Saturday, July 01, 2006

அய்யப்பனுக்கு செலக்டிவ் அம்னீஷியா?

கடந்த ஒரு வாரமாக கேரளா அய்யப்பன் கோவிலை மையமாக வைத்து நடைபெற்று வரும் கூத்துக்களை செய்திதாள்களில் படித்திருக்கலாம். கேரள சோதிடர் உன்னிகிருஷ்ண பணிக்கர் அய்யப்பன் கோவிலில் நடத்திய "தேவ பிரசன்னத்தில்" அய்யப்பன் கோபமாக இருப்பதை கண்டறிந்தார். அதற்கு காரணமாக அவர் 18 ஆண்டுகளுக்கு முன் பெண்கள்(அதுவும் குறிப்பாக நடிகைகள்) அய்யப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்ததுதான் என்று ஒரே போடாக போட்டார்.

இதன் சங்கிலித்தொடர் விளைவு கர்நாடகத்தில் எதிரொலித்தது.அந்த கால நடிகை ஜெய்மாலா என்பவர் தான்தான் கோவில் கருவறைக்குள் நுழைந்தது என்று ஒத்துக்கொண்டார்.

ஆனால் கோவில் பூசாரிகள் இதை கடுமையாக மறுத்துள்ளனர். பணிக்கரும் ஜெய்மாலாவும் சேர்ந்து ஆடும் நாடகம் இது என்கிறார்கள் இவர்கள்.இவர்கள்
வாதத்திற்கு துணையாக நான்கு வருடத்திற்கு முன்பு நடந்த "தேவ பிரசன்னம்" நிகழ்ச்சியை சுட்டி காட்டுகிறார்கள்.நான்கு வருடத்திற்கு முன்பு இதே நிகழ்ச்சியின்போது அய்யப்பன் சந்தோஷமாகத்தான் இருந்தாராம். அப்போது பதினெட்டு வருடத்திற்கு முன்பு நடந்த விஷயத்தைப்பற்றி பேசாத அய்யப்பன் இன்று ஏன் கோபமடைய வேண்டும் என்கிறார்கள் இவர்கள். அப்படியானால் அய்யப்பனுக்கே செலக்டிவ் அம்னீஷியாவா?

ஆனால் பணிக்கர் தான் ஒரு பிராமணர் இல்லை என்பதற்காக பூசாரிகள் தன் பெருமையை குலைக்க சதி செய்து இதை கூறுகிறார்கள் என்று ஒரே போடாக போட்டார்.இந்த வகை பாணி நமது தமிழ்மண அன்பர்களுக்கு பழகியதுதான்(?).


வழக்கம்போல் சாதிரீதியாக கருத்துக்கள் வந்து விழ தொடங்கிவிட்டன. தமிழக பி.ஜே.பியின் இல.கணேசனும் இது பணிக்கரின் சதிதான் என்கிறார். நேற்று கர்நாடகா சட்டசபை ஜெய்மாலாவுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுத்தது. பொதுவாக கர்நாடகா தங்கள் மாநிலத்திற்கும் மாநிலத்தவர்க்கும் ஒரு கஷ்டம் என்றால் ஒன்று சேர்வார்கள்.இதில ஆச்சரியம் இல்லை.

முதலில் இந்த பிரச்சினை வெளிவந்தபோது "சோதிடத்தின்" "தேவ பிரசன்ன த்தின்" மகிமை என்றெல்லாம் வந்த தகவலை பார்த்து எனக்கே ஒரு ஆச்சரியம்.அப்புறம் பூனைகுட்டி தொப்பென்று வெளியே வந்து விழுந்துவிட்டது.


இரு தரப்பினருக்கும் அய்யப்பனின் மேல் கடுகளவும் மரியாதை இல்லை என்பது நன்றாக தெரிகிறது.கடவுளை வைத்து வேஷம் கட்டி வயிறு வளர்க்கும் இவர்களை என்ன செய்வது?பெண்கள் போகக்கூடாது என்று இருக்கும்போது ஏன் ஜெய்மாலா கோவிலுக்கு போனார்? கடவுளை தொட்டு கும்பிட்டார்?இது ஒருபுறமிருக்க இனியும் இந்த கோவிலுக்கு பெண்களை போகாமல் ஒதுக்கிவைப்பது சரியா? (இதை நான் கேட்கவில்லை சாமி.கர்நாடக சட்டசபையில் பேசினார்கள்)


எனக்கு பதினொரு பனிரெண்டு வயதாக இருக்கும்போது நானும் ஒருமுறை அய்யப்பன் கோவிலுக்கு போயிருக்கிறேன்.அது ஒரு நல்ல அனுபவம்.பம்பா நதி குளியல்.அங்கிருந்து ஒரு எழு எட்டு கிலோ மீட்டர் நடந்து கோவிலுக்கு போவதும் நல்ல அனுபவம் தான்.அனைவரும் ஒரு முறையாவது போகலாம். கடவுள் பக்தி இல்லாதவர்கள் சுற்றுலா மாதிரி நினைத்து போய்வரலாம்.

ஜோதி தரிசனம் என்பது தேவஸ்தான ஆட்களே சென்று வண்டி நிறைய கற்பூரத்தை பற்ற வைத்துவிட்டு வருவதுதான் என்றும் ஒரு தியரி உலவுகிறது.ஒரு முறை கேரளத்தில் ஆக்டிவ்வாக உள்ள பகுத்தறிவாளர்கள் சங்கம் ஒன்று அந்த வண்டியை மடக்கிவிட்டதாகவும் அந்தவருடம் சோதி வரவில்லை என்றும் செவி வழிச்செய்தி ஒன்று எனக்கு கிடைத்தது.

ஆயினும் நம் மக்கள் வருடத்தில் விரதம் இருக்கும் ஒரு மாதமாவது தம்,தண்ணி அடிக்காமல் இருப்பதால் நமது தாய்மார்களும் இவர்களை அங்கு செல்ல் அனுமதித்துவிடுகிறார்கள்.ஆனால் அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?

Related post

http://thekkikattan.blogspot.com/2006/06/blog-post_29.html

44 comments:

Thekkikattan|தெகா said...

முத்து,

என்னை இணைத்தற்கு நன்றி

//ஆனால் அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?//

இது செம காமெடி :-)))

//ஜோதி தரிசனம் என்பது தேவஸ்தான ஆட்களே சென்று வண்டி நிறைய கற்பூரத்தை பற்ற வைத்துவிட்டு வருவதுதான் என்றும் ஒரு தியரி உலவுகிறது.ஒரு முறை கேரளத்தில் ஆக்டிவ்வாக உள்ள பகுத்தறிவாளர்கள் சங்கம் ஒன்று அந்த வண்டியை மடக்கிவிட்டதாகவும் அந்தவருடம் சோதி வரவில்லை என்றும் செவி வழிச்செய்தி ஒன்று எனக்கு கிடைத்தது.//

இதைப்பற்றி கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சேன்... உங்களுக்கும் எப்படியோ மூக்கு வேத்திறுக்கு. நான் சொன்னது இதுதான்...

....இன்னொன்னு இங்க எனக்கு தெரிஞ்ச உண்மையை முன் வைக்க வேண்டாம் அப்படின்னு பார்க்கிறென். ஏன்னா, நான் வந்த பாதையை திரும்பி பார்க்காத ஆள் கிடையாது. இருப்பினும் இந்த ஜோதி விசயம் எல்லாம் எப்பவோ நாங்க அந்த மேற்கு மலைத் தொடர்களில் அலைந்து திரிந்த போதே நிறையெ பேசியிருக்கிறோம் பார்த்தும் இருக்கிறோம்....

அருண்மொழி said...

முத்து,

திராமுமுவில் இருந்து கொண்டே இப்படி எழுதலாமா? அய்யப்பனுக்கு Selective Amnesia இல்லை.

இது கிருத்துவர்கள் / திம்மிக்கள் / முஸ்லிம்கள் / கம்யூனிஸ்ட்களின் சதி :)

- ஜெயமாலாவின் கணவர் ஒரு கிருத்துவர்.
- ஸ்ரிமான் மன்மோகனை ஆட்டுவிக்கும் சோனியா ஒரு கிருத்துவர்.
- கேரளாவை ஆட்சி செய்வது கம்யூனிஸ்டுகள்.
- அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு உதவி செய்தவன் கோவை சிறையில் இளைத்துப்போன ஒரு முஸ்லிம் தீவிரவாதி.
- கம்யூனிஸ்டுகள் ஆதரிப்பது இந்துக்களை இழிவுபடுத்தும் மஞ்சள் துண்டு பகுத்தறிவுக்காரரை.

Anonymous said...

திராவிட தமிழர்கள் கட்சி செயல்தலைவருக்கு ஏற்ற வார்த்தைகள் பல இந்தப் பதிவில் இருக்கின்றன. வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

gulf-tamilan said...

அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?
புரட்சி !!!

சிறில் அலெக்ஸ் said...

//அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர்//

இதெப்போ?

Muthu said...

தெற்கத்தி,

நம்மிடம் உள்ள தகவலை எழுதி விட வேண்டும். புனித பிம்பங்கள் கத்துவார்கள் என்று பயந்தால் நாம் நம் சமூக கடமையில் இருந்து தவறியவர்கள் ஆவோம்.

வரலாறு சொல்லவேண்டும் நம் இருப்பை.அதை நினைத்து உங்கள் மனதில் சோதியைப்பற்றி உள்ள கருத்துக்களை தனிப்பதிவாக எழுதுங்கள்.

(அது ஐயப்பன் தான் சோதியாக வருகிறார் என்ற கருத்தாக இருந்தாலும்)


உங்கள் பதிவு எனக்கு பிடித்திருந்தது.

Muthu said...

அனானிநாதரே,

அனானிகள் நான் எழுத எழுத வேண்டும் என்ன எழுதக்கூடாது என்பதை முடிவு செய்யமுடியாது என்று நினைக்கிறேன்:)

Anonymous said...

அனானிகள் மட்டுமல்ல முத்து. வேறு யாருமே கூட முடிவு செய்ய முடியாது. நீங்கள் எழுதுவது உங்கள் கருத்தை. யார் அதனை முடிவு செய்வது.

முதலாய் வந்து வாழ்த்திய அனானி.

Vaa.Manikandan said...

Pavam ayyappan!!!

Muthu said...

புரிந்துணர்வுக்கு நன்றி அனானி

Muthu said...

சதயம்,

உங்க பதிவை பார்த்தேன்.நன்றாக எழுதி உள்ளீர்கள்.

(இதே சதயமா என்னை ஒரு பிராடுக்காக பரிந்து பேசி கேவலமாக திட்டியது?

strange are the ways human minds functions

மணியன் said...

இன்று மீரா ஜாஸ்மின் இராஜராஜேஸ்வரி கோவிலுக்குப் போனது பிரச்னையாகியுள்ளது. பாவம் கடவுள்கள் :(

Muthu said...

//பாவம் கடவுள்கள் :( //

மணியன் சார்,

நல்ல பகடி சார் இது...பாவம்தான் கடவுள்கள்...

மீரா ஜாஸ்மினுக்கு என்ன? கிறிஸ்தவ பெண்ணா அது?

இரா.சுகுமாரன் said...

//பெண்கள்(அதுவும் குறிப்பாக நடிகைகள்) அய்யப்பன் கோவில் கருவறைக்குள் நுழைந்ததுதான் என்று ஒரே போடாக போட்டார்.//

கோயில் கட்டும்போது பெண்கள் யாரும் வேலை செய்யக்கூடாது. பெண்கள் சமைத்துப் போடக்கூடாது.
பெண்கள் சமைத்த உணவை யாரும் உண்ணக்கூடாது. என்று சொல்லியிருக்கலாம்.

அய்யப்பன் ஒரு வீரப்பன் மாதிரி கொள்ளை அடிச்சி மற்றவங்களுக்கு கொடுப்பான். அதனால அவனுக்கு நல்லப் பெயர் இப்படி கொள்ள அடித்து விட்டு சபரி மலையில் போய் பயந்து கொள்வான். (நூல் ஆதாரம்: பஃருளி முதல் வைகை வரை)

அவன் கோயிலில் பெண்கள் போகக்கூடாது என்று சொல்வது மோசமான செயல்.

கண்டிக்கத் தக்கது.

Darren said...

என்னாங்கப்பா கூத்து இது அய்யப்பன் குஜால கீறாறா இல்லையான்னு மனுசனால கண்டுபிடிக்க முடியுமா...நல்ல கூத்துடா இது? அப்டியே பிரசன்னம் பாத்து earthquake, tsunami லாம் எப்ப வரும்னு சொன்னா நல்லா இருக்கும்.

(one para edited - as per Mr.saravanan request) - muthu

உலகத்துல எத எதையோ ஆராய்ச்சி பண்னிகிட்டு இருக்கானுங்க இவனுங்க என்னாடனா அய்யப்பனோட முடு பத்தி ஆராய்ச்சி பண்றானுங்க.....

பழனி முருகனுக்கு மூடு சரியில்லை..திருப்பதி பெருமாளுக்கு BED சரியில்லன்னு நாளைக்கு எவனாவது சொன்னாலும் அதையும் நம்புங்க இந்த சனங்க...கருமம் கருமம்......என்ன எழவுடா இது.....

Pot"tea" kadai said...

ஏதோ காமெடி நெடி அடிக்கறாப்ல இருக்கு!

கற்சிலையாய் அமர்ந்திருப்பவற்றைப் பற்றி பெரிதான தொல்லைகள் இல்லை. அதை உருவாக்கியவனும் அதன் மூலம் உண்ட சோறு தின்னும் பொறுக்கிகளின் தொல்லைகள் தான் இவ்வுலகில் அதிகம். அந்த டாபர்மேன் வகையறாக்களின் மற்றுமொரு திருவிளையாடல் காமெடி தான் தற்போதைய நிகழ்வுகள்.

செயமாலா யாரென்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் தவறுதலாய் சன்னிதானத்திற்குள் "விழுந்தோ" அல்லது "காலோ" வைத்திருந்தால் அது பரிகாரம் செய்ய வேண்டிய அளவிற்கு பெரிதான குற்றமா? அதையும் அவர் தாமாக 19/20 ஆண்டுகள் கழித்து ஒத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஒரு மலிவான நாடகம்.(சிறந்த பக்தை என நிரூபணம் செய்கிறாரோ?)

சோதி தரிசனம் பற்றி குறிப்பிட்டு சொல்ல ஏதும் இல்லை. ஆனால் நான் அறிந்த வரையில் கேரள அரசாங்கத்தின் சுற்றுலா பிரச்சார "brochure"ல் கூட "சோதி" ஏற்றப்படும் இடம் தான் என நான் படித்திருக்கிறேன். அதுவும் சூடம் ஏற்றப்படுகின்ற இடத்தை(கரித்தட்டையான இடம்) புகைப்படமாகவே கண்டிருக்கிறேன். தீவிரவாதி பக்தர்கள் இதை மறுதலித்துப் பேசலாம்!

வஜ்ரா said...

பார்க்க

//
Fifty-four years ago, when the Constitution of India was framed, "Untouchables" - the lower-caste Indians who were believed to be "impure" and hence objectionable to God - won the right to equality and broke open the gates of temples that were closed to them thus far. Article 25(2b) was instituted specifically for them; to ensure that they could pursue their religion unhampered. This article gives State the power to make laws for "the throwing open of Hindu religious institutions of a public character to all classes and sections of Hindus".
//

நாம் மாறிவிடுவோம்...விரைவிலேயே...

இன்னும் அருண்மொழி கூறுவது போல் அவர்கள் சதி, இவர்கள் சதி என்று சொல்லிக்கொண்டு திரிவது எல்லாம் அந்த "cult" நம்பிக்கைகளில் உள்ளவர்கள் செய்வது.

( நான் கரை ஏறிட்டேன்... நீங்க இன்னும் ஏறல்லியா? ...)

அது எல்லாம் இருக்கட்டும்...

அய்யப்பனுக்கு செலக்டிவ் ஆம்னீஷியா இருக்கு என்று கண்டுபிடித்த முத்து அவர்கள், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மதச்சர்பின்மை என்று பேசுபவர் தானே....

அல்லாவுக்கு செலக்டிவ் ஆம்னீஷியா என்ற உங்கள் அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்...!! ;-)

உங்கள் நண்பன்(சரா) said...

//ஜெயமால லாம் old பார்டிங்க..வேனும்னா அசின் ன try பண்னாலாம் அய்யப்பன்...
//

தயவு செய்து இது போன்று எழுதுவதை தவிர்க்கவும்,நீங்கள் முற்பொக்கு சிந்தனைவாதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் கூட இருக்கலாம்,ஆனால் உங்களின் இந்த பின்னூட்டம் அய்யப்பனை உண்மையாக நேசிக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு மனவேதனையைய் அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


அன்புடன்...
சரவணன்.

enRenRum-anbudan.BALA said...

MUTHU,
//ஆனால் பணிக்கர் தான் ஒரு பிராமணர் இல்லை என்பதற்காக பூசாரிகள் தன் பெருமையை குலைக்க சதி செய்து இதை கூறுகிறார்கள் என்று ஒரே போடாக போட்டார்.இந்த வகை பாணி நமது தமிழ்மண அன்பர்களுக்கு பழகியதுதான்(?).
//
//அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?
//
You really have a good sense of humour :)
Pl. see
http://balaji_ammu.blogspot.com/2006/07/blog-post.html

enRenRum-anbudan.BALA said...

Muthu,
Do not mistake me !
//strange are the ways human minds functions
//
should be
"strange are the ways human minds function"

Muthu said...

//(நூல் ஆதாரம்: பஃருளி முதல் வைகை வரை)
//

நாடு போகும் போக்கைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளில் ப்ளாக்கில் எவனெவனோ ஒளருனதை எல்லாம் நூல் ஆதாரமா காமிக்க ஆரம்பிச்சுடுவாங்க போலிக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேன்னு உங்களை பாத்து பாடிட்டு போகவேண்டியது தான்.

//அசின் ன try பண்னாலாம் அய்யப்பன்...
பழனி முருகனுக்கு மூடு சரியில்லை..திருப்பதி பெருமாளுக்கு BED சரியில்லன்னு நாளைக்கு எவனாவது சொன்னாலும் அதையும் நம்புங்க இந்த சனங்க...கருமம் கருமம்......என்ன எழவுடா இது.....
//
தனிப்பட்ட ஒருவரைப்பற்றி எழுதியது தணிக்கை செய்யப்பட்டு உள்ளது

Muthu said...

மனம் புண்பட்ட சில நல்லவர்களுக்கு,

உங்கள் மனதை புரிந்துகெரள்கிறேன்.நன்றி.அதே சமயம் கண்ணகியை கட்டிபிடித்த சோபன் பாபு என்ற பதிவில் உங்கள் உணர்வுகளை பதிவு செய்தீர்களா, இல்லை இதுவும் செலக்டிவ் நடுநிலைமைதானா? :))

நண்பர் சங்கர் உங்களுக்கும்தான் இந்த கேள்வி

Muthu said...

நண்பர்களெ,

சில வரிகள் எடிட் செய்யப்பட்டுள்ளன.நன்றி

Sivabalan said...

முத்து,

கலக்கிடீங்க..

அருமையான அலசல். வாழ்த்துக்கள்...


//(இதை நான் கேட்கவில்லை சாமி.கர்நாடக சட்டசபையில் பேசினார்கள்)//

அருமை...

Syam said...

//அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?
//

இது தாங்க ஹைலைட்டு....

Anonymous said...

~~அய்யப்பனுக்கு செலக்டிவ் ஆம்னீஷியா இருக்கு என்று கண்டுபிடித்த முத்து அவர்கள், சிறுபான்மையினர் பாதுகாப்பு, மதச்சர்பின்மை என்று பேசுபவர் தானே....

அல்லாவுக்கு செலக்டிவ் ஆம்னீஷியா என்ற உங்கள் அடுத்த பதிவை எதிர்ப்பார்க்கிறேன்...!! ;-)~~
ஐயா வஜ்ரா திருந்தவே மாட்டீரா?

வெட்டிப்பயல்: திராவிடன் என்பவன் யார்?
http://vettipaiyal.blogspot.com/2006/06/blog-post_28.html

இந்தபதிவில் நான்எழுதிய பின்னூட்டத்தின் ஒரு பகுதி

"திராவிடர்கள் ஏன் இந்து மதத்தையே குறை கூறுகிறார்கள் என்பது வழக்கமாக முன்வைக்கப்படும் இன்னொரு கேள்வி. ஏனென்றால் அவர்களும் அதே கடவுள்களை வணங்குபவர்கள் தான். தன் வீட்டை சுத்தம் செய்யும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டு. அழுக்காக இருக்கும் தன்வீட்டை சுத்தம் செய்ய வேண்டிய கடமையை அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனால்தான் இந்து மத பிரச்சினைகளை திராவிடர்கள் அலசுகிறார்கள். ஏன்பிற மத பிரச்சினைகளை பேசுவதில்லை என்பதற்கும் இதுவே பதில். அடுத்தவன் வீட்டை சுத்தம் செய்ய அவன் அழைக்காமல் நாமாகப் போக முடியுமா?

ஆரியர்கள் அதைத்தான் செய்கிறார்கள். அடுத்தவன் வீடு அழுக்காக இருக்கிறதே என்று ஒப்பாரி வைக்கிறார்கள்."

எங்கள் மதத்தை நாங்கள் விமர்சிக்கிறோம். அடுத்தவன் மதத்தை விமர்சிப்பாயா என்று கேட்பதில் என்ன அர்த்தம் ஐயா

Ganesh Prabu

Darren said...

// உங்கள் நண்பன் said...
//ஜெயமால லாம் old பார்டிங்க..வேனும்னா அசின் ன try பண்னாலாம் அய்யப்பன்...
//

தயவு செய்து இது போன்று எழுதுவதை தவிர்க்கவும்,நீங்கள் முற்பொக்கு சிந்தனைவாதியாகவும் சமூக சீர்திருத்தவாதியாகவும் கூட இருக்கலாம்,ஆனால் உங்களின் இந்த பின்னூட்டம் அய்யப்பனை உண்மையாக நேசிக்கும் என்னைப் போன்ற சாமானியர்களுக்கு மனவேதனையைய் அளிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்////


இங்கே மூடநம்பிக்கைகளை எதிர்க்கும்பொழுது பலர் ஒத்துக்கொள்ளமாட்டார்கள் மனம் புண்படுகிறது என்று சொல்லுவார்கள் இது போன்ற சாமனியர்களை பலிகடாவாக்கிதான் இன்னும் மூடநம்பிக்கைகள் பலமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. பெரியார் இப்படி நினைத்து எதுவும் சொல்லாமல் போயிருந்தால் நிலைமை எப்படி இருந்திருக்கும்.

ஆகவே முத்து அவர்களே இது போன்ற கருத்துகளுக்காக தணிக்கை செய்வதை தவிர்க்கவும்.

சாய்பாபா பத்தி எழுதினா கூடத்தான் பலர் வேதனைபடுகிறார்கள் அதற்காக எழுதாமல் இருக்க முடியுமா?

மற்றவர்களிம் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்கிறோம் என்கிற பெயரில் மூட நம்பிக்கைகளை எதிர்க்காமல் இருக்கமுடியாது.

தேங்காயும் அரிசியும் வரியே இல்லாமல் கடத்தப்படுகிறது கேரளாவுக்கு அய்யப்ப தரிசனம் என்கிற பெயரில்.

உங்கள் நண்பன்(சரா) said...

என் போன்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து Dharan -அவர்களின் பின்னூட்டத்தை edit செய்தமைக்கு நன்றி.

அன்புடன்...
சரவணன்.

வஜ்ரா said...

//
நண்பர் சங்கர் உங்களுக்கும்தான் இந்த கேள்வி
//

கண்ணகியை கட்டிபிடித்த சோபன் பாபு!
கற்புக்கரசி கண்ணகி பற்றி மிட் நைட் மசாலா பார்த்துவிட்டு பக்கம் பக்கமாக எழுதுபவர்கள் பேசவேண்டும்.

அது பாஸ்டன் பாலாவின் பகிடி.

Darren said...

////உங்கள் நண்பன் said...
என் போன்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து Dharan -அவர்களின் பின்னூட்டத்தை edit செய்தமைக்கு நன்றி.

அன்புடன்...
சரவணன்./////
Mr.Muthu you have to answer for this..


http://muthuvintamil.blogspot.com/2006/06/blog-post_11.html

Machi said...

//ஆனால் அதிலும் அய்யப்பன் சாமிகளுக்கு தனி சாராய டம்ளர் என்று வைத்து புரட்சி செய்தவர்கள் அல்லவா நாம்?//


இந்த மாதிரி எல்லாம் பேச்சு வந்ததால ஐயப்பசாமிக்கு தனி டம்ளர் முறையை ஒழித்து பல காலமாயிடுச்சு. இப்பவெல்லாம் எல்லோருக்கும் Plastic டம்ளர் தான்.

// மீரா ஜாஸ்மினுக்கு என்ன? கிறிஸ்தவ பெண்ணா அது? // ஆமாம்.
http://thatstamil.oneindia.in/news/2006/07/02/meera.html

//அனைவரும் ஒரு முறையாவது போகலாம். கடவுள் பக்தி இல்லாதவர்கள் சுற்றுலா மாதிரி நினைத்து போய்வரலாம்.
//
இப்ப அப்படிதான் நிறைய பேர் சென்றுவருகிறார்கள். சாராய தனி டம்ளரே அதற்கு சாட்சி.

ஒரு மாசமாவது தண்ணி தம்முன்னு இல்லாம இருப்பாங்கன்னு இருந்த காலம் மலையேறிபோச்சு. என்ன செய்வது. :-(

அருண்மொழி said...

முத்து,

Refer this link:
http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNH20060702114916&Title=Headlines+Page&lTitle=%D8d%A1V+%F9Nn%A7Ls&Topic=0

அப்படியே இந்த காமெடிய படியுங்கள்
http://www.dinamalar.com/2006july03/ithu.asp

Muthu said...

அருள்மொழி,

புனித பிம்பங்களை வளர்க்கும் தன் பணியை தினமலர் செவ்வனே செய்கிறது.அந்த வாசகர் கடிதம் தமாசு சூப்பர்.


இன்னொரு லிங்க் வரவில்லை.பார்க்கிறேன்.

ஜோ/Joe said...

இது வெளிநாட்டு சதி..குறிப்பாக போப் -க்கு இதில் தொடர்பு இருக்கிறது .கிறிஸ்தவ மிஷனரிகள் இதன் பின்னணியில் இருக்கின்றனர் என்று வஜ்ரா சங்கர் ,முயூஸ் ,கால்கரி சிவா போன்றவர்கள் இன்னும் ஏன் சொல்லவில்லையோ தெரியவில்லை .இல கணேசன் ஏமாற்றவில்லை.

ரவி said...

பிரசன்னம் பார்த்த பனிக்கரின் உதவியாளர் சொன்னது...

நாங்கள் பிரசன்னம் பார்த்தபோது கட்டத்தில் வைத்த காசு திரும்பி கிடந்தது...அதனால் நாங்கள் தோஷம் இருப்பதாக கண்டறிந்தோம்...பிரசன்னத்தின் போது அங்கு ஒரு பெண்ணும் இருந்தார்...என்று...

ஆக இது ஒரு அரசியல் விளையாட்டு...ஆனால் இதனை நம்பிக்கையோடு சம்மந்தப்படுத்தி தாளித்து எடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்...

Anonymous said...

//Why does this guy "Iyappan" hate females? Who are his parents?//

இந்த மாதிரி சின்ன புள்ளதனமா கேட்ககூடாது. அப்புறம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லனும். உடனே ஒருத்தர் மனசு நோவுதுன்னு கூவுவாரு. இன்னொருத்தரு புடி சாபம்ன்னு சொல்வாரு. ஏம்பா உடம்ப ரணமாக்குறத்துக்குன்னே இப்படி கிளம்புறீங்க.

- பெயரா முக்கியம்

Muthu said...

அன்பின் "பெயரா முக்கியம்"

உதவிக்கு மிகவும் நன்றி.அனானிகள் இதை புரிந்துகொள்ளவும்.

கருத்து சுதந்திர காவலனாக ஒரு புறமும் மக்களின் மனதை புண்படுத்தாதவனாக ஒருபுறமும் சினிமாவில் டபுள் ஆக்ட் கொடுக்கிற மாதிரி இருக்கிறது "நெம்ப" கஷ்டமா கீதுபா.

Darren said...

///கருத்து சுதந்திர காவலனாக ஒரு புறமும் மக்களின் மனதை புண்படுத்தாதவனாக ஒருபுறமும் சினிமாவில் டபுள் ஆக்ட் கொடுக்கிற மாதிரி இருக்கிறது "நெம்ப" கஷ்டமா கீதுபா////

நண்பர் சரவணன் இதை படிக்கவும் , மற்றபடி you too muthu.... எனனத்த சொல்ல ....

Darren said...

///முத்து(தமிழினி) said...
தரணின் குடும்பத்தை இழுத்து கேவலமாக பேசி வூடு கட்டும் அனானி

மற்றவர்களின் குடும்பத்தை பற்றி எழுதுவதற்குமுன் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துங்கள்///

அனானி அவர்களே வழக்கமாக நீங்கள் என் BLOG ல் தான் வீடு கட்டுவீர்கள் இப்போ அடுத்தவர் blog கிலுமா...ஏம்பா மத்தவங்களை கஷ்டபடுத்தற எனக்கே அனுப்புப்பா ..

முத்து,

நான் இப்படி அடையாளத்தை வெளிப்படுத்த கேட்டவுடன் என் பெயரிலேயே கூடவே ஒரு பட்டமும் கொடுத்து ஒரு blog create பண்னி அடையாளத்தை வெளிப்படுத்தினார்..

ஒரெ காமெடிதான் போங்க..

அருண்மொழி said...

ஜெயமாலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை (நன்றி மாலைமலர்).

பிரசன்னம் பார்க்க சோழி உருட்டுவோர் இதற்கும் சோழி உருட்டலாமே!!

அருண்மொழி said...

எல்லோரும் ஜெயமாலா matterஐயே பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏன் மற்றதை பற்றி பேசுவதில்லை.

பணிக்கர் சொன்னது "இங்குள்ள தந்திரிகள் - கள், சாராயம் போன்ற மதுபானங்களை பயன் படுத்தி உள்ளனர். இதனால் ஐயப்பன் கோபமாகி, அவரின் முகமே மாறியிருக்கிறது. இந்தக் கோபத்தை மாற்ற அவருக்கு அணியும் ஆபரணங்களைப் புதிதாகச் செய்ய வேண்டும். புதிதாக ஐயப்பன் சிலையையும் செய்ய வேண்டும்" (நன்றி - Junior Vikatan)

எதை எதையோ சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. ஏற்கனவே பு.பிக்கள் கொதித்துக்கொண்டிருக்கின்றனர். சாபம் வாங்க நான் ரெடி இல்லை :-)

Anonymous said...

நகையும் புதிய சிலையும் அய்யப்பனுக்கு கையூட்டா இவர்கள் செய்வதை கண்டு கொள்ளாமல் இருக்க?..

செல்விகிருஷ்

╬அதி. அழகு╬ said...

\\இந்த மாதிரி சின்ன புள்ளதனமா கேட்ககூடாது. அப்புறம் எல்லாத்தையும் விலாவாரியா சொல்லனும்.\\

கருப்பு சொல்லியாச்சு : http://karuppupaiyan.blogspot.com/2006/07/blog-post_05.html
நீங்க பயந்தாங்குளியாவே இருந்து கொள்ளுங்கள் அனானி.

இரா.சுகுமாரன் said...

////முத்து(தமிழினி) said...
//(நூல் ஆதாரம்: பஃருளி முதல் வைகை வரை)
//

நாடு போகும் போக்கைப் பார்த்தால் இன்னும் கொஞ்ச நாளில் ப்ளாக்கில் எவனெவனோ ஒளருனதை எல்லாம் நூல் ஆதாரமா காமிக்க ஆரம்பிச்சுடுவாங்க போலிக்கு. நடக்கட்டும் நடக்கட்டும். எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேன்னு உங்களை பாத்து பாடிட்டு போகவேண்டியது தான்.////


முதலின் அந்த நூலைப்படித்தீர்களா? படிக்காமலே உளரல் என்று சொல்வது எப்படி?.

//எத்தனை நாள் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலேன்னு உங்களை பாத்து பாடிட்டு போகவேண்டியது தான்//

என்னைப்பார்த்து பாடவேண்டாம் படிச்சிட்டு பாடுங்க.