Sunday, March 05, 2006

வெட்கக்கேடு

அதோ இதோ என்று அனைவரும் எதிர்பார்த்த அந்த நிகழ்ச்சி நடந்தேவிட்டது. அரசியலில் நேர்மை, கொள்கையில் உறுதி, பொது வாழ்வில் தூய்மை என்று பாராட்டப்பட்ட வைகோ இன்று போயஸ் தோட்டத்தில் களை பறித்துக்கொண்டு இருக்கிறார்.இந்த செயல் தோழர் நல்லகண்ணு கூறியது போல ஒரு அரசியல் தற்கொலை என்றால் மிகையாகாது.

தி.மு.க கூட்டணியில் இருந்தால் ஸ்டாலின் பதிவியேற துணை புரிந்தது போலாகிவிடும்.கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்பது போன்ற நொண்டிசாக்குகள் எல்லாம் மக்கள் மனதில் விழுந்துவிட்ட அவர் மரியாதையை தூக்கி நிறுத்தாது.

கடுப்பாகி போயிருக்கும் தி.மு.க தொண்டர்கள் இனி கருணாநிதிக்கு பிறகும் இவரை நம்ப முடியாது என்ற எண்ணத்திற்கு தான் வருவார்கள்.இது ஸ்டாலினுக்கு மிகப்பெரிய நன்மை என்றுதான் நான் கருதுகிறேன்.குழலி கூறியதுபோல தென்மாவட்டங்களில் ம.தி.மு.க வினால் தி.மு.கவிற்கு ஏற்படும் நஷ்டம் காங்கிரசினால் ஈடுகட்டப்படும்.

தி.மு.க கூட்டணியில் இதுவரை இருந்த இறுக்கம் குறையும்.அவரவர்க்கு வேண்டிய அளவு சீட்டும் கிடைக்கும்.ம.தி.மு.க விற்கு எதிராக தி.மு.கவினர் ஆவேசமாக வேலை செய்வார்கள் என்றும் எதிர்ப்பார்க்கலாம்.தி.மு.க கூட்டணியிலேயே இருந்து உள்குத்து (இது நம்முடைய தமிழ்மண உள்குத்து இல்லைங்க) குத்துவதற்கு பதிலாக அவர் வெளியே இருப்பதே நல்லது என்று தி.மு.க கூட்டணி சந்தோஷப்படலாம்.

இங்கு நாம் வருத்தப்படுவது ஒரு தலைவராக வைகோவின் சரிவு. திருமாவளவன் எடுக்கும் நிலைகளுக்கு நாம் ஆதரவளிப்பது நம் தார்மீக கடமை.திருமா கூறியுள்ளபடி தி.மு.க அவர்களை தனிக்கட்சியாக மதிக்க வில்லை.ஆகவே அவர் அ.தி.மு.க கூட்டணிக்கு சென்றுவிட்டார்.ஜெயலலிதா ஜெயிப்பதோ அல்லது கருணாநிதி ஜெயிப்பதோ நமக்கு முக்கியமல்ல. திருமாவளவன் போன்ற சக்திகள் வளரவேண்டும் என்பதே நம் எதிர்பார்ப்பு

ஆனால் வைகோ கதை அப்படியா? எத்தனை பல்டி..எத்தனை தமாஷ்.. நடைப்பயணம் சென்றது,இருபது மாதங்கள் ஜெயிலில் இருந்ததை வைகோ மறந்துவிட்டாரா?

பழசை எல்லாம் நாங்கள் நினைப்பதில்லை என்று கூட்டணி பேச்சு முடிந்து ஜெயலலிதா குறுநகையுடன் பேட்டி கொடுக்கும்போது மேலே பார்த்துக்கொண்டு நின்றிருந்த வைகோவின் மனதில் ஜெயில் காட்சிகள் தானே தோன்றிக்கொண்டு இருந்திருக்கும். இந்த கருத்தை கேட்டு வைகோ திரும்பி ஜெயலலிதாவை பார்த்த பார்வையில் ஆயிரம் கவிதைகள்.அதை யாராவது நண்பர்கள் புகைப்படம் எடுத்து போடலாம்.

http://nayanam.blogspot.com/2006/03/blog-post.html
மேற்கண்ட பதிவு வைகோவின் தடுமாற்றங்களை சுவையாக சொல்கிறது.

ஒருவேளை தி.மு.க கூட்டணி வென்றால் வைகோ நிலைமை அதோ கதிதான்.அ.தி.மு.க வென்று தி.மு.க படுதோல்வி அடைந்தால்தான் வைகோவிற்கு நன்மை.ஆனால் வைகோ நினைப்பது நடப்பது கடினம் ஆகிவிட்டது அவருடைய இந்த செயலால் என்பது உண்மை.

தமிழ்சசி காங்கிரஸ் தமிழக அரசியலில் ஒரு பொருட்படுத்தும் அளவிற்கு இல்லை என்கிறார்.அது தவறு.எந்த அடிப்படையில் அவ்வாறு கூறுகிறார் என்று புரியவில்லை.இப்போதும் ஆன் பேப்பர் தி.மு.க கூட்டணி பலமானதுதான்.

அ.தி.மு.க செல்வாக்கு வளர்ந்துள்ளது என்பது உண்மையானால் இந்த தேர்தல் தமிழ்நாட்டில் ஒரு சர்ப்ரைஸ் ரிசல்ட் கொடுக்கும்.அது தமிழ்நாட்டு அரசியலில் முதல் கூட்டணி அரசு அழைக்கப்படும்.

49 comments:

Anonymous said...

VAIGO didnt have a choice. He has choosed to save the party rather than saving his own image. I think that is the best option as of now.

People might say that he has lost his Nermai, Nanayam etc etc. Why those people didnt vote for him when he stood alone in the last elections??.

In TNadu either you have to stand with DMK or AIADMK. There is no choice.

Amar said...

வைகோ பெரிய மனிதர் ஆகி விட கூடாதே என்ற அவர்கள் அனைத்து விதங்களிலும் அவரை அவமானபடுத்துவார்களாம் அவர் மட்டும் பேசாமல் கூட்டனியில் இருக்க வேண்டுமாம்.

தமிழ்நாட்டில் ஒரு கூட்டனிக்கு, கேரளாவில் ஒரு கூட்டனிக்கும் வோட்டு கேட்கும் கெவலமான கம்யூனிஸ்ட்டுகளின் நிலைக்கு வைகோ மேல்!

இது பரவாயில்லை, மத்தியில் கம்யூனிஸ்ட்டுகள் "ஆதரவு" வங்கத்தில் காங்கிரஸுக்கு போட்டியாமே?

ரொம்ப மான-ரோஷம் உள்ள "தோழர்கள்" தாம்!

//திருமாவளவன் எடுக்கும் நிலைகளுக்கு நாம் ஆதரவளிப்பது நம் தார்மீக கடமை//

தமிழினி, அவர் சம்பாதிப்பதில் உங்களுக்கு கமிஷன் எதாவது உண்டா? ;-) எத்தனை கோடியாம் ?

Anonymous said...

NOOOOOOOOOOOOOOOOOOOOOO!
There is a third choice and it couldnot have happened at a better time!
Tamils are frustrated over these opportunistic and unscrupulous Dravidian parties but have no choice so far!
But, when the proposed and rumoured BJP+Captain+DrSS combo forms a third front, the Tamils will have a third option to vent their displeasure and can have a choice to send both these groups packing!
I wish it happens!!

aththu miiRu!
adanga maRu!
thimiri ezhu!
thiruppi adi!
E! thamizhagamE!!
[nanRi: 'naNban']

Muthu said...

சமுத்ரா,

நான் கம்யூனிஸ்ட் கட்சியில் ஆயுள் உறுப்பினர் என்று நினைத்துவீட்டீர்கள் போலிருக்கிறது. நீங்கள் கேட்ட கேள்விகளை நானும் கேட்டவன்தான்.நான் அனுதாபி மட்டுமே.(எந்த கட்சி இந்தியாவில் இந்த ஸ்டாண்ட் எடுக்கவில்லை)


திருமாவை ஆதரிப்பதாக காரணம் உங்களுக்கு நான் புரியவைக்க முடியாது.அது கூகிளிலும் வராது.(நோக்கங்களை பாருங்கள்.புரியும்)

வைகோவை என்றிலிருந்து உங்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது?:))))

Muthu said...

//Tamils are frustrated over these opportunistic and unscrupulous Dravidian parties but have no choice so far!//

this is nothing but imagination i think

manasu said...

மகாநதியில் கமல் சொல்வார், ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மதிப்பும் மரியாதையும் கெட்டவனுக்கு கிடைக்கும் போது ஏன் நான் நல்லவனாய் இருக்க வேண்டும் என்று.

இதில் லாஜிக் பொருத்தமாய் இருக்கிறது. ஆனால் இது தான் சரியா என்றால்.... தெரியவில்லை.

வைகோ விஷயத்திலும் இது தான் நடந்திருப்பதாய் தோன்றுகிறது.

ஆனால் ஒரு நல்ல,நேர்மையான அரசியல்வாதி என்ற இமேஜை இழந்துவிட்டார் என்றே தோன்றுகிறது.

இது சரியா என்பது மக்கள் தான் சொல்ல வேண்டும்.

Anonymous said...

ஓரு மகனாக, ஒரு தனிமனிதனாக, ஒரு அரசியல்வாதியாக, ஒரு இயக்கத்தின் தலைவனாக, ... வைகோ இந்த முடிவை எடுத்துள்ளார். பலருக்கும் இந்த முடிவு ஏமாற்றம் அளிக்கும்.

திண்ணை காலியாகக் காத்திருக்கும் தம்பியைப் பற்றி நமக்கே தெரியும் பொழுது அண்ணனுக்குத் தெரியாமல் போகுமா? (I think M.K. preempted Vaiko, Samudra was on the right track about this).

'கருணாநிதிக்குப் பிறகு' என்பது எப்பொழுது வரும் என்பது தெரியாது.
அப்பொழுதும் எத்தனை தி.மு.க. தொண்டர்கள் ஸ்டாலினை/ஆளும் கட்சியை விட்டு வைகோ பின்னால் வருவார்கள் என்பதும் தெரியாது.
கூட்டணி வென்று தி.மு.க. ஆட்சி அமைத்தால், ம.தி.மு.க. தொண்டர்கள் கூடவே இருப்பார்களா என்பதும் தெரியாது.
ஆனால், அவர்கள் அ.தி.மு.க. போவதற்கு சான்ஸ் கம்மிதான்.

'கருணாநிதிக்குப் பிறகு' வரும் தி.மு.க. தொண்டர்களை விட, இப்பொழுது இருக்கும் ம.தி.மு.க. தொண்டர்களை கட்டிக்காக்க வேண்டியது தன் அரசியல் எதிர்காலத்திற்கு அவசியம் என்று வைகோ நினைத்திருக்கலாம்.

B.J.P.யுடன் சேர்ந்ததை விட இது ஒன்றும் மோசமில்லை. ஏற்கனவே, இதற்கு முன்மாதிரி இருப்பதால் (அண்ணா + ராஜாஜி), திராவிடர்களாகிய நாம் அதிகம் கவலைப்படத் தேவையில்லை.

திரு. சமுத்திரா, உங்களின் பின்மொழி அநாகரீகமானது, சிறுபிள்ளைத்தனமானது. இதனை நான் கண்டிக்கிறேன். ஓரு நகைப்புக்குறி போட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா?

- குகன்

Anonymous said...

இங்கு நாம் வைகோ தரப்பு நியாயங்களையும் நோக்க வேண்டும். வைகோவின் மற்றும் மதிமுக தொண்டர்களின் உழைப்பு மட்டுமே கருணாநிதிக்குத் தேவை. ஏன் வைகோ வேண்டிய 3 சீட் அதிகம் கொடுத்திருக்க முடியும். திமுக தான் போட்டியிடும் தொகுதிகளில் மூன்றைக் குறைத்துக்கொண்டிருக்கலாம். இதில் ஒன்று தெளிவாகிறது. கருணாநிதியே மதிமுக தன் கூட்டனியில் தொடர்வதை விரும்பவில்லை. இப்போது அவர் ஆடுவது கபட நாடகம். பேச்சு வெறும் வார்த்தை ஜாலம்.

Muthu said...

அனானி -1
கட்சியை காப்பது என்றால் என்ன? தி.மு.க கூட்டணியில் தானே கடந்த பாராளுமன்ற தேர்தலை சந்தித்தார்.அதனால் கட்சி அழிந்ததா? இதெல்லாம் ச்சும்மா உல்டா...
கடந்த இரண்டு மாதங்களாகவே அவர் மனது தடுமாறிக்கொண்டுதான் இருந்தது.
மனசு,

சரிதான்.கொஞ்சம் நிதானமாக யோசித்திருக்கலாம். 19 மாதம் பொடா சிறைவாசம் கூட மறந்துவி்ட்டது என்றால் என்ன நினைப்பது?

குகன்,
உத்தம திமுக தொண்டன் இவர் பின்னால் வர யோசிப்பான் என்பது உறுதி.

அனானி -2
ஏன் வைகோ தான் மூன்று தொகுதியை விட்டு கொடுத்திருந்தா என்ன? 22 தொகுதிக்கு மேலே வைகோ மெகா கூட்டணியில் எதிர்பார்த்தது மட்டும் நியாயமா?
அம்மா மெகா கூட்டணி அமைத்தால் வைகோவிற்கு எவ்வளவு கொடுத்திருப்பார்?

டிபிஆர்.ஜோசப் said...

வைகோ நேர்மையானவரா?

அவர் ஜெ.வை சந்திக்க வந்திறங்கிய மெர்சிடென்ஸ் பென்ஸ் வேன் என்ன விலையிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?

எந்த ஒரு பதவியும் வகித்திராத அவருக்கு எங்கிருந்து வந்தது இந்த வேன்? கட்சியினுடையது என்றால் அவருடைய கட்சி எப்போதாவது பதவியிலிருந்திருக்கிறதா என்ன?

அவருக்கு கிடைத்த பரிசு அந்த வேன் என்றால்.. யார் கொடுத்தார்கள்? எதற்கு கொடுத்தார்கள்?

யார் சார் இந்த வை.கோ..

முன்னால ஒரு எச்.வி.ஹண்டே, ஒரு வலம்புரி ஜான்.. கட்சி விட்டு கட்சி தாவிக்கிட்டே இருந்து இப்போ எங்கேன்னு கேக்கறா மாதிரி.. கூட்டணி விட்டு கூட்டணி விட்டு தாவி.. இவரும் இப்போ எங்கேன்னு கேக்கறா மாதிரி ஆகாம இருந்தா சரி..

இவரும் இவரோட அரசியலும்..

இதுல இவரத்தான் கலைஞருக்கு அடுத்தபடியா தொண்டருங்க நினைச்சிக்கிட்டிருக்காங்கன்னு எழுதறவங்களப்பத்தி என்ன சொல்றது?

Muthu said...

ராஜ்,

இது சரியானதா என்று எனக்கு புரியவில்லை. ஸ்டாலினை ஆதரிக்கவேண்டாம் என்பதால் கழன்றுகொள்வது என்றால் முக்கிய எதிரி அ.தி.மு.க வுடன் சேர்ந்துக்கொள்ளலாமா?அப்ப தனக்கும் பதவி தான் முக்கியம்கிறாரா?

ஜோசப் சார்,

பணம் விஷயத்தில் எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்.என்று நினைக்கிறேன்.
இன உணர்வு(உங்களுக்கு பிடிக்காதுன்னு தெரியும்) இருக்கிற ஆள் என்றுதான் அவர்மேல் ஒரு மதிப்பு இருந்தது.ஆனா கொள்கையில் உறுதி இல்லை என்பதுபோல் அவர் நடவடிக்கைகள் உள்ளன.இன உணர்வு என்பதும் நடிப்புதானோ என்ற சந்தேகம் வருகிறது.
(20 மாதம் ஜெயில் வாசம் ஜீரணிக்க முடியலைங்க)

முத்துகுமரன் said...

முத்து,

வைகோவின் முடிவை நான் வரவேற்கிறேன். இந்தத் தேர்தல் பல்வேறு வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு தமிழகத்தில் எந்த வகையான அரசியல் போக்குகள் இருக்கும் என்பதை தீர்மானிக்ககூடிய தேர்தல்.

வை.கோ மட்டும் தியாகியாக வேண்டும் என்பது எந்த வகையில் நியாயம். எல்லோருக்கும் தெரியும் வை.கோ செய்திருப்பது தேர்தல் கூட்டணி. மே மாதமே பிரிந்துபோகவிருக்கும் கூட்டணி. கூட்டணி சேர்வதினால் வரும் லாபங்கள் அவருடைய எதிர்கால அரசியலுக்கு உகந்தது. தமிழகத்திற்கும் நல்லது. ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. தமிழ்ப் பண்பாட்டை சிதைத்திருப்பதில் சன் டீவியின் பங்கு மகத்தானது. மக்கள் மத்தியில் மதிப்புமிக்க கட்சி என்பதை விட சட்டமன்றத்தில் இத்தனை இடங்களை வைத்திருக்கிற கட்சி என்பதுதான் ஆட்சி சதுரங்கத்தில் விளையாடுவதற்கு தகுதியைத் தரும்.

கலைஞருக்காக பல்லை கடித்து கொண்டு பல்லக்கு தூக்கலாம். ஸ்டாலினுக்கும் சேர்த்து தூக்கு என்றால் எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். 22 தொகுதி என்றே வைத்து கொள்வோமே அதில் மதிமுக விரும்பிய தொகுதிகள் 5 என்றே செய்திகள் வருகின்றன. மதிமுகவின் உழைப்புமட்டும் முழுமையாக வேண்டும். ஆனால் அவர்கள் வளரக்கூடாது. தமிழக அரசியலில் தாங்கள் ஒரு பலியாடுகளாக ஆகிவிடக்கூடாது என்பதாலேயே வை.கோ இந்த முடிவிற்கு வந்திருப்பார்.

மகனுக்காக கலைஞர் பண்ணையார்தனம் பண்ணும் போது இது போன்ற வலிமிகுந்த முடிவுகளை வை.கோ, திருமா போன்றோர் எடுப்பதை தவிர்க்க முடியாது.

Amar said...

//திரு. சமுத்திரா, உங்களின் பின்மொழி அநாகரீகமானது, சிறுபிள்ளைத்தனமானது. இதனை நான் கண்டிக்கிறேன். ஓரு நகைப்புக்குறி போட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா?
//

அய்யா,

நமக்கு உள்குத்து வைத்து எழுதுவது எல்லாம் தெரியாது.

எதோ ஒரு தமாசுக்கு சொன்னால் அதை போய் பெரிதாக்கி கொண்டு.

தமிழினிக்கு அப்படி தோன்றவில்லை என்றால் எனது பின்னூடத்தை நீக்கி விடுகிறேன்.

Amar said...

//வைகோவை என்றிலிருந்து உங்களுக்கு பிடிக்க ஆரம்பித்தது?:))))
//

இல்லை தமிழினி.
அவரை எனக்கு பிடிக்கவில்லை.

வைகோவுக்கு தாய்மொழியை மறந்தவர்கள் பட்டியலில் முதல் இடம் கொடுக்கலாம்

(தமிழ் அவருடைய தாய் மொழி அல்ல ;-) )

Muthu said...

சமுத்ரா,

காமெண்ட்டை ரீமூவ் எல்லாம் செய்யவேண்டாம். இதிலென்ன இருக்கு? நம்ப இதெல்லாம் இப்பத்தானா பேசறோம்?:))))

அப்புறம் வைகோ தாய்மொழிப்பற்றி நீங்கள் சொல்வது தவறான கருத்து.அதாவது
தமிழ்நாட்டுல வாழ்ந்துகிட்டு சம்ஸ்கிருதத்தை வணங்கினாத்தான் நான் வெறுப்பேன்.தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் தமிழ்நாட்டுல பல காலம் வாழ்றதுனால தமிழனா தன்னை ஃபீல் பண்ணி இருந்தா நான் பெருமைபடுவேன்.

பூங்குழலி said...

அன்பின் முத்து (தமிழினி),

வெட்கக்கேடு அல்லது மானக்கேடு இதில் எந்த தலைப்பு சரி?

Anonymous said...

ஐயா,
(தமிழ் வாத்தியார் கிட்ட பேசுவதுபோல் இருக்கிறது)

>>தமிழினிக்கு அப்படி தோன்றவில்லை என்றால் எனது பின்னூடத்தை நீக்கி விடுகிறேன்.

பொது இடத்தில் விவாதிக்கும் போது, இது போன்ற தரக்குறைவான மறுமொழியை படிக்கும் எவருக்கும் அதை கண்டிக்க உரிமை உண்டு.

தமயனும் தம்பியும் இன்னைக்கு சேர்ந்துக்குவீங்க, நாளைக்கு தம்பி அக்கா சேலைக்குப் பின்னாடி நின்னு திட்டுவாரு. பிறகு மறுபடியும் அடிச்சுக்குவீங்க.

எப்படியும் போங்க. நான் இந்த விளையாட்டுக்கு வரலை. ;^)

Peace \/

நன்றி,
குகன்

Muthu said...

குகன்,

கோபபடாதீங்க...சமுத்ரா 21 வயது பாலகன்..நம்பதான் அட்ஜஸ்ட் பண்ணணும்கறதுதான்
என் நிலைபாடு. மற்றபடி உங்கள் உணர்வுகளை நான் புரிந்து கொள்கிறேன்.

(திராவிட ராஸ்கல் மேட்டர் உங்களுக்கு தெரியாதா குகன்?)

Amar said...

//அப்புறம் வைகோ தாய்மொழிப்பற்றி நீங்கள் சொல்வது தவறான கருத்து.அதாவது
தமிழ்நாட்டுல வாழ்ந்துகிட்டு சம்ஸ்கிருதத்தை வணங்கினாத்தான் நான் வெறுப்பேன்.தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் தமிழ்நாட்டுல பல காலம் வாழ்றதுனால தமிழனா தன்னை ஃபீல் பண்ணி இருந்தா நான் பெருமைபடுவேன்.//

தமிழுக்கு கொடுக்கும் மரியாதையை கொஞ்சம் அவரின் தாய்மொழிக்கும் கொடுக்கவேண்டாமா?

//காமெண்ட்டை ரீமூவ் எல்லாம் செய்யவேண்டாம். இதிலென்ன இருக்கு? நம்ப இதெல்லாம் இப்பத்தானா பேசறோம்?:))))//

நான் எழுதுனத்து பின்னாடி Wink ஒன்னு இருந்தது உங்க கன்னுக்கு தெரிஞ்சா சரி.

Muthu said...

சமுத்ரா,

வின்க் இருந்தது..எனக்கு தெரியும்..கோபம் எதுவும் இல்லை என்று மீண்டும் சொல்கிறேன்...அது ஒரு ஜோக் என்று ஒத்துக்கொள்கிறென்.

தமிழுக்கு கொடுத்த மரியாதையை தன் தாய்மொழிக்கு வைகோ கொடுக்கவில்லை என்று எப்படி சொல்கிறீர்கள்?

Anonymous said...

முத்து,

நன்றி, எனக்கு கோபம் ஒன்றும் இல்லை. நீங்கள் அட்ஜஸ்ட் பண்றது உங்கள் பெருந்தன்மையைக் காட்டுகிறது.

ஏதோ நம்ம ஊரு பையனாச்சே, கொஞ்சம் சொன்னால் கேட்பாரே என்று நினைத்தேன். அவ்வளவுதான். ;^)

'திராவிட ராஸ்கல்' விவாதத்தை முழுவதும் படிக்கவில்லை. 'திராவிட ராஸ்கல்' என்ற தலைப்பே பரபரப்புக்காக வைத்ததாக நினைக்கிறேன். மாற்றுக்கருத்தானாலும் தரமுடன் எழுதினால் மற்றவர்கள் சீரியஸாக படிப்பார்கள். இல்லை என்றால் குப்பை என்று ஒதுக்க வேண்டியதுதான்.

I hope Samudra takes this in a right way. Hoping to read more from him in the future.

நன்றி,
குகன்.

Muthu said...

திராவிட ராஸ்கல் தலைப்பு வெறும் பரபரப்புக்கா?
அட ஏங்க...முதல்ல அத படிங்க..அது பெரிய துன்பியல் சம்பவம்:))))))

Muthu said...

selvan,

வைகோ கறைபடியாத கரத்திற்கு சொந்தக்காரர் என்று நம்பிக்கை ஒரு பக்கம்.இன உணர்வு உள்ளவர் என்ற நம்பிக்கை ஒருபுறம்...கருணாநிதியின் வாரிசு அரசியல் பிடிக்காதவர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரம் மறுபுறம் என்று பலவித நம்பிக்கைகளினால் வரவேற்கப்பட்டவர் வைகோ.....

அவர் ஜெயிலில் இருந்தது பிக்பாக்கெட் அடித்தா? இல்லையே..அது ஒரு நல்ல கொள்கைக்காக என்று கூறலாம்.ஆகவே இந்த விஷயத்தில் நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது.

வைகோ தி,மு.க வுடன் சேர்ந்ததை நியாயப்படுத்த முடியும். கட்சியை திரும்ப இணைக்கவில்லையே...ஜெயலலிதா வலதுசாரி..திராவிட கொள்கைகளை நீர்த்துப்போக செய்கிறார்....சர்வாதிகாரமாக நடக்கிறார் என்பது குற்றச்சாட்டு.அதற்குத்தான் மற்ற திராவிட கட்சிகளுக்கு சப்போர்ட்செய்யப்படுகிறது.

அதனால் தான் வைகோவின் இந்த கூட்டணி சந்தர்ப்பவாதமாகிறது.

சன் டிவி., தினகரன் சமாச்சாரங்கள் எல்லாம் சட்டபூர்வமாக செய்யப்படும்போது ஏதும் செய்ய முடியாது. நாம் விருப்பப்படற வேலையை நாம் செய்யற மாதிரிதான்.

தினமலர், துக்ளக், ஜெயா டிவி எல்லாம் சமூக சேவை பண்றாங்களான்று ஒரு கேள்வி கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க?

மூப்பனார் பிரதமர் என்பதெல்லாம் ஒரு கனவு..கதை..அதுவெல்லாம் இவங்க கட்டிவிட்டட கதை .அதையெல்லாம் நம்புறது தப்பு...( சின்ன சந்தேகம்: அப்ப மூப்பனாரை விட கலைஞர் சின்ன தலைவர் என்கிறீர்களா?)


மொழிப்பற்றை பற்றி நீங்களே ஒரு பதிவு நல்லா போட்டீங்க?:)))ஆனா இப்ப...

central funds issue is just an exageration from jaya tv..just compare various funds received from various state govt during national calamities..1000 crores is not a joke....compartively

ஜோ/Joe said...

//What are the benefit tamilan gets. Can i get job.//
கொடுமைடா சாமி!

Muthu said...

யார் ஆட்சிக்கு வந்து என்ன பண்றது? நான் உழைச்சித்தானே சாப்பிட வேண்டி இருக்கிறது என்று சொல்றது போலிருக்கிறதா ஜோ?

Anonymous said...

வணக்கம் தமிழினி தங்களின் பதிவு நன்று. மானக்கேடோ, வெக்ககேடோ இது அரசியல் சீரழிவு கேடு.

பார்க்கவும் எனது பதிவு http://rajasugumaran.blogspot.com/
அண்ணா சொன்னபடிப் பார்த்தால் தம்பி வைகோ இன்று வேட்டி இல்லாமல் நின்றுகொண்டிருக்கிறார்

பட்டணத்து ராசா said...

muthu,

Can you tell me? what is the benefit if vaiko stay with dmk alliance. i think he cannot get anything out of it even after MK except saving his good face. Also it is not new in the political era, dmk did the samething with the congress after the emergency( remeber how many of dmk'ans suffer'd).

though i feel mdmk depart neither affect dmk alliance nor effect admk alliance(may be it does some extend). but your review seems to be little biased.

Muthu said...

ராசா,

கலைஞர் வாரிசு அரசியல் விஷயத்தில் தவறிழைத்து விட்டாலும் திராவிட கொள்கைகளை ஜெயலலிதாவைவிட நன்றாகவே பின்பற்றுகிறார்.(இதற்கு விளக்கம் சொல்ல ஒரு பதிவு பத்தாது)

வைகோ திராவிட கொள்கைகளில் உறுதியாக தொடருவார் என்பது பொதுவான எதிர்பார்ப்பு.தி.மு.க கூட்டணியில் வைகோ தொடர்ந்தால் கருணாநிதிக்கு பிறகு தி.மு.க தொண்டர்களின் நன்மதிப்பை பெறமுடியும்.திராவிட இயக்கத்தை நீர்த்து போகாமல் வைத்திருக்க முடியுமே?

இப்போது ஜெ. கூட்டணியில் மட்டும் வைகோவுக்கு என்ன லாபம்?

எம்ர்ஜென்ஸி அகில இந்திய பிரச்சினை..ஆனால் ஜெ.வைகோ வை பிடித்து உள்ளே போட்டது அகில இந்திய பிரச்சினையா? கோர்ட் சொல்லியும் விடாததுதான் கொடுமை.

சந்திப்பு said...

முத்து! வைகோவின் இந்த தடுமாற்றத்திற்கான காரணம் என்ன என்று அலசினால் பல உண்மைகள் வெளி வரும். என்னைப் பொறுத்தவரை வைகோ ஒரு அரசியல்வாதியே அல்ல. (அரசியல்வாதி என்றால் அடிப்படையில் அவர் ஒரு அமைப்பாளனாக இருக்க வேண்டும். அமைப்பை தலைமை தாங்குபவனாக அல்ல)

வைகோ திமுகவில் இருந்த போதே அவர் மாநிலங்களவை உறுப்பினராகத்தான் வலம் வந்தாரே தவிர, மக்களை உறுப்பினராக இல்லை. மேலும் அவருக்கு உரிய சிறப்பு அவர் ஒரு பிரச்சார பீரங்கி... அவ்வளவுத்தான். அதனால்தான் பெரியாரின் தமிழின மீட்சி, அண்ணா கொள்கையில் மறுமலர்ச்சி என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசினாலும் நடைமுறையில் அவரால் அமலாக்க முடியவில்லை. எப்போது அவர் பா.ஜ.க.வோடு கொஞ்சி குலாவினாரோ அப்போதே அவரது கொள்கை கோவணம் பறந்து விட்டது. பொடாவை அறிமுகப்படுத்தி பேசியவரே வைகோதான். (பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்பட்டவர்) எனவே அவர் பொடா நாயகன் என்று பறைசாற்றுவது படு கேவலமானது. எனவே, வைகோவைப் பொறுத்தவரையில் தூரப்பார்வையோடு செயல்படக்கூடிய வல்லமையற்றவர். நிகழ்கால நடப்புகளில் அமுங்கிப் போகக்கூடிய தன்மை கொண்டவர்.

எனவேதான் அவருக்கு ஜெயலலிதாவின் தேர்தல் உறவு - ஆசை வெட்கம் அறியாது என்பார்களே அதுபோல் அமைந்து விட்டது! அவருக்கு என்ன கவலை - கீழ் மட்டத்தில் அவரது தொண்டர்கள்தானே மக்களைச் சந்திக்கப் போகிறார்கள். சாரி! தற்போது அக்கட்சியில் தொண்டர்களே இல்லை என்பது ஒரு நிதர்சனம்!

krishjapan said...

Varisu arasiyal... Tell me one thing, when Vasan can be cheif of TMC immediately after his fathers death- when he was not even a leader in it, when Rajiv can be PM immeaditely after Indiras death, when Anbumani can be central minister on one fine morning out of no where, when ... whats wrong in Stalin becoming DMK cheif after being in it as a cadre, youth wing cheif, deputy Gen.secretery? Whether he can get the support of people is according to his capability. Thats all.

dondu(#11168674346665545885) said...

புதுச்சேரி இரா சுகுமாரன் அவர்களே. முதற்கண் உங்களது பதிவில் பின்னூட்டமிட இயலவில்லை.

கொள்கைதான் வேட்டி என்று அண்ணா கூறும் பட்சத்தில் அவரே வேட்டியில்லாதுதான் போனார். இது பற்றி பார்க்க என் பதிவு: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

சரிதான் கிருஷ்ணா, ஆனால்

1.ஸ்டாலினை விட திறமையான தலைவர்கள் தி.மு.க வில் உள்ளனரே...( எனக்கு துரைமுருகனை ரொம்ப பிடிக்கும்),பொன்முடி

2.வைகோவை வெளியேற்றியது ஏன்?

3.ஜனநாயக முறைப்படி கட்சி தேர்தல் எல்லாம் நடக்கும் என்று கூறப்படும்போது பூஸ்டிங் ஏன்?

மற்றவர்கள் செய்யும் தவறு நம் தவறை நியாயப்படுத்தாது.இதை தவிர இன்னும் கலைஞரை நான் மதிக்கிறேன்.

(ஜெ மட்டும் என்ன ஜெயில்ல கிடந்து போராடினாரா? அதுவும் வாரிசு அரசியல்தான்.ராமதாஸ் மதிப்பிழந்ததும் அதனால்தான். காங்கிரஸ் பற்றி எல்லாம் பேசினாலே அசிங்கம்)

Muthu said...

//மேலும் அவருக்கு உரிய சிறப்பு அவர் ஒரு பிரச்சார பீரங்கி... அவ்வளவுத்தான். அதனால்தான் பெரியாரின் தமிழின மீட்சி, அண்ணா கொள்கையில் மறுமலர்ச்சி என்றெல்லாம் உணர்ச்சிப்பூர்வமாக பேசினாலும் நடைமுறையில் அவரால் அமலாக்க முடியவில்லை. //

excellent point..it is making me to think...

thanks santhipu

Muthu said...

dondu.

உங்க கலாட்டாவை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். தெரியாது என்று நினைக்க வேண்டாம்....(பி.ஜே.பி வரணுமா உங்களுக்கு?..வாங்க..எத்தனை பேர் கிளம்பி இருக்கீங்க)

அண்ணா வேட்டி இல்லாமல் போகவில்லை....இன்னும்கூட உங்கள் தேசியம் கர்நாடகாவிடம் நாம் குண்டிகழுவ தண்ணீர் கேட்கும்போது வெளிப்படுகிறதே

krishjapan said...

My point is MK marked him as his varisu, and systematically brought him from the cadre level to this level. For that Stalin has also worked in the party until now. Tell me what prevented MK to give ministership to stalin last time. Nothing, but still MK waited. To give him training Stalin was made Mayor and remember it was a direct election. I think, no other party in the country has taken so much time to give power to their designated successor. I think, MK made a mistake of delaying it, otherwise that would have been an non-issue, like people accepting Rajiv, Vasan, Chandrababu Naidu, JJ, he also would have been accepted.

dondu(#11168674346665545885) said...

அப்படியா முத்து அவர்களே. அப்படியென்றானல் என் பதிவில் வந்து தைரியமாகப் பின்னூட்டம் இடுவதுதானே. அவ்வாறு யார் தைரியமாக வருகிறார்கள், யார் எவருடைய கோபத்துக்கோ பயந்து வராமல் இருக்கிறார்கள் என்பதையும் நான் கவனித்துத்தான் வருகிறேன்.

அண்ணா வேட்டியில்லாமல் போனது குறித்து சம்பந்தப்பட்டக் காலக் கட்டத்திலேயே பேசிச் சிரித்தாகி விட்டது. அப்போது நீங்கள் பிறக்கக்கூட இல்லை என்பதை நினைவூட்டுகிறேன். நான் அச்செய்திகளை அவை வரும்போதே படித்தவன் என்பதையும் கூறிவிடுகிறேன்.

மற்றப்படி பாஜகவைப பற்றிப் பேசியது கூட நடக்க முடியாத காரியத்துக்கு உதாரணத்துக்குத்தான்.

காவேரி விஷயம்? ஒப்பந்தம் முடியும் தருணத்தில் ஆட்சியில் இருந்தது முக அவர்கள்தான். இந்திரா அவர்களுடன் பலம் வாய்ந்த கூட்டணியில் இருந்தும் சொதப்பியது அவரே. அதற்காகவே அவர் ஆட்சிக்கு வரக்கூடாது. ஞாபகப்படுத்தியதற்கு நன்றி.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் இப்பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

krishna,
what you said is right in a way..i accept... but why vaiko is thrown out?..as i said earlier i love karunanidhi except this reason..also see dayanidhi maran's projection...

dondu,

போட்டார் பாரு ஒரு போடு....எல்லார் பதிவுக்கும் எப்போதும் நர்ன எப்பொதும் எல்லாருடைய எல்லா பதிவுக்கும் பின்னூட்டம் இடுவதில்லை. எல்லார்க்கும் தெரிந்த காரணம் தான். போலியின் கலாட்டாவிற்கு பின்னரும் நான் அங்கு வந்துள்ளேன்.அதை விடுங்க..

மேட்டருக்கு வந்தோமென்றால்....
அண்ணா மேட்டரை நீங்கள் படித்தது சரி.ஆனால் துக்ளக்கில் படித்துள்ளீர்கள்.அதுதான் பிரச்சினை.(நான் அப்போது பிறக்கவில்லை என்பது உண்மைதான்)


காவிரி விஷயத்தில் நீங்கள் ஜெயலலிதாவின் குரலில் பேசுகிறீர்கள்.எனக்கு முழுவிளக்கமும் தெரியாது. அப்போது இந்திராகாந்தி கருணாநிதி தயவில்தான் ஆட்சியில் இருந்தாரா?

சரி...இப்போது இந்த தேசியத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு குப்பைகூடைக்கு போகும்போது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?

krishjapan said...

Nanum vidaratha illa Muthu... Vaiko throwing out is definitely wrong. I sincerely want u to read Vasanthis article in Theeranadhi, wherein she wrote about the interview she ahd with MK in this regard. She wrote that she could see the genuine fear in Mks face over the threat to his life from such an unexpected quarter. Remmeber, just 2 years before Rajiv was murdered. It was partly due to this fear (MK didnt said that VaiKo was behind that, but he beleived that for VaiKo, without even VaiKos consent, they would have done it) and partly due to Maran and other second rank leaders brainwash that VaiKo was sent out. But before that, for 18 years VaiKO was made as Rajya sabha MP, none else had that privilage except Maran.

In DMK, all the leaders sons/daughters belong to that party and being groomed as individual persons Varisu. There are so many persons likes that in DMK. When Maran died Dayanidhi stepped in. It was real big mistake as he didnt have anything to do with politics until then. But, u cant say that to Stalin. But, also see because of his fast and dynamic approach, Dayanidhi has got good name and people almost forgot that he is a sudden comer.

dondu(#11168674346665545885) said...

"அப்போது இந்திராகாந்தி கருணாநிதி தயவில்தான் ஆட்சியில் இருந்தாரா?"

இந்திரா காங்கிரசுக்கு சட்டசபையில் ஒரு சீட் கூடத் தராத அளவுக்கு அவர் பலம் இருந்தது.

ஏன் அச்சமயம் சரியாகப் பேசி ஒப்பந்தத்தை மீட்சி செய்யவில்லை என்பதற்கு நாஞ்சில் மனோகரன் அவர்கள் பிற்காலத்தில் துக்ளக்குக்கு கொடுத்த பேட்டியில் மென்று விழுங்கினார் என்பதும் நிஜம்.

அண்ணா அவர்கள் வேட்டியை இழந்தபோது துக்ளக் பத்திரிகையே வரவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியாமல் போனதில் அதிசயம் இல்லைதான். அதைக் குறிப்பிட்டு கேலி பேசியவை குமுதம், கல்கி, விகடன் ஆகிய பத்திரிகைகளே. இன்னும் ஒரு விஷயம். அக்காலக் கட்டத்தில் துக்ளக் இருந்திருந்தாலும் மற்ற பத்திரிகைகள் அளவுக்கு தனிப்பட்ட அளவில் கேலி பேசியிருக்காது என்பதும் உண்மையே. ஏனெனில் அது மற்ற எல்லா பத்திரிகைகளையும் விட கண்ணியத்தை அதிகம் கடைபிடித்தது. கிசு கிசுவெல்லாம் அது எழுதியதே இல்லை.

அது சரி அது என்ன தேசியம்? நான் அதை குத்தகைக்கு எடுத்திருக்கிறேனா என்ன? இந்த தேர்தலில் திமுகவா அதிமுகவா என்பது பற்றித்தான் சர்ச்சையே என்பதை மறக்காதீர்கள்.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

krishna,

You can give several justifications...but i feel stalin lacks something....

if he develops himself..it is ok...

mainthing is he should evolve on his own..time will tell.....

now a single family having total control over the party is not auguring well for the future of the dravidian movement..
already they started compromising on some issues..(sun TV etc)

krishjapan said...

Yes. I also say, stalin needs to evolve himself and if he succeeds he will be in the fray and if he fails then he wont be in the fray. He will be forgotten.
U know one thing, I feel vaiKos this switching over to JJ has defintely boosted Stalins chances, later. In fact, for this one factor, I wanted VaiKo to be with MK this last time...

Muthu said...

DONDU,

//இந்திரா காங்கிரசுக்கு சட்டசபையில் ஒரு சீட் கூடத் தராத அளவுக்கு அவர் பலம் இருந்தது. //

இதெல்லாம் வேண்டாம். கர்நாடகாவின் நிலைப்பாட்டை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் கதையடிக்க கூடாது.

//அண்ணா அவர்கள் வேட்டியை இழந்தபோது துக்ளக் பத்திரிகையே வரவில்லை என்பதும் உங்களுக்குத் தெரியாமல் போனதில் அதிசயம் இல்லைதான். //

அப்பத்தான் நான் பிறக்கவே இல்லையே..எனக்கு தெரியாது.

//அது சரி அது என்ன தேசியம்? நான் அதை குத்தகைக்கு எடுத்திருக்கிறேனா என்ன? //

வேட்டியை பறக்கவிட்டதை பத்தி சொல்லும்போது அதை ஏன் என்று பார்க்கவேண்டிஉள்ளதால் தேசியத்தை பற்றி பேசவேண்டியுள்ளது.

//இந்த தேர்தலில் திமுகவா அதிமுகவா என்பது பற்றித்தான் சர்ச்சையே என்பதை மறக்காதீர்கள்.//

இந்த அடிப்படையிலும் பார்த்தாலும் நீங்கள் சொல்வது போல் தாய்நாட்டுக்காக துப்பாக்கி தூக்குபவன் உங்களுக்கு தீவிரவாதி.அவர்களை கருணாநிதி வளர்த்துவிடுவார் ஆனால் அம்மையார் அமைதி விரும்பி.பேஷ்.இது சோவின் கருத்து.ஆகவே உங்களின் கருத்தும்கூட.

வேலைநிறுத்தம் உரிமையை பறிக்க காரணமாக இருந்தவர்.

சர்வாதிகாரம்

எதேச்சதிகாரம்

இந்துத்வாவாதி

ஆகிய விஷயங்களால் அவரை எதிர்க்கவேண்டிஉள்ளது.

Muthu said...

//I feel vaiKos this switching over to JJ has defintely boosted Stalins chances//

yaa.. i too shared this point in this post

Anonymous said...

வைகோ விற்கு என்று தனி மரியாதை உண்டு, அது இன்று சரிந்து இருக்கிறது என்று மட்டும் உண்மை, எந்த அளவிற்க்கு சரிந்து இருக்கிறது என்றால் ராமதாஸ்க்கு என்ன அரசியலில் மரியாதையே அந்த அளவிற்க்கு.
ஒரு வாரதிர்க்கு முன் ம.தி.மு.க ,தி.மு.க வின் வெற்றிக்காக பாடுபடும் என்று சொன்ன நாக்கு இன்று அ.தி.மு.க வின் வெற்றிகாக பாடுபடும் என்று சொல்கிறது.
பொடா கைது பற்றி கேட்டதிர்க்கு முதல் அமைசர் பதில் என்ன வோ அதுவே என் பதில் என்று "ஆமாம்" சாமி போட ஆரம்பித்து விட்டார். நான் வைகோ மேல் வைத்து இருந்த மரியாதையை சுத்தமாக காலி செய்து விட்டார்.

krishjapan said...

Annony... Sariyana podu potteenga. Ramdasukku irrukkum athe mariyathai than enbathu romba sari.

பட்டணத்து ராசா said...

//எம்ர்ஜென்ஸி அகில இந்திய பிரச்சினை..ஆனால் ஜெ.வைகோ வை பிடித்து உள்ளே போட்டது அகில இந்திய பிரச்சினையா?
//
if it is all india issue, it is even worse and more inexcusable. are you trying to say is just an ego clash between vaiko and jaya. come on man than some one will claim that at the party(mdmk) interst of well being , he did not care his ego :-).

i believed that you are really writing something sensable, now something is lacking in your statement. Muthu :(

dondu(#11168674346665545885) said...

"அப்பத்தான் நான் பிறக்கவே இல்லையே..எனக்கு தெரியாது."
ஆனாலும் எல்லாம் தெரிந்த மாதிரி அதை நான் துக்ளக்கில் படித்திருப்பேன் என்று கூறும்போது இது நினைவுக்கு வராததுதான் இடிக்கிறது.
"தாய்நாட்டுக்காக துப்பாக்கி தூக்குபவன் உங்களுக்கு தீவிரவாதி.அவர்களை கருணாநிதி வளர்த்துவிடுவார்"
தன் தாய்நாட்டுக்காக துப்பாக்கி தூகியது எல்லாம் சரிதான், ஆனால் நம் நாட்டவரை அதை வைத்துப் போட்டுத் தள்ளினானே. அவனைத்தானே முக ஆதரிக்கிறார். அப்படிப்பட்ட தீவிரவாதிகளை ஒடுக்கும் ஜெதான் இப்போது நமக்கு தேவை.
"வேலைநிறுத்தம் உரிமையை பறிக்க காரணமாக இருந்தவர்."
நாட்டையே ப்ளேக்மெயில் செய்யும் அளவுக்கு ஆட்டம் போட்ட அரசு ஊழியர்களை கட்டுக்கு கொண்டு வர ஜெதான் சரியான ஆள். அதற்காகவே அவரை ஆதரிக்க வேண்டும்.
நீங்களே வேறு இடத்தில் கூறியது போல கருணாநிதி 1970ல் நடந்ததையெல்லாம் கூறி எல்லார் டென்ஷனையும் ஏற்றியதுதான் பலன். கூட்டணியிலேயே பாருங்கள். அவருக்கு என்ன கண்ட்ரோல் இருக்கிறது. ஆளாளுக்கு பேசுகிறார்கள். பேசிப்பேசியே பலரை தன்னை விட்டு விலகச் செய்தவர்தானே அவர். அதுவும் நீங்கள் கூறியது. அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

மற்றப்படி சர்வாதிகாரம் எதேச்சாதிகாரம் முக அவர்களிடம் கூடத்தான் உண்டு. ஆனால் எல்லோருக்கும் அது கேலியாகவே படுகிறது. அந்தளவுக்கு அவருக்கு ஆளுமை குறைவு.

உண்மையான டோண்டுதான் இப்பின்னூட்டம் இட்டான் என்பதை குறிக்கும் வண்ணமாக இப்பின்னூட்டத்தின் நகலை நான் மேலே கூறிய பதிவிலும் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/03/blog-post_07.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Vaiko should have contested independent.but not like the last time, in all the 234 constituencies.

in the the constituencies where he could have really proved his strenght(if he thinks, really he has got some).

Muthu said...

பட்டணத்து ராசா,

//i believed that you are really writing something sensable, now something is lacking in your statement. //

இதற்கு நான் ஒன்றும் செய்வதற்கில்லை:))))..Everybody can make their own judgements......after all india is a democratic nation....

எமர்ஜென்சியில் தி.மு.க விற்கும் காங்கிரசுக்கும் இருக்கவேண்டிய பகை ஜெயா வைகோவை பொடாவில் போட்டதை விட பெரிது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்..நான் அப்படி நினைக்கவில்லை..அவ்வளவுதான் வித்தியாசம்.....

அப்படியே உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் இதில் மீண்டும் வெட்கப்பட வேண்டியது காங்கிரஸ்தான் என்று நினைக்கிறேன்.(ராஜீவ்காந்தி கொலை கேஸ் பிரச்சினைகள் எல்லாம்)

அதே போல் கருணாநிதியின் மீதான விமர்சனங்கள் ஏன் 1970 களை மட்டுமே பேசுகின்றன?


டோண்டு,

துக்ளக் சமாச்சாரம் கிண்டல் என்று உங்களுக்கும் தெரியும்.எனக்கும் தெரியும்...
மற்றபடி இலங்கை சமாச்சாரம் எல்லாம் இந்த பதிவில் பேச முடியாது. நீதிமன்ற அவமதிப்பு, பொடா சட்ட பயம் எல்லாம் எனக்கும் இருக்கிறது.நேர்பேச்சில் ராஜீவ் கொலை பற்றய என் கருத்தை என்னால் சொல்லமுடியும்.
கலைஞரின் ஜனநாயக பண்பை பற்றியும் ஜெயலலிதாவின் ஜனநாயக பண்பை பற்றியும் நீங்கள் சொல்லி நான் தெரிந்துகொள்கிற நிலையில் இல்லை. நான் தினமும் மீடியாவை ஃபாலோ செய்கிறேன்.எனக்கு தெரியும்.


அனானி,
உங்கள கருத்தை நான் ஆதரிக்கிறேன்.