Monday, October 09, 2006

முத்துவின் பம்மல்-commoncivilcode-curfew

ஓகை என்ற நண்பர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். அதில் "அப்சலை தூக்கில் போட்டால் தான் நீ தேசபக்தன் என்று நீங்கள் கூறினால் அவனை தூக்கில் போடு என்று சொல்லும் முதல் ஆள் நானாகத்தான் இருப்பேன்", என்று நான் கூறியதை வைத்து "அவர்"(குறித்திருக்கும் ஆளுமையை சொன்னால் நண்பர் வருத்தப்படுவார் என்பதால்) பாணியில் சுற்றி வளைத்து எழுதியிருக்கிறார்.

தேசதுரோகியாக கூடாது என்று முத்து ஆசைப்படுகிறார் என்பதும் ஆனால் அவரது முந்தைய பதிவுகளை படித்திருப்பவர்களுக்கு ஆச்சரியாக இருக்கும் என்றும் ஒரு கண்டுபிடிப்பு வேறு.எந்த என்னுடைய முந்தைய பதிவில் தேசதுரோக கருத்துக்கள் இருக்கின்றன என்று தெரிந்துக்கொள்ள எனக்கு ஆசை ஒரு பக்கம் இருந்தாலும் எனக்கு பல புதிய கேள்விகள் எழுகின்றன.ஜெய்ஹிந்த என்பதை கண்ட இடத்தில் வாந்தி எடுப்பதை எதிர்த்து நான் எழுதியதை மட்டும் வைத்து நண்பர் இதை கூறியிருக்க மாட்டார் என்ற நம்பிக்கை உங்களை போலவே எனக்கும் இருக்கிறது.நல்லவேளை திராவிட தளத்தில் எழுதுபவர்கள் எல்லாம் தேசதுரோகிகள் என்று சொல்லவில்லையே என்று ஆசுவாசப்படுகிறேன்.

அப்சலை தூக்கில் போடுங்கடா என்ற வசனத்தின் பின்னணியில் என் கருத்தை உருவாக்க நீங்கள் கடைபிடிக்கும் வழி முறையின் மீதான என் விமர்சனத்தைத் தான் நான் குறிந்திருந்தேன் என்பது படிப்பவர்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.மேற்கண்ட நண்பரின் கட்டுரையும் இதற்கு ஒரு சான்று.

நீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு புறம்.தன்னிடம் வைக்கப்பட்ட வாதங்களை வைத்து நீதிமன்றம் சட்ட விதிகளின்படி ஒரு தீர்ப்பு தருகிறது. இந்த வழக்கை பொறுத்தவரை அப்சலின் பங்கு தூக்கு தண்டனை தரத்தக்கதா என்பதை விவாதிப்பது ஒரு தனிப்போக்கு.நல்லடியார் அந்த புள்ளியை தொட்டிருந்தார்.தடா என்ற சட்டத்தின்படி இந்த வழக்கு நடைபெற்றிருக்கிறது.

சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்கள் அதைப்பற்றி நிறைய பேசலாம். இதற்கு முன்பு கிலானியை தூக்கில் இட ஒரு விசாரணை நீதிபதி தீர்ப்பு கூறியிருந்தார். அந்த நீதிபதிக்கு ஹேங்கிங் ஜட்ஜ் என்பது பட்ட பெயராம். பிறகு செய்யப்பட்ட மேல்முறையீட்டில் உயர்நீதிமன்றத்தில் கிலானி மீதான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டார் (பார்க்க :ரோசாவின் பொதுபுத்தியை பற்றிய பதிவு).உறுதிப்படுத்தப்படவில்லை என்பதற்காகத்தான் அவர் தப்பித்தார் (நம்முடைய சவார்க்கர் காந்தி கேசில் விடுவிக்கப்படடதை போல்) என்றாலும் அந்த சுட்டியில் எப்படி நிரூபிக்கப்படவில்லை என்பதற்கான விளக்கம் இருக்கின்றது. அதையும் படிக்கலாம்
.

இப்போதைய விவாதங்கள் அப்சலுக்காக கேட்கப்பட்டுள்ள மன்னிப்பு பற்றியது.போன பதிவில் நான் கூறிய புள்ளியை சைடுவாக்கில் தொட்டு உஷா எழுதிய அரசியல் குற்றங்கள் என்ற கருத்தாக்கத்தை அதன்பிறகு பார்க்க நேர்ந்தது.உஷா கூறிய வாதம் பாதிவரை சரியானதுதான் என்பதுதான் என் கருத்து.ஆனால் உஷா எழுதிய காரணம் கருத்தை சுருக்கிவிடுகிறது.இந்த பொதுமன்னிப்பு விவகாரத்தில் அரசு என்ன நிலைப்பாடு எடுக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இநத விவகாரத்தில் நீண்ட காலநோக்கில் அது ஏற்படுத்தும் விளைவுகள்.

மேலும் நண்பர் ஓகை ராஜதுரை எழுதிய ஷரியா சரியா என்ற கட்டுரையை மேற்கோள் காட்டி இப்படியாக ஷரியாவை ஆதரிக்கும் ராஜதுரையின் கருத்தை ஆதரிக்கும் முத்துவை பாரீர் என்கிறார்.நண்பர் பிரபு ராஜதுரையின் கட்டுரையையும் படித்தேன்."அடப்பாவிகளாஅவரையும் தீவிரவாதி லிஸ்ட்டில் சேர்த்துட்டீங்களாடா" என்று விவேக் போல சொல்லத் தோன்றுகிறது. ( டா விகுதி நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டது)

ஆனால் ஒரு குழப்பமான போக்காக இன்று வரை பொது சிவில் சட்டம் என்பதில் எனக்கு ஒரு உடன்பாடான போக்குத்தான் இருக்கிறது.ஆம்.பிரபு ராஜதுரையின் கட்டுரைக்கு பிறகும்.ஆனால் சில சந்தேகங்கள் தோன்றிஉள்ளன.குறிப்பாக திருமணம் விவாகரத்து ஆகிய நிகழ்வுகளுக்குப்பின் மதத்தைப்பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுபரிசீலனை ஏற்பட்டால் வரும் நிலைமைகளை பொறுத்து.அவருடன் பிறகு கேட்டுக்கொள்ளலாம்.

கடைசியாக இன்றும் மங்களூரில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. மாட்டுக்கறி விவகாரத்தில் ஆரம்பித்த இந்த பிரச்சினையில் இதுவரை இரண்டு உயிர்கள் பலியாகி இருக்கின்றன. சிமி இதில சம்பந்தப்படட இருப்பதாக பா.ஜ.க வின் தலைவர் துணை முதல்வர் ஒரு அறிக்கை விட பதட்டம் அதிகமாகி உள்ளது.நேற்று ஊரடங்கு உத்தரவு விலக்கப்பட்ட நேரத்தில் வெளியே சென்றேன்.பசசை காய்கறிகள் ஏதும் கிடைக்காததால் சிக்கன்( என்னது பிஃபா. இல்லைங்க இல்லைங்க) வாங்கி சுட்டு சாப்பிட்டேன்.இன்று என்னாகுமோ தெரியவில்லை.இன்று மாலை ஊரடங்கு உத்தரவு விலக்கப்படும் என்கிறார்கள். மெயில்,போன்,பின்னூட்டம்,சேட் ஆகியவற்றில் நலம் விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

5 comments:

Sivabalan said...

முத்து

நன்றாக எழுதியுள்ளீர்கள்.

உங்கள் நலத்திற்கும் வாழ்த்துக்கள்.

நன்றி

Muthu said...

நன்றி சிவா,

இன்று பிரச்சினை முடியும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.

ரவி said...

அப்சலை தூக்கில் போட வேண்டாம் என்பது என் கருத்து...

அம்புட்டுதேன்....

rajavanaj said...

Muthu,

Very sensible post.. I feel these were the areas where "jaihind" hides our vision...

Wishes for your well being..

raja

Muthu said...

thanks raj and ravi