Thursday, February 23, 2006

மூட்டைக்குள் கணேசன்....

போயஸ் கார்டன் வெளிப்புற கேட் அருகில் திண்டிவனம் ராமமூர்த்தி , விஜயகாந்த், பார்வர்டு பிளாக் சந்தானம், நடிகர் கார்த்திக், ஏதோ ஒரு முஸ்லீம் லீக் தலைவர், பொன். குமார் மற்றும் யார் என்றே தெரியாத சிலர் அமர்ந்திருக்கின்றனர்.

கதவு திறக்கப்படுகிறது.சசிகலா தென்படுகிறார். ஓரிருவர் அவர் காலில் விழ முற்படுகின்றனர்.இதை பார்த்து விஜயகாந்த் சிரிக்கிறார்.

திண்டிவனம் : தம்பி விஜி, ரொம்ப சிரிக்காதீங்க..அதான் சொன்னேன் உங்களுக்கு தமிழக அரசியலில் அனுபவம் இல்லை என்று....

விஜயகாந்த் : யார் சொன்னது, நான் அயர்ன் பாக்ஸ், மூணு சக்கர வண்டி எல்லாம் நிறைய பேருக்கு.........

ஆரம்பிச்சுட்டார்யா என்று சிலர் அலுத்துகொள்கின்றனர். பிறகு எல்லோரும் உள்ளே சென்று அமர்கின்றனர்.


காளிமுத்து உள்அறையில் இருந்து கையில் ஒரு பெரிய கோணி மூட்டையுடன் வெளியே வருகிறார்.உள்ளேயிருந்து ஜெ. குரல் கேட்சிறது.

"ஆள் இல்லை என்று மட்டும் வந்திராதீங்க..இலங்கைக்கே போனாலும் பிடிச்சுட்டு வந்துரணும்"

"சரிங்கம்மா " என்று கூறிவி்ட்டு எல்லோரையும் பார்த்து ஒரு அசட்டு சிரிப்புடன் வெளியேறுகிறார்.

எல்லோரும் உள்ளே வாங்க என்று சசிகலா கூற எல்லோரும் உள்ளே ஓடுகிறார்கள்.

கருணாநிதிக்கிட்டே பேசற மாதிரி பேசி வாங்கி கட்டிகிடாதீங்க என்று எச்சரித்துவிட்டு போகிறார் சசிகலா.ஜெயலலிதா அமர்ந்திருக்கிறார் . பக்கத்து நாற்காலியில் ஓ. பன்னீர்செல்வம், ஜெயகுமார் ஆகியோர். பொன்னையனை காணோம்.

"வாங்க, ஒண்ணும் பயப்படாதீங்க,அவங்கவங்களுக்கு வேண்டிய தொகுதிகளை கேளுங்க" என்கிறார் ஜெயலலிதா.

திண்டிவனம்: அம்மா ...அரசியல் எதிர்காலத்தையே ரிஸ்க் எடுத்து வந்திருக்கேன்.. பார்த்து பண்ணுங்கம்மா...குறைஞ்சது 40 சீட். மற்றும் துணை முதல்வர் பதவி....


ஜெ: முதல்லே உங்க புதுக்கட்சியின் பெயரை சரியாக சொல்லுங்க பார்க்கலாம்

திண்டிவனம்: இந்திரா நேரு காந்தி திராவிட முற்போக்கு....(சற்று குழம்பி) அன்னை சோனியா....

ஜெ: முதல்ல கட்சி பேரை சரியா சொல்லுங்க..அப்புறம் சீ்ட் பத்தி பேசலாம்....விஜி நீங்க சொல்லுங்க

விஜயகாந்த்:(ஓடி போய் சுவரில் கால் வைத்து எகிறி பின்னங்காலால் டி. ஆர்.பாலுவை நினைத்துக்கொண்டு நாற்காலியை உதைக்கிறார்) அம்மா தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதி. அதில் ஆண் வாக்காளர் 2 கோடியே 30 லட்சம்,பெண் வாக்காளர்கள் 2 கோடியே.........

ஜெ: (டென்சனாகி) விஜீ...

விஜயகாந்த்: சாரிம்மா... எனக்கு 50 சீட் போதும்மா..அடுத்த தேர்தல்ல நான் முதல்வர் ஆகணும்...

ஜெ முகம் மாறுகிறது.

சந்தானம்: அம்மா எங்களுக்கு வழக்கம் போல் ஒரு சீட்.எனக்கு மட்டும் போதும்.

கார்த்திக: ஏய்..ஊய்.. என்ன நெனைச்சிடடிருக்கே நீ

ஓ.பன்னீர்: அமைதி..அமைதி...

பொன் குமார், முஸ்லீம் லீக் தலைவர் ஆகியோர் எதுவும் கேட்கவில்லை. அம்மாவாக பார்த்து ஏதாவது தந்தால் வாங்கி கொள்வோம் என்கின்றனர்.

கதவு திறந்து சசிகலா எட்டி பார்க்கிறார்

சசி:சோ வந்திருக்கார் உள்ளே விடட்டுமா?

டிரேட் மார்க் புன்னகையுடன் சோ வருகிறார்.

ஜெ: என்ன மிஸ்டர் ராமசாமி ..நடுநிலைமையா எல்லாரும் எனக்கு ஓட்டு போடணும்.தீய சக்தியாம் கருணாநிதியை ஒதுக்கணும்னு தலையங்கம் எழுதிட்டீங்களா?

சோ: நேரடியா இல்லை. தமிழ்நாட்டை கருணாநிதி பிரபாகரனுக்கு 400 கோடிக்கு விலை பேசிட்டாரு..அதனால் மக்கள் வேறு வழி இல்லாம அ.தி.மு.க விற்கு ஓட்டு போடுங்க அப்படிங்கற மாதிரி எழுதறேன்..

அப்போது கதவு திறந்து காளிமுத்து வருகிறார். கையில் உள்ள மூட்டை பெரிதாக இருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஓடிப்போய் உதவி செய் ய மூட்டையை இறக்குகிறார்கள்.ஜெ முகத்தில் சந்தோஷம்.

மூட்டை பிரிக்கப்படுகிறது.எல்லோரும் வைகோவை எதிர்பார்த்திருக்க யாரும் எதிர்பாராவண்ணம் இல.கணேசன் மூட்டைக்குள் இருந்து அசட்டு சிரிப்புடன் வெளிப்படுகிறார்.

காளி: அடக்கொடுமையே ..இந்த ஆளு எப்படிய்யா இதுல வந்தாரு?

சோ: நான்தான் சொன்னேன்.காளிகாம்பாள் படத்துல கோவில் உண்டியல்ல விழுந்த ராம்கி திவ்யா உண்ணி குழந்தை எப்படி கடவுளுக்கு சொந்தமோ, எப்படி உண்டியல்ல விழுந்த விவேக் கடவுளின் குழந்தை ஆனாரோ அது மாதிரி வைகோவுக்கு விரிச்ச வலையில் இவர் விழுந்துட்டாரு..இவரை உங்கள் கூட்டணியில் சேர்க்க நான் தான் இவரை இந்த மூட்டைல விழ ஐடியா கொடுத்தேன்..இவரை நீங்க சேர்த்துட்டுத்தான் ஆகணும்...

எல்லோரும் அமைதியாகின்றனர்.

ஜெ:(டென்சனாக) சரி எல்லோரும் கிளம்புங்க..வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இருங்க.. இரவு ஜெயா டிவில யாருக்கு எவ்ளோ சீட்டுன்னு வரும்..பார்த்துக்குங்க...

சசிகலா வந்து அனைவரையும் வெளியேற்றுகிறார்

12 comments:

தயா said...

சூப்பருங்கோ!

ஆனந்த விகடன் நையாண்டியில் நீங்க தான் எழுதுறீங்களா? இவ்ளோ நாளா யாருன்னு யோசிச்சிகிட்டிருந்தேன்!

சந்தடி சாக்குல கலைஞர் மாதிரி, உங்க சோ வாரலையும் சேர்த்துக்கிட்டீங்களே...

Karthik Jayanth said...

சூப்பரப்பு... சிப்புதான் வந்தது. அரசியல் காமெடில இப்படி நோகம நொங்கு எடுக்குரிங்க

சந்திப்பு said...

அரசியல் சூட்டில் வெந்துக் கிட்டிருந்தப்போ.... குளிப்பாட்டிட்டீங்க..... குளிப்பாட்டிட்டீங்க..... குளிப்பாட்டிட்டீங்க.....

அது சரி! அந்த கோணிக்குள்ள இலாஜி எப்படி வந்தாரு...
ஜெ. : ஆமா பூந்த வீடு உருப்படாது... காளிமுத்துவை முதல்ல வீட்டுக்கு அனுப்புங்க...

ஜோ/Joe said...

அடக்க முடியாமல் சிரித்தேன்..நன்றிப்பா!

Muthu said...

நன்றி தயா, சதயம், கார்த்திக். சந்திப்பு மற்றும் ஜோ

manasu said...

///சரி எல்லோரும் கிளம்புங்க..வெத்து பேப்பர்ல கையெழுத்து போட்டுட்டு போயிட்டே இருங்க.. இரவு ஜெயா டிவில யாருக்கு எவ்ளோ சீட்டுன்னு வரும்..பார்த்துக்குங்க.../


ரெம்ப சரியா சொன்னீங்க முத்து.

gulf-tamilan said...

:-)))))))

Muthu said...

thanks you manasu and gulf tamilan

siva gnanamji(#18100882083107547329) said...

AYYO AYYO
ganesan BJP GANESANA? OR
MDMK GANESANA?

Muthu said...

அரசியல் அநாதையா இப்ப இருக்கறது எந்த கணேசன்? பி.ஜே.பி கணேசன் தானுங்களே....

dondu(#11168674346665545885) said...

"சோ: நான்தான் சொன்னேன்.காளிகாம்பாள் படத்துல கோவில் உண்டியல்ல விழுந்த ராம்கி திவ்யா உண்ணி குழந்தை எப்படி கடவுளுக்கு சொந்தமோ, எப்படி உண்டியல்ல விழுந்த விவேக் கடவுளின் குழந்தை ஆனாரோ அது மாதிரி வைகோவுக்கு விரிச்ச வலையில் இவர் விழுந்துட்டாரு..இவரை உங்கள் கூட்டணியில் சேர்க்க நான் தான் இவரை இந்த மூட்டைல விழ ஐடியா கொடுத்தேன்..இவரை நீங்க சேர்த்துட்டுத்தான் ஆகணும்..."

நல்ல காமெடி. ஜெயின் டென்ஷனை இமேஜின் செய்ய முடிகிறது. இப்படித்தான் 1977-ல் பிப்ரவரியில் சோ என்ன சொன்னார் என்றால் ....
அடேடே நீங்க டென்ஷன் ஆயிடாதீங்க சார் நான் மேலே சொல்லலை.

இப்பின்னூட்டதின் நகலை என்னுடைய சோ பற்றிய பதிவிலேயே பின்னூட்டமாக நகலிட்டு வைக்கிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2005/12/blog-post_18.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

சிவா said...

எப்படியப்பு இப்படி கலக்குறீங்க. சிரிக்க வைத்ததற்கு நன்றி :-). அரசியல் கூத்த அப்படியே கொண்டு வந்துட்டீங்க..நல்லா இருக்குதுப்பு.