மையை சொல்லப்போனால் நம் நாடுதான் வெள்ளைக்காரர்கள் கலாச்சாரத்திற்கு மாறிக்கொண்டு வருகிறது.குஷ்பு போன்றவர்கள்தான் அதற்கு வழிகாட்டி.(தப்பா எதுவும் சொல்லலீங்க)

*********************

உங்களுக்கும் கார்பரேட் சாமியார் ஆகவேண்டும் என்று ஆசையா?ஒரு சுலப வழிகாட்டி.

1. ஊருக்கு வெளியே ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வளைத்து போடவும்.

2.உங்கள் ரேஞ்சிற்கு ஏற்றாற்போல் ஒரு இன்சீனியரிங் காலேஜோ அல்லது ஒரு நர்சரி பள்ளிக்கூடமோ தொடங்கவும்.

3.பஜனை நடத்தவேண்டும்.அதை பணம் கொடுத்து ராஜ் டிவியிலோ விஜய் டிவியிலோ ஒளிபரப்பவேண்டும்.இந்த பஜனைக்கு கூட்டத்திற்கு உங்கள் கல்லூரி மாணவ மாணவிகளை உபயோகப்படுத்திக்கொள்ளலாம்.

4.மாதாஜீ இல்லாமல் ஆசிரமமா? கறாராக தேர்வு செய்து ஒருவரை பிரகடனப்படுத்தவும்.

5.ஏமாளிகள் தரும் பணத்தில் முந்திரிப்பருப்பும், சுண்டக்காய்ச்சிய பாலும் குடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேஜஸ் தானாக ஏறும்.

6.குறி சொல்லுதல் நல்ல டெக்னிக்.ஒரு நாளைக்கு நூறு ஆட்களுக்கு நல்லது நடக்கும் என்று சொன்னீர்கள் என்றால் ஐம்பது பேருக்காவது ஓர்க்அவுட் ஆகும். நீங்கள் தான் காரணம் என்று அந்த முட்டாள் இன்னும் ஐம்பது பேரை கொண்டு வருவான்.

உதாரணம் 1:கம்ப்யூட்டர் படித்த மாணவன் வந்தால் ஒரு வருடத்திற்குள் நீ அமெரிக்கா போவது உறுதி என்று சொல்லவேண்டும்.இது இந்த சூழ்நிலையில் சுலபமாக நடக்க வாய்ப்பு உள்ளது.நமக்கெல்லாம் தெரியும்.

உதாரணம் 2:27,28 வயதில் வருபவர்களுக்கு சீக்கிரம் உங்களுக்கு கல்யாணம் நடக்கும் என்று கூறவேண்டும்.எப்படியும் (அந்த வயதில் கல்யாணம் செய்யாமல் 50 வயதிலா கல்யாணம் செய்வார்கள்?)

7.வாய்ப்பு இல்லாமல் வீட்டில் அமர்ந்திருக்கும் நடிகர்களை டிவியில் பேச வைக்கலாம். விசுக்கூட இப்ப ஃப்ரியாமே?

8.வெளிநாடுகளில் இருந்து சில பிச்சைகாரர்களை (அங்கும் பிச்சைகாரர்கள் உண்டு, ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்கள்(?) வரவழைத்து குளிக்க வைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு உங்கள் ஆசிரமததில் தங்க வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.

219 comments:

1 – 200 of 219   Newer›   Newest»
Anonymous said...

I think this post is going to receive tons of comments. கலக்கரே முத்து கலக்கரே

- யெஸ்.பாலபாரதி said...

அடங்க மாட்டாமல் எழுதுகிறேன்.
எனக்கும் கூட ஒர் ஆஸ்ரமம் கட்டும் ஐடியா இருக்கு.
ஆனா.. ஆளாளுக்கு தொல்லை பண்றதால்... மணம் முடித்த பின் அவ்வேலையைச் செய்யலாமென்ற எண்ணம்.
வடக்கே "குருபத்னி" யேடு இருக்கும் சாமியார்களை பார்க்கலாம்.
அடியேனும் அவ்வழியில்..
ஆசிகளுடன்
மகராஜ்ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலானந்தா..
:-)

Pot"tea" kadai said...

இன்னும் படிக்க ஆரம்பிக்கவில்லை...ஆனாலும் புட்டப்பர்த்தி பரட்டையனைப் பற்றி எழுதியிருப்பதால், நானும் முதுகைக் காட்டி-கட்டிக் கொள்ள ஓடோடி வந்தேன்:-))

படிக்காமலேயே, பின்னூட்டமிடாமலேயே "-" குத்துவதில் சிலருக்கு ஏற்படும் "உள்ள" சுகம் தான் இதிலும்...:-))

வினையூக்கி said...

உங்கள் ஐடியாவுக்கு நன்றி, "செல்வானந்தா". நல்லா இருக்கா... முதல்ல லோக்கல் சாமியார், பின்பு டீவி சாமியார் அடுத்து அரசியல் சாமி கடைசியா மல்டிநேஷனல் சாமியார்..... How is it?

ஜோ/Joe said...

தேர்தல் நேர கடைசி கட்டத்துல ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல,முத்து.நமக்கு இதுல சொல்லுறதுக்கு ஒண்ணும் இல்ல .ஆதரவா ஒரு குத்து விட்டுக்கிறேன்.

G.Ragavan said...

சாய்பாபா பற்றி நான் தனியாக ஒன்றும் சொல்வதற்கில்லை. பல குழப்பமான விவரங்களே அவரைப் பற்றி வரும். என்னுடைய கருத்தை மட்டும் சொல்வதே சரியாக இருக்கு. இவர் மேல் எனக்கு நம்பிக்கை இல்லை. அவ்வளவே.

Muthu said...

anony,

என்னங்க இது குழந்தையாட்டம்? :))

Muthu said...

பாலபாரதி,

ஸ்ரி ஸ்ரி ஏற ஏற பெரிய ஆளாமே அப்படியா?

முதல்ல மேட்டரை முடிங்க..அப்புறம் மீட்டரை ஏத்தலாம்.:))

கோவி.கண்ணன் said...

உங்கள் வலைப்பதிவு பகவானின்(?) கிருபையால் மறைந்துவிடப் போகிறது !

Muthu said...

பொட்டீக்கடை,

உங்க பதிவு தான் இன்ஸ்பிரேஷன்... நன்றி..வாங்க சேர்ந்து அடி வாங்குவோம்...

Muthu said...

சுவாமி செல்வானந்தஜீ மகராஜ்,

நல்லா இருக்கே..(சாமி பெரிய ஆள் ஆனா என்னைய கவனிச்சுக்கோங்க).

நான் வருங்கால அரசியல்வாதியாக்கும்

சீனு said...

ஆமா! எல்லாத்தையும் துறந்தவர் தானே சாமியார்? இத கேட்டா நம்மள எல்லோரும் லூசுங்குறாங்க.

Muthu said...

ஜோ,

நன்றி

gulf-tamilan said...

//இந்த உதவி செய்ய பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே//
இதைதான் அவர்க்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் மறைப்பது/மறந்து போவது

Muthu said...

ராகவன்,

மீண்டும் நேர்மையை நிரூபித்ததற்கு நன்றி...

i like you for your neutral and balanced stand my dear

வினையூக்கி said...

நம்பிக்கை என்பது ஒரு "ரிலேடிவ்" டெர்ம். நமக்கு நம்பிக்கை இல்லாத ஒரு விசயத்துக்கு, மற்றவர்களுக்கு ஏதாவது ஒரு காரணம் நம்பிக்கை ஏற்படுத்தி இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு விஷேட ஈர்ப்பு இல்லாமலா மக்கள் சாமியார்களிடம் செல்வார்கள். டெமி காட் எனப் புகழப்படும் டெண்டுல்கரே சென்று ஆசிர்வாதம் வாங்கும் அளவுக்கு புகழ் வாய்ந்த ஒருவரால் மக்களுக்கு தனிப்பட்ட முறையில் அரசியல் வாதிகளாலோ , அரசாங்காத்தாலோ முடியாத நல்ல விசயங்கள் செய்ய முடிகிறது என்றால் சாய்பாபா பாரட்டப்படலாம். (நான் சாய்பாபா பக்தனல்ல, எனக்கு நானே கடவுள், எனக்கும் அப்பாற்பட்டு ஒரு சக்தி உள்ளது என்பதையும் நம்புபவன்)

Muthu said...

//டெமி காட் எனப் புகழப்படும் டெண்டுல்கரே சென்று ஆசிர்வாதம் வாங்கும் //

வினையூக்கி,

எங்கு நீங்கள் சறுக்குகிறீர்கள் என்று புரிகிறதா?

துளசி கோபால் said...

எனக்குப் போட்டியா யாரும் வராம இருக்கக்கடவது.

ரிட்டயர்மெண்ட் ப்ளானே அதுதான். சிஷ்யகேடியும் தயார். இந்தியாலெ டிவியிலே வர்றதைப் பார்த்துப் பார்த்துக்
கையை எப்படி ஆட்டி ஆசீர்வாதம் செய்யணுனுமுன்னு நல்லா ப்ராக்டீஸ் செஞ்சு வச்சுருக்கேன்.

புடவைகள் மட்டும் ஸ்பெஷல் தறியிலே சொல்லிச் செஞ்சுரலாம். நகைகளும் அப்படியே!
எனக்கு வைரக்கிரீடம் வச்சுப் பார்க்கணுமுன்னு 'மக்கள்' ஆசைப்படறாங்க:-))))

இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். மத்தது எல்லாம் ட்ரேட் சீக்ரெட்.

மத்தபடி ஸோ அண்ட் ஸோ வைப் பத்தி ராகவன் சொன்னதுதான் நானும் சொல்றேன்.

Muthu said...

டென்டுல்கர் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர்..அவ்வளவுதான்...மத்ததுகெல்லாம் அவர் ஐ.எஸ்.ஐ ஸ்டாம்பு குத்தமுடியாது..

Pot"tea" kadai said...

தமிழினி,
//அற்புதங்கள் என் விசிட்டிங் கார்டு-சாயிபாபா//

போதை வஸ்துக்களின் "விசிட்டிங் கார்டு" தான் - பரட்டையன் என்று உலகிற்கே தெரியுமே.
"ECSTASY"(XTC) யும் அற்புதமும் ஒன்றாமே. அப்போ "அற்புதங்கள் என் விசிட்டிங் கார்டு-சாயிபாபா" தலைப்பின் பெயர்க்காரணம் சரிதான்.

//புட்டபர்த்தி பரட்டை என்று அன்பொழுக நம் பொட்டீக்கடையால் அழைக்கப்பட்ட ...//

சந்தடி சாக்கில் நீங்க வாங்கிக் கட்டிக் கொண்டால் மட்டும் போதாதென்று "பொட்"டீ'கடையையும் இழுத்துட்டீங்களே! "பரட்டையன்" அருளால் சுமாராக ஓடிக் கொண்டிருக்கிற கடையை ஏகபோகமாக ஒரேடியாக ஓட வைக்கும் திட்டமோ? :-))

//கார்பரேட் சாமியார்களின் அசிரமத்தில் எப்போதும் சில வெளிநாட்டு ஆசாமிகளும் இருப்பதை காணலாம்.//
//வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது. அவர்கள் எல்லாம் அமைதி தேடி இந்தியா வருகிறார்கள் என்பது.//

வெளங்கினா மாதிரி தான். 50 டாலர் கொடுத்து 4 ஜாயின்ட்ல வேஸ்ட் ஆகற கஞ்சா வெறும் 2 டாலருக்கு கெடச்சா எவன் தான் வர மாட்டான்.முக்தி நிலை "சீப்"பா கெடைக்குதுங்கோ...

//ரவிசங்கர் ஆகிய சிலரை மதிக்கிறேன் நான்//

ரவியின் கம்யூனிசமும், ஸ்பிரிச்சுவளிசமும் ஒலிப்பதிவை கேட்டதால் எழுந்த மதிப்போ?? ரவிசங்கரின் "கோரமங்களா" ஆபிஸின் (ஆசிரமம் என்று சொல்ல வேண்டுமோ?) அருகிலேயே வசித்ததாலும் நேரங்கெட்ட நேரத்தில் அங்கு சென்ற காரணத்தாலும் அவர் மேலும் நமக்கு மதிப்பு இல்லீங்கோ? ஆனாலும் மாயம் மந்திரம் என்று ஏமாற்றாத வகையில் அவரும் ஒரு மனிதனாக மதிக்கப்படுவதில் தவறேதும் இல்லை.

//வெளிநாடுகளில் இருந்து சில பிச்சைகாரர்களை (அங்கும் பிச்சைகாரர்கள் உண்டு, ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்கள்(?) வரவழைத்து குளிக்க வைத்து மூன்று வேளை சாப்பாடு போட்டு உங்கள் ஆசிரமததில் தங்க வைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.//

pefect finish, thamizhini.

Anonymous said...

என்னடா இது - ஒரே திராவிட ராஸ்கள்கள் கும்பலா இருக்கு!!!!.

மகராஜ்ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலானந்தா ???

May be மகராஜ்ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ பாலபழமானந்தா. அப்புறம் அந்த கண்ணாடியய் எடுத்துவிட்டு contact lens போடுங்கள். அப்போதான் கண்ணில் ஒரு காந்த பார்வை தெரியும்.

Unknown said...

டென்டுல்கர் நல்ல கிரிக்கெட் ஆட்டக்காரர்..//

I object your honour.

Muthu said...

selvan,

although he is selfish about his records ( but he vehemently used to deny this charges) he is good at it...

he is having good cricketing brain...fielding..bowling...he is good...( lower the expectations on him..you can like him)

நண்பர்களே விளையாட்டை நாளை என்னுடைய விளையாட்டு பற்றிய பதிவில் கலாய்க்கலாமே..

வினையூக்கி said...

டெண்டுல்கரை "டெமி காட்" என்று கூறியது "Sarcastic" ஆ தான்.

Muthu said...

கோவிகண்ணன்,

ஆமாய்யா...அந்நியன் அவதரிச்சிட்டாராமே? என்ன கவலை?

Muthu said...

சீனு,

வடிவேலு கணக்கா நீங்க கேக்கற இதே கேள்வியைத்தான் நானும் கேட்கிறேன்...

Unknown said...

although he is selfish about his records ( but he vehemently used to deny this charges) he is good at it...//

எங்கு நீங்கள் சறுக்குகிறீர்கள் என்று புரிகிறதா?

Muthu said...

//பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே//
இதைதான் அவர்க்கு ஆதரவாக பிரசாரம் செய்பவர்கள் மறைப்பது/மறந்து போவது //

gulf ayya,

இதைவிட கூத்தெல்லாம் இருக்குய்யா..தேவை கொஞ்சம் முன்முடிவு இல்லாத சிந்தனைதான்

Muthu said...

//அரசியல் வாதிகளாலோ , அரசாங்காத்தாலோ முடியாத நல்ல விசயங்கள் செய்ய முடிகிறது என்றால் சாய்பாபா பாரட்டப்படலாம்//

ஏதோ பழமொழி இருக்கு...அதுமாதிரி இருக்கு இது..

ஏன் அரசாங்கத்தால் முடியவில்லை?நாம் என்ன பிச்சைகாரங்களா?

Muthu said...

thulasi,


//எனக்குப் போட்டியா யாரும் வராம இருக்கக்கடவது.//

அப்படியே ஆகக்கடவது...


//சிஷ்யகேடியும் தயார். //

இதை கடுமையாக கண்டிக்கிறேன்.(கோபால் சார் சார்பாக:))

//இந்தியாலெ டிவியிலே வர்றதைப் பார்த்துப் பார்த்துக்
கையை எப்படி ஆட்டி ஆசீர்வாதம் செய்யணுனுமுன்னு நல்லா ப்ராக்டீஸ் செஞ்சு வச்சுருக்கேன்//


:))

//எனக்கு வைரக்கிரீடம் வச்சுப் பார்க்கணுமுன்னு 'மக்கள்' ஆசைப்படறாங்க:-))))//


ஆவன செய்யப்படும்...

Muthu said...

அனானி,

எவனாத்தான் இருக்கட்டுமே..என்ன சொல்றாங்கன்னு பாருங்க...

வினையூக்கி said...

//அனானி,

எவனாத்தான் இருக்கட்டுமே..என்ன சொல்றாங்கன்னு பாருங்க... //

where is the Anonymous comment?

ramachandranusha(உஷா) said...

இந்த மேட்டரை ஆரம்பிச்சா, அத்தினி வேலையும் குளோஸ். ஆனா, ஒரு உ .சம்பவத்தைச் சொல்லிடரேன். இங்க, கட்டவுட் புகழ் சாமிஜிக்கு நல்ல பிசினஸ். பிரண்டு ஒருத்தர். அக்கவுண்டட், மாசம் திராம்ஸ் கணக்கில் பத்தாயிரத்துக்கு மேலே சம்பளம். மனைவியும் ஓரளவு நல்ல வேலை. ஆர்வமா புருஷனும், மனைவியும் இந்த வகுப்புக்கு போய்கிட்டு இருந்தாங்க.
ஒரு நா பார்த்தா, ரெண்டு பேரும் வேலையை விட்டுட்டு "சேவை" செய்யப் போயிட்டாங்கன்னு
செய்தி காதுல விழுந்துச்சு. இது என்ன புத்தி கெட்ட வேலை என்று நாங்க புலம்பிக்கிட்டு இருந்தோம்.
நாலஞ்சு மாசம் கழிச்சி பார்த்தா, ரெண்டு பேரூ முகத்துலையும் அப்படி ஒரு தேஜஸ். பேஷீயல்
மகிமை, சாதா வண்டி போர் வீல் டிரைவ் ஆயிடுச்சு. மாதத்துக்கு ரெண்டு முறை, வெளி நாட்டு
பயணம்- வகுப்பு எடுக்க- போதுமா? பாருங்க, வாழும் கலையை என்னமா புரிஞ்சிக்கிட்டாங்கன்னு.
கடவுள் பெயரில் பிசினஸ் ஆரம்பிச்சாலோ அல்லது அதில் உங்களை இணைத்துக் கொண்டாலோ
நீங்க எங்கியோ போயிடுவீங்க என்பது உத்திரவாதம்.

ஜெய் விகடனானந்தா

Muthu said...

//புட்டபர்த்தி பரட்டை என்று அன்பொழுக நம் பொட்டீக்கடையால் அழைக்கப்பட்ட ...//

//சந்தடி சாக்கில் நீங்க வாங்கிக் கட்டிக் கொண்டால் மட்டும் //


வாங்கற அடியை சமமாக பிரித்துக் கொள்ளலாம்.. களைப்படையற வறைக்கும் அடிக்கிற ஆளுங்க நிறைய இங்க..அதான்..ஹி..ஹி..


//முக்தி நிலை "சீப்"பா கெடைக்குதுங்கோ...//


matter enbathu meter thana...


//ரவியின் கம்யூனிசமும், ஸ்பிரிச்சுவளிசமும் ஒலிப்பதிவை கேட்டதால் எழுந்த மதிப்போ?? //

உண்மையை சொல்லணும்னா இவரைப்பற்றி அதிகம் தெரியாது... இண்டியன் எக்ஸ்பிரஸ்ல சில கட்டுரைகள் படித்துள்ளேன். கொஞ்சமே கேனத்தனமாக(நன்றி: ரோசா) பேசுவதால் மட்டுமே இவரை மதிக்கிறேன்.

//pefect finish, thamizhini. //

thanks dear

Muthu said...

நண்பர்களே,

சாயிபாபா மட்டும் இல்லை.இது போல் திரியும் பல கேடிகளை பற்றியதுதான் இது.

நடிகர் விவேக் மட்டும் இல்லையென்றால் டான்ஸ் சிவசங்கர் பாபர் இன்னேரம் ஆட்சியை பிடித்திருப்பார்(?) நம்ப ஊருலே...

Muthu said...

வினையூக்கி,

நீங்கள் கேட்ட அனானி காமெண்ட் திராவிட ராஸ்கல்களை இழுத்த அனானிகமெண்ட்தான்..

Muthu said...

செல்வன்,

சில சிறிய சறுக்கல்கள் இருந்தால்தான் நல்லது..(சின்ன சின்ன தோல்விகள் கேட்டேன்)

ஆனால் அதில் என்ன சறுக்கல் என்று விளக்கமுடியுமா?

Muthu said...

//டெண்டுல்கரை "டெமி காட்" என்று கூறியது "Sarcastic" ஆ தான். //

but next sentence shows you are treating him as real god..

Muthu said...

usha,

நீங்கள் சொல்வதும் பொட்டீக்கடை சொல்வதும் புதிதாக சில விஷயங்களை (எனக்கு இதில் சந்தோஷம்தான்) எனக்கு கட்டுடைக்கிறது..
ஆராய்ச்சி பண்ணிடுறேன்.நன்றி.



ஜக்கி எப்படியாம்?

ilavanji said...

இப்போதெல்லாம் கல்கி ஆசிரமத்து விளம்பரத்துல கல்கி சாமியாரையே காணோம்! அவிங்க ஊட்டுக்காரம்மாதான் பளபளக்கற பட்டு மற்றும் மினுமினுக்கற நெக்லஸ்ல ரெண்டு கையையும் தூக்கி ஆசிவதிக்கறாங்க! அனேகமா "ஆசி வழங்கற உரிமை"யோட பவர் ஆப் அட்டார்னிய கல்கிகிட்ட இருந்து எழுதி வாங்கிட்டாங்கன்னு நினைக்கறேன்!

இங்கே இது அத்தியாவசியம் எனினும் "ஆன்மீக செம்மல்" ஜீரா எனக்களித்த "இளவஞ்சியானந்தா" என்ற பட்டத்தினை பாயிண்ட் நெ.4 &5 கவர்வதால் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்! ஹிஹி...

வினையூக்கி said...

கார்போரேட் சாமியர்களிடத்தில் படித்தவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள்.

ramachandranusha(உஷா) said...

பாவம் செகண்ட் பிளேஸ்தான். நம்ம எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் மாய்ந்து மாய்ந்து எழுதினாலும், நம்பர் ஒன் இன்னும் ஆக முடியலை. உள்ளூர் பெருசுங்க போதாது. வெளி நாட்டு
உதவி, பெரிய நெட் ஓர்க் வேணும். மூணாவது ப்ளேஸ், குமுதம் புகழ். நடிக, நடிகைகள் உட்பட பலரும் அவரின் மகிமையை குமுதத்தில் எடுத்து சொல்கிறார்கள். பார்க்கலாம், ஆனா அவர் என்ன ஹேர் ஆயில் உபயோகிக்கிறார் என்று தெரியவில்லை. பாப் கட் அழகாய் இருக்கிறது.

பெத்தராயுடு said...

பொட்டி அவர்களே, கோரமங்களாவில் இருப்பது 'ஸ்வாமி சுகபோதானந்தா'வின் ஆஸ்ரமம் என்று நினைக்கிறேன். ஏன்னா, அஞ்சாறு வருசத்துக்கு முன்னால, தினமும் இலவச யோகா, தியான வகுப்புகளுக்கு சென்றதுண்டு. அப்போது அங்கே 5K, 10K ரூபாய்க்கு 'கார்ப்பரேட் ஆழ்நிலை தியான' வகுப்புகள் பற்றிய பிரசுரங்களைப் பார்த்திருக்கிறேன்.

தருமி said...

இந்தக்காலத்து சின்ன வயசு (பசங்க)ஆளுங்களே இப்படித்தான்... ஒரு கடவுள் பக்தி, சாமியார்கள் மேல் ஒரு நம்பிக்கை, மரியாதை எதுவும் இல்லாம இப்படியா? எவ்வளவு மனசு கஷ்டப்படுகிறது. என்ன மாதிரி வயசான பக்திமான்களைப் பார்த்தாவது மனசு மாறி 'திருந்தக்கூடாதா?'

என்னமோ போங்க... :-)

Pot"tea" kadai said...

பெத்தராயுடு,
தகவலுக்கு நன்றி!
பல நேரங்களில் "ரவி"யை அங்கு கண்டிருக்கிறேன்.சுகாவை விட...
"கொலப்பிரேட்டிவ்" ஃபவுன்டேஷனோ?

பட்டணத்து ராசா said...

என்ன முத்து நிங்களும் பொட்டியிம் வாங்கி கட்டிக்கிறதுக்கு ரெடியா இருக்கிங்க ஆனா, ம்ம் ஒன்னும் நடக்கலையே :((

Muse (# 01429798200730556938) said...

தமிழினி,

பாபாவை பற்றிய உங்களது கட்டுரையில் இருந்த கருத்துக்கள் பெரும்பாலான மீடியாக்களின் மூலம் ஏற்கனவே கேட்டதுதான்.

அவரின் மேல் எனக்கு பக்தி எதுவுமில்லை. ஆனால் அவருடைய பக்தர்கள் செய்யும் தனி மனித சமூக சேவை எனக்கு அவரின் மேல் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. அவர் நல்லவரா, கெட்டவரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவரை நம்பி அவர் சொல்லுகின்ற நல்ல விஷயங்களை நடைமுறை படுத்துகிற மக்களை நான் நேரில் கண்டுள்ளேன்.

அவரை வழிபடுவது ஒரு ஸ்டேட்டஸ் சிம்பல் என்பதற்காக வழிபடுபவர்களும் உண்டு. ஆனால் அவர் சொன்னார் என்று சொல்லி மற்ற குழுவினரின் மேல் யாரும் வன்முறையை கையாளுவதில்லை. மற்றவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதில்லை. அதாவது இவரது பக்தர்கள் ஜிஹாத் நடத்தாமல், அக்ஞானிகளின் வழிமுறையை பின்பற்றுபவர்களாகவே இருக்கிறார்கள்.

ஸாய் பாபாவினுடைய "மேஜிக்குகள்" பற்றி எழுதி விட்டீர்கள். சந்தோஷம். இதே போல "அற்புத சுகமளிக்கும் கூட்டங்களை" நடத்துவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து மத அமைப்புகளால் நடத்தப்படுவதைவிட மூன்று, நான்கு மடங்கு பள்ளி, கல்லூரிகளை நடத்தி அவர்களை விட பல மடங்கு "துட்டு" பார்ப்பவர்களை பற்றியும் நீங்கள் எழுதி உங்கள் நடுநிலைமையை வெளிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.

அங்கனம் எழுதும்போது இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக அளவு நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக நம் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கிருத்துவ சகோதரர்கள் எப்படி ஆனார்கள் என்பதையும் நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள் என்பது எனக்கு தெரியும். ஏனென்றால் கார்பரேட் சாமியாராவதற்கு முதல்படியாக ஊருக்கு வெளியே ஒரு பத்து ஏக்கர் நிலத்தை வளைத்துபோட வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்களே. அப்படி இந்த நாட்டில் இருக்கிற பலான பலான கார்பரேட் சாமியார்கள் (நீங்களும், மற்ற அறிவாளி நண்பர்களும் கூறியபடி) செய்தும் எப்படி கிருத்துவ அமைப்புகள் ஒரு அரசாங்கத்தின் அளவுக்கு நிலங்களுக்கு உரிமையாகவுள்ளன?

உங்களுடைய "நம்பத்தகுந்த" வட்டாரங்களிலிருந்து இந்த விஷயத்தைப் பற்றியும் கேட்டு என்னை போன்ற பாமரர்களின்மேல் உங்களின் ஞான ஒளியை பீச்சுங்கள் பெரியவரே.

வானம்பாடி said...

//5. ஏமாளிகள் தரும் பணத்தில் முந்திரிப்பருப்பும், சுண்டக்காய்ச்சிய பாலும் குடித்துக்கொண்டு இருந்தீர்கள் என்றால் தேஜஸ் தானாக ஏறும்//

:))) Ultimate!

பொன்ஸ்~~Poorna said...

முத்து,
ஜக்கி பத்தி எனக்குத் தெரியாது, ஆனா இந்த குமுதத்துல ஒருத்தர் வந்து "கதவைத் திற, ஜன்னலை மூடு"ன்னு எழுதுவாரே.. அவரு எங்க பாட்டி ஊர்க்காரர் தானாம்..

படிப்பு வரலைன்னு இப்படி சாமியார் ஆய்ட்டாராம்.. அவங்க அப்பாவுக்கு ஈமக் கடன் பண்ண சமீபத்துல ஊருக்கு வந்தாராம்.. பல்லக்கு என்ன, பரிவாரம் என்னன்னு, இழவுக்கு வந்திருக்காரா எதுக்கு வந்திருக்காருன்னு தெரியாத மாதிரி ஒரே தடபுடலாம்.. எல்லாரும் அவங்க அப்பாவை விட்டுட்டு சாமியாரைப் பாக்க வந்துட்டாங்களாம்..

எங்க பாட்டிக்கு அதைப் பார்த்ததுக்கு அப்புறம் ரொம்ப வருத்தம்.. இதுல கொடுமை என்னன்னா, அந்த ஊரு, விசிறி சாமியார், ரமண மகரிஷி மாதிரி உண்மையான சாமியார்கள் வாழ்ந்த திருவண்ணாமலை !!! ரமணரையும் மத்தவங்களையும் பார்த்துட்டு இவரையும் பாக்கவேண்டி இருக்கேன்னு ஒரே வருத்தம் பாட்டிக்கு!!!

சந்திப்பு said...


கார்பரேட் சாமியார்களின் அசிரமத்தில் எப்போதும் சில வெளிநாட்டு ஆசாமிகளும் இருப்பதை காணலாம்.நம் டான்ஸ் புகழ் கல்கி, செக்ஸ் புகழ் பிரேமானந்தா முதற்கொண்டு எல்லா சாமியார் மடததிலும் சில வெளிநாட்டு ஆசாமிகள் இருப்பார்கள்.இதுவும் உளவியல் சம்பந்தப்பட்ட விஷயம்தான். நமக்கு எப்போதுமே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. வெள்ளைகாரர்கள் மேல ஒரு கவர்ச்சி.

முத்து ஜீ எச்சரிக்கையா இருங்க... கர்நாடகாவில் உங்களையே பாபா ஜீயா மாத்திரப் போறாங்கள்... அதுல வேற உங்களுக்கு கம்ப்யூட்டர் டெக்னிக் வேற தெரியும். ஒரு ஆள் உள்ளே வரும் போதே °கேன் செய்து, அவரது மனப் பிம்பத்தை கணிணி மூலமே கணிச்சி சொல்லிடலாம்! அப்புறம் என்ன...
இன்னொரு கல்கி, இன்னொரு பிரேமானந்தா...
பிச்சுட்டீங்க....
முத்து இன்றைக்குத் தேவை இதுபோல போலி சாமியார்களை தோலுரிப்பதுதான். இதுதான் மூடநம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரம். இது கடவுள் எதிர்ப்பை மையமாக கொண்டதல்ல.. எனவே இதில் உண்மை பக்தர்களையும் வழிக்கு கொண்டு வந்து விடலாம்.
இன்னொன்று அரசியல் சாமியார்களை விட்டுட்டீங்களே... உமா ஜீ, ரீதம்பரா, சங்கராசாமி....

Pot"tea" kadai said...

oh my good lord...
50 just miss but 51*
muse is bit "AMUSING" here...:-))

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ் தெரியாமத்தான் கேட்கிறேன். ரமணர். வி. சாமியார் உட்பட ஏன் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க வேண்டும்? முற்றும் துறப்பது என்பதில் பொருள் முதல் சுமையில்லையா?
கோடிகள் இன்று மில்லியன்களில் சேர்ந்த்து, தனி விமானம் உட்பட அனைத்து சொகுசுகளையும்
காவி உடையில் அனுபவிப்பவர்கள் சாமியாரா?
இவர்கள் அனைவரிடமும் காணப்படும் ஓரே சிந்தனை. தனிப்பட்ட ராஜ்ஜியம் அமைத்துக் கொள்வது. ஆட் பலம், பொரூள் பலம் மற்றும் பவர்- அரசியல் உட்பட. சமீபத்தில் "இயற்கை மருத்துவ புகழ் இராமதேவர் ஆரம்பிக்கப் போகும் சூப்பர் மருத்துவமனை திறப்பு விழா மேடையில் லல்லு உட்பட
பல மத்திய அமைச்சர்கள் !!!!
நம் பிரச்சனைகள் பிறரால் தீர்க்க முடியுமா? சில ஆயிரங்களை கட்டி, ஒரு வார வகுப்பில் வாழ்க்கை கல்வியும், மன நிம்மதி, வியாதியையும் போக்குவது என்பது மணிமேகலை பிரசுரம் வெளியிடும்
"மூன்று நாளில் விமானம் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள்" புத்தகத்தை வாங்குவதற்கு இணையானது.

Maraboor J Chandrasekaran said...

நான் பார்த்தவரை, (so far I saw and whom I have seen - இரு பொருள் பட) நிஜ சாமியார்கள் தங்கள் வாழ்நாளில் பணம் பண்ணியதும் இல்லை, அனுபவித்ததும் இல்லை. அதனால் உயிரோடு இருக்கும் மற்றவர்கள் எப்படி என்பதை என் வாயால் சொல்லத் தேவையில்லை. மேற்கண்ட பின்னூட்டங்களே போதும். ஆனால், பணம் பண்ணாமல், நிஜத்தில் ஆன்மீகத் தேடல் செய்யும் எத்தனையோ ஞானிகள் இந்த பூமியில் இப்போதும் வாழ்கிறார்கள். அவர்களுள் சிலர் கண்களில் தெரிவார்கள், சிலர் ஸ்தூலமாக உள்ளார்கள் என்பது கூட எனது சொந்த அனுபவத்தில் கண்டது. அவர்களுக்கு இன்னும் பணம் என்ன என்பதே தெரியவில்லை!!

Anonymous said...

// Muse said...
தமிழினி,

பாபாவை பற்றிய உங்களது கட்டுரையில் இருந்த கருத்துக்கள் பெரும்பாலான மீடியாக்களின் மூலம் ஏற்கனவே கேட்டதுதான். //

இத இத-தான் எதிர் பார்த்தேன். வந்துட்டாங்கையா வந்துட்டாங்க

மாயவரத்தார் styleலில்

சப்பாஷு சப்பாஷு

Muthu said...

மூஸ்,

//பாபாவை பற்றிய உங்களது கட்டுரையில் இருந்த கருத்துக்கள் பெரும்பாலான மீடியாக்களின் மூலம் ஏற்கனவே கேட்டதுதான். //

பாபாவை பற்றி நானும் புதிதாக எதுவும் சொல்லவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன்.சொல்லப்போனால் நான் எதுவுமே சொல்லவில்லை. எக்ஸ்பாபா சுட்டி மட்டும்தான் கொடுத்தேன்.

//அவரின் மேல் எனக்கு பக்தி எதுவுமில்லை.//

ரொம்ப சந்தோஷம்

//ஆனால் அவருடைய பக்தர்கள் செய்யும் தனி மனித சமூக சேவை எனக்கு அவரின் மேல் மரியாதையை ஏற்படுத்தியுள்ளது//.

இதைபத்தி நான் எழுதி உள்ளேன்.உங்கள் கருத்து என்ன என்று விளக்கமுடியுமா?

//ஆனால் அவர் சொன்னார் என்று சொல்லி மற்ற குழுவினரின் மேல் யாரும் வன்முறையை கையாளுவதில்லை. மற்றவர்களின் நம்பிக்கையை கேலி செய்வதில்லை. //

இதை எத்தனை காலம் சொல்லுவீர்கள்.இது கேலி இல்லைங்க.நம்பிக்கை நம்பிக்கை என்றால் எதைப்பற்றி யார்தான் பேசுவது? எல்லாம் நம்பிக்கைதான்.குழந்தைமாதிரி பேசாதீங்க.ப்ளீஸ்



//இதே போல "அற்புத சுகமளிக்கும் கூட்டங்களை" நடத்துவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து மத அமைப்புகளால் நடத்தப்படுவதைவிட மூன்று, நான்கு மடங்கு பள்ளி, கல்லூரிகளை நடத்தி அவர்களை விட பல மடங்கு "துட்டு" பார்ப்பவர்களை பற்றியும் நீங்கள் எழுதி உங்கள் நடுநிலைமையை வெளிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.//


நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எழுதத்தான் போகிறேன்.ஏற்கனவே இப்படித்தான் இஸ்லாமை விமரிசிக்க முடியுமா என்றெல்லாம் ஏத்திவிட்டார்கள்.என்ன பெரிய வெங்காய விமர்சனம்?மனசுக்கு பட்டதை எழுதுவோம். இஸ்லாமியர்களும் சரி கிறிஸ்து வர்களும் சரி பெரும்பான்மையான இந்துக்களும் சரி..எதையும் பர்சனலாக எடுப்பதில்லை.

//அங்கனம் எழுதும்போது இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக அளவு நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக நம் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கிருத்துவ சகோதரர்கள் எப்படி ஆனார்கள் என்பதையும் நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள் என்பது எனக்கு தெரியும்.//

இதைப்பற்றி நீங்கள் எனக்கு சில இன்புட் கொடுத்தால் கண்டிப்பாக எழுதுவேன்..இன்று இரவுக்குள் தரமுடியுமா ? ப்ளீஸ்...

//அப்படி இந்த நாட்டில் இருக்கிற பலான பலான கார்பரேட் சாமியார்கள் (நீங்களும், மற்ற அறிவாளி நண்பர்களும் கூறியபடி) செய்தும் எப்படி கிருத்துவ அமைப்புகள் ஒரு அரசாங்கத்தின் அளவுக்கு நிலங்களுக்கு உரிமையாகவுள்ளன? //

நாங்கள் அறிவாளி நண்பர்கள் என்று யார் கூறியது?நாங்கள் மிலேச்சர்கள் சுவாமி...மிலேச்சர்கள்...ஞானஒளியை பீச்சிடுவோம்..அதினாலென்ன?

Anonymous said...

யப்பா, நம்ப கால்கரிக்காரர் மாதிரி நீயும் ஒரு disclaimer போட்டுவிட்டால் ஒரு தொல்லையும் வராதுபா.

முன் குறிப்பு : மீண்டும் நான் கூறிக் கொள்கிறேன். நான் சாமியார்களை பற்றி எழுதுவது என் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத்தான். இந்துக்களை பற்றியோ இந்துமதம் பற்றியோ குறை கூற அல்ல. தயவு செய்து இதை மனதில் வைத்துக் கொண்டு படியுங்கள். சக இந்துக்களின் குறைகளை அறிய விருப்பமில்லையென்றால் தயவு செய்து என் பதிவை படிப்பதை தவிர்க்கவும்.

gulf-tamilan said...

//gulf ayya//????

hello எனக்கும் உங்க வயதுதான்!!நண்பரே

Muthu said...

கல்ஃப் நண்பா,

சாரி...ஏதோ குயப்பத்தில் வந்துருச்சி..

Anonymous said...

கலக்கறீங்கோண்ணா

மூசு (அப்டின்னா எலியா எலிக்குட்டியா) அப்டின்றவர் "ஊசி நொழையற எடத்துல புல்டோசரையே நொழைக்கப்" பாடுபடுறார். தேவை இல்லாமல் மிஷினரிகளை இழுக்கக் காரணம் என்ன .. வேற என்ன? தெச திருப்பல் தான்.. திராவிட ராஸ்கோலுகளே சாக்கிரத சொல்லிப்புட்டேன்.

டிபிஆர்.ஜோசப் said...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியலீங்க..

இருந்தாலும் ஒன்னே ஒன்ன மட்டும் சொல்லணுங்கற ஆசையில சொல்றேன்.

தூத்துக்குடியில வீட்ட கட்டி முடிச்சி அஞ்சு வருஷத்துக்கப்புறம் என் வீட்ல குடியிருந்தவர் பைப்புல வர, வர தண்ணி ஒழுங்கா வர மாட்டேங்குதுங்க கொஞ்சம் வந்து பாருங்களேன்னு ஃபோன் பண்ணார்.

அப்போ நான் சென்னையில இருந்தேன். ஒரு வாரம் லீவு போட்டுட்டு போயி ஒரு பளம்பர வச்சி ஒவ்வொரு பைப்பா செக் பண்ணோம். கட்டடத்துக்கு மேலருந்த பைப்ல ஒரு ப்ராப்ளமும் இல்லே.. சரி சம்ப்லருந்து நிலத்துக்கு அடியில ஒரு மூனடி பைப் (பிவிசி) போட்டிருந்தேன். ஒருவேளை அதுலதான் ப்ராப்ளமாருக்கும் தோண்டி பாத்துரலாம் சார் என்று பளம்பர் சொல்ல சரின்னு சுமார் ஐந்தடிக்கு கீழே இருந்த பைப்பை எடுத்து பார்த்தோம்... வெளியில் பைப் லேசாக கீறல் ஏற்பட்டிருந்தது.. அதன் வழியே நிலத்தடி மண் பைப்புக்குள் சென்று நாளடைவில் கட்டியாக குழாயின் உட்பகுதியை அடைத்துக்கொண்டிருந்தது.. அதுதான் நீரின் ஓட்டத்தை தடை செய்திருந்தது..

இதில் வேடிக்கை என்னவென்றால் நிலத்தடி மண் அடைத்திருந்தும் அதன் வழியே சென்ற குடிநீர் எந்தவித பாதிப்புக்கும் உள்ளாகமல், நிறம் மாறாமல், ருசியாகவே இருந்தது..

இந்த மாதிரி அடைப்பட்டுப்போன குழாய்கள் மாதிரிதான் நீங்கள் குறிப்பிட்ட சில குருமார்கள்.. இல்லையென்று சொல்லவில்லை.. ஆனால் அவர்கள் வழியாக மக்களுக்கு உதவ பயன்படும் பணம்.. அதனால் பல ஏழை, எளியவர்கள் பெறும் பயன்கள் நிச்சயம் கறைபட்டதில்லை.. இவர்கள் எல்லோருமே இறைவன் (அதாவது கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்தால். அதுவே இல்லையென்றால் இதெல்லாம் வீண்தான்.)கரங்களில் இருக்கும் கருவிகள்.. அதில் பல நல்லதும் உண்டு.. சில கெட்டதும் உண்டு..

ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லோரையும் சாடுவதென்பது எந்த அளவுக்கு நியாயம் என்று தெரியவில்லை.. இத்தகைய விமர்சனத்தை எழுதியவர்கள் எத்தனை பேர் புட்டபர்த்திக்கோ, காஞ்சி மடத்திற்கோ அல்லது கேரளத்து அன்னை நடத்திவரும் இல்லங்களுக்கோ சென்று வந்திருக்கிறார்கள் என்பது தெரியவில்லை..

நான் என்னுடைய மதத்தினர் செய்து வரும் சேவைகளைப் பற்றி இங்கு எழுதவேயில்லை.. ஆனால் உங்களுள் பலரும் பழித்துரைத்தவர்களுள் சிலரைப் பற்றி (மேற்கூறிய மூவரைப் பற்றி) கொஞ்சமேனும் அறிந்திருப்பதால் கூறுகிறேன்.. அவர்கள் தெய்வங்களல்ல தெய்வத்தின் கரங்களில் இருக்கும் நல்ல கருவிகள்..

பாராட்ட வேண்டாம்.. பழித்துரைக்காதீர்கள்..

Muthu said...

இளவஞ்சியானந்தா(?),

கல்கியே அவங்க முதல் மனைவியை ஏமாத்தினவர் தானாமே..அப்புறம் என்ன?

Muthu said...

வினையூக்கி,

//கார்போரேட் சாமியர்களிடத்தில் படித்தவர்கள் தான் அதிகம் தென்படுகிறார்கள்//

இது ஏதாவது ஸ்டேட்டஸ் சிம்பலாகக்கூட இருக்கலாம்.

Muthu said...

உஷா,

ஜக்கி செகண்ட் பிளேஸ்தானா... குமுதம் குட்டிப்பையன் (நித்தியானந்தா) பத்தி அடிக்கடி நான் என் வீட்டில் சொல்வேன்...இவரு மேல் ஒரு பகீர் குற்றச்சாட்டு வர்ற நாள் வெகுதொலைவில் இல்லை என்று...பார்ப்போம்...

ஹேர் ஆயில்தான் நாட்டில் பெரிய பிரச்சினையா இப்ப?:)

Muthu said...

பெத்த ராயுடு,

வருகைக்கு நன்றிய்யா....

//அங்கே 5K, 10K ரூபாய்க்கு 'கார்ப்பரேட் ஆழ்நிலை தியான' வகுப்புகள் பற்றிய பிரசுரங்களைப் பார்த்திருக்கிறேன்.//
இங்கே கலக்கறீங்க நீங்க....

Muthu said...

தருமி,

பச்சை புள்ளைங்கள கெடுத்துட்டு சாத்தான் வேதம் ஓதுதோ....:))

Muthu said...

பட்டணத்து ராசா,

மூஸ் வந்துட்டாரு..உனுக்கு சந்தோசமா இப்ப?

Muthu said...

சுதர்சன்,
//ஏமாளிகளின் பணத்தில் சுண்டகாய்ச்சிய//

நான் ரசித்து எழுதிய வரி அது....

Muthu said...

பொன்ஸ்,
//"கதவைத் திற, ஜன்னலை மூடு"ன்னு எழுதுவாரே.//

பொன்ஸ் நக்கல் நல்லா வருது உங்களுக்கு....நல்ல முன்னேற்றம் தெரிகிறது...இருக்காதா பின்னே(யார் சிஷ்யை நீ )

//படிப்பு வரலைன்னு இப்படி சாமியார் ஆய்ட்டாராம்..//

:))

பொதுவாக இந்த பின்னூட்டம் பூராவுமே உங்கள் நக்கல் கொடிகட்டிபறக்குது...(உங்க பாட்டி வேற வருத்தப்படுது)

Anonymous said...

//அங்கனம் எழுதும்போது இந்திய அரசாங்கத்திற்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக அளவு நிலங்களுக்கு சொந்தக்காரர்களாக நம் அன்பிற்கும், மரியாதைக்குமுரிய கிருத்துவ சகோதரர்கள் எப்படி ஆனார்கள் என்பதையும் நீங்கள் கண்டிப்பாக எழுதுவீர்கள் என்பது எனக்கு தெரியும்.//

இந்தியாவின் மொத்த பரப்பளவு நாலாயிரத்தி ஐநூறு கோடியே முப்பத்தி ஏழு லட்சத்தி பதினெட்டாயிரத்தி அறநூத்தி பன்னிரன்டு ஏக்கர். அதில் அரசாங்க நிலம் நூறு கோடியே அறுபத்தி ஆறு லட்சத்தி எழுநூற்றி பத்து ஏக்கர். தரிசு நிலம் நூறு கோடியே பத்து லட்சத்தி எட்நூற்றி ஒன்பது ஏக்கர். நெல் போடுவது .....

ஹி ஹி ஹி ஹி கேப்டன் படம் பார்த்த effectபா.

Muthu said...

சந்திப்பு,

அரசியல் சாமியார்கள் நிலை ஏற்கனவே சந்தி சிரிச்சிருச்சே..நம்ப வேறயா..

// உமா ஜீ//

எனக்கு இவங்கள ஏனோ வெறுக்க தோணலை...ஒரு அரசியல்வாதி இவங்க...

// ரீதம்பரா, //

யாருண்ணே தெரியலை...யாருங்க இவர்?


//சங்கராசாமி....//

இவர் பத்தியும் எனக்கு அதிகம் தெரியாதுங்க..

Muthu said...

பொட்டீக்கடை,

நீங்க இங்க கோ - ஹோஸ்ட்...ச்சும்மா தப்பிக்க முயற்சி செய்யவேண்டாம்.

G.Ragavan said...

// இங்கே இது அத்தியாவசியம் எனினும் "ஆன்மீக செம்மல்" ஜீரா எனக்களித்த "இளவஞ்சியானந்தா" என்ற பட்டத்தினை பாயிண்ட் நெ.4 &5 கவர்வதால் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்! ஹிஹி...//

சுவாமி இளவஞ்சியானந்தா அவர்களே....உங்கள் குடிலை (என்ன ஒரு நூறு நூத்தம்பது ஏக்கர் இருக்குமா?) பராமரித்துப் பக்தர்களைப் பார்த்துக் கொள்ளும் உரிமையை எனக்கே கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஸ்ரீலஸ்ரீ இளவஞ்சியானந்தா அவர்கள் புகழைப் பரப்புவதே நோக்கமாகக் கொண்டு பாவிகளை மனம் திரும்பச் செய்து பரலோக சாம்ராஜ்யம் காட்டுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

வினையூக்கி said...

தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலிதரும் என்று புரியாதவர்களே சாமியார்களிடம் செல்கிறார்கள். இந்தியர்களுக்கு எப்போதும் சில விசயங்களிடது ஒரு விதமான மயக்கம் உண்டு. கிரிக்"கெட்டு", சினிமா(யை). இவைகளுடன் இப்போது சாமியாரிடத்து செல்வதும் ஒரு பேஷன் ஆகிவிட்டது.. நான் மிஸ்டர் எக்ஸின் பக்தன்..நீ யார் பக்தன் என்றுக் கூறிகொள்வது லேட்டஸ்ட் ட்ரெண்டு

G.Ragavan said...

// நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எழுதத்தான் போகிறேன்.ஏற்கனவே இப்படித்தான் இஸ்லாமை விமரிசிக்க முடியுமா என்றெல்லாம் ஏத்திவிட்டார்கள்.என்ன பெரிய வெங்காய விமர்சனம்?மனசுக்கு பட்டதை எழுதுவோம். இஸ்லாமியர்களும் சரி கிறிஸ்து வர்களும் சரி பெரும்பான்மையான இந்துக்களும் சரி..எதையும் பர்சனலாக எடுப்பதில்லை. //

முத்து நீங்கள் எழுதத்தான் வேண்டும். உங்களுடைய கருத்து சரியென்றால்...அதை நாகரீகமாக வெளியிடுவதில் தவறில்லை. ரெட்டை மாட்டு வண்டியில் ரெண்டு மாட்டையும் அடித்தால்தான் வேகமாக ஓடும் என்று எங்கோ வசனம் கேட்டிருக்கிறேன். அதிலும் கடவுள் நம்பிக்கையே மூட நம்பிக்கை என்று சொல்கின்ற நீங்கள் நடுநிலையோடு இருப்பது மிக்க அவசியம்.

Muthu said...

உஷா,

// சில ஆயிரங்களை கட்டி, ஒரு வார வகுப்பில் வாழ்க்கை கல்வியும், மன நிம்மதி, வியாதியையும் போக்குவது என்பது மணிமேகலை பிரசுரம் வெளியிடும் "மூன்று நாளில் விமானம் ஓட்ட கற்றுக் கொள்ளுங்கள்" புத்தகத்தை வாங்குவதற்கு இணையானது//

உங்க பிளாக் பெயரை மாத்திடுங்க..அது மக்களை மிஸ்லீடு பண்ணுது...

Muthu said...

மரபூராரே,

நன்றிங்க..சாமியார்கள் என்றால் என்ன என்பதையே புரியாமல் இருப்பவர்கள் தர்ன இங்கு நிறைய....ஆன்மீக தேடல் என்பதன் வார்த்தை இங்கு கேவலப்படுத்தப்பட்டு உள்ளது....

Muthu said...

அனானி,

இதில் இந்து மதம் எங்க வந்தது? கால்கரி சிவா மாதிரி டிஸ்கிளெமர் போடவேண்டியது இல்லை.மக்கள் புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

Muthu said...

அது யாரய்யா திராவிட ராஸ்கோலு
பேடண்ட் இல்லாம உபயோகப்படுத்தறது.....TRIPS..GAAP இத்தெல்லாம் தெரியும் இல்ல.....

Muthu said...

ஜோசப் சார்,
எல்லா நிலத்தடி நீரும் தண்ணீரை கெடுக்காது சார்..நடுவில் அழுக்கு படர்ந்ததுன்னு வைங்க..அப்ப கெடுக்கும்.....

அப்புறம் நானும் எல்லாரையும் சாடவில்லையே..யார் யார்னு சில பேரை சொல்லியிருக்கேன்...யாரை மதிக்கிறேன்னு சொல்லி இருக்கேன். ஒரு சுட்டி கொடுத்திருக்கேன்..நீங்க சொன்ன ஆளைப்பத்திதான்..

பண உதவிகளை பற்றியும் லாஜீக்காகவே ஒரு பாயிண்ட் எழுதி உள்ளேன்.

(உங்க பின்னாடி ஒளிஞ்சிகிட்டு குண்டு போடற ஆளுங்கள காணோம்.நல்லவேளை)

Muthu said...

நண்பர்களே,

இந்த கிறிஸ்தவ சர்ச்கள் நிலம் மேட்டர் பத்தி யாராவது தெரிஞ்சா சொல்லுங்க...நண்பர் மூசுக்காக நான் ஒரு பதிவு இரவு போடுறேன்..அதுக்கு வேண்டும்.....

Muthu said...

ராகவன்,

//முத்து நீங்கள் எழுதத்தான் வேண்டும். உங்களுடைய கருத்து சரியென்றால்...அதை நாகரீகமாக வெளியிடுவதில் தவறில்லை//

கண்டிப்பாக இன்றே..நன்றே வழக்கம் போல் சமரசமில்லாமல்.. எதிர்பார்ப்பது புரிந்துணர்வே..

Muthu said...

வினையூக்கி,
இந்த மிஸ்டர் எக்ஸ் என்று நீங்கள் சொல்வது ஆனந்த விகடன்ல முதல்ல போடுவாங்களே..அதுதானே..

"மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை தன் சொந்த வீட்டிலே சுவர் ஏறி குதித்து வந்தாராம்.அவர் மனைவி அப்படி வராதீங்க..திருடனும் அதைப்பார்த்து அதே மாதிரி வருவான் னாங்களாம்.உடனே இவர் அப்ப வாசல் வழியா வந்தா அவனும் வரமாட்டானா என்றாராம்"

இந்த எக்ஸா?

:))

சீரியஸாக பார்த்தால் நீங்கள் சொல்வதும் சரிதான்.இப்ப நானெல்லாம் எனக்கு கடவுள் பக்தி இல்லை என்று பந்தாவாக அளப்பரி பண்ணுவதில்லையா? :))

Pot"tea" kadai said...

தமிழினி,
நா வந்துட்டேன்...
இனி மொத்துபவர்கள் இப்பதிவின் கோ- ஹோஸ்ட் ஆன எனக்கும் சேர்த்து நாலு மொத்து போடவும்...

நண்பர் ம்யூஸ் அவர்கள் கற்பனையாக சில "ஊகங்களை" எழுதிவிட்டு கிறித்தவ சகோதரர்களை இங்கே இழுப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பரட்டையனைப் பற்றியும் மக்களைச் சுரண்டி ஊரை ஏமாற்றும் போலிச் சாமியார்களை பற்றி கருத்து பரிமாற்றம் செய்யும் பொழுது, ம்யூஸ் இம்மாதிரியான கற்பனையான கட்டுக்கதைகளைச் சொல்லி பதிவின் நோக்கத்தை திசை திருப்ப முயல்கிறார்.

ஆகவே தக்க சுட்டிகளோடும், ஆதாரங்களோடும் ம்யூஸ் குறிப்பிடும் பட்சத்தில், இந்திய அரசுக்கு அடுத்த படியாக நிலப் பிரபுக்களாக இருக்கும் "கிறித்தவ" சகோதரர்களைப் பற்றியும் கதைப்பதற்கு ஒரு கோ-ஹோஸ்டாக நானும் பரிசீலிக்கிறேன் என்பதை முதுகில் இருக்கும் வடுக்களின் மேல் "ஸ்வேர்" செய்கிறேன்.

ஜெ. ராம்கி said...

ஓவர் தெகிரியம்தான். காஞ்சி, மேல்மருவத்தூர், ஆழியாறையும் கொஞ்சம் கவனீங்க! :-)

Pot"tea" kadai said...

ராகவன்,
//ரெட்டை மாட்டு வண்டியில் ரெண்டு மாட்டையும் அடித்தால்தான் வேகமாக ஓடும்//
நீங்கள் இப்பதிவின் ஹோஸ்டையும், கோ-ஹோஸ்டையும் தான் குறிப்பிட்டுள்ளீர்கள் என்று நான் புரிந்து கொண்டாலும்:-)) உங்களுடைய் கோரிக்கையை எங்கள் ஹோஸ்ட் நிச்சயமாக பரிசீலிப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Pot"tea" kadai said...

ராம்கி,
இந்த "நட்சத்திர வாரம்" என்பது 1 வாரத்திற்கு மட்டுமே. ஆனாலும் சகவலைபதிவர்களின் ஏகோபித்த ஆதரவை பார்க்கும் பொழுது, மூத்த வலைபதிவாளர்களான நீங்களும், உங்களைப் போன்றோரும் தமிழ்மண நிர்வாகத்தினரிடம் பேசி 1 வார காலம் போலிச் சாமியார்களைப் பற்றி மட்டுமே எழுத எங்களுடைய ஹோஸ்டுக்கு வாய்ப்பளிக்கும் பட்சத்தில் உங்கள் அனைவருடைய கோரிக்கைகளும் நிரைவேற்ற கோ-ஹோஸ்ட் என்ற முறையில் நானும் பாடுபடுவேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

பத்மா அர்விந்த் said...

முத்து: எனக்கு இதுபோன்ற மனிதர்களிடம் நம்பிக்கை இல்லை. ஆனால் சாமியார்களிடம் மக்கள் நம்பிக்கை வைப்பது ஏன் என்ற உளவியல் ரீதியாக முன்பே எழுதி இருக்கிறேன். கலாசாரத்தை பற்றியும்தான்.
பிஸி சர்க்காருக்கசந்திக்க சாய்பாபா அனுமதி தர மறுத்ததாகவும், பெயர் குறிப்பிடாமல் சந்தித்தி சாய்பாபா தரும் முன் அவருக்கு லிங்கம் ஒன்றை சர்கார் வரவழைத்து தந்ததாகவும் முன்பு படித்த நினைவு. இவை எல்லாமும் ஆழ்மனதில் தங்கள் கவலைகள் இப்படியாவது மறையுமா என்ற எதிர்பார்ப்பும், அதை புரிந்து கொண்டு விரைவில் பணக்காரராக விரும்பும் எண்ணமும் கபடமும் ஆகும். நம்மை நாம் புரிந்துகொண்டால் இடைவழி தேவை இல்லை.

தகடூர் கோபி(Gopi) said...

சாயிபாபா மேல் எனக்கு முன்பே நம்பிக்கை இல்லை எனினும் அவர் செய்யும் நல்ல காரியங்களை குறித்து அவர் மேல் நல்ல எண்ணம் உண்டு

//இந்த உதவி செய்ய பணம் அவர்களுக்கு எங்கிருந்து வருகிறது? மக்களிடம் இருந்துதானே.//

இந்த வரிகளால் மறுபடி சிந்திக்க ஆரம்பித்துள்ளேன்.

அப்றம்.. ஒரு மதத்து சாமியாரப் பத்தி எழுதுனா மத்த மத சாமியாருங்கள பத்தியும் எழுதித்தான் ஆகனுமா?

அப்படின்னா எல்லா மத சாமியாருங்களையும் கவர் பண்ண இந்த நட்சத்திர வாரம் உங்களுக்கு பத்தாதுங்களே...

நீங்க அடுத்து என்ன எழுதனும்னு மத்தவங்க முடிவெடுக்க வேணாம் நீங்க முடிவெடுங்க...

Muthu said...

தேன்துளி,

//ஆழ்மனதில் தங்கள் கவலைகள் இப்படியாவது மறையுமா என்ற எதிர்பார்ப்பும்//

//அதை புரிந்து கொண்டு விரைவில் பணக்காரராக விரும்பும் எண்ணமும் //


இந்த திடீர் பணக்காரர் ஆசை மக்களிடமும் நிறைய இருக்கோ..அதுதான் மாய்மை என்கிறென் நான்..இதை ஒழிக்கவேண்டும் முதலில்

சர்க்காரின் அனுபவம் சாயிபாபாவிடம் சூப்பர்..எக்ஸ்பாபா பார்த்தீர்களா?

Muthu said...

பொட்டீக்கடை,

இழுத்துப்புடிங்க..இன்னைக்கு நூறை கடந்து ஒரு சாதனை படைக்கலாம்..ஹி..ஹி...
(நீர்தானே கேருஹோஸ்ட்)

முத்துகுமரா ஒரு கை பிடிப்பா...

Muthu said...

ராம்கி,

எங்க வூட்டுப்பக்கம் வந்து அடங்கிஇரு, அத்துமீறுன்னு எதுவுமே சொல்லாம இத்தனை நாள் இருந்ததுக்கு கண்டனம்..ஆகவே உமக்கு பதில் கிடையாது.

இன்னொரு முறை வந்து கேட்கவும்.

Muthu said...

கோபி,

நன்றி...என்னுடைய பதிவின் முக்கியமான கருத்தைப்பற்றி எழுதி உள்ளீர்கள்...முன்முடிவுகள் இல்லாத வாசிப்பு என்று நினைக்கிறேன்...

இன்னொன்று தருமிக்கு சில கேள்விகள் என்று ஒரு பதிவு வரும் என்று என் நட்சத்திர பதிவில் கூறிஇருந்தேன்..அந்த பதிவைத்தான் போடப்போகிறேன்..

சோ..ஒன்றும் பிரச்சினை இல்லை.. கொஞ்சம் கட்டி ஒட்டவேண்டும்... நண்பர்களை நம்பித்தான்..

Anonymous said...

கிரிக்கட்ல செஞ்சுரி பிபோர் (அதாங்க before) லஞ்ச, செஞ்சுரி பிபோர் டீ, செஞ்சுரி பிபோர் குலோஸ் ஆப் பிலே
தெரியும்,

ஆனா தமிழ்மணத்துல இது தான் ஒரே நாள்ல 100 ஆ இருக்கும்னு நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

Muthu said...

அனானி,

எனக்கு டான் பிராட்மேன் ஞாபகம் வர்றார்..நன்றி...

ம்--அள்ளு..வுடாதே..அமுத்து...ஒரு கை பிடி..விட்றாதே...

வினையூக்கி said...

டெண்டுல்கர் போல் நூறடிக்க இவ்வளவு நேரம் வெயிட் செய்தது வீணாகக் கூடாது...கடவுளே சென்சுரி பிளீஸ் ஃபார் மி...

வினையூக்கி said...

எப்படி இருந்தாலும் சாமியார்னா சாமியார் தான்..... சென்சுரி அடிச்சாருல்ல

குழலி / Kuzhali said...

என் பங்குக்கு ஒரு பின்னூட்டம், ஒரு +...

Muthu said...

அரிய கருத்துக்கு நன்றி வினையூக்கி
(ஓ...நீங்க கருத்து எதுவும் சொல்லலியா)

செஞ்சுரி போடறத்துக்கு என்னென்ன பண்ண வேண்டியிருக்கு பாருங்க..:))

*****

ம்..அள்ளு..மலையும் பொத்து.. மரமும் பொத்து..லலாக்கு டோல் டப்பிமா...

வினையூக்கி said...

முத்து(தமிழினி), உங்களினெதிர்கால ஆன்மிக குருவான எனக்கு நூறைத (100th FeedBack) தருமாறு "கேட்டுக்" கொள்கின்றேன்

ஜெயஸ்ரீ said...

நல்ல பதிவு.

வினையூக்கி said...

சாமி ஒரு தடவைச் சொன்னா நூறு தடவைச் சொன்ன மாதிரி.....(கருத்து)...ஆச்சா..நூறு ஆச்சா

நன்மனம் said...

//Anonymous said...
I think this post is going to receive tons of comments. கலக்கரே முத்து கலக்கரே //

இத மொதல் பின்னூட்டமா போட்டு, பின்னூட்ட அரசியல்ல உஷா சொன்னத நிரூபிச்சாச்சு?

//செஞ்சுரி பிபோர்// சொன்ன அனானி

தகடூர் கோபி(Gopi) said...

//சோ..ஒன்றும் பிரச்சினை இல்லை..//

இங்கே சோ என்னத்துக்குங்க வந்தாரு? :-)

அது சரி.. நம்மளுது நூறா.. நூத்தி ஒன்னா?

வினையூக்கி said...

100 பெருசா..101 பெருசா...101 அடிச்சோம்ல... முத்து(தமிழினி) மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஜெயஸ்ரீ said...

100 ஆவது பின்னூட்டம் என்னுடையது ....

Muthu said...

வினையூக்கி,

ஹார்டு லக்..அடுத்த முறை பார்த்துக்கலாம்.

jayshri,

சொல்லி அடிச்சீங்களே..எப்படிங்க..

(உங்க ஊரு திருப்பாச்சியா:))

- யெஸ்.பாலபாரதி said...

நூறு போட்டமைக்கும் வாழ்த்துக்கள்...
இப்படி பின்னூட்டத்துக்கே வாழ்த்து வாங்குறது.. நீங்களாதான் இருக்கும்...
வாழ்த்துவதும் நானாகத்தான் இருக்கும்.
(அடக்கம்முங்கோ)

- யெஸ்.பாலபாரதி said...

அய்யோ.. வாழ்த்துவதிலும் லேட்டா.. :-(

வினையூக்கி said...

திருவாளர் முத்து(தமிழினி) தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செயதமைக்கு வாழ்த்துக்கள்.

வினையூக்கி said...

எல்லாம் அந்த பாபாவின் அருள். (இது எப்படி இருக்கு????!!!!!)

Muthu said...

.

Muthu said...

முன்னாடி ஒரு பின்னூட்டம் பிளாங்க்கா இருக்கா?

வேற ஒண்ணும் இல்லை..எனக்கு பேச்சே வரல்லை..:)) நா தழுதழுக்குதையா...

Muthu said...

குழலி,

நன்றி

Pot"tea" kadai said...

தமிழினி,
கை கொடுங்க!ஒரே நாள்ல 100 அடிச்சதுக்கு!
பாத்தீங்க இல்ல, தமிழ்மணப் புள்ளீங்களோட ரெஸ்பான்ஸ!!!

க்ளோரியா ஜீன்ஸ் போய் ஒரு "சாய் டீ"(இது சாய்பாபா டீ அல்ல-chaai tea) அடிச்சிட்டு வர்ரதுக்குள்ள ஹோஸ்ட் 100*
போட்டுத் தாக்குங்க!

Muse (# 01429798200730556938) said...

தமிழினி,

நீங்கள் இரவுக்குள் சில இன்புட்களை கேட்டிருந்தீர்கள்.அலுவலக வேலைகளுக்கு நடுவில் அவசர அவசரமாக உங்களுக்கு கீழ்கண்ட சுட்டியை அளிக்கிறேன்.

http://www.rediff.com/news/2004/nov/22rajeev.htm

இப்பொது முடிந்தது இவ்வளவுதான். மன்னிக்கவும்.

>>>> நாங்கள் மிலேச்சர்கள் சுவாமி...மிலேச்சர்கள் <<<<

சொல்லப்படுவது சத்யம் எனில் சொல்லுவது யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நம் இருவரின் உடம்பிலும் ஓடும் ரத்தம் ஒன்றுதான் என்ற வகையில், உங்களது சகோதரனான நானும் ஒரு மிலேச்சனே.

இன்னுமொரு வரம் வேண்டும் பெரியவரே.

எல்லா மதத்திலுமிருக்கும் தவறை வெளிப்படுத்த நீங்கள் முண்டாசு தட்டி நிற்பதாகக் கூறுகிறீர்கள். அதே போல அனைத்து மதங்களிலும் இருக்கும் புனிதர்களைப் பற்றியும் நீங்கள் எழுதவேண்டும் என்பது இந்த பஞ்சமனின் தாழ்மையான வேண்டுகோள்.

Muthu said...

கோபி,

அந்த சோ இல்லை...'so'

Muthu said...

நன்மனம்,

உமக்கு இவ்ளோ கோபம் ஆகாது..மீண்டு(ம்) வரவும்..

Muse (# 01429798200730556938) said...

ராமச்சந்திரன் உஷா,

>>>>தெரியாமத்தான் கேட்கிறேன். ரமணர். வி. சாமியார் உட்பட ஏன் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க வேண்டும்? <<<<<

இவர்களைப் பற்றிய உங்களது ஞானம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதிகளில் ஒருவராகக் காட்ட முயற்சி செய்யும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !!

Pot"tea" kadai said...

தமிழினி,
நெசமாலுமே அனானியா வந்து எவனுமே "திட்டலியா"...எல்லாம் அந்த பரட்டையனின் அருள் தான்யா...

இன்னைக்கு 150 போடாம தூங்கறதில்ல....

Muthu said...

//எப்படி இருந்தாலும் சாமியார்னா சாமியார் தான்..... சென்சுரி அடிச்சாருல்ல //

அட..ராமா


//சாமி ஒரு தடவைச் சொன்னா நூறு தடவைச் சொன்ன மாதிரி.....(கருத்து)...ஆச்சா..நூறு ஆச்சா //


இது கருத்தா..இன்னொரு அரிய கருத்து..ஏன்யா சாமியை திட்டறீங்க..உங்களுக்கு அறிவு இருக்கா?

Muthu said...

பாலபாரதி,

நன்றி தலை...

Pot"tea" kadai said...

//முன்னாடி ஒரு பின்னூட்டம் பிளாங்க்கா இருக்கா?

வேற ஒண்ணும் இல்லை..எனக்கு பேச்சே வரல்லை..:)) நா தழுதழுக்குதையா...//

இதுக்கு முன்னாடி 3 புள்ளியோட ஒரு பின்னூட்டம் வந்திருக்குமே...ஹோஸ்டோட நா தழுதழுத்ததைக் கண்ட கோ-ஹோஸ்டுக்கு கை ஓடவில்லை.

Muthu said...

ஏய் யாரங்கெ..

என் கோ - ஹோஸ்ட் பொட்டீக்கடையும் உணர்ச்சிவசப்பட்டு நிக்கறாரு..அவருக்கு ஆஸ்ரேலிய பியர் கொடு....

Muthu said...

//ராமச்சந்திரன் உஷா,

>>>>தெரியாமத்தான் கேட்கிறேன். ரமணர். வி. சாமியார் உட்பட ஏன் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்க வேண்டும்? <<<<<

இவர்களைப் பற்றிய உங்களது ஞானம் என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. தன்னை பகுத்தறிவுவாதிகளில் ஒருவராகக் காட்ட முயற்சி செய்யும் உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் !! //

i donot know the message behind this..but usha can respond...

Muthu said...

dear muse,

thanks for link...i will read and sure i will post..( infact i already prepared one and just adding this ..that is all)

thank you for help

சிங். செயகுமார். said...

நம்ம பங்கும் சேத்துகோங்க "+"

Muthu said...

muse,

donot mistake by "milecha" word.
நீங்கள் அறிவாளிகள் என்று கூறியதில் உள்ள தொக்கி நிற்கும் கிண்டலுக்கு நான் கொடுத்த பதில்தான் அது..

அதில் எதுவும் அதிகமாக இல்லை..

முத்துகுமரன் said...

பஜனை செய்வோம்!! பஜனை செய்வோம்!!!

ஸ்ரீ ஸ்ரீ ...

Muthu said...

//இன்னுமொரு வரம் வேண்டும் பெரியவரே.//


பாருங்க உங்களுக்கு இன்னும் கிண்டல் போகலை..நான் குறைகுடம்க..சின்ன பையன்தான்..(போட்டோ பார்க்கவும்)

//எல்லா மதத்திலுமிருக்கும் தவறை வெளிப்படுத்த நீங்கள் முண்டாசு தட்டி நிற்பதாகக் கூறுகிறீர்கள்.//

எல்லாரும் எழுதுவது போலத்தான்..நானும் என் மனதிற்கு படுவதை பணிவாக எழுதுகிறேன்..உங்களிடம் உள்ள அதே அறசீற்றம் தான் என்னையும் இயக்குகிறது.ஒன்று என்னவென்றால் நான் மனிதர்களை மதிக்கிறேன்.நம்புகிறென்.(இதற்கு அர்த்தம் நீங்கள் மதிப்பதி்ல்லை என்பதல்ல)


//அதே போல அனைத்து மதங்களிலும் இருக்கும் புனிதர்களைப் பற்றியும் நீங்கள் எழுதவேண்டும் என்பது இந்த பஞ்சமனின் தாழ்மையான வேண்டுகோள். //


ஜக்கி, ரவிசங்கர் பற்றி சொல்லியுள்ளென்..செக்ஸ் சாமியார் என்று புனித பிம்பங்கள் கட்டமைத்த ஓஷே படித்திருக்கிறென்...ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி படிப்பதுண்டு..அவ்வளவு விடலை இல்லை நான் என்பதில் எனக்கு பெருமை உண்டு.அமைதியான இஸ்லாமிய பெரியோர்கள்,சேவையே உருவான கிறிஸ்துவ பெரியொர்களையம் நான் மதிக்கவேண்டும்.மதிக்கிறென்.மதிப்பென்.

Pot"tea" kadai said...

ம்யூஸ், உங்க அமுசிங்ஸ்க்கு அளவே இல்லையா...
http://rajeev2004.blogspot.com/
Shadow Warrior
A Hindu Nationalist Perspective. The name is from the Kurosawa film Kagemusha

கொட்டை எழுத்துல போட்டிருக்கார் ஒருத்தர்...
அவர் எழுதினத ஆதாரமாத் தர்ரீங்களே.
குசும்பு இருக்கலாம்னே, ஆனா ஓவர் குசும்பு ஒடம்புக்காவது :-)) சொல்லிபுட்டேன்.
வேற எதுனா லிங்க் கெடச்சா சொல்லுங்க .........
பொறவு பாப்போமா...

நன்மனம் said...

//மதிக்கிறென்.மதிப்பென்//

இதற்கு மதிப்பெண் கிடையாது.:-))

Muthu said...

நன்மனம்,

என்னுடைய நட்சத்திர அறிமுகபதிவு (-) குத்து நிறைய வாங்கி முகம் வீங்கி கிடக்கிறதே..உதவி செய்தீர்களா

மதிப்பெண் கிடையாதாமே? :)

Muthu said...

நன்றி சிங்

Muthu said...

நன்றி முத்துகுமரன்

பஜனை மேல் உங்களுக்கு என்ன கோபம்?

Pot"tea" kadai said...

நன்மனம்,

மதிப்பெண்களுக்காக
மதிப்பவர்களல்ல
நாங்கள்

Anonymous said...

Muthu,

Sorry for posting in english. It is a nice posting. But as usual the hindu fundamentalists will not be happy with this. They would like you to write about Muslims & Christians. Is it your job?? Dont write for others.

Why cant they write about it. For example Muse wrote a long one saying that the christian missionaries have tons of land. Why cant he write about it. When you ask for some tips, he points to an old article (written in 2004) by Rajeev who is a known hindu fundamentalist.

You have been posting your comments in anti-DMK postings. When people ask them to write about AIADMK, those guys use to say "we are just attacking DMK - it doesnt mean that we are supporting AIADMK". That point stands in this posting too.

You wrote what you thought. If there is anything wrong with it - let them comment. They are trying to divert the posting into another subject.

Unknown said...

முத்து (தமிழினி),
//ஜக்கி,ரவிசங்கர் ஆகிய சிலரை மதிக்கிறேன் நான்.வாழும் வழி என்பதாக சில வழிமுறைகளை இவர்கள் வைப்பதாக அறிகிறேன்//

அது என்ன இவங்களுக்கும் மட்டும் மரியாதை?
நீங்கள் "வாழும் கலை" ரவிசங்கரை சொல்றீங்கன்னு நினைக்கிறேன். இவர் ஏன் ஏழைகளுக்கு இந்த வாழும் கலையைச் சொல்லித் தருவதில்லை என்று கேட்டுச் சொல்வீர்களா? ஒரு வேளை அவர்கள் நல்லாதானே வாழ்கிறார்கள் ஏன் கெடுக்க வேண்டும் என்று விட்டுருப்பாரோ?

சாமியார் என்பதுக்கும் சாமிக்கும் சம்பந்தம் இருப்பதாக நீங்களோ நானோ நினைத்தால் அது நமது தவறு.
இவர்கள் செய்வது ஒரு தொழில். அவ்வளவே. அந்த Profession "சாமியார்" என்று அழைக்கப்படுகிறது.இதில் பணம்தான் முக்கியம். எங்கு நன்றாக வியாபாரம் ஆகிறதோ அங்கு மட்டுமே கடைவிரிப்பார்கள்.

எனக்குத் தெரிந்து "சாமியாராக" இருந்து உண்மையில் மக்களுக்கு அற்புதங்களைச் செய்தவர் குன்றக்குடி அடிகளார் மட்டுமே.இவர் அற்புதமாக வாயில் இருந்து லிங்கம் கொண்டு வரவில்லை. வாழும் கலையை விற்கவில்லை.தான் வாழும் பகுதியில் சின்னச்சின்ன தொழில்களைச் சாதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

பாபா பற்றி நான் போட்ட ஒரு பதிவு:
சாய்பாபாவின் விழா மனது கஷ்டமாய் இருக்கிறது.
http://kalvetu.blogspot.com/2005/11/blog-post_23.html


அப்புறம் உங்க பதிவு பின்னூட்டங்களில் என்னைக் கவர்ந்தது.


===
ramachandranusha said...
//...ஆனா அவர் என்ன ஹேர் ஆயில் உபயோகிக்கிறார் என்று தெரியவில்லை...//

துளசி கோபால் said...
//...புடவைகள் மட்டும் ஸ்பெஷல் தறியிலே சொல்லிச் செஞ்சுரலாம். நகைகளும் அப்படியே!
எனக்கு வைரக்கிரீடம் வச்சுப் பார்க்கணுமுன்னு 'மக்கள்' ஆசைப்படறாங்க:-))))...///

ஜெயஸ்ரீ said...
//நல்ல பதிவு.//
===

ஜெயஸ்ரீ யைத்தவிர மற்ற இரண்டு தாய்க்குலங்களும் இன்னும் ஹேர் ஆயில்,புடவை,நகையிலேயே கவனமா இருக்காங்கப்பா :-)

துளசிக்கா,
மூக்குத்தி புகழ் "மாதா அமிர்தானந்தாயி" மாதிரி வைர கிரீடத்தோட "அக்கா துளசினந்தாயி" யைப் பார்க்க காத்து இருக்கிறோம்.

===



'ரஜினி' ராம்கி said...
//ஓவர் தெகிரியம்தான். காஞ்சி, மேல்மருவத்தூர், ஆழியாறையும் கொஞ்சம் கவனீங்க! :-)//

ராம்கி, அப்படியே 'ரஜினி' பார்த்த சாமியார்களையும் பட்டியல்ல சேர்த்துக்கங்க :-)

ramachandranusha(உஷா) said...

நன்றி மியூஸ். அருணாசல மகிமை என்று பரணிதரன் எழுதிய புத்தகத்தில் ரமணரைப் பற்றி படித்து மனதில் ஒரு மரியாதை வந்தது. அத்தனையும் முற்றும் துறந்த எளிய மனிதரின் மீது நான் கொண்ட மதிப்பும், மரியாதையும் தன் கோடிக்கணக்கான சொத்துக்களை, தன் தம்பிக்கு எழுதிவிட்டு
மறைந்தார் என்றதும் காணாமல் போனது. இந்த சொத்துக்கள் அவரின் பரம்பரையோ உழைத்து சம்பாதித்ததோ இல்லை.

அடுத்து விசிறி சாமியார். பாலகுமரன் எழுத்து மூலம் அறிந்தது. பார்க்க சித்தர் மாதிரி, பிச்சைக்கார
பக்கிரி மாதிரி படங்களில்
தெரிந்தார். அவர் இறந்ததும் சொத்துக்காக டிரஸ்டி உறுப்பினர்கள், அனைத்தும் பெரிய மனிதர்கள்
அடித்துக் கொண்ட விவாகாரம் ஜூவியில் கண்ணில் விழுந்தது. லிங்க் கேட்காதீங்கைய்யா.

சாயிபாபாவோ, மேல் மருவத்தாரோ, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ யோ அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் என்று பத்திரிக்கையில் படம் வரும். மன்னிக்கவும் இத்தகைய ஆடம்பரங்கள் ஒரு சாமியாருக்கு தேவையா என்று எனக்கு தோணும்.

என்னுடைய ஓரே கேள்வி மதத்தையும், பக்தியையும், மனிதனின் பயத்தையும் வைத்து இவர்கள்
ஏன் இந்தளவு பணம் சேர்க்க வேண்டும்? உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். திருநெல்வேலி
ஆயக்குடியில், ஒரு இளைஞர், விபத்தில் கழுத்துக்கு கீழ் உணர்வு இல்லாதவர் ஒரு சேவா சங்கம்
நடத்துகிறார். இவரைப் போல பலரும் விளம்பரத்துக்காக இல்லாமல் ஆத்மார்த்தமாய் சேவை செய்கிறார்கள்.

மேற் சொன்ன சாமியார்கள் மனித குலம் உய்ய இவர்கள் பாடுபடுகிறார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை, உங்களுக்கு இருந்தால், இந்த பதிலை புறக்கணித்துவிடவும். உங்கள் நம்பிக்கையை கேலி செய்ய எழுதவில்லை,

Darren said...

அட போப்பா...நான் அடுத்த வாரம் பரட்டயைய பத்தி போட்டு தாக்கலாம்னு இருந்த்தேன்..நீங்க முந்திட்டீங்கப்பு...சரி விடுங்க நம்ப ஊர்ல திருடனுங்களுக்கா பnchசம்..

இந்த விசயகுமார் அதாங்க கல்கி அந்த பயபுல்ல கீரார்..அப்புறம் நம்ம
All time ultimate star kadhal mannan "ஜெயேந்த்திரர்" கீறார்.


கலக்குவும் வாங்க

http://manamay.blogspot.com/2006/05/blog-post_04.html

Muthu said...

kalvettu,

உங்கள் கருத்துக்கள் பல என்னுடதுடன் பொருந்துகிறது என்று நினைக்கிறேன்.

உங்கள் பதிவின் பின்னூட்டத்தில் இருந்து அப்டிபோடுவின் ஒரு பின்னூட்டத்தை இங்கு கொடுத்துள்ளேன்..இது முக்கியமாக விஷயமாக நான் நினைக்கிறேன்.


//பக்தர்களின் கொண்டாட்டங்கள் அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. அவரை நம்புபவர்களை நான் குறைகூறவோ, அல்லது அவர்களின்ன் நம்பிக்கைகளை விமர்சிக்கவோ இல்லை//.

இந்த மாதிரி நாசூக்கு தாங்க நிறைய பேர கெடுக்குது., அயோக்கியன எல்லாம் சாமியாக்குது. முற்றும் துறந்த உனக்கு எதுக்கு கேக்குன்னு பட்டுன்னு கேளுங்க!!. நம்பிக்கையாம் நம்பிக்கை புண்ணாக்கு.


மற்றபடி பெனிபிட் ஆஃப் டவுட் சிலருக்கு கொடுக்க காரணம் அவர்கள் மாய்மை, மந்திரத்தில் மாங்கா விழுவது ஆகியவை செய்வதில்லை..இருந்தாலும் இவர்களை பற்றியும் கிடைக்கும் தகவல்களை மீள்வாசிப்பும் மறுபரீசிலனையும் நான் செய்வென்...

இப்போதைக்கு ரவிசங்கரின் சில கட்டுரைகள் இண்டியன் எக்ஸ்பிரசில் படித்தேன்..கொஞ்சமே கேனத்தனமாக பேசியதால் பரவாயில்லை என்று நினைத்தேன்..முதலில் உஷா பின்னர் நீங்கள் சொல்லுவதையும் நான் கணக்கில் எடுத்து யோசிக்கவேண்டும் போல..நன்றி நண்பரே

Muthu said...

உஷா,

நன்றி பதில்கள் அருமை..கலக்கறீங்க..

ramachandranusha(உஷா) said...

ஐயா கல்வெட்டாரே! இங்கிட்டு "ஒருவர்" ஆனந்தாவாக ஆசைப்பட்டார். அவருக்கோ தலை கிளார் அடிக்கும் என்று தன்னிலை விளக்கம் படிச்சதா ஞாபகம். சரி இந்த ஹேர் ஆயில் என்னவென்று
தெரிந்தால் பிற்ர்காலத்தில் அவருக்கு உபயோகப்படுமே என்ற நல்லெண்ணத்திலேயே எழுதினேன்
என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

மற்றும் ஒரு செய்தி, இத்தகைய ஹை டெக் சாமியார்களுக்கு தோற்ற கவர்ச்சியும், ஹேர் ஸ்டைலும் மிக முக்கியம் என்று தாங்கள் அறியாததில்லை. :-)))))))))))))))))

Muthu said...

ஆங்கில அனானி, (நீங்கதான)


இதனால் நண்பர்கள் என்னை தவறாக நினைக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இதைப்பற்றியும் எழுதிவிட்டால் என்னைப்பற்றிய விஷம பிரச்சாரத்தை குறைக்கலாம் அல்லவா...


மேலும் இஸ்லாம் பற்றிய என் விமர்சனம் ஏற்கனவே வைக்கப்பட்டுவிட்டது..அதனால் தான் நண்பர்கள் அதை இழுக்கவில்லை..

நாளை அல்லது மறுநாள் கிறிஸ்துவத்தில் நான் பார்க்கும் நடைமுறை பிரச்சினைகளை எழுதுவேன்..


மக்களை,மனிதர்களை,நண்பர்களை நம்புகிறவர்களுக்கு விஷமபிரச்சாரத்தால் பிரச்சினை இல்லை என்பது என் புரிதல்...

thanks for concern

ilavanji said...

//கல்கியே அவங்க முதல் மனைவியை ஏமாத்தினவர் தானாமே..அப்புறம் என்ன? //

//இங்கிட்டு "ஒருவர்" ஆனந்தாவாக ஆசைப்பட்டார். அவருக்கோ தலை கிளார் அடிக்கும் என்று தன்னிலை விளக்கம் படிச்சதா ஞாபகம். //

இளவஞ்சி! இதெல்லாம் உனக்கு தேவையா?! வாய வைச்சுக்கிட்டு சும்மா இருன்னா கேக்கறையா?! இரும்படிக்கற இடத்துக்கு ஈ நீ வரலாமா?! என்னமோ போடா.. உனக்கு நேரமே சரியில்லை! :(

Anonymous said...

இந்த பதிவு மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. தப்பு நடக்கும் பட்சத்தில் கணீர் என்று சொல்லுங்கள்.

Muthu said...

இளவஞ்சி,

ஏன்யா வந்து சிக்கறீங்க..இதுவரை என் தோழி உங்களை வாரியது எனக்கு புரியவில்லை...இப்பத்தான் உங்க பின்னூட்டததை வைச்சி என் சிறுமூளையை உபயொகப்படுத்தி ஓசிச்சேன்..

ஐய்யோ..ஐய்யோ..(வடிவேலு ஸ்டைல்)

Muthu said...

அனானி,

நன்றி..(நான் நடுநிலைமைவியாதி அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது)

Muthu said...

//இத்தகைய ஹை டெக் சாமியார்களுக்கு தோற்ற கவர்ச்சியும், ஹேர் ஸ்டைலும் மிக முக்கியம் என்று தாங்கள் அறியாததில்லை. :-)))))))))))))))))//

ஆமா..ஆமா...எல்லாரும் எவ்ளொ தேஜஸா இருக்காங்க..அந்த சுண்ட காய்ச்சிய பால்..முந்திரி..ஏமாளிகள் பணம்..

Sivabalan said...

You bell the cat! Hats off!

// வாட்ச்சில் மேட் பை காட் // a slap on many faces.

Good blog!!

வினையூக்கி said...

Hope I am the 150th. Congratulations.

தருமி said...

முந்தின பின்னூட்டம் நமது தாங்க..

தாணு said...

முத்து
உங்கள் நட்சத்திர வாரம் முடியும் முன்பு வாழ்த்த முடிந்ததற்கு மகிழ்ச்சி. முந்தைய பதிவுகள் ஒன்றிரண்டு மட்டுமே படிக்க முடிந்தது.
சாமியார்கள் பின்னால் சென்று அவதிப்பட்டவர்களின் கதைகளை வாசித்துக்கொண்டே அடுத்த தெரு பூசாரியிடம் மந்திரிக்கச் செல்வதுதான் லேட்டஸ்ட் பேஷன் நம்மூரில். ஸ்புட்னிக் இதழ் எங்கள் வீட்டுக்கு ரெகுலராக வந்தாலும், அது அண்ணன்களும் அப்பாவும் படிக்கும் அரசியல் சம்பந்தப்பட்டது என்று திருப்பியே பார்த்ததில்லை.
யாரோ உங்கள் பதிவில் சொல்லியிருப்பதுபோல் ரவிஷங்கர் போன்றோர் மட்டும் என்ன உசத்தி. கொஞ்சம் நல்ல மனிதர்கள் என்று வேண்டுமானால் அங்கீகரிக்கலாம். மேதைகளாகவும் துறவிகளாகவும் சித்தரிக்கப் படுவது கேலிக்குரியதே.
மனிதனால் சித்தரிக்கப்பட்ட கடவுள்களும் மதமும் அவரவர் சொந்தப் பிரச்னை. ஆனால் அதன் அடிப்படையில் உலாவரும் சாமியார்கள் அனைவரும் போலிகளே. உண்மையான தொண்டு செய்பவர்கள் நம்மிடையில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், விளம்பரமின்றி எதிர்பார்ப்புகளின்றி.!!
(சாய்பாபா பற்றி ஆன்மீகமோ என்று தாண்டிப் போக நினைத்த பதிவு நல்ல வேளை வாசித்தேன்)

குமரன் (Kumaran) said...

இந்தப் பதிவையும் இதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படித்து முடிக்க ஒரு வாரமாவது ஆகும் என்று நினைக்கிறேன் முத்து. ஆனா இந்தப் பதிவிற்கு பின்னூட்டங்கள் வருவது குறையத் தொடங்கியவுடன் ஒரே ஒரு சங்கதி மட்டும் சொல்லிடுங்க - எத்தனைப் பின்னூட்டங்கள் திட்டி வந்தன; அவற்றில் எத்தனைப் பின்னூட்டங்களை நீங்கள் அனுமதிக்காமல் அழிக்கவேண்டி வந்தன என்று. ஏனென்றால் அப்படிப்பட்டப் பின்னூட்டங்கள் வரும் என்று நீங்கள் ரொம்பவே எதிர்ப்பார்த்த மாதிரி தான் முதல் வரிகள் இருக்கின்றன. :-)

Priya said...

Leaders play cards to make a right move. Religious (leaders){ we call them leaders too without shame} exchange for all they get.
You said, /சமூகத்திற்கு உதவுகிறார்கள் என்று பலரும் நினைக்கிறோம்/.
Do they help?? Its all politics (when u become popular) and business deals. What kind of business?? (God)knows!!! Isn't he crazy to be in different names and forms to fool people.
But how can a human being pray/worship an another human being. Shame on you!!!
Pray to your parents and not to strangers.
Why these foolish religious leaders can't stop war and evil things in the world. Well theyc an't as they can only do magin within their area.

/நாம் இவரிடம் ஏதோ ஒரு அதிசய சக்தி இருப்பதாக நம்புகிறோம்/
Peoples heart and mind are not well balanced when they face problems. They go to temple and paray, please help me. Are your prayers answered soon. Its all hardwork and how much effort you make it to get it done.
RL(religous leaders) mesmerise people who cannot make decisons and depend on others. How are these people mesmerise: communication, cult behavior and spread the words of "believe me".
Trust and happiness are found when people think they have reached a point where they can spill their problems.
/ஆட்டுமந்தை மனப்பக்குவம்தான் நம்மில் மிஞ்சுகிறது/
mental imbalance who believe that.
/வெள்ளைகாரனே கும்பிடறான்னா ஏதாச்சும் இருக்கும் என்று நம் ஆட்களும குவிவார்கள்/
He has no brains. Why do u think people go abroad.
/வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது/
I disagree this. Just becoz u see some wering short skirts and swim wear, do not come to conlcusion. What about Indian culture. Has it not changed. Don't people date and live together in India too.
/ஆங்கிலம் தெரிந்த பிச்சைக்காரர்கள்/
They are called as homeless people rather defining themselves beggars.

சிங். செயகுமார். said...

"ramachandranusha said...
ஐயா கல்வெட்டாரே! இங்கிட்டு "ஒருவர்" ஆனந்தாவாக ஆசைப்பட்டார். அவருக்கோ தலை கிளார் அடிக்கும் என்று தன்னிலை விளக்கம் படிச்சதா ஞாபகம். சரி இந்த ஹேர் ஆயில் என்னவென்று
தெரிந்தால் பிற்ர்காலத்தில் அவருக்கு உபயோகப்படுமே என்ற நல்லெண்ணத்திலேயே எழுதினேன்
என்று தாழ்மையுடன் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்."


ஆக என்ன ஹேராயில்னு மட்டும் சொல்லமாட்டிங்க.....
சொன்னீங்கன்னா ஆரம்பிச்சிருவோம்ல ஆசிரம்...

Anonymous said...

சூப்பர்! நட்சத்திரமானதுக்கு வாழ்த்துக்கள்!

சாயிபாபாவின் மகிமையைப்பற்றி எங்கள் கல்லூரியில் படித்த ஒரு பையன் சொன்னான். அவன் நண்பன் புட்டபர்த்தியில் சாயிபாபா நடத்திவரும் கல்லூரியின் விடுதியில் தங்கிப் படித்து வருகிறானாம். ஒருநாள் மூன்று மாணவர்கள் சேர்ந்து, விடுதியின் மொட்டைமாடியில் 'தம்' அடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அடுத்தநாள் காலை, வழக்கமாகக் கூடும் பஜனையில், சாயிபாபா கேட்டாராம் : 'நேற்று விடுதியின் மாடியில் 'தம்' அடித்த மூன்று மாணவர்கள் யார்?' என்று. யாரும் எழவில்லை. உடனே, கையை ஆசீர்வதிப்பது போலக் காட்டினாராம்! உள்ளங்கையிலிருந்து ஒளி புறப்பட்டு, எதிரிலிருந்த சுவரில், அம்மாணவர்கள் 'தம்' அடித்த அந்தக் காட்சி படமாக ஓடியதாம். இது உண்மையா என்று இன்று யோசிக்கத் தோன்றுகிறது. ஆனால் அன்று முழுக்க நம்பினோம்.

ரவிசங்கரையும் மாயாஜாலம் செய்பவரல்ல என்று எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், சுனாமி வந்தபோது, வாழும்கலை வாலண்டியர்கள் ஒரு துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தனர். அதில், 'பட்டினப்பாக்கம் மற்றும் மந்தைவெளி பகுதிகளில் வசித்த ரவிசங்கர்ஜீயின் பக்தர்களின் வீடுகளுக்கு எந்தச் சேதமும் ஆகவில்லை' என்று இருந்தது. அந்த நம்பிக்கையும் அன்றே தகர்ந்து போய்விட்டது.

எனக்குத் தெரிந்து, மக்களுக்காகவும், அவர்கள் வாழ்வு முன்னேறவும் வழிகாட்டியவர் காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார்தான். கடவுள் நம்பிக்கையற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் அவர் ஒருவர்தான். கடவுள் பக்தியைவிட மனித நேயத்தை வலியுறுத்தியவர்.

//பொட்டி அவர்களே, கோரமங்களாவில் இருப்பது 'ஸ்வாமி சுகபோதானந்தா'வின் ஆஸ்ரமம் என்று நினைக்கிறேன்.//

கோரமங்களாவில் இருப்பது ரவிசங்கரின் ஆசிரமம்தான். சுகபோதானந்தாவினுடையது மல்லேஸ்வரத்தில் இருக்கிறது என நினைக்கிறேன்.

//(உங்க ஊரு திருப்பாச்சியா:)) //

போச்சுடா! ஜெயஸ்ரீகிட்டே ஊரைக் கேட்டுட்டீங்களா! இன்னொரு 100 பின்னூட்டங்கள் கேரண்டி! ;-)

நன்றி
கமல்

Suka said...

இந்த வாஸ்து அப்புறம் எனர்ஜி விஞ்ஞானங்கற பேர்ல ஜிகுஜிகுன்னு ஒரு பெட்டியும் , ட்ராஃப்டர் ஸ்கேல் மாதிரி எதோ ஒன்னை வெச்சு பரிகாரம் சொல்ற சைண்டிஸ்ட், நேமாலஜி ஆசாமிகள் எல்லாம் கூட இந்த சாமியார் லிஸ்ட்ல வருவாங்க தானே முத்து.

சல்மான் said...

// இதே போல "அற்புத சுகமளிக்கும் கூட்டங்களை" நடத்துவதாகக் கூறிக்கொண்டு ஹிந்து மத அமைப்புகளால் நடத்தப்படுவதைவிட மூன்று, நான்கு மடங்கு பள்ளி, கல்லூரிகளை நடத்தி அவர்களை விட பல மடங்கு "துட்டு" பார்ப்பவர்களை பற்றியும் நீங்கள் எழுதி உங்கள் நடுநிலைமையை வெளிப்படுத்துவீர்கள் என நம்புகிறேன்.
//

மூஸ் அவர்கள் போல் பலர் இந்த மாரி 'உசுப்பி' விட்டு இன்பம் காண்கிறார்கள்.

கவுண்டமணி உதவியுடன் கேட்டால் "ஏண்டா! நானும் ரொம்ப நாளா ஒன்னு கேக்கனும்னு நெனச்சேன். என்னடா, எப்ப பார்த்தாலும், உங்கள பத்தி ஏதாவது சொன்னா மட்டும், அத பத்தி யோசிக்காம, என்னை மட்டும் எதுக்கு சொன்ன, அவன சொன்னயா, இவன சொன்னயானு கொயந்த மாரி பேசிறியே.... ஏண்டா மத்தவன் முட்டாளா இருக்கறான். அதனாலதான் நானும் அப்படி இருக்கிறேனு சொல்றியா, முள்ளுபுதர் மண்டையா? அப்புறம் என்னடா, அவனையும் சொல்லு இவனையும் சொல்லு, அப்பதான் நீ நடுநிலமைனு சர்டிபிகேட் கொடுப்பேன்கிற? முட்டாள்ட்ட எனக்கு எதுக்குறா சர்டிபிகேட் ஸாட்லைட் மண்டையா?"


கவுண்டமணியின் ஒரிஜினாலிட்டிக்காகத்தான், ஒருமை உபயோகப்படுத்தினேன். யாரையும் புண்படுத்தவோ, தரக்குறைவாக எண்ணவோ அல்ல!

விமர்சனங்கள் மேல் வன்மமில்லை! 'என்று தணியும் இந்த புரளிகள் மேல்தான்'

நட்புடன்,
ஸல்மான்.

பின்குறிப்பு: இங்கு எங்கெல்லாம் சந்தர்ப்பம், கிடைக்கிறதோ, அது எரிகிற வீடாக இருப்பினும், அங்கே எல்லாம் போய் கொள்ளிகளை கடன் வாங்கும் சுதந்திரமும், extra கொள்ளிகளை வீசி விட்டு வரும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிரது என்பதை அனைவரும் அறிவர்.

Pot"tea" kadai said...

150*

VSK said...

//இங்கு எங்கெல்லாம் சந்தர்ப்பம், கிடைக்கிறதோ, அது எரிகிற வீடாக இருப்பினும், அங்கே எல்லாம் போய் கொள்ளிகளை கடன் வாங்கும் சுதந்திரமும், extra கொள்ளிகளை வீசி விட்டு வரும் சுதந்திரமும் தரப்பட்டிருக்கிரது என்பதை அனைவரும் அறிவர். //

அதுதான் இந்தியா!
அனுபவியுங்கள்!
நன்றியுடன், வேண்டாம், வேண்டாம், குறைந்த பட்சம் தூற்றாமலாவது இருங்கள்!
உங்களுக்காக வேண்டாம்,
உங்கள் மனசாட்சிக்காகக் கூட வேண்டம்,
உங்கள் சந்ததி பிழைக்கவாவது!!

சல்மான் said...

// அதுதான் இந்தியா!
அனுபவியுங்கள்!
//

SK, நான் குறிப்பிட்டது, வலைப்பதிவை பற்றி. திசை திருப்புகிரீர்கள் என்று சொல்ல விரும்பவில்லை.

// நன்றியுடன், வேண்டாம், வேண்டாம், குறைந்த பட்சம் தூற்றாமலாவது இருங்கள்!
உங்களுக்காக வேண்டாம்,
உங்கள் மனசாட்சிக்காகக் கூட வேண்டம்,
உங்கள் சந்ததி பிழைக்கவாவது!!
//

இதை யாருக்கு + எதற்காக சொன்னீர்கள் என விளக்கம் தந்தால் நல்லது

Muthu said...

நீங்கள் கொடுக்கற சுதந்திரத்தில வாழறமா..?யார் நாட்டில் யார் வந்து யாருக்கு சுதந்திரம் கொடுக்கறது? தேசியத்தை நீங்கள் உயர்த்தி பேசுவதற்கு இதுதான் காரணம் என்று எல்லோருக்கும் தெரியும்.உங்களுடன் ஆர்க்யூ செய்ய நான் தயாரில்லை.

என் சந்ததிகளை திட்டுவது தனிப்பட்ட தாக்குதலா இல்லையா? நான் வருத்தப்படுகிறேன்.உங்கள் மேல் கோபமும் வரவில்லை.போங்க.போலி டோண்டுவிற்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?

VSK said...

திரும்பவும் சொல்கிறேன்,
தன்னிரக்கமும், தன்னம்பிக்கையின்மையும்தான் உங்கள் பலவீனங்கள்!
அருமையான நடை இருக்கிறது!
கொஞ்சம் சரி செய்து கொள்ளுங்கள்!
மிக உயரப் போய்விடுவீர்கள்!
நான் விரும்புவதும் அதுவே!

'சல்மான்' சொன்னதற்கு நான் பதில் சொன்னேன்;
நீங்கள் வேறு ஏதோ இழுத்திருக்கிறீர்கள்!
நான் உங்களை நினைத்து எழுதவில்லை அதை!
இருந்தாலும், உங்கள் பதிலில் இருந்து
எனக்குத்தான் சொல்லி இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
[பெயர் குறிப்பிடவில்லை எனினும்].

'மாதா பிதா பாவம் மக்கள் தலையிலே!'
இந்தப் பழமொழி ஞாபகம் இருக்கும் என நம்புகிறேன்.

யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கும் அளவுக்கு நான் இல்லை;
வரவும் மாட்டேன்![இனி]

பாபா அருள் புரியட்டும்!
'பகைவனுக்கருள்வாய் நெஞ்சே!'

Pot"tea" kadai said...

எஸ்கே அய்யாவின் நகைச்சுவையை இன்னமும் காணவில்லையே என்று ஏக்கத்தில் இருந்தேன். எல்லாம் வல்ல அந்த "பரட்டையன்" அருளால் நான் நினைத்துக் கொண்டிருந்த அதே வேளையில் பின்னூட்டமிட்ட எஸ்கேவிற்கு நன்றிகளை சமர்ப்பிக்கிறேன்.

சிரிப்பவர்கள் சிரித்துக் கொள்ளுங்கள், எஸ்கேவின் காமெடி தேர்தலுக்குப் பின்னரும் தொடருமாவென்று யாருக்கும் தெரியாது.

Machi said...

"எத தின்னா பித்தம் தெளியும்ன்னு" இருக்கிற ஆளுக்கிட்ட போயி அத தின்னாத இத தின்னாதன்னு சொன்னா கேப்பாருன்னு நினைக்கிறீங்க? மக்களுக்கு தேவை அப்ப இருக்கிற கஷ்டம் போகனும் அவ்வளவு தான். எவ்வளவு போலி சாமியார்களின் வேடம் வெளிப்பட்டாலும் மக்கள் சாமியார்களை நோக்கி போய்க்கிட்டுதான் இருப்பாங்க. இது யாருக்கு தெரியுதோ இல்லையோ சாமியார்களுக்கு நன்றாக தெரியும்.

சாதனை பின்னூட்ட பதிவில் என் பின்னூட்டத்தையும் போட்டு எனக்கு அருள்புரிங்க சாமி.

பொன்ஸ்~~Poorna said...

நேத்திக்கு கொஞ்சம் வெளியில் போய்ட்டு வந்து பார்த்தா.. 150தி சொச்சம் பின்னூட்டம் ஆய்டுச்சு.. பாபா, அமிர்தானந்த மயி இந்தப் பேருக்கெல்லாம் இவ்வளவு மகிமையா??!!!

உஷாக்கா, நான் சொன்னது பூரா பூரா எங்க பாட்டியோட நம்பிக்கை. அதைக் கேள்வி கேக்கவோ, இல்லைன்னு மறுக்கவோ எனக்கு அவசியம் இருக்கறதா தோணலை.. என்னைப் பொறுத்த வரை, இதுவரை சாமியார்களிடம் போக வேண்டிய அவசியம் எனக்கு வரவில்லை; வரும் என்று இப்போது தோன்றவும் இல்லை..

//பொன்ஸ் நக்கல் நல்லா வருது உங்களுக்கு....//
குரு (Disclaimer : இது நக்கலுக்கு அல்ல;)!!), நமக்கு ஒழுங்கா வருவது அது ஒண்ணுதான் :)

G.Ragavan said...

// எனக்குத் தெரிந்து, மக்களுக்காகவும், அவர்கள் வாழ்வு முன்னேறவும் வழிகாட்டியவர் காலஞ்சென்ற குன்றக்குடி அடிகளார்தான். கடவுள் நம்பிக்கையற்றவர்களாலும் மதிக்கப்படுபவர் அவர் ஒருவர்தான். கடவுள் பக்தியைவிட மனித நேயத்தை வலியுறுத்தியவர். //

கமல், இவரைப் பற்றிச் சொல்லத்தான் நானும் வந்தேன். குன்றக்குடி என்ற ஊரைப் போய் எல்லாரும் பார்க்க வேண்டும். முன்மாதிரியாக இருக்கிறது. முழுக்காரணம் குன்றக்குடி அடிகளார்தான். ஒரு மடத்தின் தலைவராக இருந்தாலும் (உஷா சொல்வது போல கொஞ்சம் சொத்தும் மடத்துக்கு இருந்தாலும்) அவர் சமூகத்தின் வளர்ச்சிக்கே தனது அறிவையும் மடத்தையும் முறையாகப் பயன்படுத்தினார் என்றால் பொய்யில்லை. உண்மையான துறவிகள் பொருள் சேர்ப்பார்கள். தொண்டு செய்வதற்கு. அதை ஆடம்பரமாகச் செய்ய மாட்டார்கள் என்பது என் கருத்து.

உஷா, ரமணருக்குத் தம்பி இருந்தார் என்று நான் கேள்விப் பட்டதில்லை. இது புதுச் செய்தி. அவரது எளிமையும் தொண்டும் அறிந்ததுதான். அவருக்கு அம்மா மட்டுந்தான். அவரையும் மடத்தில் தங்க வைக்க மறுத்ததால் ரமணர் மடத்தை விட்டு வெளியேற இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியிருக்கையில் இந்தத் தம்பி எங்கிருந்து வந்தார்? ரமணருக்குப் பிறகு ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கலாம்.

Muthu said...

சிவபாலன்,
நன்றி நண்பா, நான் புதிதாக எதுவுமே சொல்லவில்லை.....

Muthu said...

தாணு,

நன்றி...
நீங்கள் சொல்வதும் நிதர்சனம்தான்.

//மனிதனால் சித்தரிக்கப்பட்ட கடவுள்களும் மதமும் அவரவர் சொந்தப் பிரச்னை. ஆனால் அதன் அடிப்படையில் உலாவரும் சாமியார்கள் அனைவரும் போலிகளே. உண்மையான தொண்டு செய்பவர்கள் நம்மிடையில் சாதாரண மனிதர்களாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள், விளம்பரமின்றி எதிர்பார்ப்புகளின்றி.!!
(சாய்பாபா பற்றி ஆன்மீகமோ என்று தாண்டிப் போக நினைத்த பதிவு நல்ல வேளை வாசித்தேன்)//

super...thanks....

Muthu said...

குமரன்,
ஒரு மட்டுறுத்தல் கூட இல்லைங்க..சத்தியமாக...

Muthu said...

ட்ரீமர்,
அந்த சிறுவர் பாலியல் விஷயம் பயங்கரமானது....

Muthu said...

ப்ரியா,
பெண்களும் நிறைவாக சிந்திக்கிறீர்கள் என்று சொன்னால் நான் ஆணாதிக்கவாதி ஆகிவிடுவேன்.. ஆனாலும் வாழ்த்துக்கள்..i value your feedback...

//Peoples heart and mind are not well balanced when they face problems//

True....

i did not say this "வெளிநாட்டு கலாச்சாரம் கெட்டு போய்விட்டது"

//They are called as homeless people rather defining themselves beggars.//
oh this is news for me..

Muthu said...

சிங்,

:))

Muthu said...

கமல் நன்றி...
நீங்க சொன்ன சம்பவம் பயங்கர ஜோக்குங்க....

குன்றக்குடி பற்றி ஏற்கனவே அரைகுறையாக கேள்விப்பட்டிருந்தாலும் நீங்கள் கூறியதை படித்தால் சந்தோஷமாக உள்ளது..

Muthu said...

சுகா,
இந்த எங்கள் ஊர்(சேலம்) வழுக்கையனும் அவர் மனைவியும்...அவங்களையா சொல்றீங்க?

Muthu said...

சல்மான்,

:))

Muthu said...

எஸ்.கே...

தன்னிரக்கமா, தன்னம்பிக்கையின்மையா...அய்யகோ....ஆண்டவா என்னை மட்டும் காப்பாத்துப்பா.....

Muthu said...

குறும்பன்,

அவ்வண்ணமே குறும்பன்

Muthu said...

பொன்ஸ்,

பனைமரத்துல வவ்வாலா பாபாவுக்கே சவாலா.....

அருண்மொழி said...

//உஷா, ரமணருக்குத் தம்பி இருந்தார் என்று நான் கேள்விப் பட்டதில்லை. இது புதுச் செய்தி. அவரது எளிமையும் தொண்டும் அறிந்ததுதான். அவருக்கு அம்மா மட்டுந்தான். அவரையும் மடத்தில் தங்க வைக்க மறுத்ததால் ரமணர் மடத்தை விட்டு வெளியேற இருந்ததாகக் கேள்விப்பட்டேன். அப்படியிருக்கையில் இந்தத் தம்பி எங்கிருந்து வந்தார்? ரமணருக்குப் பிறகு ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கலாம். //

ராகவன்,

அது உண்மையான செய்தி. கோர்டுக்கு சென்று வழக்கும் நடந்தது. தான் முற்றும் துறந்தவர் இல்லை என்று அவரே சொல்லியும் இருக்கிறார். அதை பற்றி ஏதாவது சுட்டி இருந்தால் தெரியப்படுத்துகிறேன்.

ramachandranusha(உஷா) said...

ராகவா, பல நூறு ஆண்டுகளாய் இயங்கி வரும் மடம், ஆதீனங்களில் கணக்கு, வழக்குகள்,
தணிக்கை ஆகியவறிற்கு ஓரளவு சரியாய் ரெகார்ட் இருக்கும். அடுத்து யார் என்பதையும் மூத்தவர்
தேர்ந்தெடுத்து விடுவார். அந்த அந்த சமூக உட்பிரிவுகளுக்காக மன்னர்களும், ஜமீந்தார்கள் உட்பட
செல்வந்தர்கள் மடங்களுக்கும், ஆதீனங்களுக்கும் சொத்து எழுதி வைப்பது என்பது வழி வழியாய்
வந்தது.

ஆனால் இன்றைய ஸ்தாபனங்கள் குறித்து என் பார்வை- மெஸ்மெரிசம் போன்ற முறைகளில்
மக்களை மயக்கி, தன் வலையில் விழ வைக்கிறார்கள். அவர்கள் பின்னால் பெரிய தலைகள்
நிறைய இருக்கும். சொத்துக்கள் சேர சேர அவைகளுக்கு கணக்கு இருக்கும் என்று நம்புகிறீர்களா?அவர் காலத்துக்கு பின்னால் இந்த கோடிகள் என்ன வாகும்? "கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார்" கதைத்தான்.

ரமணர், சொத்துக்களை தன் தம்பிக்கு எழுதி வைத்தார் என்பது நம்பகமான தகவல்.

Udhayakumar said...

வாதம்ன்னு வந்தா அதை மட்டும் பேசாமல் மத்தையும் சேர்த்து குழப்பி நீர்த்து போக வைக்கறதுன்னா நாமதான் முன்னாடி...

எங்க ஊருபக்கம் நிறைய காலி இடம் இருக்காம்... கலைஞர் ஏழை விவசாயிகளுக்கு வேணும்னு புடுங்கறக்கு முன்னாடி மடத்தை கட்டி போடுங்கப்பா...

Maraboor J Chandrasekaran said...

ஒரு காலத்துல ஜூனியர் விகடன்ல சென்னை சுத்தி இருக்குற 50 மேல்பட்ட திடீர் சாமியர் பற்றிய செய்தி வந்திருந்தது! சில கேஸ¤ நஙு ஞாபகம் உள்ளது. சுடுகாடு சாமியார் (எறியும் பிணத்தை பெரட்டிப் போட்டு பிணம் தின்பவர்), குரங்கு சாமியார் ( நார் தேங்காயை வாயாலேயே உரித்து தேங்காய் சாப்பிடுகையில், அந்த இளநீரை பக்தர்கள் மேல் தெளிப்பார்), விளக்குமாறு சாமியார் (அதனால் அடித்துதான் ஆசிர்வாதம் செய்வார்) என பல பேர். புதிய அரசு வந்ததும், முதல் வேலையாகாத்தனை பேரையும் ரைடு விட்டு, முதுகில் டின் கட்டி உள்ள தள்ளினதாகவும் ஞாபகம். கோயில், உருவ வழிபாடு, என்பதே, மனதை ஒரு முகப் படுத்த ஒரு அறிமுகம் தான். சாமியார்கள் தூதுவர்கள் என்று சொல்வதெல்லாம் சரிப்படாது. குருவையும், சாமியாரையும் மக்கள் குழப்பிக்கொள்கிறார்கள். நஙு சயின்ஸ் சொல்லிகொடுக்கும் ஆசிரியரால் உங்களுக்கு சயின்ஸில் அதிக பற்று வருவது போல், சில நல்ல குருமார்கள், எந்த ப்ரதிபலனையும் எதிர்பார்க்காமல் நல்வழி காட்டுகிறார்கள். நான் முன்பு சொன்னதையே மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்த நிஜ குருமார்கள், பணம் பண்ணவில்லை. பல உதாரணங்கள் உள்ளனர்.

ramachandranusha(உஷா) said...

பொன்ஸ்,
விசிறி, மற்றும் ரமணர் பெயரை நீங்க எழுதியதைப் பார்த்ததும், உங்களை விளித்து எழுதியதற்கு மன்னிக்கவும்.

ramachandranusha(உஷா) said...

அருணகிரி, அப்படியே விசிறி சாமியாரின் ஆசிரம வழக்கு விவரம் ப்ளீஸ்.

ramachandranusha(உஷா) said...

மரபூராரே, ஆமாங்க. சொத்து சேர்க்காம, மக்களுக்கு நல்லது செய்கிற உண்மையில் முற்றும்
துறந்தவர்கள் பற்றி நானும் கேள்வி பட்டிருக்கிறேன்.

ramachandranusha(உஷா) said...

ராகவா, "நட்சத்திர விடுதி" நேர்முக வர்ணனை செய்ததை மறந்தது ஏன் :-))))

முத்து ஏதோ நம்மால ஆனது நாலு பின்னூட்டம் என் கணக்குல, ஞாபகம் வெச்சிக்குங்க :-)

- யெஸ்.பாலபாரதி said...

ஆஹா...
செக்கெண்ட் இன்னிங்ஸா...
பாத்தியளா தல.. இதுக்கு தான் நான் மொதல்லேயே... சாரி!
ரெண்டாவதாக சொன்னேன்..
ஆஸ்ரமம் ஆரம்பிச்சு மத்த சாமியாருங்கள காய்ச்சுவோம்...
:)

பொன்ஸ்~~Poorna said...

//ரெண்டாவதாக சொன்னேன்..
ஆஸ்ரமம் ஆரம்பிச்சு மத்த சாமியாருங்கள காய்ச்சுவோம்...
:)
//
பாலா, முத்து சாமியாராகிறது இருக்கட்டும்.. கல்யாணம் பண்ணிக்கோங்கோன்னு ஒரு பதிவு போட்டு க.பி. சங்கமெல்லாம் ஆரம்பிச்சு ட்ரெயினிங் எடுத்து கிட்டு இருக்கிற நீங்க என்ன ஆசிரமத்துக்குக் கூட்டு சேரப் பாக்கறீக!! :)

thiru said...

ஆசிரமம் கட்டலாம்னு இருக்கேன் யாராவது உதவறீங்களா? :)

முத்து, பொட்டிக்கடை ரெண்டுபேருமா பொழப்பில மண்ணு அள்ளிப் போடுறீரே, பகவான் சும்மா விடமாட்டார். இமய மலைக்கு போயிட்டு வறேன். :D:)

பொன்ஸ்~~Poorna said...

முத்து,
ஒரு விஷயம் பார்த்தீங்களா? உங்க "ஆழமா எழுதத் தெரியாது" பதிவுல ஒரெழுத்துப் பின்னூட்டமெல்லாம் போட்டும் எட்ட முடியாத "நட்சத்திர வாரத்தில் 185 பின்னூட்டங்கள்" ரெக்கார்டை.. ஜஸ்ட் லைக் தட் இந்தப் பதிவு முறியடிச்சிடுச்சு..

பின்னூட்ட அரசியலை விட கார்ப்பொரேட் சாமியார் கிளாஸுக்கு எவ்வளவு ஆதரவு!!!!

வாழ்க சாமியார்ஷிப்.. வளர்க அவர்தம் கொற்றம்.. !!!! (தேர்தல் சமயத்துல கோஷம் போட்டே பழகிடிச்சு!!!)

Muthu said...

அருள்,

ரமணர் கட்டுடைக்கப்பட்டார்..வயதானால் மனது வீக்காகி இதுபோல் ஆகிவிடுவார்களோ என்னமோ.....

Muthu said...

உஷா,
உங்க கணக்கில் பின்னூட்டங்கள் சேர்க்கப்பட்டன. பாதுகாக்க ப்படுகின்றன. உங்களுக்கு தகுந்த மரியாதை தக்க சமயத்தில் செய்வோம்....

நிறுவன தலைவர்
திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முண்ணனி

Muthu said...

உதயகுமார்,
சந்தில சிந்து பாடறது இதுதானா?

Muthu said...

மரபூராரே,

அந்த ஜுவி மேட்டரை நானும் படிச்சிருக்கேன்..(ஆ.வி யா) கலக்கல்..

புல் வைச்சி சாமி கூட பேசற ஆசாமி.....:))

மற்றபடி நல்ல சாமியார்களையும் நான் ஒத்துக்கொள்கிறேன்.சித்தர் வழியில் வந்தவர்கள்...

Muthu said...

பாலபாரதி,
நன்றி (எதுக்கு நன்றின்னு கேக்கக்கூடாது.இருநூறுக்கு இன்னும் கொஞ்சம்தான் இருக்கு)

Pot"tea" kadai said...

தமிழினி,
200 நீங்களே அடிச்சிட்டீங்களே!200+ ஆக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியெ...
கலைஞரின் பாசறையில் பேராசிரியர் போல நானும் கூடவே இருந்து "ஜிங்குச்சா" போடவே விரும்புகிறேன். :-))
//உஷா,
உங்க கணக்கில் பின்னூட்டங்கள் சேர்க்கப்பட்டன. பாதுகாக்க ப்படுகின்றன. உங்களுக்கு தகுந்த மரியாதை தக்க சமயத்தில் செய்வோம்....//

நிறுவன உபதலைவர்
திராவிட ராஸ்கல்கள் முன்னேற்ற முண்ணனி

Muthu said...

பொன்ஸ்

சாமியாரா? நானா ? நெவர்....நாக்கையே அடக்கமுடியாத நானா சாமியார்?

pottea kadai,

இப்ப இருநூறு உங்களுது ஆயிடுச்சி..துணைத்தலைவருக்கு இந்த கைம்மாறு கூட நான் செய்யமாட்டேனா?

Muthu said...

பொட்டீக்கடை,

இனமான பேராசிரியர்னு ஒரு வார்த்தைக்கே அன்பழகன் சந்தோஷப்பட்டு திமுகவில் இருக்கும்போது

"திராவிட ராஸ்கல்கள் முன்ணேற்ற முண்ணனி "

துணைதலைவரான உங்களுக்கு இருநூறாவது பின்னூட்டத்தை கொடுத்து நான் பெருமையடைகிறென்.

பொன்ஸ்~~Poorna said...

//சாமியாரா? நானா ? நெவர்....நாக்கையே அடக்கமுடியாத நானா சாமியார்? //

முத்து, உங்களை நான் எங்கங்க சாமியார்னு சொன்னேன்? புரியலையே!!

«Oldest ‹Older   1 – 200 of 219   Newer› Newest»