Friday, October 21, 2005

காங்கிரஸ் கட்சியின் அதி மேதாவித்தனமான அறிவுரைகள்

சமீபத்தில் மணிசங்கர அய்யர் கேஸ் விலையேற்றத்தை சமாளிக்க மக்களுக்கு புதுமையான உத்தியை கூறி வாங்கி கட்டி கொண்டது நாம் அறிந்ததே. இது போன்ற அறிவார்ந்த அறிவுரைகள் சொல்வது காங்கிரஸ்காரர்களுக்கு புதிதல்ல.

தூர்தர்ஷன் நிகழ்ச்சிகள் போரடிக்கிறதே என்று கேட்ட கேள்விக்கு ராஜுவ் காந்தி அளித்த பதிலை நினைவுக்கூர்ந்து கொள்ளவும். என்ன கூறினார் என்று நினைவு கூர்ந்து கூறுபவர்களுக்கு ஞாபக சிந்தாமணி பட்டம் வழங்கப்படும். யாரும் பதில் கூறாவிட்டால் என்னுடைய அடுத்த பதிவில் அல்லது பின்னூட்டத்தில் பதில் கூறப்படும்.

மற்றபடி இந்த மாதிரி அறிவுரைகளை சீரியசாக எடுத்துக்கொண்டு அவருக்கு கறுப்பு கொடி காட்டுவது போன்ற செய்கைகள் தேவையற்றது. இன்னொரு காங்கிரஸ் காமெடியன் என்று எடுத்துக்கொண்டு அவரவர் வேலையை பார்ப்பது நல்லது.

2 comments:

Anonymous said...

ராஜீவ் என்ன சொன்னாருன்னு எனக்குத் தெரியாது. ஒரு வாரமாச்சு. நானும் பாக்கறேன். யாரும் எதுவும் சொல்லல. நீங்களும் அடுத்த பதிவில சொல்றேன்னு சொல்லீட்டு 4 பதிவு போட்டுட்டீங்க. அவரு என்ன தான் சொன்னாரு ??

Muthu said...

ஓய் உம்ம குசும்புக்கு அளவே இல்லைங்காணும்....ராஜீவ் டிவி நிகழ்ச்சி போரடித்தால் டிவியை ஆஃப் பண்ணிட்டு போய் தூங்க சொன்னார்.