Tuesday, November 08, 2005

விட்டுப்போனது எல்லாம்,,,,

ஆல்பெர் காம்யு வின் அந்நியன், காப்கா வின் விசாரணை, பி.எ.கிருஷ்ணனின் புலிநகக்கொன்றை, சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல்.

ஒரு வாரத்திற்கு பிறகு இன்று தான் தமிழ் மணத்திற்கு வர முடிந்தது.ஒரு வார தமிழக பயணத்தில் மதுரை மற்றும் சென்னை (மழையோ மழை) அனுபவங்கள் , நான் புதிதாக படித்த நான்கு புத்தகங்கள் (மேலே குறிப்பிடபட்டுள்ளவை ) ஆகியவைப்பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

முதலில் கடந்த ஒரு வார தமிழ்மண கட்டுரைகளை படித்துவிட்டு பிறகு என்னுடைய கட்டுரைகளை சபையில் ஏற்றலாம் என்று நான் படித்ததில் பிடித்தது,பாதித்தது பற்றி .

தில்லி குண்டுவெடிப்பை பற்றி ஒரு பாமரனாக நம் கருத்து என்னவென்றால் அப்பாவிகளை கொல்லுதல் கோழைத்தனம் என்பதே.தைரியம் இருக்கும் போராளிகள் விடுதலைப்புலிகள் போல் அரசாங்கத்தை எதிர்த்து ராணுவத்தையோ போலீசையோ எதிர்த்து போர் புரியலாம். போராட எத்தனையோ வழிகள் உள்ளன. இதையும் சப்போர்ட் செய்யும் நண்பர்கள் ஆயிரம் காரணம் சொன்னாலும் தங்கள் உயிரையோ அல்லது தங்கள் உற்றார் உறவினர் உயிரையோ இந்த மாதிரி கோழை தாக்குதலில் இழந்தால் தான் தெரியும் .

பிரபலம் எழுதும் பதிவுக்கு பல பின்னூட்டங்கள் வருகின்றன என்பது போலவும் அந்த பிரபலங்களையும் சந்திக்கு இழுத்து சீரழித்து சிலர் மகிழ்கிறார்கள் என்பது போலவும் ஒரு பிரபலத்தின் பதிவின் பின்னூட்டத்தில் யாரோ எழுதி பார்க்க நேர்ந்தது.

1.பிரபலங்கள் வலைபதிவிற்கு வந்துவிட்டால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல

2.பின்னூட்டங்கள் இங்கு பெரும்பாலும் கருத்துக்களுக்கோ தரத்திற்கோ இல்லை என்பது உண்மைதான். பரஸ்பர பின்னூட்டங்கள்,நட்புக்காக பின்னூட்டங்கள், வம்புக்காக பின்னூட்டங்கள்,இனமானத்தை காக்கும் பின்னூட்டங்கள்(தமிழ் இனமானம்,ஆரிய இனமானம், முஸ்லிம் இனமானம் என்பது உதாரணங்கள்) என பல வகைப்படும். இது இயற்கையானது தான். உதாரணத்திற்கு நானெல்லாம் சில பின்னூட்டங்களை கேட்டே பெற்றுள்ளேன்(?).


தீபாவளி கொண்டாடுவதா வேண்டாமா என்ற ஸ்டேஜ் எல்லாம் தமிழன் கடந்து பல நாட்கள் ஆகின்றன.யாராவது ஏன் கேரளாவில் தீபாவளி இல்லை என்று எழுதக்கூடாதா?

இன்னும் படிக்கவேண்டி உள்ளது.ஆகவே தொடரும்.

1 comment:

jeevagv said...

சபாஷ், தொடரட்டும், தொடர்ந்து படிக்கிறோம்!