Tuesday, April 18, 2006

இந்தியாவில் இஸ்லாம்

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, தமிழ்வலைப்பதிவுலகத்திலும் சரி.அதிகம் விவாதிக்கப்படும் மதம் இஸ்லாம்.இந்த மதத்தைப்பற்றி சில மாதங்களுக்கு முன் தருமி எழுதிய பெரும்பாலான கருத்துகள் என்போன்ற இறைநம்பிக்கை இல்லாதவர்கள் ஒத்துப் போகும்படித்தான் உள்ளன.சுட்டிகள் இங்கே.

ஒரு மதத்தில் இருப்பதாக சொல்லப்படும் சில கோட்பாடுகள் சமூக அமைதியை பாதித்தால் அதைப்பற்றி பேச எழுத எல்லோருக்கும் உரிமை உண்டு என்ற அடிப்படையில் இவ்வகை விமர்சனங்கள் வருகின்றன.மதத்தில் உள்ள கருத்துக்களை விட்டுவிட்டு பொதுவாக இந்திய இஸ்லாமியர்களை அடிப்படையாக வைத்து என்னுடைய சில கருத்துக்களை எழுதுவது மட்டுமே என் நோக்கம்.மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட என் கருத்துக்கள் மிகவும் மேலோட்டமாகத்தான் இருக்கும்.

முக்கியமான குற்றச்சாட்டு தீவிரவாதிகளை சில சிந்தனையாளர்கள்கூட ஆதரிப்பதை பார்க்கிறோம். அதிலும் குறிப்பாக தாலிபான்கள் போன்ற ஆட்களை எல்லாம் ஆதரிப்பது எந்த விதத்தில் சேர்த்தி?(ஒரு நண்பர் தாலிபன்கள் பாமியன் புத்தர் சிலைகளை உடைத்ததை ஆதரித்து எழுதியதை நம் வலைப்பதிவுகளிலேயே பார்க்க முடிந்தது.இது கொடுமையிலும் கொடுமை).


இந்த தாலிபன் போன்ற தீவிரவாத இஸ்லாமியர்களுக்கு இந்தியா போன்ற தேசங்களில் உள்ள நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் மீதும் அன்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் இந்த தீவிரவாதிகள் வீரர்களா என்று பார்த்தால் இல்லை. மக்கள் கூடி இருக்கும் இடத்தில் குண்டு வைப்பது, அமெரிக்கா படை திரட்டி வந்தால் ஓடி ஒளிந்துகொள்வது என்று இருக்கிறார்கள். ஈராக்கில் கூட இவர்கள் அமெரிக்க படைகளை தாக்குவதில்லை. அப்பாவி மக்களையே தாக்குகிறார்கள்.காஷ்மீரை சேர்ந்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஒரு அர்ததம் உள்ளது.இஸ்ரேலுடன் போராடும் பாலஸ்தீனர்கள் போராட்டத்திலும் ஒரு நியாயம் உள்ளது.ஆனால் பின்லேடன், தாலிபன் வகையறாக்களை எந்த விதத்திலும் சேர்க்கமுடியாது. வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.

நல்லவேளை உலகிலேயே அதிக முஸ்லீம்களை கொண்ட நாடுகளி்ல ஒன்றான இந்தியாவில் இதுவரை அல்-கொய்தாவை சேர்ந்து ஒருவர் கூட இல்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஆட்களும் முஸ்லீம்களில் மிகவும் சிறுபான்மையோர் என்பதும் ஒரு ஆறுதல் அளிக்கும் உண்மை.

மற்றொரு குற்றச்சாட்டு மதத்தின் மீதான குற்றச்சாட்டுகளுக்கு படித்த அல்லது விவரம் தெரிந்த முஸ்லீம்களின் பாராமுகம்.விமர்சனமின்மை. ஏனென்றால் மூலப்புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மற்றும் கருத்துக்களை அடிப்படையாக கூறித்தான் தீவிரவாதிகள் இயங்குகிறார்கள். இதை எதிர்க்கும் இஸ்லாமியரின் எதிர்ப்புக்குரல் மிகவும் பலவீனமாகவே ஒலிக்கிறது.இதை எதிர்த்து இந்நேரம் இஸ்லாமியரில் ஒரு தனிப்பிரிவே வந்திருக்கவேண்டும். அறிவுபூர்வமாகவும் மதரீதியாகவும் அப்பாவிகள் மீதான வன்முறை ஒரு வெறுக்கப்படவேண்டிய வழிமுறை என்பதை இஸ்லாமிய அறிவுஜீவிகள் தீவிரமாக வலியுறுத்துவதில்லை. சிறுவயதிலிருந்தே இறுக்கமாக அவர்களை இறுக்கும் மதக்கல்வி அவர்களை அவ்விதம் சிந்திக்க விடுவதில்லையோ என்று நான் நினைக்கிறேன்.

சுருக்கமாக சொல்லப்போனால் மதங்களை மீறிய சிந்தனை உள்ள இஸ்லாமிய பெருமக்களை காண்பது கடினமாகவே இருக்கிறது. மதத்தை எல்லாவற்றையும் விட உயர்ந்ததாக நினைக்கும் ஒரு தன்மை அவர்களி்ல கலந்துவிட்டது. காலத்திற்கு ஏற்ப மதத்தை சீர்தூக்கி பார்ப்பது சாத்தியமே இல்லை என்றாகி விட்டது. எப்பாடு பட்டாவது மூலப்புத்தகத்தில் உள்ள எல்லாவற்றையும் நியாயப்படுத்துவது என்ற நிலையை பல சிந்தனையாளர்களும் எடுப்பதை காண்கிறோம்.சங்பரிவாரை எதிர்ப்பவர்கள் பின்லேடனை ஆதரிப்பவர்கள் என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.பல முஸ்லீம்களும் இந்த மாயவலையில் விழுவதை பார்க்கிறோம்.

(உதா) இட ஒதுக்கீடு வேண்டியோ அல்லது கோயமுத்தூரில் பல ஆண்டுகளாக சிறையில் வாடுபவர்களுக்கு ஆதரவாகவோ ஊர்வலம் போகும்பொது அதில் பின்லேடன் புகைப்படத்தை எடுத்துச்செல்வது.

கோயமுத்தூர் சிறையில் அடைக்கப்பட்ட ஒரு பதினெட்டு வயது சிறுவன் இப்போது எய்ட்ஸ் நோயாளியாம். இவனுக்கு எய்ட்ஸ் வந்தது மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் பொது தவறான ரத்தம் செலுத்தப்பட்டதுதானாம்.நண்பர் அழகப்பன் பதிவில் படித்த ரத்தததை உறைய வைக்கும் இதுபோன்ற கொடுமைகளை எதிர்த்து போராடு்ம்போது மதரீதியாக போராடுவது எந்த பயனையும் கொடுக்காது. ஊசி நுழையும் இடத்தில் புல்டோசரையே நுழைக்கும் சங்பரிவாரின் பிரச்சார சூழ்ச்சியில் விழுந்து மேலும் மேலும் இஸ்லாமியர் தனிமைப்படும் அபாயம்தான் இங்கு உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதுதான் முஸ்லீம் அறிவுஜீவிகளின் தலையாய கடமை.

மற்றபடி இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த ஒரு கட்டுரையின்படி இந்திய இஸ்லாமியரின் வாழ்க்கைத்தரம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அரசாங்கத்தின் உதவிகள் அவர்களில் பெரும்பான்மையோரை சென்று சேர்வதில்லை. அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில்கூட அவர்களுக்கு லோன்கள் தரப்படுவதில்லை.படிப்பறிவு மிகவும் குறைவு. அரசாங்க வேலைகளில் அவர்கள் அதிகம் இல்லை.பட்டதாரிகளின் அளவும் அதிர்ச்சி தரும் வகையில் குறைவாகவே உள்ளது.இதுபோன்ற ஒதுக்கும்தன்மை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு எந்த விதத்திலும் உதவபோவதில்லை.ஓட்டுவங்கி அரசியலும், சங்பரிவார் கும்பலின் பிரச்சாரங்களும் பிரச்சினையை தீவிரமாக்குகின்றன.


முஸ்லீம்களுக்கு கல்வியில்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது எல்லா விதத்திலும் ஒரு சரியான வழிமுறை என்றே நான் நினைக்கிறேன். அரசாங்கம் ஒரு உருப்படியான வழிமுறையை பின்பற்றி உண்மையிலேயே உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த சலுகைகள் சென்றுசேர வழிசெய்யவேண்டும்.

அரசாங்கம் மட்டும் எதையும் சாதித்துவிட முடியாது. நான் ஏற்கனவே கூறியபடி இஸ்லாமியரில் உள்ள படித்தவர்கள், மதப்பெரியவர்கள் ஆகியோர் ஒன்றுகூடித்தான் இதை செய்யமுடியும். இல்லையென்றால் சங்பரிவாரின் பிரச்சாரத்திற்கு இரையாகிக்கொண்டே இருக்கும் அவல நிலைத்தான் நீடிக்கும்.

(சென்சிடிவ் பதிவாகையால் மட்டுடுடுடுடுறுறுறுறுறுததததல் இருக்கும்)

37 comments:

Pot"tea" kadai said...

//முஸ்லீம்களுக்கு கல்வியில்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது எல்லா விதத்திலும் ஒரு சரியான வழிமுறை என்றே நான் நினைக்கிறேன். அரசாங்கம் ஒரு உருப்படியான வழிமுறையை பின்பற்றி உண்மையிலேயே உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கு இந்த சலுகைகள் சென்றுசேர வழிசெய்யவேண்டும்.//

இன்றைய நிலையில் மிக அவசியமான ஒன்று. கல்வியறிவு அவர்களிடத்தில் ஒரு "பேரடைம் ஷிஃப்ட்" கொண்டு வர சாத்தியமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

***

பெரும்பாலான இசுலாமியர்கள் கல்வியறிவில் "0" தான். இதற்கு காரணமாக நான் கருதுவது, இசுலமியானாகப் பிறந்து விட்டதால் "பெட்ரோலிய" பூமியில் ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து பணம் சேர்க்கலாம் என்ற அறியாமையே. மத போதகர்களும், அப்பாவி இளைஞர்களை கலவரங்களில் ஈடுபடுவதற்கு "இன்ஸ்டிகேட்" செய்கிறார்களேயொழிய உருப்படியாக கல்வியறிவை போதிப்பதற்கோ அதற்கான முயற்சியில் இறங்கியதாகவோ தெரியவில்லை. பெரும்பாலானோர் இந்திய "மலிவு" அர்சியலை மட்டுமே நம்பி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதில் த.மு.மு.க சற்று மாறுபட்டதாக இருக்கிறது. அவர்களின் பகுத்தறிவுக்கும், உணர்வுக்கும் வாழ்த்துக்கள்.

Anonymous said...

அன்பு நண்பர் முத்து,

உங்கள் கருத்துக்களில் பெரும்பான்மையானவற்றோடு நான் உடன்படுகிறேன். இசுலாமியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம்.

சகோதரத்துவம் வலியுறுத்தப்படும் ஒரு மதத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க வேண்டுமானால் தமிழகத்தில் இருக்கும் தமிழ் இசுலாமிய அமைப்புகளின் எண்ணிக்கையைப் பார்த்துப் புரிந்து கொள்ளலாம்.

மூன்று தொகுதிகளைக் கொடுத்து விட்டு வெடுக்கென்று மூன்றாவது தொகுதியை தனக்கென கலைஞர் கவர்ந்து கொண்டாலும் வாய்மூடி மௌனம் காக்கும் நிலையில்தான் இன்றைய இசுலாமியர்களின் அரசியல் தலைவர்கள் வழிநடத்துகிறார்கள்.

இதையெல்லாம் பற்றி நான் எழுதினால் அதிகமாகப் போய்விடும். இருந்தாலும் உங்களைப் போல நான் உணர்பவைகளைப் பதியலாம் என நினைக்கிறேன்.

சாத்தான்குளத்தான்

ஜோ/Joe said...

//ஊசி நுழையும் இடத்தில் புல்டோசரையே நுழைக்கும் சங்பரிவாரின் பிரச்சார சூழ்ச்சியில் விழுந்து மேலும் மேலும் இஸ்லாமியர் தனிமைப்படும் அபாயம்தான் இங்கு உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதுதான் முஸ்லீம் அறிவுஜீவிகளின் தலையாய கடமை.//

அருமையான கருத்து..இஸ்லாமிய சகோதரர்களின் மேல் அக்கரையோடு எழுதப்பட்ட பதிவு.

கருப்பு said...

வழக்கமான முத்து பாணியில் அமைந்த மிகவும் நல்ல பதிவு.

Anonymous said...

What prevented muslims from using the rights of the minorities and from acquiring education.Why muslim women females are denied education.Unless they come out the
mindset that sees modernity as evil
they cannot progress.TMMK is also
conservative and is against equal
rights to women.How is that christians are much advanced than muslims in education and employment and in terms of numbers they are not even 3% of Indian population.It is because they did not reject modernity and progress.
Church gave importance to education and community service.
It continues to do so.Koran is no substitute for bread or modern education.

Anonymous said...

முஸ்லீம்களுக்கு கல்வியில்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது எல்லா விதத்திலும் ஒரு சரியான வழிமுறை என்றே நான் நினைக்கிறேன்

The A.P high court quashed the law providing reservation for muslims.You can
have reservation for backward sections of muslims under backward
caste quota but not reservation for muslim community as a whole.
Reservation on the basis of religion is unconstitutional.

Muthu said...

அனானி,

ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை திருப்பியது ஏதோ டெக்னிகல் கிரவுண்டில் என்று நினைக்கிறேன்.உறுதியாக தெரியவில்லை.

மற்றபடி நீதிமன்றம் சொல்வதை எல்லாம் என்னால் வேதவாக்காக எடுத்துக்கொள்ளமுடியவில்லை.
ex.tansi case,narmada case

Anonymous said...

//Why muslim women females are denied education//

paaditha dalith (hindhu madaithai sarantha) aangaluke ida othikidu endra helpkuda paanamudiyathu IIT to ANNA UNVERSITY vaaraikum naanga thaan irrupom endru solluringa

ithula antha poolainga vera paaduchutu theruvulla nikkanuma............?

Swamy red bull

Gnaniyar @ நிலவு நண்பன் said...

அன்பின் முத்து

ஒரு தொலைநோக்குப் பார்வையோடு அலசி ஆராய்ந்ததற்கு மிக்க நன்றி..

சந்திப்பு said...

முத்த இசுலாமியர்கள் குறித்து நல்ல பதிவினை வெளியிட்டுள்ளீர்கள் வாழ்த்துக்கள்.

நீங்கள் கூறியிருப்பதுபோல் இசுலாமிய மக்கள் இன்றைக்கு மிகவும் பாதிக்கப்பட்ட, கீழ்த்தரமான நிலையில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மையே!

மேலும் இசுலாமிய மத அடிப்படைவாதிகள் இந்த இசுலாமிய மக்களை தனிக்கொட்டடியில் அடைத்து வைக்கும் முயற்சியையே தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இந்த மக்களை ஜனநாயக இயக்கங்களிலும், இதர பெரும்பான்மை மக்களோடும் இணையும் சூழலை அவர்கள் உருவாக்குவதில்லை.

இந்த மக்களைப் பொருத்தவரை இன்றைக்கு மிகவும் வறிய நிலையில் இருப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இவர்களது பொரளாதாரம், வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மிகவும் அசுத்தமான சூழலில் வாழவேண்டிய நிலையில் இருக்கிறார்கள். கல்வியறிவு, வேலையின்மை போன்றவை இம்மக்களிடையே கடுமையாக நிலவுகிறது. இவர்களது வாழ்க்கையே பீடி சுற்றுதல் போன்று மிகவும் சிறு, குடிசைத் தொழில்களையே நம்பி இருக்கிறது.

இம்மக்களது வாழ்க்கையை வளமாக்கிட, மத்திய - மாநில அரசுகள் விஷேசமான திட்டங்களை தீட்டி இம்மக்களி பொருளாதாரம், வாழ்க்கை சூழல் உயர்ந்திட திட்டங்களை வடிவமைத்து அதை உண்மையிலேயே செயல்படுத்திட வேண்டும்.

இசுலாமிய மக்களுக்கு இடஒதுக்கீடு என்பது இன்றைய நிலையில் பொருத்தமாக இருக்காது. இது சங்பரிவாரங்களின் சூழ்ச்சிக்கே பலியாகக்கூடிய சூழல் உள்ளது. அது மட்டுமின்றி தாழ்த்தப்பட்ட மக்கள் இசுலாமிய மதத்தை தழுவினால், அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை. எனவே மத்திய அரசு இந்த சட்டத்தில் உடனடியாக திருத்தத்தை கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்த மதத்தை தழுவினாலும் இடஒதுக்கீடு பொருந்தும் என்ற திருத்தத்தை கொண்டு வந்தாலே மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இசுலாமிய அடிப்படைவாதிகள் இம்மக்களை ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். மதம் என்ற போர்வைக்குள் இந்த மக்களின் அனைத்து கலாச்சார - பொருளாதார உரிமைகள் நசுக்கப்படுகிறது. இசுலாமிய அடிப்படைவாதம் பெருகப் பெருக இந்த மக்களின் வாழ்க்கை அதாள, பாதாளத்திற்கு செல்லும் நிலை உள்ளது. எனவே தாலிபானிசம் வளராமல் பார்த்துக் கொள்ள இசுலாமிய மக்கள் முன்வருவதோடு, ஜனநாயக நீரோட்டத்தில் இணைவதற்கு முழுமையான கவனம் செலுத்திட வேண்டும்.

சங்பரிவாரத்தாலும், அல்கொய்தா, தாலிபானிசம் போன்ற மதஅடிப்படைவாத அமைப்புகளால் இந்த மக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது கூட இன்றைக்கு அருகி வருகிறது. தீவிரவாதிகள் என்றாலே அது இசுலாமியர்களாகத்தான் இருப்பார்கள் என்ற சித்திரத்தை சங்பரிவாரம் புகுத்தி விட்டுள்ளது. எனவே இந்த மக்களை பெருந்திரள் ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பதற்கு விசேஷமான சூழலை உருவாக்குவதே இந்த மக்களுக்கு செய்யும் தொண்டாகும்.

அடுத்து இந்திய இசுலாம் என்பது அரபு வழிவந்ததல்ல; இது இந்திய வழியிலானது இவர்கள் பேசும் உருது மொழிக்கும் அரபுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த மொழி இந்திய மொழி! இந்த மொழியை பாதுகாப்பதற்கும், மேலும் வளர்த்தெடுப்பதற்கும் அரசு திட்டங்களை வகுத்திட வேண்டும்.

அடுத்து இந்தியாவில் இசுலாமிய மதத்தில் உருவாகியுள்ள சூபியிசம் மிக அற்புதமான இசுலாமாக உருவெடுத்து வருகிறது. இந்த சூபியிசம் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தோடு உருவாகி வருகிறது. எனவே இந்த சூபியிசம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிட வேண்டும்.

நன்மனம் said...

முத்து (தமிழினி) ஒரு சமுதாய மாற்றத்திற்கான நல்ல துவக்கம்.ஒரு தொலைநோக்குப் பார்வை பதிவு. இப்பணி தொடர்ந்திட வாழ்த்துக்கள்.

ஸ்ரீதர்

பட்டணத்து ராசா said...

சந்திப்பு சொல்லுவது போல எல்லா முஸ்லிம் மக்களும் அப்படி இல்லை என்பது என் கருத்து, எல்லா மக்களைப் போல பலத்தரப்பட்ட பொருளாதார நிலையில் இருப்பதாகவே படுகிறது.

//பெரும்பான்மை மக்களோடும் இணையும் சூழலை அவர்கள் உருவாக்குவதில்லை.//


//இந்த மக்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பது கூட இன்றைக்கு அருகி வருகிறது.//

(தமிழகத்தில்)கண்டிப்பாக இப்படியில்லாம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

//அடுத்து இந்தியாவில் இசுலாமிய மதத்தில் உருவாகியுள்ள சூபியிசம் மிக அற்புதமான இசுலாமாக உருவெடுத்து வருகிறது. இந்த சூபியிசம் மதச்சார்பற்ற கண்ணோட்டத்தோடு உருவாகி வருகிறது. எனவே இந்த சூபியிசம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிட வேண்டும்.
//

சூபியிசம் இந்தியாவில உருவாகிச்சா எனக்கு தெரிச்சு இல்லைங்க, இதுக்கு எதாவது அதாரம் இருந்தா தாங்க சந்திப்பு. தெரிஞ்சுக்கலாம்.

Prasanna said...

Hi Muthu

Excellent Post

Its seems followers of Islam perpetually suffer from sense of persecution while the fact of the matter they are mostly the preperators rather than the persecuted

I have been noticing that its become fashionable among modern liberals and centristist to say Islam is a religion of peace and universal brotherhood and its only the fringe elements who are bringing disrepute to it


I tend to disagree.Its crystal clear to any unbiased reader that their scripture sanctions use of force and violence against infidels
(for example how much ever Hindu fundamentalists deny,caste discrimination is rooted in the vedas.that is the truth)

What is required is brutal enforcement of irreligious,progressive,secular education by the government and enforcement of uniform civil code based on secular progressive principles

Toleraating this religious fundamentalist (whether its Hindu or Islam variety )is the first step towards destroying harmony in the society.Human being need to engage each other has rational and thinking individuals

I think we had enough of this bullshit that all religions preach truth/brotherhood.I am tired and sick of this rhetoric

My solution might be simplistic but there is no other alternative
Sooner the society realises that menance called religion needs to be eradicated,better it will be

And if the religion comes in the way of my country' interests and growth,damn the religion(why do you bring religion in to Nuclear Deal-Muslims or Sangh Parivar trying to blindly support the Nepal King)

PS-I have responded to your question in Sasi'blog(:

மாமன்னன் said...

முத்து, சில இடங்களில் சரியாக எழுதியிருக்கிறீர்கள்.

ஆனால் சில இடங்களில் பேத்துகிறீர்கள். //காஷ்மீரை சேர்ந்த மக்களின் உரிமை போராட்டத்திற்கு ஒரு அர்ததம் உள்ளது.// எப்படி அர்த்தம் இருக்கிறது என்று எழுத முடியுமா?
//வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.// இது காஷ்மீரில் நடக்கவில்லை என்று சொல்கிறீர்களா? காஷ்மீரில் ஜிகாத் போராட்டம் ஆரம்பித்தபோது எப்படி ஆரம்பித்தது தெரியுமா? இந்துக்களே காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள். 3 நாள் அவகாசம் தருகிறோம். வெளியேறவில்லை என்றால் கொல்லப்படுவீர்கள். உங்கள் கொலைகளுக்கு நீங்களே பொறுப்பு என்று. ஏன் அந்த இந்துக்கள் காஷ்மீரிகள் இல்லையா? அதே போல முஸ்லீம்கள் தமிழ்நாட்டில் துண்டு பிரசுரம் வினியோகித்து கிரிஸ்துவர்களையும் இந்துக்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியேற துண்டு பிரசுரம் வினியோகித்து, அதன் பின்னரும் வெளியேறாதவர்களை கொன்றால், இதே போல, தமிழ்நாட்டில் முஸ்லீம்கள் தனி நாடு கேட்பதை "தமிழ்நாட்டு மக்களின் உரிமைப்போராட்டத்துக்கு ஒரு அர்த்தம் உள்ளது" என்று எழுதுவீர்களா?

மட்டுறுத்தினால் மட்டுறுத்திக்கொள்ளுங்கள். கவலை இல்லை.

http://ennamopo.blogsome.com
Those who forget the past are condemned to repeat it.

Anonymous said...

NANTRI MUTTHU, MIKAVUM ARUMIYAKA NIYAYAMAKA EZUTHIYUULIRKAL....THANKAALI PONTRA AATHARAVU SAKTHIKALIN THUNAIYUDAN MUSLIMKALUKKUM IDA OTHUKKEEDU KIDAITTHAAL NALLATHU!

Anonymous said...

NANTRI MUTHU!

Muthu said...

பரமபிதா,

கருத்துக்கு நன்றி.


ஆரோக்கியம் அவர்களே,

எல்லா பின்னூட்டங்களையும் மட்டுறுத்துவது என் நோக்கம் அல்ல.பிரச்சினைக்குறியது என்று எனக்கு படும் பின்னூட்டங்களை மட்டும் மட்டுறுத்துவது என் நோக்கம்.

சில இடங்களில் நன்றாக எழுதி உள்ளதாக கூறியதற்கு நன்றி.நான் யாரையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்றோ அல்லது வருத்தப்பட வைக்கவேண்டும் என்றோ எழுதுவது இல்லை. எனக்கு தெரிந்தததையே எழுதுகிறேன்.

நான் பேத்துவதாக கூறி இருக்கிறீர்கள்.
காஷ்மீர் உரிமை போராட்டத்தை ப்பற்றி நீங்கள் கூறி உள்ளீர்கள்.நான் எந்த மாயசூழலை பற்றி எழுதினேனோ அதே மாயசூழலில் என்னை மாட்ட வைக்க முயல்கிறீர்கள்.

காஷ்மீர் பற்றி எத்தனையோ மட்டங்களில் எத்தனையோ பேர் பேசியாகிவிட்டது.உங்களுக்காக சில சுட்டிகளை நம் தமிழ்மணத்தில் இருந்தே தருகிறேன் இப்போதைக்கு.

http://thamizhsasi.blogspot.com/2005/06/1.html

http://thamizhsasi.blogspot.com/2005/07/2.html

http://thamizhsasi.blogspot.com/2005/08/3.html

http://thamizhsasi.blogspot.com/2005/08/4.html

http://thamizhsasi.blogspot.com/2005/08/5.html

http://thamizhsasi.blogspot.com/2005/08/6.html

ஆகவே இதில் வெளிநாட்டு கூலிபட்டாளத்தை நான் ஆதரிக்கவில்லை.ஆனால் அந்த மண்ணை சேர்ந்தவர்களின் உரிமை போராட்டத்தை நான் மதிக்கிறேன்.

Muthu said...

எதை பேசினாலும் பிரிவினைவாதிகள் என்று முத்திரை குத்தும் இந்திய தேசிய குணம் சார்ந்த பிரச்சாரம் இன்னும் செலாவணி ஆவது எனக்கு வருத்தம்தான்.

தருமி said...

:headbanger:

Muthu said...

இந்த ஹெட்பேங்கர் என்பதை சிறிது விலாவாரியாக விளக்கமுடியுமா?

நாளைய பதிவின் தலைப்பு "தருமிக்கு சில கேள்விக்ள்" :)))

Anonymous said...

சகோதரர் தமிழினி அவர்களே!

உங்களின் நடுநிலையான பார்வைக்கு நன்றிகள். மிக எளிய நடையில் தெளிவான சிந்தனையுடன் விஷயத்தை அணுகியுள்ளீர்கள். சில இடங்களில் எனக்கு மாற்று அபிப்பிராயம் உண்டு. வரிக்கு வரி இல்லையெனினும் சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

எது தீவிரவாதம் என்பதைக் குறித்து சரியான கண்ணோட்டத்துடன் இருக்கிறீர்கள் என்பதை காஷ்மீர், பலஸ்தீன் மக்களின் உரிமைப் போராட்டத்தைக் குறித்த உங்களின் எண்ணம் வெளிப்படுத்துகிறது.

ஆனால் //வன்முறை, அதுவும் அப்பாவி மக்களின் மீது வன்முறை என்பதை வழிமுறையாக கொண்ட எந்த இயக்கமும் எதையும் சாதித்துவிடமுடியாது.

ஏனென்றால் மூலப்புத்தகத்தில் உள்ள சில தகவல்களை மற்றும் கருத்துக்களை அடிப்படையாக கூறித்தான் தீவிரவாதிகள் இயங்குகிறார்கள்.//


இவ்வார்த்தைகளில் தீவிரவாதத்தில் ஈடுபடுவோரை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்துவது போல் தெரிகிறது. ஒரு வேளை நான் விளங்கிக் கொண்டதில் உள்ள தவறாகக் கூட இருக்கலாம். எப்படியிருந்தாலும் இங்கு ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகிறேன்.

இஸ்லாம் அதனுடைய மூலப் புத்தகத்தின் மூலம் ஒரு போதும் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை. தவறாக விளங்கிக் கொண்ட சிலரால் தவறுகள் நடக்கும் பொழுது அதனை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்துவது தான் ஏன் என்று புரியவில்லை.

இஸ்லாம் அநியாயம் இழைக்கப்பட்ட மக்களுக்காக(கவனியுங்கள், இங்கு முஸ்லிம்களுக்காக என்று கூறவில்லை. அநியாயம் இழைப்படுகிற அடக்கி ஒடுக்கப் படுகிற எல்லா மக்களுக்காகவும் என்று தான் கூறுகிறது) அநியாயம் இழைப்பவர்களோடு, ஏகாதிபத்தியவாதிகளோடு போராட சொல்கிறது. அவ்வாறு போராடும் பொழுது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளவும் அனுமதிக்கவில்லை.

போராளிகளுக்கு என்று சில வரம்புகளையும் இஸ்லாம் விதிக்கிறது.

முக்கியமாக, 1. அநியாயம் யார் செய்கிறானோ அவனை மட்டுமே இலக்காக வைக்கவும், அவ்வாறு இலக்கு வைக்கும் போழ்து எந்த விதத்திலும் வரம்பு மீறாமலும்(அதாவது மிகக் கொடூரமாக பழிவாங்கல், கழுத்தை அறுத்தல், படு மோசமாக சித்திரவதை செய்தல் போன்ற மனிதாபிமானமற்ற செயல்களைச் செய்யாமல்) இருக்க அறிவுறுத்துகிறது.

2. என்ன காரணம் கொண்டும் பெண்கள், சிறுவர், வயோதிகர், நோயாளி, எதிர்த்து தாக்க சக்தி அற்றவர் போன்றவர்களை இலக்காக வைக்கக் கூடாது எனக் கூறுகின்றது. மட்டுமல்ல அவர்கள் இருக்கும் இடத்தில் தாக்குதல் நடத்தக் கூடாது எனக் கூறுகிறது.

3. இதையும் மீறி அப்பாவி ஒருவர் கொல்லப்பட்டால் அது இவ்வுலக மக்கள் அனைவரையும் கொல்வதற்கு சமம் என்று கூறி அப்பாவியைக் கொல்வதை மிகக் கொடிய பாவமாக ஆக்குகிறது.

உண்மையில் மூல புத்தகத்தைப் படித்து இஸ்லாம் கூறுகிறது என்பதற்காக அடக்கி ஒடுக்கப் பட்டவர்களுக்காக போராட வருபவர்கள் இந்த மூன்று நிபந்தனைகளுக்கு உட்பட்டு போராடுபவர்கள் மட்டுமே.

பாதியை எடுத்துக் கொண்டு பாதியை பேணாமல் அல்லது அறியாமல் அப்பாவிகள் மீது தாகுதல் தொடுப்பவர்களை எப்படி இஸ்லாத்திற்காக போராடுபவர்கள் என்று எடுத்துக் கொள்ள இயலும்.

//சங்பரிவாரை எதிர்ப்பவர்கள் பின்லேடனை ஆதரிப்பவர்கள் என்பதுபோல் ஒரு தோற்றம் உருவாக்கப்படுகிறது.

ஊசி நுழையும் இடத்தில் புல்டோசரையே நுழைக்கும் சங்பரிவாரின் பிரச்சார சூழ்ச்சியில் விழுந்து மேலும் மேலும் இஸ்லாமியர் தனிமைப்படும் அபாயம்தான் இங்கு உள்ளது.
இந்த நிலையை மாற்றுவதுதான் முஸ்லீம் அறிவுஜீவிகளின் தலையாய கடமை.//


மிகச் சரியாக சங்க்பரிவாரின் சூழ்ச்சியை தோலுரித்துக் காட்டியுள்ளீர்கள். நிச்சயமாக ஒவ்வொரு முஸ்லிமும் தீர்க்கமாக சிந்தித்து முடிவுகள் எடுக்க வேண்டிய வரிகள் இவை. தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு முஸ்லிம் செய்ய வேண்டிய முதல் செயலும் இதுவாக அமைந்தால் வருங்காலத்திலாவது இச்சமூகத்தின் மேல் சுமத்தப் பட்டிருக்கும் அவதூறு மாற ஒரு வழி பிறக்கும்.

நீங்கள் இவ்வளவு தெளிவாக சில விஷயங்களை நடுநிலையோடு அணுகியிருந்தும் அதனுடைய நியாயத்தை ஏற்றுக் கொள்ளாத சிலரின் பின்னூட்டம் எனக்கு மிக்க வியப்பை அளிக்கிறது. ஏன் இந்த சமூகத்தோடு இத்தனைக் காழ்ப்புணர்ச்சியோடு இருக்கிறார்கள் என்பது இன்னும் என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.

சகோதரர் ஆரோக்கியம் அவர்கள் காஷ்மீர் மக்களின்(கவனியுங்கள் சகோதரர் ஆரோக்கியம் அவர்களே! காஷ்மீர் முஸ்லிம்களின் அல்ல! காஷ்மீர் மக்களின்) உரிமைப் போராட்டத்தை தமிழ் நாட்டோடு சம்பந்தப் படுத்தி கேள்வி எழுப்பியிருப்பதும் எனக்கு வியப்பை அளிக்கிறது. காஷ்மீரையும், தமிழகத்தையும் ஒரே அளவு கோலில் வைத்துப் பார்ப்பது சரியா? இது ஒரு மிகப் பெரிய சர்ச்சையாதலால் அதனைக் குறித்து இங்கு விவாதித்து இப்பதிவின் மூலக் கருத்தை திசை திருப்ப விரும்பவில்லை. சகோதரர் ஆரோக்கியம் அவர்கள் விரும்பினால் என் வலைப்பதிவில் இக்கேள்வியை எழுப்புங்கள். அங்கு இதனைக் குறித்து விரிவாக விவாதிப்போம்.

மீண்டும் உங்களின் நடுநிலையான பார்வைக்கு நன்றி சகோதரர் தமிழினி அவர்களே!

அன்புடன்

இறை நேசன்.

Muthu said...

கருத்துக்கு நன்றி நண்பர் இறைநேசன் அவர்களே


//இஸ்லாம் அதனுடைய மூலப் புத்தகத்தின் மூலம் ஒரு போதும் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை. தவறாக விளங்கிக் கொண்ட சிலரால் தவறுகள் நடக்கும் பொழுது அதனை இஸ்லாத்தோடு சம்பந்தப் படுத்துவது தான் ஏன் என்று புரியவில்லை.//

நீங்கள் எழுதியுள்ள இந்த விஷயத்தைத்தான் நான் மாயச்சூழல் என்றேன்.

Anonymous said...

முத்து,

அந்த பதிவுகளை நானும் படித்திருக்கிறேன். அதற்கு பதிலும் எழுதியிருக்கிறேன். அவைகள் அந்த பதிவாளரால் மட்டுறுத்தப்பட்டு நீக்கப்பட்டன. இதோ இங்கு இறைநேசனும் சுவனப்பிரியனும் விவாதத்துக்கு அழைக்கிறார்கள். அங்கே எழுதப்பட்ட என் பதிவுகள் நீக்கப்பட்டன. சசி பேத்துகிறார். அதனை அங்கே எழுதினேன். காரணத்தோடு. எதிர்கொள்ள முடியவில்லை என்றால் நீக்கிவிட்டு தன்னைத்தானே அறிவுஜீவி என்று பட்டம் கொடுத்துக்கொள்ளலாம். குறைந்தது, என் பதிலை அனுமதித்துவிட்டு அதற்கு ஏதோ பதிலெழுதும் பண்பு உங்களிடம் இருக்கிறது. அது இல்லாதவர்களிடம் என்ன பேச முடியும்?

நீங்கள் சொல்கிறீர்களே, வெளிநாட்டு ஆட்கள் உள்நாட்டு ஆட்கள் என்று, அதெல்லாம் சும்மா பேத்தல். காஷ்மீரிகளாக "தாயாய் பிள்ளையாய்" இருந்தவர்கள்தான், *********************** துரத்தினார்கள். படிக்க மறுத்தால், பார்க்க மறுத்தால் யார் என்ன செய்ய முடியும்? அதே விஷயம் தமிழ்நாட்டில் நடக்காது என்று நீங்களாய் நினைத்துகொண்டால், நான் என்ன செய்ய முடியும்? ஒரு வருடத்துக்கு முன்னர் காஷ்மீர் முதலமைச்சராய் இருந்த முப்டி முகமது சையதின் பெயர் என்ன தெரியுமா? புட்சர் ஆஃப் அனந்த்நாக். போய் படித்துப்பாருங்கள்.


ஆரோக்கியம்
ennamopo.BLOGSOME.COM
Those who forget the past are condemned to repeat it.

(ஒரு வாக்கியம் அழிக்கப்பட்டது)

Anonymous said...

இந்தியாவைப் பொருத்தவரை மத்திய அரசியலில் முஸ்லிம்களின் சொல் எடுபடவில்லை. அதற்குக் காரணம் வலுவான இஸ்லாமிய கட்சி இல்லை. எந்த கட்சி ஆட்சிக்கு வர நேர்ந்தாலும் அல்லது வர யோசித்தாலும் இஸ்லாமியர்களின் துணை தேவைதான். தேர்தல் நடக்கும் காலங்களில் ஏதாவது சில பொய் வாக்குறுதிகளைக் காதுகுளிர கொடுத்துவிட்டு வெற்றி பெற்றதும் யானைக்கு சோளப்பொறிபோல ஒன்றிரண்டை நிறைவேற்றுவதுதாம் தான் இது வரையில் நடந்து வந்திருக்கிறது!

தமிழக அரசியலைப் பொருத்தவரையில் தமுமுக அவ்வளவு பலம் வாய்ந்ததாக இல்லை. அதற்குக் காரணம் நல்ல வலுவான தலைமை இல்லை. லத்தீப் போன்ற தலைவர்கள் நல்லவர்கள். நன்கு அரவணைத்து வாதிட்டு இஸ்லாமியர்களுக்காகப் போரிட்டு வெற்றியும் பெற்றார்கள். ஆனால் அதன்பின்பு எச்சில் சோற்றுக்கு ஆசைப்பட்டு ஜெயலலிதாவிடம் காசு வாங்கிக் கொண்டு அவர் சொல்படி எல்லாம் நடக்க ஆரம்பித்தனர் என்பதுதான் உண்மை. முஸ்லிம்கள் மைனாரிட்டி என்று யார் சொன்னது? முஸ்லிம்கள் அதிக அளவில் வசிக்கும்நாடுகளில் இந்தியாவும் ஒன்று. தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்தால்கூட அதிமுக, திமுகவை விட மும்மடங்கு வலுவான அரசியல் சக்தியாக விளங்கமுடியும். ஏன் அவர்களால் முடியவில்லை? ஒவ்வொரு ஊரிலும் மற்ற கட்சிகளில் இருக்கும் இஸ்லாமியர்களைக் கணக்கெடுங்கள். உங்களுக்கே தலை சுற்றும்!

எனவே இஸ்லாமியர்களுக்கு என ஒரே ஒரு கட்சி தமிழக அளவில் இயங்க வேண்டும். எல்லா ஜமாத்துகளிலும் அந்த கட்சியைப் பற்றிய பிரசுரங்கள், ஆலோசனைகள் அறிவுரைகள் சொல்லப்பட வேண்டும். நல்ல வலிமையான தலைவர் அந்த கட்சியினை வழிநடத்த வேண்டும். எல்லா இஸ்லாமியர்களும் அந்த கட்சிக்கே வாக்களிக்க வேண்டும். நான் சொல்வது நடந்தால் அடுத்துவரும் சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது இஸ்லாமியர்களின் ஒருங்கிணைந்த ஒரே கட்சிதான்! சந்தேகமே இல்லை!

ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். அவருக்கு அவ்வப்போது ஆலோசனை சொல்வது இல.கணேசன், இராதாகிருஷ்ணன், சோ போன்ற பார்ப்பனர்கள். எனவே காசு,பணம் காட்டி இஸ்லாமியக் கட்சிகளை துண்டாடி விட்டார். இஸ்லாமியக் கட்சி மட்டுமா துண்டானது? திண்டிவனம் மூலம் காங்கிரஸ், பார்வர்டு பிளாக் கட்சி, வைகோ, சரத் மூலம் திமுக என பல கட்சிகளை சூறையாடினார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் அரசியல் நடவடிக்கைகளையே மிஞ்சியவர் ஜெயா என்றால் அது மிகையன்று. எதிராளிகளை பலம் கொண்டு தாக்குவதைவிட எதிராளிக்குள்ளேயே கலகம் மூட்டினால் நாம் எளிதில் வெல்லலாம் என்ற எண்ணத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டு அதில் வெற்றியும் கண்டவர் ஜெயலலிதா. எனவே நமக்கு நாமே அடித்துக் கொள்ளும் ஆட்டுமந்தையாக இல்லாமல் எல்லோரும் சேர்ந்து பார்ப்பனர்களையும் பாஜக, விஸ்வஹிந்து பரிஷத், இந்து முன்னணி போன்ற கட்சிகளையும் அதிமுக, மற்றும் ஜெயலலிதாவையும் எதிர்க்க வேண்டும். நேற்று வந்த ராமதாஸ், விஜயகாந்த் எல்லாம் கட்சி ஆரம்பித்து நன்கு தமிழகத்தினை கலக்கி வரும்போது தமிழ்நாட்டு இஸ்லாமியர்களாலும் நிறைய இடங்களைப் பிடிக்க முடியும். அவர்களாலும் தமிழகத்தில் ஒரு வலிமையான கட்சியாக ஆகமுடியும் என்று கூறி விடை பெறுகிறேன்.

வணக்கம்.

arunagiri said...

"மதங்களை மீறிய சிந்தனை உள்ள இஸ்லாமிய பெருமக்களை காண்பது கடினமாகவே இருக்கிறது".

இதைத்தான் pan-islamist approach என்று சொல்கிறார்கள். எங்கேயோ உள்ள துருக்கி காலிபா ஆட்சி கவிழ்ந்ததற்காக சக இந்தியரை அடித்து நொறுக்கிய கிலாபத்தில் தொடங்கி, இந்தியாவில் இருந்து கொண்டு பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கோஷமிடுவது, ஈரான் மேல் sanctions என்றால் இங்குள்ள முஸ்லீம்கள் மன்ம் புண்படும் என்று சொல்லி அதை எதிர்ப்பது, அரபியக் கொடுமையைச் சொல்லும் கால்கரி சிவா என்ற சக தமிழரை எதிர்த்து அரபிய மத அடிப்படைவாதத்தை ஆதரித்து நியாயப்படுத்துவது எனப் பல வகையிலும், நிலையிலும், காலகட்டத்திலும் இன்றும் தொடரும் இந்த attitude-க்கு இத்தகைய எல்லை தாண்டிய மதப்பற்றே காரணமாக இருந்து வருகிறது.

“முஸ்லீம்களுக்கு கல்வியில்,வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது எல்லா விதத்திலும் ஒரு சரியான வழிமுறை என்றே நான் நினைக்கிறேன்".

இது மேலும் மத அடிப்படையான பிரிவினைகள் வளரவே உதவும். நான் பிற பின்னூட்டங்களில் கூறியவற்றைத்தான் இங்கும் இன்னமும் அழுத்தமாக இதற்கு பதிலாகக் கூறுவேன்.

மதத்தையோ சாதியையோ வைத்து மனிதரை துண்டாடுவது தவறு என்று சொல்பவர்கள் உண்மையிலேயே செய்ய வேண்டியது இவை தாண்டிய ஒரு விஷயத்தை -பொருளாதார நிலை, குடும்பத்தில் எத்தனை பேர் உயர்கல்வி/தொழிற்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற சாதி மதம் தாண்டிய பொதுமைகளை- அடிப்படையாக்கி முன்னுரிமை கேட்பதும் போராடுவதுமே ஆகும். பொருளாதாரத்திலும் மேற்கல்வியிலும் பின்தங்கியுள்ள எல்லோருக்கும்- இஸ்லாமியர் உட்பட- இது உதவும். அதேசமயம் சல்மான்கான்களுக்கும், ஷாருக்கான்களுக்கும் இஸ்லாமியர் என்பதால் இட ஒதுக்கீடு என்பது போன்ற அபத்த விளைவுகளுக்கு இட்டுச்செல்லாமலும் தடுக்கும்.

இப்படித்தான் முன்பெல்லாம் இடதுசாரிகளும் போராடினர். இன்றோ வங்கத்திலும், கேரளத்திலும், மத்தியிலும் பிஜேபி, காங்கிரஸ் என்ற இரு எதிரிகளை ஒழிக்க வெளிப்படையாகவே இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளுடன் இணைந்து கொண்டு ஓட்டு வங்கி அரசியல் நடத்துகிறார்கள். முதலாளித்துவ அமெரிக்காவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் எதிரி என்பதால் இஸ்லாமிய அடிப்படைவாதம் இடது சாரிகளுக்கு நண்பன் என்று கொள்வதா? என்னவொரு ஆபத்தான அணுகுமுறை! இந்த appeasement politics சங் பரிவாரங்களுக்கு மேலும் உதவி, மத அடிப்படையிலான polarization-க்கு அடிகோலுகிறதே தவிர அரசியல் களத்திலிருந்து மதத்தை அகற்றப்பயன்படவில்லை.

Muthu said...

ஆரோக்கியம்,

காஷ்மீர் பிரச்சினை எதனால் எப்படி ஆரம்பித்தது? காஷ்மீர் மக்களின் எண்ணம் என்ன என்பதைத்தான் சசியின் பதிவில் இருந்து நான் எடுத்துக்கொண்டேன்.மற்றபடி வெறியூட்டப்பட்டால் எந்த மதத்தின் மனிதனும் மிருகமாவான் என்பது உண்மைதான்.

உதாரணம் காஷ்மீரில் மட்டுமல்ல, குஜராத்திலும் நமக்கு கிடைத்தது.

வெங்கட்,

நீங்கள் சொன்னதைத்தான் நானும் கூறிஉள்ளேன். அறிவுஜீவிக்கள் , மதத்தலைவர்கள் ஆகியோருக்கு உள்ள பொறுப்பாக நான் கூறி இருப்பது இதைத்தான்.அப்பாவிகள் மீதான வன்முறை தவறு என்பதை தீவிரவாதத்தை தேர்தெடுக்கும் ஆட்களுக்கு உணர வைப்பது தான் அவர்களின் தலையாய கடமை.
அதே சமயம் எல்லாரையும் முத்திரை குத்துவதும் முட்டாள்தனம். எவ்வளவோ பேர் மனிதநேயத்துடன் வாழ்கின்றனர்.அவர்களுக்கு உரிய மரியாதையை செலுத்த வேண்டுமல்லவா?


போலி டோண்டு,

நீங்கள் சொல்லியது பாதி சரி.இன்று முஸ்லீம்களுக்கு தேவை ஒரு அகில இந்திய தலைமை.அந்த தலைமை மதத்தை பெரிதாக நினைக்காமல் மக்களின் நலத்தை பெரிதாக நினைப்பவராக இருத்தல் அவசியம்.

அருணகிரி,

நீங்கள் குறிப்பிடும் ஆட்கள் மிகவும் குறைந்த அளவிலான ஆட்கள். இவர்கள் பெரும்பான்மை அப்பாவி முஸ்லீம்களின் மனதை கெடுக்காமல் பார்த்துக்கொள்வது முஸ்லீம் அறிவுஜீவிக்களின் கையில் உள்ளது.
மதப்பற்றில் எல்லைதாண்டிய என்று ஏதாவது உண்டா?

மதம் என்று வந்தால் இந்து,முஸ்லீம்,கிறிஸ்தவர் எல்லோரும் விமர்சனமின்றி ஆதரிப்பதை சிலர் மிஸ்யூஸ் செய்கிறார்கள் என்பதுதான் உண்மை.இதை தடுக்க மதங்களை மீறிய பார்வைதான் ஒரே வழி.

இடஒதுக்கீடு வாதத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை. முன்னேறிய முஸ்லீம்களுக்கு கொடுக்க சொல்லி யாரும் கேட்கவில்லை.ஆனால் 15 சதம் வரை வாழும் மககளை ஒதுக்கிவைத்து நாடு முனனேறிவிடமுடியாது.

இஸ்லாமிய அடிப்படைவாதிகளை யாரும் ஆதரிக்கவில்லை.ஆனால் அவர்களை எதிர்க்கிறேன் என்று கூறி மற்றவர்களையும் ஒதுக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Muthu said...

//முதலாளித்துவ அமெரிக்காவுக்கு இஸ்லாமிய அடிப்படைவாதம் எதிரி என்பதால் இஸ்லாமிய அடிப்படைவாதம் இடது சாரிகளுக்கு நண்பன் என்று கொள்வதா?//


பங்களாதேஷ் அகதிகள் விஷயத்தில் இருந்து இன்னும் பல விஷயங்களில் இடதுசாரிகள் மேல் இந்த குற்றச்சாட்டு உள்ளது. இதற்கு பதில் சொல்வது அவர்கள் பொறுப்பு.உங்களுடன் நான் ஒத்துப்போகிறேன்.

Muthu said...

ஆரோக்கியம்,

உங்களின் அடுத்த பின்னூட்டம்** (***moderated)இந்துக்களின் நிலையை இத்துடன் தொடர்பு படுத்துகிறது. அருணகிரிக்கு நான் சொன்ன பதில்தான் இதற்கும்.
அடிப்படைவாதிகளை திருத்துவது மதத்தலைவர்கள், அறிவுஜீவிகளின் கடமை. அவர்களை வைத்து அடிப்படைவாதிகளை அவர்கள் மக்களிடம் இருந்தே தனிமைப்படுத்தி திருத்துவது தான் சரியான வழிமுறை. மற்ற வழிமுறைகள் பிரச்சினையை அதிகப்படுத்தும் என்பது என் கருத்து.


இதை சாக்காக வைத்துக்கொண்டு இந்து தீவிரவாதத்தையும் இந்திய தேசிய வெறியையும் பரப்புவதும் தவறுதானே.

Anonymous said...

ஆனால் 15 சதம் வரை வாழும் மககளை ஒதுக்கிவைத்து நாடு முனனேறிவிடமுடியாது

Muslims have all rights in this country including rights for
minority.So they are treated
as equals in India.Compare
this with the rights of
religious minorities in many
islamic countries.Nobody prevents
muslims from starting schools
or colleges or industries.Instead
of Madarassas they could have started schools.As long as they
think that religion is everything
in life and modernity is evil no
help from govt. will be effective.
They dont need reservations, they
need a change in their attitude.

தருமி said...

அடிப்படைவாதிகளை திருத்துவது மதத்தலைவர்கள், அறிவுஜீவிகளின் கடமை// - இதில் முதல் பாதி ஒரு பெரிய ஜோக் என்பது தவிர வேறொன்றுமில்லை; மதத்தலைவர்கள் என்றாலே அவர்கள் அடிப்படை வாதிகள்தானே; திருந்தவேண்டியவர்களிடம் திருத்தும் பணியைக்கொடுக்கச் சொல்கிறீகளே..!!

தருமி said...

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் பின்னால் வரிசையாக வரப்போகும் மற்ற (மைனாரிட்டி) மதக்காரர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?

* இட ஒதுக்கீட்டுக்கு, பொருளாதார அடிப்படை என்ற நிலை வரவேண்டும்;

* ஆனால், அதில் பணக்காரர்களும், 'மற்ற'வசதி படைத்தவர்களும் வறுமைக்கோட்டுக்குக் கீழ் என்ற சான்றிதழ் வாங்கமுடியும்;

*அதிலும் ஏழைகளும், அதிலும் முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்களும் தோற்று நிற்பார்கள்.

* உண்மையான ஏழைகளை அடையாளம் காண முறையான ஒரு வழி வேண்டும்.

* அதற்கு அமெரிக்காவில் உள்ளது போல social security number முறை ஒன்று வேண்டும்.

* எனக்கென்னவோ, இம்முறை வந்தால் பினாமி,கறுப்புப் பணம், போலிச்சாதிச் சான்றிதழ்கள் என்பது போன்ற பல குளறுபடிகளுக்கு இம்முறை ஒரு 'சர்வரோக நிவாரணி'யாக இருக்க முடியும்.இதற்காகத்தான் அந்தப் பதிவு; ஆனால் பதிவர்கள் யாரும் கண்டுக்காம விட்ட பதிவும் அதேதான்.

தருமி said...

"நாளைய பதிவின் தலைப்பு "தருமிக்கு சில கேள்விகள்" :)))"//
- பயத்தோடு காத்துக் கொண்டிருக்கிறேன்....

Anonymous said...

//Nobody prevents
muslims from starting schools
or colleges or industries//

is sc/st/obc/bc people are prohibited to do this.....????

Dear first try to understand wht is resevation?

and why those people need reservation ?

Muslim community was one of the massive power to get freedom for india

so i think they have rights to ask.

-Sabre

நல்லடியார் said...

முத்து (தமிழினி),

தங்களின் நேர்மையான நடுநிலை விமர்சனத்திற்கு நன்றி.

கல்வி வேலை வாய்ப்புகளில் ஒதுக்கிட்டு விஷயத்தில் (அரசு கணக்குப்படி) 15% சதவீதத்திற்கும் அதிகமாக இருக்கும் ஒரு சமூகத்தை ஒதுக்கி விட்டு நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வது கடினம் என்ற ஒரு சிந்திக்கக்கூடிய பின்னூட்டத்திற்கு மத்தியில் இஸ்லாமியர்கள் என்றாலே நிராகரிக்கப்பட வேண்டியவர்கள் என்ற கோணத்தில் சிந்திக்கும் 'ஆரோக்கிய' சிந்தனையாளர்கள் இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

//முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு என்றால் பின்னால் வரிசையாக வரப்போகும் மற்ற (மைனாரிட்டி) மதக்காரர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?//

தருமி,

அவர்களும் தங்கள் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப பெற்று விட்டுச் செல்லட்டுமே!

வாசகன் said...

குமாஸ்தா பதவிக்கும் வழியின்றி (அயல்தேசம் சென்று) குமுறிக்கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்திடம் '"குடியரசுத்தலைவர்' பதவியே உனக்குத்தான், கண்ணைத்தொடச்சிக்கோ" என்கிற ஒரு அரசியல் நயவஞ்சகம் நடத்தப்படுகையில், 'வரிசையாக மற்ற மதத்தினரும் வந்து நிற்பார்கள்' என்றொரு வாதம் மறுப்பின் அரசியலாக!

தீவிரவாதத்தை எந்த (குர்-ஆனைப்) படித்த அறிஞரும் ஆதரிக்காது/எதிர்த்தே வரும் நிலையில் "அவந்தான் இவன்" என்கிற நக்கல்.

இந்தப்பதிவின் ஆதங்கத்தை; தொடரும் பின்னூட்டங்களின் அரசியலை, வைத்து ஒரு தனி கட்டுரையே போடலாம் போல - பார்க்கலாம்.

arunagiri said...

(no e-kalappai, sorry)

"நீங்கள் குறிப்பிடும் ஆட்கள் மிகவும் குறைந்த அளவிலான ஆட்கள்".

But unfortunately the Islamic agenda has been allowed to be set by these very few people.

"இவர்கள் பெரும்பான்மை அப்பாவி முஸ்லீம்களின் மனதை கெடுக்காமல் பார்த்துக்கொள்வது முஸ்லீம் அறிவுஜீவிக்களின் கையில் உள்ளது".

True. But muslim intellectuals are far and few and even those few seem to be(come) appeasers of fundamentalism rather than boldly, unequivocally opposing them. For example, can you think of any reformer like Ramanujar, Mohan Roy or Periyar coming from within Islam today to put forth strong criticisms against its fundamentalism and shake-up the religion from its 14th century time-freeze? Does such an intellectually open climate exist in Islam today? (If your answer is yes, there is no need for this blog). Islam has to allow open dialogs and you can not put preconditions about it (that others must shut first). To the extent that Islamic fundamentalism affects others they will talk about it.

"மதப்பற்றில் எல்லைதாண்டிய என்று ஏதாவது உண்டா?"

Unfortunately Yes, proven again and again. My previous post itself has all the examples.

"ஆனால் 15 சதம் வரை வாழும் மககளை ஒதுக்கிவைத்து நாடு முனனேறிவிடமுடியாது".

Sharuk Khans and Salman Khans come within that 15%. As you said "மதங்களை மீறிய பார்வைதான் ஒரே வழி", the true solution is, "பொருளாதார நிலை, குடும்பத்தில் எத்தனை பேர் உயர்கல்வி/தொழிற்கல்வி பெற்றிருக்கிறார்கள் என்பது போன்ற சாதி மதம் தாண்டிய பொதுமைகளை- அடிப்படையாக்கி முன்னுரிமை கேட்பதும் போராடுவதுமே ஆகும்". The needy Muslims will be well-covered within this definition.

"இஸ்லாமிய அடிப்படைவாதிகளை யாரும் ஆதரிக்கவில்லை.ஆனால் அவர்களை எதிர்க்கிறேன் என்று கூறி மற்றவர்களையும் ஒதுக்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்".

I agree. Same way, please note the tendency among media (and many here too) to brand anyone that supports Hindus as "Sangh Parivar" or within some such uni-dimensional phrase.

Anonymous said...

Muslims already get reservations under OBC category in both central govt jobs and in tamil nadu, in both jobs and education.A.Marx says that 92% of muslims are in OBC category and get all benefits of reservation. www.keetru.com
So what else they want.

Minorities enjoy some rights including right to establish and
run educational institutions and get govt. funding for the same.
OBCs,SCs,STs do not have such a
right.

There are poor in every community.
So shall we declare all Hindus,
Christians,Buddhists as backward.
Nobody prevented muslims from acquiring education or starting
industry.Govt. did not
discriminate against them.Nor did the society.So if they think they
are still backward problem is within muslim society.

Muslims restricted womens
access to education.They feared that co-education and women mingling with men would corrupt
women and restricted womens access
to outside world. This explains the huge gap between literacy rate and employment in organised sector among hindus and muslims.How will
reservation solve this.