Wednesday, October 19, 2005

கோன் பனேகா குரோர்பதியில் குப்புசாமி

நண்பர்களே, கோன் பனேகா குரோர்பதி என்று ஒரு தொடர் தொலைக்காட்சியில் வருவது நமக்கு எல்லாம் தெரியும். அதற்கு எஸ்.எம்.எஸ. அனுப்பி அனுப்பி கை
விரல் தேய்ந்தும் அழைப்பே வராத அப்பாவி தமிழர்கள் சார்பாக இந்த கடிதம் எழுதுகிறேன்.

ஒவ்வொரு வாரமும் யாராவது தமிழ்நாட்டில் இருந்து பங்கு பெறுவார்கள் என்று ஆவலாக பார்பபதும் பின்பு ஏமாறுவதுமே நமது பொழப்பாகி விட்டது. இதுவரை தமிழ்நாட்டில் இருந்து நிகழ்ச்சியில் பங்கு பெற அழைக்கப்பட்ட அனைவருமே வடநாட்டவர்கள் தான் என்பது தற்செயல்தான் என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

சென்னையில் இருந்து யாரோ சிங், கோவையிலிருந்து யாரோ செளதுரி, சேலத்தில் இருந்து ஏதோ சர்மா, கல்பாக்கத்திலிருந்து செளபே என்று தான் ஆட்கள் அழைக்கப்பட்டார்கள்.

நண்பர்களே தெரியாமல் தான் கேட்கிறேன் .தமிழ்நாட்டிலிருந்து குப்புசாமிக்களும் கோயிஞ்சாமிக்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெற முடியாதா? நிகழ்ச்சியை தமிழ் மொழிபெயர்த்து விளம்பரதாரர் மூலம் பணம் அள்ளும் விஐய் டிவி மற்றும் ஏர்டெல் நிறுவனம் இதை பற்றி என்ன நினைக்கிறார்கள்? தமிழன் எங்கேயும் எப்போதும் இளிச்சவாயன்தானா?

4 comments:

பிரதீப் said...

இப்படியுமா நடக்கிறது???
நான் இதைக் கவனிக்கவில்லையே... ஆம் என்றால் இந்தப் பாரபட்சம் கண்டிக்கப் பட வேண்டியது

Anonymous said...

One of the rules of this gameshow is "Aspiring participants shall be above 18 and should be fluent in Spoken Hindi". Maybe this is the reason.

Muthu said...

Really they are great scholars to find our spoken hindi talent by seeing our sms or telephone call only..imm...great

Anonymous said...

Tamilarkalin Ilichavaaythanamellam Karanam Illai Tamilarkal kurukku Vaziyil illaamal kadumaiyana Udal Uzaippal Munnukku Varaththudippavarkal enbathum Vanthaarai Vaaza Vaikkum Perungunam Kondavarkal enbathum "KBC"kkararkalukku Therinthullathe Karanam!
THAMILAR ENTORU INAMUNDU THANIE AVARUKKORU KUNAMUNDU !