Friday, April 07, 2006

சில சுவையான பின்னூட்டங்களும் விளக்கங்களும்

தெருவோர அரசியல் பொதுகூட்டத்தில் சோடாவை குடித்துவிட்டு, தலைவர் வரும்வரை, ஜார்ஜ் புஷ்ஷிற்கு சவால் விட்டு பேசும் உடன்பிறப்பு ரேஞ்சிற்கு என்னை கொண்டுவந்துவிட்டார் ஒரு நண்பர்.ஒரு நண்பர் நான் நடுநிலைமை வாதியே இல்லை என்று உணர்ச்சிவசப்பட்டார்.அவர்களுக்கு ஒரு விஷயம். என்னிடம் திமுக உறுப்பினர் கார்டு எல்லாம் இல்லை.

என்னுடைய கலைஞர் சம்பந்தப்பட்ட கட்டுரைத்தொடரை படித்த மற்றும கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. சில பதில்களை பதிவாக போடலாம் என்ற தோன்றியது.

நடுநிலைமை என்பது என்ன?

தினமலர். ஒரு நடுநிலை நாளிதழ் என்று போட்டுகொண்டு விஷவிதை தூவுவதா? அல்ல.

(என்னுடைய பதிவுகள் தினமலரின் பரிந்துரை இல்லாமலே பதிவுக்கு 500 பேர் என்ற விகிதத்தில் படிக்கப்படுகிறது.ஹி.ஹி.(முத்து அடங்குடா டேய்)

என்னை பொருத்தவரை ஒரு கட்டுரையோ ஒரு விமர்சனமோ சில அடிப்படை விஷயங்களை பொறுத்து எழுதப்படுகிறது.இந்த கட்டுரையை பொறுத்தவரை இது இருபெரும் திராவிட தலைவர்களை மட்டும் பற்றிய வெறும் ஒப்பீடுதான்.

என்னுடைய அடிப்படை எண்ணங்கள் சார்ந்து நான் எழுதுகிறேன். மற்றவர்கள் அவர்கள் அடிப்படை எண்ணங்கள் சார்ந்து எழுதுவார்கள்.படிப்பவர்கள் சொந்த முடிவுக்கு வரவேண்டும்.அதுதான் நடக்கவேண்டிய விஷயம். நான் சொல்கிறேன். ஆகவே நீ நம்பு என்பதெல்லாம் விவாதம் அல்ல.

என்னுடைய கட்டுரையின் அடிப்படை மக்கள்நலதிட்டங்கள், சர்வாதிகாரம், ஊழல், இந்துத்வா மற்றும் சில. மக்களை, சமுதாயத்தை பாதிக்கக்கூடிய விஷயங்களை பேசுபொருளாக வைத்து நான் எழுதினேன்.மற்றபடி ஒரு நண்பர் கூறியபடி மதுரை சிறுவியாபாரிகளுக்காகவாவது ஜெயலலிதா ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை.அந்த பிரச்சினையை சரிசெய்ய பல்வேறு மாற்று ஏற்பாடுகள் உள்ளன.(சுப்ரமணியன்சாமி இட்லி கடையை அதகளம் செய்தாராமே) .

சிலர் ஜெயலலிதாவும் நிறைய மக்கள் நலதிட்டங்களை செய்துள்ளார் என்றார்கள். இதில் இரண்டு விஷயங்களை பார்க்கவேண்டும். முதலில் விழிப்புணர்வு உள்ள இன்றைய சமுதாயத்தில் யார் ஆட்சி செய்தாலும் ஓரளவு இந்த நலத்திட்டங்களையோ சலுகைகளையோ கொடுத்துத்தான் ஆகவேண்டும். வேறு வழியில்லாமல் கொடுக்கும் ஜெயலலிதாவையும் பொதுவாகவே மக்கள் நல திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கருணாநிதியையும் நான் ஒப்பிட்டேன். அடுத்ததாக புள்ளி விவர அடிப்படையிலும் நாம் ஒப்பிடலாம்.முடிவு அவரவர் கையில்.

இந்துத்வா என்ற விஷயத்தை உரித்துக்கொண்டே போனால் கடைசியில் வேதத்தை அடிப்படையாக கொண்டு பார்ப்பனீயம் தான் வெளிப்படும். இதை தனிப்பதிவாகவே என்னால் எழுதமுடியும்.சொல்லுங்கள். எழுதுகிறேன்.
அதற்காக என்னால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகளையும் சப்போர்ட் செய்யமுடியாது.இதன் அடிப்படையிலும் நான் ஜெயலலிதாவின் கொள்கைகளை விரும்பவில்லை.

நண்பர் எஸ்.கே கலைஞா ஆட்சியாக இருந்தால் சங்கரராமன் செத்திருக்க மாட்டான் என்பது மூடநம்பிக்கை அல்லவா என்று கேட்டிருந்தார். ஆகவே மூட நம்பிக்கை என்றால் என்ன என்றே தெரியாத ஆட்கள் இங்கே இருக்கிறார்கள். அதற்கு பொட்டீக்கடை சரியான பதிலை கூறிஉள்ளார்.அதை சுருக்கமாக இங்கே தருகிறேன்.

இந்த அரசு குற்றம் சாட்டியுள்ள நபர்கள்தான் இக்குற்றத்தை செய்தார்கள் என்று வைத்துக்கொண்டால் அந்நபர்கள் கலைஞர் ஆட்சியாக இருந்திருந்தால் இக்குற்றத்தை செய்ய துணிந்திருக்கமாட்டார்கள் என்பதுதான் அதற்கு பொருள்.இக்குற்றத்தை செய்ய மோட்டிவ் வேறு யாருக்கும் இல்லை என்பதுதான் இந்த கேசின் சுவாரசியமே.

சாணக்யன் கூறியுள்ள சன் டிவியை பற்றி வேண்டிய மட்டும் பேசியாயிற்று. தினமலருக்கு இருக்கும் உரிமை சன்டிவிக்கும் உண்டு. பிடித்தவர்கள் பாருங்கள்.மற்றவர்களுக்கு ரிமோட் இருக்கவே இருக்கிறது.நுகர்வு கலாச்சாரம்.ஆனால் இந்த வகை பிரச்சாரம் எடுபடலாம்.காரணங்கள் பல.


விஜயகாந்த் ஒரு மாற்றா என்று பார்த்தாலும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.அவர் அரசியலுக்கு வந்ததை நான் கேள்விக்குட்படுத்தவில்லை.ரஜனிகாந்த என்பவருடன் ஒப்பிட்டால் இவர் 1000 மடங்கு நல்லவர்.நான் விஜயகாந்தை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்.

ரஜினிப்பற்றி சில

1.தன்னுடைய படங்கள் ஓடவேண்டும் என்பதற்காகவே ரசிகர்களை உசுப்பேத்தி சுரண்டியவர் ரஜினிகாந்த்.யாராவது மறுக்கமுடியுமா?

2.தன்னை நம்பி பலர் இருக்கிறார்கள் என்றும் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்யமுடியும் என்றும் நம்பும் ஒருவர்,பக்திமான், ஏற்கனவே சில தலைமுறை களுக்காவது சொத்து சேர்த்துவிட்ட ஒருவர் அரசியலுக்கு வர தயங்க தேவையில்லை.ஆனால் இவர் சினிமா பாணியில் மக்கள் எல்லாம் தன் வீட்டு முன்னால் வந்து தன்னை முதலமைச்சர் பதவி ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவார்கள் என்று நம்புவதாக தெரிகிறது.

3.ஒருவேளை இவர் பதவிக்கு வந்தால் லதா ரஜினிகாந்தையாவது இவர் கண்ட்ரோல் செய்யமுடியுமா? (ரஜினி 25 நிகழ்ச்சி ஞாபகம் வருகிறதா)

(இதற்கெல்லாம் எழுத்தாளர் ரஜினி ராம்கி பதிலளிக்கவேண்டியதில்லை)

விஜயகாந்திற்கு வருவோம்.அவா தாராளமாக அரசியலுக்கு வரலாம்.ஆனால் அவர் அரசியல் செய்யும் பாணி என்ன?

ஆளுங்கட்சி நன்றாக ஆட்சி செய்தால் இவர் ஏன் கட்சி துவக்குகிறார்? இவர் எடுத்தவுடன் கலைஞரை மட்டும் தாக்க துவங்கினார்.பிறகு பாலம் அது இது என்று அவர்கள் சில விஷயங்களை இவருக்கு விளக்கியவுடன் பிறகு இருவரையும் (ஆளுங்கட்சி, எதிர்கட்சி ) தாக்குகிறார்.

இவர் கட்சி சட்டத்தில் இவர்தான் எல்லாம் என்று இருக்கிறதாம். சந்திரபாபு நாயுடு எஃபக்ட் இது. ஜனநாயகம். மற்றபடி இவர் நல்லவராக இருக்கும் பட்சத்தில் கொஞ்சம கொஞ்சமாக வளருவதில் தவறில்லை. திருமாவளவனும் நல்லவர்தான். விஜயகாந்தைவிட அவர் அதிக காலமாக அரசியலில் இருக்கிறார்.அவரை ஏன் யாரும் மொழியவில்லை?

நல்லவேளை.சசிகலா குடும்பத்தை யாரும் ஆதரிக்கவில்லை. இன்றைய முதல்வர் ஜெயலலிதாவை எம்.ஜீ.ஆர் போல் கல்ட் ஃபிகர் ஆக்கி நாளை ஜெயலலிதாவின் பெயரை சொல்லி சசிகலா குடும்பம் ஒரு டெர்ம் ஆட்சி செய்தால் என்ன ஆகும்? எம்.ஜீ.ஆர் செத்ததே இன்னும் பலருக்கு தெரியாது என்ற அதிர்ச்சி தகவல் உலா வரும் தமிழகத்தில் மேலும் மேலும் விமாசனத்திற்கு இடம் தராத கடவுள்கள் உருவாவது நல்லது அல்ல. ஜெயலலிதா எத்தனை பிரஸ் மீட் நடத்தியுள்ளார்? அதில் எத்தனை மீட்டிங்கில் கோபப்படாமல் கடைசிவரை அமர்ந்துள்ளார்?

ஸ்டாலின் பரவாயில்லை.தயாநிதி மாறனைத்தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.தயாநிதிக்கு என்று தனியாக ஏதும் திறமை இருப்பதாக தெரியவில்லை. முக்கியமான துறையை முக்கியமான நேரத்தில் ஹேண்டில் செய்வதால் கொஞ்சம் பெயர். (இந்திய மக்கள் தொகை
ஆயிரம் கோடியாமே)மற்றபடி சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயங்களை அவர் மேல் போட்டுப்பார்த்து புகழ்வதாகவே எனக்கும் தோன்றுகிறது.(ராஜீவ் காந்தி இல்லாவிட்டால் இந்தியாவிற்கு கம்ப்யூட்டரே வந்திருக்காது என்று சொல்வது போலத்தான்)

சர்வாதிகாரம்,பாசிசம்,நாஜியிசம் என்று அறிவுஜீவியாக மாறி எழுதுவது எனக்கு கடினம்.முயற்சிக்கிறேன்.

வக்கீல்கள் மீதான தாக்குதல்கள், சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் மீதான தாக்குதல்கள்( இவர்கள் போலிஸ்க்கு போவதில்லை) மற்றும் கடைசியாக கராத்தே தியாகராஜன்.இந்த விஷயங்கள் உணர்த்துவது என்ன?

சென்னையில் ஸ்டாலினை பதவியில் இருந்த அகற்ற சாம,பேத,தான,தண்ட முறையிலான தியாகராஜனின் சர்வீஸ் தேவைப்பட்டது. ஆனால் இப்போது சென்னைக்கு உள்ளே அவரால் வரமுடியவில்லை.

கருத்துகணிப்புகள் கூறுவது போல் அதிமுக வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு சென்னை வரமுடியாதா என்று கராத்தே தியாகராஜன் பயந்து கிடப்பதாக தகவல்கள் வருகின்றன்.இன்னும் சிலர் கூறும் நிரந்தர முதல்வர் என்று வார்த்தைக்ள அவரை நிறைய துன்புறுத்துகிறதாம்.மணிசங்கர அய்யர் பாதுகாப்பில் எங்கோ பம்பாயில் இருந்தாராமே.அது சரி.மணிசங்கர அய்யருக்குதானே தெரியும் இந்த கஷ்டம்.:)))

கம்யூனிஸ்ட் தோழர்களை விமர்சித்துத்தான் இந்த கட்டுரையே எழுத ஆரம்பித்தேன்.ஆனால் திசை மாறிவிட்டது. அந்த விமர்சனங்களை பிறகு வைத்து க்கொள்வோம்.இதற்கு காரணம் அவர்களின் சில கொள்கைகளை நான் இன்னும விரும்புவதால்தான்.

நண்பர்களுக்கு நன்றி.தொடர்புடைய சுட்டியாக இதையும் படிக்கலாம்.

10 comments:

ஜோ/Joe said...

முத்து,
நீங்கள் கலைஞரையோ ,திமுக வையோ யோக்கிய சிகாமணிகள் என்று சொல்லவில்லை ,ஜெ-வையிம் அதிமுகவையும் ஒப்பிடும் போது கலைஞரும் திமுகவும் பல மடங்கு தேவலை என்று தான் கூறுகீற்கள் என்று எல்லோருக்கும் தெரியும் .புரியாத மாதிரி நடிப்பவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ளப் போவதில்லை.

Selvakumar said...

//ஸ்டாலின் பரவாயில்லை.தயாநிதி மாறனைத்தான் எங்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்று சில நண்பர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.அதை நான் ஒத்துக்கொள்கிறேன்.தயாநிதிக்கு என்று தனியாக ஏதும் திறமை இருப்பதாக தெரியவில்லை.//

முத்து,
இங்கு நீங்கள் என்னைத்தான் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

நான் கூறியது தயாநிதிமாறன் கடந்து வந்த குறுக்குவழி பற்றி (அரசியல் அறிமுகம்). அவர் ஒரு சாதாரண தொண்டனாக இருந்து, துடிப்புடன் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று, படிப்படியாக திமுகவில் உயரவில்லை. (ஸ்டாலினைப்போன்று).

கலைஞர் என்னும் ஒருவரைப்பற்றிக் கொண்டு, அரசியல் வானில் திடும்மென, தனது தகப்பனாரிம் பெயரை பயன்படுத்திக்கொண்டு உதித்து விட்டார். ஸ்டாலினுடன் ஒப்பிடும் போது, தயா விசயத்தில் கலைஞர் செய்தது தவறே. (இதை உங்கள் கருத்து ஒத்துக்கொள்கிறது என்று நினைக்கிறேன்)

நான் உங்களுடைய நடுநிலை குறித்து விமர்சிக்கவில்லை.

எனது கருத்து என்னவென்றால்,

இருவருமே (கலைஞர், ஜெஜெ) ஒரே அணிதான். வாரிசு அரசியலைப் பொறுத்தவரை)

உங்களின் பதிவு "பேயைவிட பிசாசு உயர்ந்தது" என்னும் கருத்தை முன்னிறுத்துகிறது"

எனக்கு, நல்ல அரசியல் தலைவர்களே கண்ணில் தெரிகிறார்கள்.

நான் மனிதர்களை இவர்களுடன் என்றும் ஒப்பிடமாட்டேன்.

செல்வகுமார்

Unknown said...

கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா
ஜெயலலிதா புடவை கட்டிய கருணாநிதி
விஷயம் அவ்வளவுதான்

Anonymous said...

அருமை முத்து. நன்றாக அலசி இருந்தீர்கள்.

*********** போன்ற ***** ஆதிக்க சக்திகளுக்கு பிறக்கும்போதே நெஞ்சில் விஷ விதை தூவப்படுகிறது. எனவே கருணாநிதி நல்லதே செய்டஹலும் கண்டிப்பாக அவர்களால் பாராட்ட முடியாது. ஜெயலலிதா கெட்டதே செய்தாலும் அவர்களாலும் தினமலர், துக்ளக்காலும் வெகுவாக புகழ்ந்து பாராட்டப்படும். காரணம் ஜாதி.

நமக்கு கருணாநிதியைப் பிடிக்கவில்லை என்றால் ஓட்டு போடாமல் இருக்கலாம். அதற்காக அவர் குலம், கோத்திரம், மூத்திரன்,டிவி, பேரன் என வருந்து கட்டி சண்டை போட வேண்டியதில்லை.

சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் அவை


edited

சந்திப்பு said...

செல்வன் எப்படீங்க இது! நச்சுன்னு கொட்டீட்டீங்க.
அப்புறம் முத்து : -நடுநிலைமை- அப்படீன்னு ஒன்ணு உலகத்துல இல்லவே இல்லைங்க. நடுநிலைமை அப்படீன்னு ஒரு கொள்கையா? எனக்கு புரியலைங்க. இந்த நடுநிலைமை குறித்து நாங்க அடிக்கடி விவாதிப்போம், அந்த நேரத்துல நன்பர் ஒருவர் கூறிய கருத்தை இங்கே பதிகிறேன். நீதி எனும் தராசு நடுநிலையாக இருக்க முடியாது. அது நியாயத்தின் பக்கம்தான் சாய்ந்து இருக்க முடியும். தற்போது நீங்கள் வாதாடுவது நியாயத்தின் பக்கமாக இருக்கலாம்!

Muthu said...

சந்திப்பு,

நடுநிலைமை என்பது குறித்து உங்கள் கருத்தும் என் கருத்தும் ஏற்ககுறைய ஒன்றுதானே...

செல்வனின் கருத்துக்கு என்னுடைய பதில் இதுதான். :))

மற்றபடி இந்த சமரசம் என்ற விஷயத்தைத்பற்றி நாம் பேசியுள்ளோம்.இன்னும் பேசுவோம்.

வானம்பாடி said...

//திருமாவளவனும் நல்லவர்தான். விஜயகாந்தைவிட அவர் அதிக காலமாக அரசியலில் இருக்கிறார்.அவரை ஏன் யாரும் மொழியவில்லை?
//

மிகவும் நியாயமான கேள்வி. பதில் நமக்கெல்லாம் தெரியும்தானே. :)

இத்தனை கருணாநிதி வாரிசு அரசியல் நடத்துகிறார் என்று ஸ்டாலினை காட்டிக் கொண்டிருந்தார்கள், இப்போது அது குறித்து வருத்தமில்லையாம். :) :)

பட்டணத்து ராசா said...

//சர்வாதிகாரம்,பாசிசம்,நாஜியிசம் என்று அறிவுஜீவியாக மாறி எழுதுவது எனக்கு கடினம்.முயற்சிக்கிறேன்.//

முயற்சி பண்ணுங்க, ஆனா, இப்ப புரியர மாதிரியே அதுவும் இருக்கனும், ok va :-)

rajkumar said...

உங்களது மற்ற கருத்துக்களை ரசித்து படித்து வருபவன் நான். ஆனால் தேவையில்லாமல் ஏன் ரஜினியை வம்புக்கிழுக்கிறீர்கள். ரஜினியை பற்றி நீங்கள் முன் வைத்திருக்கும் கேள்விகள் அபத்தமாக இருக்கிறது.

ரஜினி ரசிகர்களை சொறிந்து படம் ஓட்ட வேண்டிய மோசமான நிலையில் என்றுமே இல்லை. சொல்லப் போனால் 96 தேர்தலுக்கு முன்பாக பாட்சா படம் வரையில் கதையுடன் ஒட்டிய சில வசனங்களை ,அரசியல் வசனங்களாக ரசிகர்கள் நினைத்து கைத்தட்டைய கூத்துக்கள்தான் நடந்தன.

1975 ல் தொடங்கி 95 வரை பல வெற்றிப் ப்டங்களைத் தந்த ரஜினியின் வெற்றிக்கு அரசியல்தானா உதவியது?

இன்று, ரஜினியின் அரசியல் நிலைப்பாடுதான் தெரிந்து விட்டதே. ஆனாலும் இன்றும் தொலைக்காட்சிகளில் போடப்படும் பாட்சாவும், அண்ணாமலையும் டி ஆர் பீ ரேட்டிங்கில் தூள் பறத்துகிறதே. அதற்கு என்ன காரணம்?இன்னும் ஷிப்டிங் தியேட்டர்களில் ரஜினி படங்கள் வசூல் செய்கிறதே. அதற்கு என்ன காரணம்.

அரசியல் வசனங்கள் இன்றி வந்த சந்திரமுகியின் வெற்றிக்கு யார் காரணம்?

அரசியல் வசனங்களால் வெற்றி பெற இயலுமென்றால் ஏன் பாபா ஊத்திக் கொணடது.

முன்சீட்டில் விசிலடிக்கும் ரசிகர்க்ளை மட்டும் நம்பி ரஜினி இல்லை.ரஜினி ரசிகர்கள் பல மட்டங்களிலும் பரவி இருக்கிறார்கள். இவர்களது ஆதரவை அரசியல் வசனம் பேசித்தான் பெற வேண்டும் என்ற அவசியம் என்றுமே ரஜினிக்கு இருந்ததில்லை.

உங்களது ரஜினி பற்றிய கருத்துகள்கட்டுரையின் குறிக்கோளை திசை மாற்றுகின்றது.

Muthu said...

ராஜ்குமார்,

ஒரு ரசிகராக உங்கள் கருத்துக்களை மதிக்கிறேன். ரஜினி படங்களை நானும் பார்த்து ரசித்துள்ளேன்.