Saturday, June 24, 2006

செல்வன்,அருந்ததி உடன்போக்கு அரசியல்

அருந்ததி பற்றி காரசாரமாக விவாதம் நடைப்பெற்று வருகிறது. ரோசா வசந்த், செல்வன் ஆகியோர் எழுதியதை படித்தேன். செல்வனின் கட்டுரையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொள்வோம். ரோசாவசந்தின் கருத்துக்கள் பெரும்பாலும் நான் ஏற்றுக்கொள்ள கூடியதாகத்தான் இருக்கும்.பாஸ்டன் பாலாஜி பதிவிலும் அருந்ததி கூறாத கருத்துக்கு பலர் கிண்டலும் கண்டனமும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த எதிர்வினை செல்வன் என்பதால் மட்டுமே எழுதுகிறேன்.ஒரு சமுத்ராவோ ஜெயராமனோ அல்லது ம்யூஸோ எழுதியிருந்தால் நான் ஏன் இதை எழுத போகிறேன்:) அதாவது அவர்கள் அளவிற்கு என்னால் திறமையாக வாதங்களை அடுக்கமுடியாது என்பதற்காகத்தான் இதை சொல்கிறேன்.மேலும் நான் அருந்ததியின் அனைத்து கருத்துக்களையும் ஆதரிக்கிறேன் என்று கூறி இதை எழுதவில்லை என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

ஒரு இந்தியர் நாம் அணுகுண்டு வெடித்திருக்க தேவையில்லை என்று கூறினால் நீங்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது செல்வன்? சாப்பிட உணவில்லாமல் பலகோடி பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அணுகுண்டு வெடித்ததின் மூலம் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கிறார் அருந்ததி. நியாயமான கேள்விதானே.

அணுகுண்டு வெடித்ததின் மூலம் இந்தியாவின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியதாக சொல்கிறீர்கள்.எனக்கு அப்படி தோன்றவில்லை. இன்று தவிர்க்க முடியாமலும் இயற்கையான நடைமுறை ஆகவும் நாம் அறிமுகப்படுத்திய உலகமயமாக்கல் சூழ்நிலையில் இவ்வளவு மனித வளம் உள்ள நம் நாட்டின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவுவது இயற்கையான விசயமே.

அணுகுண்டு வெடித்ததின் மூலம் பாகிஸ்தானை நாம் மிரட்டிவிட்டோம் என்று எல்லாம் கூறிவிடமுடியாது. உடனே அவனும் குண்டு வெடித்ததை கவனியுங்கள்.சரி நமக்கும் பாகிஸ்தானுக்கும் என்ன பிரச்சினை? நம்முடன் வாழ்ந்தவர்கள்தானே அவர்கள்.இன்று பஸ் எல்லாம் விட்டு உறவு வளர்க்கிறோமே? ஏன்?

உங்களுக்கு பாகிஸ்தான் பிரச்சினையின் ஆணிவேரும் அதில் யாசின் மாலிக் கும்பலின் பங்கு என்ன என்று தெரியுமா?இதற்காக நான் தீவிரவாதிகளின் ஆதரவாளன் என்றெல்லாம் கூறவிடக்கூடாது.சங்கரின் கட்டுரையும் முக்கியமாக இந்த யாசின் மாலிக், அருந்ததி படத்தை அடிப்படையாக்கித்தான் இருந்தது.

காஷ்மீர் பற்றி தமிழ்சசியின் இந்த கட்டுரைகளை படியுங்கள். சந்திப்பின் இந்த கட்டுரையையும் படிக்கலாம்.

அமெரிக்கா இந்தியாவை குண்டு வைத்திருக்கிறாய் என்று கண்டித்தது காமெடி என்று சிரிக்கிறீர்கள். அதே அடிப்படையில்தான் இன்று இந்தியா ஈரானை கண்டிக்கிறது. இதற்கு என்ன சொல்வது?அருந்ததி ராய் நக்சலைட் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்துவது தான் சரி என்று எங்காவது கூறியுள்ளாரா? மேலும் நீங்கள் கூறியது போல் அவர் ஜனநாயக முறையில் போராடவில்லை என்றால் அவர் என்ன துப்பாக்கி ஏந்தி போராடுகிறாரா?


இடதுசாரியம் பேசுபவர்களை புறங்கையால் நீங்கள் ஒதுக்கிவிடமுடியாது செல்வன். மக்கள் தொகை மிகுந்த நம் நாட்டில் , படிப்பறிவு குறைந்த நம் நாட்டில், சாதியின் அடிப்படையில் பெரும்பான்மை மக்கள் கல்வி உள்பட பல உரிமைகளை இழந்திருந்த நம் நாட்டில் அருந்ததிராய், மேதா பட்கர், கம்யூனிஸ்ட்டுகள் போன்றவர்கள் தேவை நிறைய உள்ளது.

ஆயிரம் இருந்தாலும் இந்த நாட்டின் பலம் ஜனநாயகம் என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும்.இந்த ஜனநாயக முறையில் நாட்டின் வளர்ச்சி தொடர்ந்து ஏற்பட வேண்டுமானால் அனைத்து தரப்பு மக்களின் குரலும் உரத்து ஒலிக்கப் படவேண்டும்.ஏழை சொல் அம்பலம் ஏறாது என்பார்கள்.அப்படிப்பட்ட மக்களின் குரலை உரத்து ஒலிப்பவர்கள் இவர்கள்.

இங்கு பலரும் ஒலிப்பது ஒரு சிறுபான்மையோரின் குரல்.அந்த குரலுக்கு, அந்த அரசியலுக்கு பெயர் உடன்போக்கு அரசியல். ஆம்.உடன்போக்கு அரசியலுக்கு என்று எந்த தெளிவாக கொள்கையும் இருக்காது. நாடு போகும் போக்கில் உடன்போக்கு கொள்கை போகும். இன்று ஜனநாயகம் வாழ்க என்று குரல் கொடுக்கும்.நாளை முஸ்ராப் மாதிரி ஒரு சர்வாதிகாரி கையில் நாடு சிக்கினால் முஸ்ரப் வாழ்க என்று முதல் குரல் கொடுக்கும் குரலாகவும் இந்த உடன்போக்கு அரசியல்தான் இருக்கும்.உடன்போக்கு அரசியலின் ஒரே நோக்கம் தன் நிலையை காத்துக்கொள்வதுதான்.

தமிழ் வாழ்க என்று ஒரு புறம் எழுதும் நீங்கள் தேசியம் என்ற கற்பித கொள்கைக்கு அதிக முக்கியத்துவம் தருவதுபோல் ஒரு தொனி தெரிகிறது. தவறில்லை.ஆனால் தேசியம் என்ற பெயரில் இங்கு அமல்படுத்தப்படும் விஷயங்களையே பலர் எதிர்க்கிறார்கள். இங்கு இந்தியா சிதறவேண்டும் என்று யாரும் கூறுவதில்லை.கார்கில் போரில் கூட முதலில் உயிர்தியாகம் செய்தது ஒரு தமிழனான சரவணன்தான்.அது வேறு.இது வேறு.

ஆனால் அருந்ததியோ, இடதுசாரிகளோ அனைத்து தரப்பினர் உரிமைகளும் மதிக்கப் படவேண்டும் என்றுதான் கூறுகிறார்கள்.வேற்றுமையில ஒற்றுமை என்பதை வாயளவில் பேசுகிறோம்.என்றுமோ அரசாங்கத்தின் நிலைகளை ஆதரிப்பது நமக்கு பாதுகாப்பானதுதான்.ஆனால் நியாயமானதா?

இன்று மேதா பட்கர் என்று ஒருவர் போராட்டங்கள் நடத்தவில்லை என்றால் இந்த அளவாவது நிவாரண உதவிகள் அந்த உரத்து குரல் எழுப்ப வக்கில்லாத அந்த பழங்குடி இனத்தாருக்கு கிடைத்திருக்குமா? இந்த அரசாங்கத்தை நம்பினால் அவர்கள் சரியாக செய்வார்களா?

சாத்வீகமான முறையில் நியாயமான காரணத்திற்காக உண்ணாவிரதம் இருந்த மேதா பட்கரை சாகட்டும் விடு என்று கூறிய நாடுதானே இது?


( அவசரமாக எழுதப்பட்டது.சில சொற்குற்றங்கள் இருக்கலாம். பின்னர் திருத்தப்படும்.இந்த கட்டுரைக்கு இரண்டாம் பாகமும் வரலாம்)

103 comments:

Unknown said...

//சாப்பிட உணவில்லாமல் பலகோடி பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அணுகுண்டு வெடித்ததின் மூலம் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கிறார் அருந்ததி. நியாயமான கேள்விதானே.//

வணக்கம் முத்து

சாப்பிட உணவில்லாமல் இருக்கும் நாட்டில் ராணுவம் எதற்கு,அவர்களுக்கு சம்பளம் எதற்கு என யாராவது கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்?உயிரோடு இருந்தால் தான் சோறும்,தண்ணீரும் தேவைப்படும்.நம்மை சுற்றிலும் பகைவர்கள் அணுகுண்டுடன் இருக்க நாம் மட்டும் சோறு தண்ணீர் என பேசிக்கொண்டிருந்தால் மிஞ்சப்போவது ஒன்றுமில்லை.ரஷ்யா அணுகுண்டு வெடித்தது 1948ல்.உலக யுத்தம் முடிந்து நாட்டின் பொருளாதாரமே சீர்குலைந்து கிடந்த நிலையில் அணுகுண்டு சோதனை நடத்தியது.சீனாவும் 1962ல் முன்னேறாதபோது அனுகுண்டு சோதனை நடத்தியது.இன்றைய நிலையில் நாட்டின் சுயபாதுகாப்புக்கு தேவையானதை செய்வதில் நாம் தயக்கமே காட்டக்கூடாது.

/அணுகுண்டு வெடித்ததின் மூலம் இந்தியாவின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியதாக சொல்கிறீர்கள்/

நான் அப்படி எங்கும் குறிப்பிடவில்லை.சோவியத் யூனியன் வீழ்ந்தபின் சுயபாதுகாப்புக்கு இந்தியாவுக்கு வேறு வழியில்லை என்று தான் கூறியுள்ளேன்.

/அணுகுண்டு வெடித்ததின் மூலம் பாகிஸ்தானை நாம் மிரட்டிவிட்டோம் என்று எல்லாம் கூறிவிடமுடியாது./

இதையும் நான் சொல்லவில்லை.நான் சொல்லாத ஒன்றுக்கு நான் எப்படி பதிலளிக்க முடியும்?

/உங்களுக்கு பாகிஸ்தான் பிரச்சினையின் ஆணிவேரும் அதில் யாசின் மாலிக் கும்பலின் பங்கு என்ன என்று தெரியுமா?/

யாசின் மாலிக் கும்பல் அன்றைய மத்திய அமைச்சர் முப்தி முகம்மது சையத்தின் மகளை கடத்தி தீவிரவாதிகளை விடுதலை செய்ய சொன்ன கும்பல்.பிபிசிக்கு அளித்த பேட்டியில் பகிரங்கமாக ஆள்கடத்தல் செய்ததயும் கொலைகள் செய்ததையும் ஒத்துக்கொண்டுள்ளான்.அவன் கொலை செய்த பண்டிட்களுக்கு கணக்கு வழக்கே கிடையாது.

from
http://news.bbc.co.uk/olmedia/cta/progs/
01/hardtalk/malik17jul.ram

By his own admission, Yasin Malik and the JKLF were involved in kidnappings and the murder of civilians in northern India. In particular, they targeted members of the minority Kashmiri Hindu community. In a riveting interview with Tim Sebastian, host of BBC's Hardtalk, Yasin Malik was forced to acknowledge his terrorist activities on television, but absolutely refused to apologize for his crimes.

The interview makes abundantly clear that this Malik continues to defend violence and refuses to accept responsibility for the attacks conducted by his group, the JKLF. Malik's interview can be accessed via the internet at:


//அமெரிக்கா இந்தியாவை குண்டு வைத்திருக்கிறாய் என்று கண்டித்தது காமெடி என்று சிரிக்கிறீர்கள். அதே அடிப்படையில்தான் இன்று இந்தியா ஈரானை கண்டிக்கிறது. இதற்கு என்ன சொல்வது?//

அமெரிக்கா,இந்தியா இரண்டும் தன் சுயநலனுக்காகவே அடுத்த நாடுகள் அணுகுண்டு வைத்துக்கொள்ள வேண்டாம் என்கின்றன.இப்போது இந்தியா அப்படி சொல்லும்போது இரானியர் ஒருவர் இந்தியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் ஈரானில் அவருக்கு என்ன மரியாதை கிடைக்கும்?சொல்லுங்கள்.

/அருந்ததி ராய் நக்சலைட் தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்துவது தான் சரி என்று எங்காவது கூறியுள்ளாரா? மேலும் நீங்கள் கூறியது போல் அவர் ஜனநாயக முறையில் போராடவில்லை என்றால் அவர் என்ன துப்பாக்கி ஏந்தி போராடுகிறாரா?/

மாவோ தீவிரவாதிகள் துப்பாக்கி ஏந்தி போரிடுவதை ஆதரிப்பதாக அவர் தன் பேட்டியில் சொல்லியிருக்கிறார்

http://www.democracynow.org/article.pl?sid=06/05/23/1358250

/இடதுசாரியம் பேசுபவர்களை புறங்கையால் நீங்கள் ஒதுக்கிவிடமுடியாது செல்வன்./

இடதுசாரிகளை நான் ஒதுக்கவே இல்லை.நக்சலைட்டுகளையும் மாவோயிஸ்டுகளையும் தான் எதிர்க்கிறேன்.ஏன்?ஆயுதம் தாங்கி போராடுவதால்.அவர்கள் கம்யூனிச இயக்கத்தில் சேர்ந்து செங்கொடி ஏந்தி அறவழியில் போராடினால் நிச்சயம் ஆதரிப்பேன்.,ஆயுதம் ஏந்தினால் நிச்சயம் எதிர்ப்பேன்.ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் எதிர்ப்பார்கள்.

(தொடரும்)

Unknown said...

//நீங்கள் ஒலிப்பது ஒரு சிறுபான்மையோரின் குரல்.அந்த குரலுக்கு, அந்த அரசியலுக்கு பெயர் உடன்போக்கு அரசியல்.//

உடன்பாடு அரசியல் நடத்துபவன் எதற்கு இந்தி திணிப்பை கண்டித்து பதிவு போடுகிறேன்?திண்னையில் கட்டுரை எழுதுகிறேன்?சொல்லுங்கள்.என் எழுத்துக்களுக்கு நானே எஜமானன்.அரசல்ல.அமெரிக்காவில் இருந்தபோதும் அமெரிக்க அரசுக்கு எதிராக குரல் கொடுத்து பதிவு போட்டிருக்கிறேன்.

/இன்று மேதா பட்கர் என்று ஒருவர் போராட்டங்கள் நடத்தவில்லை என்றால் இந்த அளவாவது நிவாரண உதவிகள் அந்த உரத்து குரல் எழுப்ப வக்கில்லாத அந்த பழங்குடி இனத்தாருக்கு கிடைத்திருக்குமா? இந்த அரசாங்கத்தை நம்பினால் அவர்கள் சரியாக செய்வார்களா?/

மேதாபட்கரை நான் எங்கு எதிர்த்தேன் என்று சொன்னால் நலமாக இருக்கும்.நான் சொன்னது இதுதான்

"நர்மதா அணை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு அடுத்ததாக போராடினார் நம் அம்மையார்.சரி ஆதிவாசிகளுக்கு நல்லது செய்கிறார் என ஆதரிக்க வேண்டிய விஷயம் தான்"

"பல நல்ல நோக்கங்களுக்காக அருந்ததி குரல் கொடுக்கிறார் என்பதை குறிப்பிடாமல் இந்த கட்டுரையை முடிக்க இயலாது.ஆதிவாசிகள் நலன்,ஏகாதிபத்திய எதிர்ப்பு,உலகமயமாக்கல் எதிர்ப்பு ஆகியவற்றை ஆதரிக்கிறார்,சில சுயமுரண்களுடன்."

இதில் எங்கே மேதபட்கர் எதிர்ப்பும்,நர்மதை ஆதிவாசிகள் போராட்ட எதிர்ப்பும் வருகிறது?சொல்லுங்கள்.

வவ்வால் said...

வணக்கம் முத்து(தமிழினி)

அருந்ததி ராய். மேதபட்கர் போன்றோர் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுக்கிறார்கள். அனைவரின் கருத்துகளும் கேட்கபட வேண்டும் என்பது போன்ற உங்கள் கருத்துடன் எனக்கும் உடன்பாடே!

ஆனால் இவர்களின் நம்பகத்தன்மை கேள்விக்குறியதாக இருக்கிறதே,ஒரு வேளை இந்தியாவில் கேள்விகு அப்பாற்பட்ட அப்பழுக்கற்ற , மக்கள் கருத்தை எதிரொலிக்கும் நபர்கள் இல்லையோ எனத்தோன்றுகிறது.எல்லோரும் ஒரு மறைமுகமான சுய விருப்பம் வைத்துள்ளவர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்களுக்கு மீடியா வெளிச்சம் கவர்வதில் தான் ஆர்வமோ எனத்தோன்றுகிறது.

ஒரு சின்ன உதாரணம், ஆமிர் கான் நர்மதா சரோவர் திட்டத்திற்கு எதிரான உண்ணவிரத்திற்கு ஆதரவாக வந்த போது அவர் தான் உண்மையான ஆண்மகன் எனப்பாராட்டினார் ராய், பத்திரிக்கையாளர்கள் நீங்கள் கோக்கிற்கு எதிராகவும் போராடுகிறீர்கள் எனவே ஆமிர் கானிடம் அதற்கும் ஆதரவு கேட்பீர்களா எனக்கேட்டப்போது மழுப்பினார். ஏன் நேராக அப்போதே கேட்கலாமே.

மேதா பட்கருக்கு வரும் அன்னிய பண உதவி பற்றி அரசு விசாரிக்கும் என்றதும் அவரும் அடக்கி வாசிக்கலானார். எல்லாருமே சந்தர்ப்பவாதிகளோ எனத்தோன்றுகிறது. அப்பாவிகளுக்கு இவர்களை விட்டால் குரல் கொடுக்கவும் வேறு ஆள் இல்லை! எல்லாம் நம் இந்திய அரசியலைப் போல் தான் இருக்கிறது.

Muthu said...

welcome selvan

//சாப்பிட உணவில்லாமல் இருக்கும் நாட்டில் ராணுவம் எதற்கு//

செல்வன்,

இது என்ன வார்த்தை விளையாட்டா? கட்டுரை கொடுக்கும் இம்ப்ரசனை பாருங்கள்...அணுகுண்டு வெடித்ததைப்பற்றி நீங்கள் கூறியதையும் இதன் அடிப்படையில்தான் நான் பார்க்கிறேன்....
அணுகுண்டு வெடித்ததின் நோக்கங்களை நீங்கள் சொல்லவில்லை. பலரும் சொல்கிறார்கள்.நீங்கள் அதை ஆதரிக்கிறீர்கள்.அவ்வளவுதான்.

Muthu said...

இதில் உள்ள பிரச்சினையை பாருங்கள்.யாசின் முப்தியின் பெண்ணை கடத்தியதற்கு ஆதாரம் உண்டா என்று நான் கேட்டால் நான் தீவிரவாதியை ஆதரிப்பவன் ஆவேன்.

நீங்களும் உஷாராக எழுதுகிறீர்கள்:)

முதல் வரியில் முப்தியின் மகளை கடத்தியவர் அவர் என்றும் இரண்டாம் வரியில் பல தீவிரவாத செயல்களை ஒத்துக்கொண்டார் என்றும் மூன்றாவது வரியில் காஷ்மீர் பண்டிட்டுகளை கொன்றார் என்றும்...
****
முப்தியின் மகளை கடத்தியதை ஒத்துகொண்டாரா?

Muthu said...

ராணுவத்தாலும் அரசாங்கத்தாலும் அளிக்கப்படும் தகவல்களை வைத்து மட்டுமே பேசுவதால் வரும் பிரச்சினைகள் இவை.இதை நான் தவிர்க்கிறேன்.


ஈரான் விஷயத்திலும் சுயநலம் இருக்கவேண்டும் என்றெல்லாம் நீங்கள் உரத்து கூறுவது அடிப்படை மனிதநேயத்திற்கு பங்கமாக அல்லவா இருக்கிறது? (தனிப்பட்ட சண்டைகளை விடுங்கள்)

Unknown said...

வணக்கம் முத்து

/சாப்பிட உணவில்லாமல் இருக்கும் நாட்டில் அணுகுண்டு எதற்கு?/

என்ற கேள்விக்கு பதில் கேள்வியாய் தான்

/சாப்பிட உணவில்லாமல் இருக்கும் நாட்டில் ராணுவம் எதற்கு?/

என்ற கேள்வியை எழுப்பினேன்.

சாப்பிட உணவின்றி இருக்கும் நாட்டுக்கு சுயபாதுகாப்புக்கு செலவை பற்றி கவலைப்படாமல் ராணுவம் வைத்திருப்பது போல் செலவை பற்றி கவலைபடாமல் அணுகுண்டு வைத்திருப்பதும் அவசியம்.

நீங்கள் சாப்பாடு,செலவு பற்றி சொன்னதால் தான் இதை சொல்லவேண்டியதானது.

Muthu said...

உண்ணாவிரதம் இருப்பவர்களை சாக விடுகிறார்கள் நம் அரசு என்று கூறியிருந்தேனே?

நீங்கள் இடதுசாரிகளை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள்.ஆனால் அவர்கள் நிலைப்பாடுகளை சீர்தூக்கி பார்ப்பது இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.( அந்த அளவு அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் கூறினால் நான் அம்பேல்)

Unknown said...

முப்தியின் மகளை கடத்தியதை ஒத்துகொண்டாரா? //

டெக்கான் ஹெரால்ட் பத்திரிக்கையின் ஆதாரம் போதுமா?

http://www.deccanherald.com/deccanherald
/Jun182005/tavleen.asp

Yasin Malik returned, fully trained in terrorism, to kidnap Home Minister Mufti Mohammed Sayeed’s daughter and when the VP Singh government released Kashmiri militants in exchange for her freedom we saw the beginning of the insurgency in Kashmir.

Unknown said...

//உண்ணாவிரதம் இருப்பவர்களை சாக விடுகிறார்கள் நம் அரசு என்று கூறியிருந்தேனே?

நீங்கள் இடதுசாரிகளை ஆதரிப்பதாக சொல்கிறீர்கள்.ஆனால் அவர்கள் நிலைப்பாடுகளை சீர்தூக்கி பார்ப்பது இல்லை என்று எனக்கு தோன்றுகிறது.( அந்த அளவு அவர்கள் நடந்துகொள்கிறார்கள் என்று நீங்கள் கூறினால் நான் அம்பேல்) //

நான் இடதுசாரி எதிர்ப்பாளன் அல்ல.நக்சலைட்,மாவோ கும்பல் எதிர்ப்பாளன்.நர்மதை பிரச்சனையில் ஆதிவாசிகளுக்கு நியாயம் தரவேண்டியது அவசியம்.

ஆனால்

ஆயுதம் தாங்கி,ஆள்கடத்தல் செய்யும் தீவிரவாத கும்பலை வன்மையாக எதிர்ப்பேன்.மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் எதிர்க்கும்.

ஜனநாயக நாட்டில் அறவழியில் போரிடுவதையே நான் ஆதரிக்கிறேன்.ஆயுதம் தூக்குபவர்களுக்கு என் ஆதரவு கிடையாது.

Unknown said...

//ஈரான் விஷயத்திலும் சுயநலம் இருக்கவேண்டும் என்றெல்லாம் நீங்கள் உரத்து கூறுவது அடிப்படை மனிதநேயத்திற்கு பங்கமாக அல்லவா இருக்கிறது? (தனிப்பட்ட சண்டைகளை விடுங்கள்) //

நான் அதை ஆதரிக்கிறேன் என்று சொல்லவில்லையே?இந்தியா அப்படி ஏன் சொல்லுகிறது என கேட்டீர்கள்.அதற்கான காரணத்தை சொன்னேன்.இந்தியாவின் நிலைக்கு நான் ஆதரவு தந்தால் கூட ஏதோ இந்தியன் இந்தியாவை ஆதரிக்கிறான் எனலாம்.ஈரானியன் இந்திய நிலையை ஆதரிது ஈரானை எதிர்த்தால் அவனை ஈரானில் எப்படி பார்ப்பார்கள் என்று சொல்லுங்கள்?

Muthu said...

i saw that deccan chronicle link that is written by tavleen singh ..which cannot be taken for face value..

Muthu said...

நானும் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க முயற்சி செய்பவன்தான்

Muthu said...

//ஈரானியன் இந்திய நிலையை ஆதரிது ஈரானை எதிர்த்தால் அவனை ஈரானில் எப்படி பார்ப்பார்கள் என்று சொல்லுங்கள்?//

செல்வன்,

ஒருவர் நம்மை எப்படி அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் என்று முடிவு எடுப்பதா இல்லை நியாயம் எது என்று பார்த்து முடிவு எடுப்பதா?

Unknown said...

/நானும் தீவிரவாதிகளை ஆதரிப்பதில்லை.ஆனால் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனிக்க முயற்சி செய்பவன்தான் /

ன்றி.

அவர்கள் சொல்வதில் என்ன நியாயம் இருந்தாலும் அவர்களை அணுவளவேனும் ஆதரிக்க கூடாது.ஏனெனில் ஒவ்வொரு தீவிரவாதியும் ஒரு புனித நோக்கத்தைத்தான் முன்வைத்து தான் போராடுவதாக சொல்வான்.கடவுள் பெயர்,மக்கள் நலன் என்று ஆயிரம் புனித காரனங்களை சொல்வான்.அதில் மயங்கி விடாதிருத்தல் அவசியம்

Unknown said...

//செல்வன்,

ஒருவர் நம்மை எப்படி அடுத்தவர்கள் பார்க்கவேண்டும் என்று முடிவு எடுப்பதா இல்லை நியாயம் எது என்று பார்த்து முடிவு எடுப்பதா? //

அணுகுண்டு பிரச்சனையில் எது நியாயம் என்று சொல்லுங்களேன் கேட்கலாம்.

இந்தியா அணுகுண்டு வெடித்தது எந்த வகையில் அநியாயம்?

Anonymous said...

$elvan you are still an baby when it comes to politics. get real. அறவழியோடு போராட அழைக்கும் உங்களுக்கு அணுக்குண்டு என்ன காந்தித்தாத்தா ராட்டையின் லேட்டஸ் வர்ஷனா தெரிகிறதா? பிபிசில்லாம் ரெபர் பண்ண சொல்றீங்க. மாவோயிஸ்ட் பத்தித்தான் தொடர்ச்சியா வருகிறதே வாசிச்சி பாருங்களேன் ஏன் அவுங்க ஆயுதம் தூக்கினாங்கின்னு.

Muthu said...

செல்வன்,

அணுகுண்டு விஷயத்தில் நாம் செய்தது அநியாயம் அல்ல.தேவையா என்று அந்தம்மா கேட்டார்கள்.

மற்றபடி தீவிரவாதிகள் புனித காரணங்கள் சொல்வார்கள்.புனிதமா இல்லையா, நியாயமா இல்லையா என்பதையும் நாம் பார்க்கத்தான் வேண்டும்.(நேதாஜீயும் வன்முறை போராட்டம்தான் செய்தார்.விடுதலைபுலிகளும் வன்முறை போராட்டம்தான் செய்கிறார்கள்)

VSK said...

சாலைகள் என்பது அவசியமாகிப் போனபோதே, கூடவே வாகனங்களும் அவசியமாகியது!

விவசாயம் என்பது அவசியமாகிப் போனபோதே நவீனரக ட்ராக்டர் போன்றவைகளும் அவசியமாகிப் போனது.

இல்லை, நான் இன்னும் கட்டைவண்டியில்தான் பயனம் செய்வேன் என்று கூறுவது முட்டாள்தனம்.

மாட்டேன், நான் இன்னும் கலப்பையையும், மாட்டையும் வைத்துத்தான் உழுவேன் என்பது இயலாமை.

இதுபோல இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுபோலவே, ராணுவம் என்ற ஒன்று தேவையாகும் போது, போர் அபாயத்தைத் தவிர்க்கும் முன்னேற்பாடுகள் என நவீனரக ஆயுதங்களும், அணுகுண்டு தயார் நிலை போன்றவைகளும் அவசியமாகின்றன.

இதையே, சீனாவும், அமெரிக்காவும் இன்னும் மற்ற நாடுகளும் செய்து கொண்டன.

இருபுறமும் அபாயம் இருக்கிறது என்பது தெள்ளத்தெளிவான நிலையில், அணுகுண்டு திறன் நிலையை நோக்கிப் பயணம் செய்வது எந்த வகையில் தவறாகும்?

இதைத் தவறென்பது நம் துரதிர்ஷ்டமே!

நல்ல வேளை! இந்தியா போன்ற ஜனநாயக நாடுகளில் இப்படியெல்லாமாவது பேச முடிகிறது!

Unknown said...

//அணுகுண்டு விஷயத்தில் நாம் செய்தது அநியாயம் அல்ல.தேவையா என்று அந்தம்மா கேட்டார்கள்.//

அப்படி அவர்கள் கேட்கவே இல்லை.இந்தியா அணுகுண்டு வெடித்ததற்கான காரணங்கள் நியாயமானவை என அவரே சொன்னார்.

"Why did they do it? Political expediency is the obvious, cynical answer, except that it only raises another, more basic question: Why should it have been politically expedient? The three Official Reasons given are: China, Pakistan and Exposing Western Hypocrisy.

Taken at face value, and examined individually, they're somewhat baffling. I'm not for a moment suggesting that these are not real issues. Merely that they aren't new. The only new thing on the old horizon is the Indian government."

http://www.ratical.org/ratville/nukes/endOfImagine.html

இப்படி சொல்லிவிட்டு "நான் இந்திய விரோதி" என்றார்.இந்தியன் என்பவர்களை 9 என மறைமுகமாக சொன்னார்.

It's this: If protesting against having a nuclear bomb implanted in my brain is anti-Hindu and anti-national, then I secede. I hereby declare myself an independent, mobile republic. I am a citizen of the earth. I own no territory. I have no flag. I'm female, but have nothing against eunuchs. My policies are simple. I'm willing to sign any nuclear non-proliferation treaty or nuclear test ban treaty that's going. Immigrants are welcome. You can help me design our flag.

Unknown said...

(நேதாஜீயும் வன்முறை போராட்டம்தான் செய்தார்.விடுதலைபுலிகளும் வன்முறை போராட்டம்தான் செய்கிறார்கள்) //

நேதாஜியும் நக்சலைட்டு மாவோ கும்பல்களும் ஒன்று என்கிறீர்களா?வண்டி திருடுவது,ஆட்களை கடத்தி பணம் பறிப்பது இதை எல்லாமா நேதாஜி செய்தார்?

Muthu said...

துப்பாக்கி தூக்குபவர்களுக்கு உதாரணம் காண்பித்தென்.மற்றபடி வங்கி கொள்ளையர்களை எல்லாம் நான் எதுக்கு செல்வன் ஆதரிக்கனும்?
(iam also sitting in a bank branch(

Anonymous said...

ஹிட்லரோடு கூட்டுச் சேர்ந்ததிலும்விடவா வண்டி திருடுவது மோசமான குற்றமாகப் போய்விட்டது? இன்றைக்கு சிபிஐ நேவிஆபிசுக்களுக்குள்ளேயே திருட்டைத் தேடித் துருவியிருக்கிறார்கள்.

(anony, இதுக்கெல்லாம் டென்சனா? :))

Unknown said...

துப்பாக்கி தூக்குபவர்களுக்கு உதாரணம் காண்பித்தென்.மற்றபடி வங்கி கொள்ளையர்களை எல்லாம் நான் எதுக்கு செல்வன் ஆதரிக்கனும்?
(iam also sitting in a bank branch( ///

மிக்க நன்றி முத்து.

தில்லுமுல்லு படத்தில் தலைவர் சொல்வது போல்

"தாடி வெச்சவர் எல்லாம் தாகூர் ஆக முடியாது.மீசை வெச்சவன் எல்லாம் பாரதி ஆக முடியாது"

அதுபோல் துப்பாக்கி தூக்கியவன் எல்லாம் நேதாஜி ஆகமுடியாது.:-))

ஜனநாயக நாட்டில் எந்த பிரச்சனை எனினும் அறவழியில் போரிட்டு தீர்வு காண்பதே சிறந்தது.வன்முறை ஆரம்பத்தில் இனிக்கும்.ஆனால் அதன்பின் உயிரை குடிக்கும்.எந்த மக்களை காக்க துப்பாக்கி தூக்குகிறோமோ அதே மக்களை மேலும் ஒடுக்கவே வன்முறை வழிவகுக்கும்.

கத்தி எடுத்தவன் கத்தியால் தான் சாவான்.

Absolutely no exceptions.

Anonymous said...

Arundhati and Medha are among those affected, have seen their pains and are speaking from the side of those affected. It is easier for people to watch a tv show, read the paper during morning coffee, or listen to the radio on the way to work and question the credibility of their actions. But at least, they have made that, whatever, small percent attempt to see the problem up front.

Just wanted to give my opinion on the work of the 2 ladies.

-kajan

Anonymous said...

$elvan சார் நம்மோடது ராஜதந்திரம் நம்ம பங்காளியோடது தேசதுரோகம் ரேஞ்சுல பாகம் பிச்சு வெச்சுக்கிட்டு பேசிட்டிருக்கீங்க. தலையைப் பிச்சுக்கலாம் போலருக்கு. ஆட்டத்துக்கு வர்ரதுல அர்த்தமே இல்லைன்னு தோணுது.

Unknown said...

//ஹிட்லரோடு கூட்டுச் சேர்ந்ததிலும்விடவா வண்டி திருடுவது மோசமான குற்றமாகப் போய்விட்டது? //

சரிங்க.இனிமேல் வண்டி திருடுவது சட்டப்படி சரி என்று சொல்லிவிடலாம்.

அணுகுண்டு போட்டவனை எதிர்க்க ஹிட்லரோடு கூட்டு சேர்ந்தார்.இந்தியர்களை படை திரட்டி வந்து நேருக்கு நேர் ஆண்மகனாய் போரிட்டு உயிர் துறந்தார்.மறைந்திருந்து ஆள்கடத்தலும் வண்டி திருடியும் பிழைக்கவில்லை.வீரன் போரிடுவது போல் போரிட்டு வீரமரணம் அடைந்தார்.

வண்டி திருடி,ஆள்கடத்தல் பிளாக்மெயில் செய்யும் கும்பலுடன் அவரை ஒப்பிட்டு கேவலப்படுத்தாதீர்கள்.

Unknown said...

Kajan,

I agree with metha patkar's methods.But do you think that she would have got the international support she gets right now,had she resorted to violence?

Violence never pays.To say that you need not be in the war front.You just need some common sense.

Unknown said...

//$elvan சார் நம்மோடது ராஜதந்திரம் நம்ம பங்காளியோடது தேசதுரோகம் ரேஞ்சுல பாகம் பிச்சு வெச்சுக்கிட்டு பேசிட்டிருக்கீங்க. தலையைப் பிச்சுக்கலாம் போலருக்கு. ஆட்டத்துக்கு வர்ரதுல அர்த்தமே இல்லைன்னு தோணுது. //

அதுதாங்க அரசியல்.:-)

சும்மா ஜோக்குக்கு சொன்னேன்.

உள்ளதை சொல்வேன்.
நல்லதை செய்வேன்.
வேறொன்றும் தெரியாது.

விஷயம் அவ்வளவுதான்:-))

சந்திப்பு said...

முத்து சிறப்பாக பதிந்திருக்கிறீர்கள். அணுகுண்டு பற்றிய விஷயத்திலும், இந்தியாவின் வறுமை உட்பட இதர பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முற்படும் சக்திகளையும் நன்றாக அடையாளம் காட்டியுள்ளீர்கள். நான் செல்வனின் கட்டுரைகளை படிக்கவில்லை எனினும் செல்வன் குறித்து இந்த நேரத்தில் என்னுடைய கருத்தையும் பதிந்திட விரும்புகிறேன். அவரது எழுத்துக்கள், அவர் எழுதும் பாணி மிக சிறப்பாக இருக்கிறது. அதேபோல் அவருக்குள் சமூகம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், உழைக்கும் மக்களின் மீதான கனிவும் இருப்பதாக அறிய முடிகிறது. இருப்பினும் தத்துவ ரீதியில் ஒரு கற்பனாவாத நிலையில்தான் அவர் இருப்பதாக நான் கருதுகிறேன். அவர் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதால், அவருடனான ஒரு உரையாடலில் நான் பொருள் முதல்வாதம் (மெட்டிரியலிசம் ) குறித்து கூறியபோது, அவர் அதை பற்றி கேட்டுள்ளேன். ஆனால் படிக்கவில்லை என்று கூறியிருந்தார். அதாவது, அமெரிக்கர்கள் மிகவும் உஷாரானவர்கள் எது சமூகத்தை முன்னேற்றுமோ, எது சமூக மாற்றத்தை கொண்டு வருமோ அதை மிக அழகாக தவிர்திடச் செய்திடுவர். ஆனால், அந்த இடத்தில் அதைவிட அழகான மாயாவாதம் ஒன்றை திணித்து பிரம்மிப்பை ஊட்டுவர். எனவே நன்பர் செல்வன் அமெரிக்க தத்துவ மாயா வாதத்தில் சிக்கி தவிக்கிறாரோ என்று தோன்றுகிறது. இது விமர்சனம்தான். தவறு இருந்தால் நானும் மாற்றிக் கொள்கிறேன்.

Unknown said...

$elvan you are still an baby when it comes to politics. get real. அறவழியோடு போராட அழைக்கும் உங்களுக்கு அணுக்குண்டு என்ன காந்தித்தாத்தா ராட்டையின் லேட்டஸ் வர்ஷனா தெரிகிறதா? பிபிசில்லாம் ரெபர் பண்ண சொல்றீங்க. மாவோயிஸ்ட் பத்தித்தான் தொடர்ச்சியா வருகிறதே வாசிச்சி பாருங்களேன் ஏன் அவுங்க ஆயுதம் தூக்கினாங்கின்னு.//

அறவழியில் போரிடுவது ஜனநாயக அரசுக்கு எதிராகத்தான்.அந்த குடிமக்களால் தான் அது நடத்தப்படவேண்டும்.சத்யாகிரகத்தை சொன்ன காந்தியே பிரிடிஷ் ராணுவத்துக்கு ஆதரவாக போயர் போரில் பணி செய்தார் என்பது உங்களுக்கு தெரியுமா?

ராணுவத்தை கலைத்துவிட்டு போர்க்களத்தில் உண்ணாவிரதம் இருப்பதுதான் சத்யாகிரஹம் என நினைத்து கொண்டிருந்தீர்களானால் அது உங்கள் தப்பு.என் தப்பல்ல.

"It's better to be called as a rowdy than to be called as a coward"

சொன்னது காந்தி.

Anonymous said...

அதாவது $elvan சார் சொல்றது என்னான்னா, இராணுவம் எத பண்ணினாலும் நல்லதுக்கே பண்ணும் நம்ம கவுண்மெண்டு எத செஞ்சாலும் நம்ம நன்மைக்கே செய்யும். அது தப்பு பண்ணுச்சின்னா தப்புன்னு ரெண்டு நாளு உண்ணாவிரதம் இருங்க. அது திருந்திடும். மேதா பட்கரை பாத்தோமே. அட நேபாளத்துலையும் நார்த் ஈஸ்டுலையும் எதுக்கு சார் மாவோயிஸ்டு துப்பாக்கி தூக்கினாங்கின்னாச்சு யோசிச்சு ஒரு பதில சொல்லுங்களேன். காந்தியும் கலாமும் சொன்னா மட்டும் எல்லாமே கரெக்டுன்னு ஆய்டுமா? சொந்தமா சொல்லுங்க. கதர்சட்டையகூட உங்க லோகோவா வெச்சுக்காம காக்கிசட்டைய வெச்சுருந்தீங்க. நீங்க அகிம்சை பத்தி சொல்றது ஹிம்சை பண்ணிச்சு. பேசிட்டேன். மன்னிச்சிடுங்க

நாகை சிவா said...

//அணுகுண்டு வெடித்ததின் மூலம் இந்தியாவின் பெருமை உலகின் மூலை முடுக்கெல்லாம் பரவியதாக சொல்கிறீர்கள்//
இதில் உங்களுக்கு ஏதும் சந்தேகம் உள்ளதா. தனிப்பட்ட முறையில் நான் சந்தித்த பலரும் இதை குறித்து மிகவும் பாராட்டினார்க்கள். இதை நாம் எப்படி செய்தோம் என ஆர்வமுடன் கேட்டு அறிந்தார்க்கள். They mentioned that "U ppl never allow america to fuck ur country."

//ஹிட்லரோடு கூட்டுச் சேர்ந்ததிலும்விடவா வண்டி திருடுவது மோசமான குற்றமாகப் போய்விட்டது?//
முத்து இதை குறித்து நீங்கள் ஒரு வார்த்தை கூட எதிர்ப்பு தெரிவிக்காது வருத்தமாக உள்ளது. நேதாஜியை போயி தீவிரவாதிகளுடம் ஒப்பிட்டு, என்னத்த சொல்லுறது...

//ஒரு இந்தியர் நாம் அணுகுண்டு வெடித்திருக்க தேவையில்லை என்று கூறினால் நீங்கள் வருத்தப்பட என்ன இருக்கிறது செல்வன்? சாப்பிட உணவில்லாமல் பலகோடி பேர் பட்டினி கிடக்கும் தேசத்தில் அணுகுண்டு வெடித்ததின் மூலம் என்ன சாதித்தீர்கள் என்று கேட்கிறார் அருந்ததி. நியாயமான கேள்விதானே.//


பிரச்சனை இந்தியாவிற்கு அணுகுண்டு தேவையா இல்லையா என்பதை நோக்கி தடம் புரண்டு விட்டது. ஒரு சின்ன விசயம், உங்கள் அனுமதியுடன் கூற விரும்புகின்றேன். நான் கல்லூரியில் படித்த போது அணுகுண்டு இந்தியாவிற்கு எதற்கு? என்ற விவாதத்தின் போது, உன் வீட்டில் தான் ஒன்னுமே இல்லையே அப்புறம் ஏதுக்கு கதவு போட்டு முடுற என என் பேராசியர் கேட்டார்.
இவ்வளவு நாள் கதவு இல்லாமல் இருந்த காரணத்தால் தான் கண்ட நாய்கள் எல்லாம் நம்மை அடிமைபடுத்தி விட்டு வீட்டில் இருந்த அனைத்தையும் எடுத்து சென்று விட்டார்க்கள். இப்பொழுது கதவு போட்டு விட்டேன். இனிமேல் கதவை தட்டி பாக்க கூட அச்சப்படுவார்க்கள். இனிமேல் என் வீட்டிற்கு தேவையான அனைத்தையும் என் வீட்டில் வைப்பேன். அதை எடுக்க இல்லை இல்லை அதை பற்றி நினைப்பதற்கே எவனுக்கும் தைரியம் வராது எனக் கூறினேன். அதை இங்கும் பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.

திரு. எஸ்,கே அவர்க்கள் கூறிய கருத்துகளையும் நான் ஏற்று கொள்கிறேன்.

//அதே அடிப்படையில்தான் இன்று இந்தியா ஈரானை கண்டிக்கிறது. இதற்கு என்ன சொல்வது//
என்ன முத்து நீங்களும் மற்றவர்க்கள் மாதிரி பேசுகின்றீர்க்கள். ஈரான் என்.பி.டி ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டு உள்ளது. அதன் படி நடந்துக் கொள்ள வேண்டும் என்றும் தான் ஈரானை நாம் சொல்கின்றோம்.


இதற்கு மேல் இந்த பிரச்சணையை எந்த பக்கம் சென்றாலும் கவலை இல்லை. ஆனால் தயவு செய்து நேதாஜி பற்றி தவறான எந்த ஒரு கருத்துகளும் உங்கள் பக்கத்தில் வராமல் பாத்துக் கொள்ளும்படி உங்களை கேட்டுக் கொள்கின்றேன்.

Muthu said...

எஸ்.கே

நன்றி.(வழக்கம் போல் கடைசியில் உங்கள் டச்சும் இருந்தது)

:))

Muthu said...

சந்திப்பு,

உங்கள் கருத்துக்கு செல்வன்தான் பதி்ல் சொல்லவேண்டும்.:)

Muthu said...

வவ்வால்,

//எல்லாருமே சந்தர்ப்பவாதிகளோ எனத்தோன்றுகிறது. அப்பாவிகளுக்கு இவர்களை விட்டால் குரல் கொடுக்கவும் வேறு ஆள் இல்லை! எல்லாம் நம் இந்திய அரசியலைப் போல் தான் இருக்கிறது. //




இது போன்று கிடுக்கிபிடி விசாரணைகளை அரசாங்கம் போடும்.அதுதான் அதன் பலம்.

மற்றபடி யோக்கியமானவங்கதான் அடுத்தவங்களை கேள்வி கேட்கலாம் என்ற கொள்கை எல்லாம் இன்றைய இந்தியாவில் சரிப்பட்டு வருமா?

நான் யதார்த்தத்தை சொன்னேன்.

Muthu said...

siva,

கருத்துக்கு நன்றி.

நிறைய பேச்சு போட்டிகளில் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

//ஒரு சின்ன விசயம், உங்கள் அனுமதியுடன் கூற விரும்புகின்றேன்.//

இதெல்லாம் வழக்கமாக பேச்சு போட்டியில் பேசும் டயலாக்தானே:)

நாகை சிவா said...

சிரியஸாக சொன்ன விசயத்தை காமெடி பண்ணியதற்கு நன்றி :))))))

Muthu said...

நாகை சிவா,

இதெல்லாம் விளக்கமாக சொல்றதுல சில பிரச்சினைகள் உள்ளன.என் பதிவை படிச்சீங்களா? அதில் உள்ள
சந்திப்பின், தமிழ்சசியின் பதிவுகளை லிங்க்கில் படிச்சீங்களா?


தீவிரவாதம் என்றால் உங்கள் புரிதல் என்ன? இதெல்லாம் தெரியாமல் நான் சீரியஸா பேசினா அது இன்னும் காமெடி ஆயிடும்னுதான் :))

நாகை சிவா said...

முத்து,

நீங்கள் குடுத்த லிங்கையும் படித்து விட்டு தான் உங்களுக்கு பதில் எழுதினேன். தீவிரவாதத்தை குறித்து நம் கருத்துகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். அதை குறித்து எனக்கு எந்த வித வருத்தமும் இல்லை. அதை குறித்து நீங்கள் சீரியஸாக பதில் சொல்ல வேண்டும் என்று நான் கேட்டவில்லை. இந்த பதிவுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாமல் திரு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸை பற்றி வந்து தவறான கருத்துகளை குறித்து தாங்கள் ஒன்றும் கூறவில்லையே என்பது தான் என் ஆதங்கம். உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருவதனால் எழுந்த ஆதங்கமாகவும் இருக்கலாம்.

Muthu said...

சிவா,

யாரும் இங்கே நேதாஜீயை தப்பா சொல்லலீங்க. அப்படி சொல்ற மாதிரி இருக்குன்னு செல்வன் சொன்னாரு.

அவ்ளொதான்.நேதாஜீயின் வழிமுறை தீவிரவாதம்தானே.அதைத்தான் சொன்னார்கள்.

என்ன நினைக்கிறீங்க?

VSK said...

இந்த அருந்ததி ராய் பதிவோடு சீகிரம் 'ஆறு' போட்டு கொடுத்த வாக்கைக் காப்பாத்துங்க!!
:)))

Anonymous said...

S.K,

//அதுபோலவே, ராணுவம் என்ற ஒன்று தேவையாகும் போது, போர் அபாயத்தைத் தவிர்க்கும் முன்னேற்பாடுகள் என நவீனரக ஆயுதங்களும், அணுகுண்டு தயார் நிலை போன்றவைகளும் அவசியமாகின்றன.//

இப்பொழுது இப்படி எழுதும் இந்த எஸ்.கே, எதற்காக முருகன் பாட்டு அவன் அன்றி ஒன்றும் கிழியாது என்று கூறிக் கொண்டு திரிய வேண்டும். அது இரட்டை வேடம் போடுவது போல் அல்லவா தெரிகிறது. காந்தி "கத்தி இன்றி ரத்தமின்றி" போரடி துப்பாக்கிகளுக்கும் பீராங்கிகளுக்குமிடையே அமர்ந்து சுதந்திரம் பெற்று தரவில்லையா? அவரும் கடவுளைப் பற்றி பேசியவர்தான்.

அந்த காந்திய இந்திய இவ்வளவு சீக்கிரம் இது போன்ற இரட்டைத்தாரி மக்களிடையே மாட்டிக் கொண்டு, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்று தீவிரவாதத்தை தேசிய வாதம் என்று கற்பித்து ஒரு பக்கம் முருகா, முருகா என்றும் மறுபக்கம் அணுகுண்டு போட்டு மற்றொரு நாட்டை துவம்சம் செய்யச் சொல்வதும் அந்த முருகன் தான் என்று கூறினால், அந்த ஆன்மிகப் பாதை எனக்குத் தேவையே இல்லை.

ஒன்றுக் பின் முரணான கருத்துக்களை கொடுப்பதைக் காட்டிலும் வாயை மூடிக் கொண்டு இன்னும் முருகன் பாடல்களை மொழிப் பெயர்த்து அறத் தொண்டு செய்வதே நல்லது, தீவிரவாதத்தை அரசங்கம் கொண்டு வளர்ப்பதை காட்டிலும். கலி முத்திவிட்டதற்கு எஸ்.கே போன்றவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.

இவ்வளவு பேசும் நாம், இந்த அணுக்களை எப்படி ஒழிப்பது என்று அல்லது de-activate செய்வது என்பதனை கண்டுப் பிடித்து, விழிப்புணர்வுவேற்றும் வகையில் அதனை வெளியீட்டு ஒரு நல்லதொரு மனித நேயத்தை நேசிக்கும் நாடாக திகழ முடியுமே. ஏன் அப்படி செய்யக் கூடாது. கடைசியில் உண்மையே வெல்லும் என்று ஆன்மிகம் கூறினால். நம்பிக்கை கொள்ளலாமே. காந்தி அஹிம்சை வெல்லும் என்ற கூற்றில் தானே இறங்கி நமக்கு வேண்டியதை வாங்கிக் கொடுத்தார்.

நாட்டுக்கு நாடு அணு குண்டுகளை பெருக்கி வைத்து விட்டால், அமைதி கிட்டி விடுமா? அப்படியெனில் பக்கத்து வீட்டுக் காரன் கத்தி வைத்திருக்கிறான் என்பதற்காக,நாமும் பட்டாக் கத்தியை வாங்கி அடிக்கி வைத்துக் கொண்டு என்றைக்கு அவன் பின்னால் வருவான் குத்துவான் என்று செத்து செத்துப் பிழைப்பது தானே, இந்த அணுகுண்டு உத்தியும், எஸ்.கே நியாயப்படுத்தி கூறுகிறீர்கள்? அப்புறம் எதற்கு மயிலும் வேலும் இந்த அற நெறிப் பாடல்களும். அவைகளுக்கு என்ன மரியாதை. தயவு செய்து அவைகளுக்கு மரியாதை இழைப்பை ஈட்டுத் தராதீர்கள். வன்முறை பேசும் யாரும் கடவுளின் அருகமையே இருக்க முடியாது. மனிதம் என்று வரும் பொழுது.

அந்த வகையில் தான் காந்தி ஒரு மாகத்மா ஆனார், தாங்களைப் போன்ற ரெண்டுங்கட்டன்கள் இல்லை. புரிந்து கொள்க.

கத்தி கொண்டவன் பலசாலி எனும் பொழுது. வயதிற்கு ஊரிய வாழ்கை நெறிபாடுகள் வேண்டாமா? அப்பொழுது நீங்கள் பேசுவதும் தீவிர வாதமே, குறைந்த பட்சம் ஒரே ஒரு வித்தியாசங்களுடன், அது அரசாங்கத்தின் துணையுடன், ஆனால் தனிப் பட்ட மனிதர் எனும் பொழுது சக உயிருக்கு நீங்கள் துன்பம் விழைவிப்பது சரியே என்று கூறி வருகிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். காண்பது அனைத்திலும் முருகனே பள்ளி கொண்டான் என்றால் உலகில் வாழும் அத்தனை உயிர்களிடத்தேயும் அவன் அன்றி வேறு யாரு இருக்க முடியும்.

அது உண்மையெனில் இப்பொழுது தேசீயம் என்று வரும் பொழுது மட்டும் அந்த ஆன்மீக கூற்று எங்கே போனது? பிறகு நீங்கள் கூறும் இந்த அஹிம்சை கூற்றுக்களை நான் எப்படி உங்களி முகத்தை மறந்து படித்து என் வாழ்வில் எனது அண்டை வீட்டாருடன் இணக்கமாக வாழ்ந்து சவாது... சற்றெ சிந்தியுங்கள் Mr. SK.

ஒரு ஆன்மீக வாதி...

வவ்வால் said...

இந்தியா அணு ஆயுதம் வைத்திருப்பதற்கு அதன் சுய விருப்பத்தினால் ஆனால் அல்ல வெளிப்புற நிர்பந்தத்தினால் என நினைக்கிறேன்.

தமிழ் சினிமாவில் வழக்கமா இது போன்ற காட்சி வரும், ஹீரோ அப்பாவியாக இருப்பான் அவனை அடித்து உதைப்பான் வில்லான் சும்மா வாங்கி கொள்வார், பின்னர் வில்லன் அவங்க அம்மாவ ரோட்டில வச்சு அவமான படுத்துவான் அப்பாவி ஹீரோ சண்டமாருதம் ஆகி அடிச்சி பின்னூவார் வில்லன் ஆட்களை அப்படி அடிக்கும் போது வில்லன் கிட்டே இருக்க கத்திய பிடிங்கி வில்லனை வெட்டிருவார் அடப்பாவி என்னையும் கத்தி தூக்க வச்சுட்டியே ,என் கையெல்லாம் ரத்தம் ,.,,, ஹாஹ் ஆஅ ஆஅ ஹ்ஹா.... வித்தியாசமா அழுவார்.நாமலும் நல்லா கைத்தட்டுவோம்.

இந்த கதைத்தான் நம்ம நாட்டுக்கும் நடப்பது. இதைக்காலத்தின் கட்டாயம் என எடுத்துக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை.

இந்தியா மேலும் ஒரு சுயக்கட்டுப்பாடு விதித்துக்கொண்டுள்ளது அதனை ஒரு ஒப்பந்தமாகவும் பாகிஸ்தான் கூட போட்டுக்கொண்டுள்ளது அணு அயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டோம் என.இது அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் போல உலக அளவில் பல நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது என்றே நினைக்கிறேன்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் இது போன்ற ஆயுதங்கள் இருப்பது ஒரு தற்காப்பு என்பதோடு அவ்வளவு சீக்கிரம் எல்லாம் பயன்ப்படுத்த முடியாது. நாம் எல்லாம் இதற்கு என வட்டமா டேபிள் போடு ஒரு கமிட்டி உட்கார்ந்து பேசி தான் முடிவெடுக்கனும்.

ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் அதிபர்க்கு அந்த அதிகாரம் முன்கூட்டியே அளிக்கப்பட்டுவிட்டது. அவர் நினைத்தால் ஒரு பொத்தானை அமுக்கினால் போதும் அணு ஆயுதம் தாங்கிய ஏவுகணை தானே புறப்பட்டு விடும்.எல்லாம் கம்பியுட்டரில் பிரிபுரோகிராம்ட் இது அப்போதைய ரஷ்யாவிற்கும் பொருந்தும்.

அமெரிக்க அதிபர் வெளினாட்டு சுற்று பயணம் செல்ல்லும் போது கூட கையோடு ஒரு பெட்டியில் இவை எல்லாம் கூட பயணிக்கும் எனத்தகவல்.

போயர் யுத்தத்தில் காந்தி கலந்து கொண்டார் என இங்கே சொல்லியுள்ளது என்னமோ அவர் துப்பாக்கி தோக்கி சண்டைப்போட்டாற் போன்று சொல்லப்பட்டுள்ளது.

முதலில் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும் தென்னாப்ரிக்காவில் இருக்கும் போது காந்திக்கு இந்தியா விடுதலைப்பெற வேண்டும் என்பதில் பெரிய ஆர்வம் எல்லாம் இல்லை.எனவே அவர் அப்பொழுது ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாக போரில் காயம் பட்டோருக்கு மருத்துவ உதவி அளிக்கும் குழுவில் தான் உதவி செய்தார்.

இது போன்று மருத்துவ உதவி அளிப்பதை செஞ்சிலுவை சங்கம் செய்கிறது எனவே செஞ்சிலுவை சங்கம் போரில் சண்டை இட்டது என்பார்களோ?

மேலும் காந்தி எப்பொழுதும் வெள்ளையர்களுடன் நட்புறவுடன் தான் நடந்துகொண்டார் இரண்டாம் உலகக்போரில் இந்தியா கலந்துகொள்ள வெள்ளையர் அரசுக்கு ஆதரவு அளித்தார்.எனவே அவரை இந்த விஷயத்தில் ஒப்பிடுவது தவறே.

நேத்தாஜி ஹிட்லாருடன் சேர்ந்தது குற்றம் என்கிறார்கள் , எதிரிக்கு எதிரி நண்பன் என்பது தான் அவர்க்கொள்கை. அதற்காக அவர் ஹிட்லரின் செயல்களை ஆதரித்தார் என சொல்வது எல்லாம் முட்டாள் தனம்.

இன்னும் சொல்லப்போனால் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து நேத்தாஜி இல்லை.ராஸ் பிஹாரி போஸ் என்பவர் தான் மலேசியா ,சிங்கபூர், பர்மா உள்ளிட்ட இடங்களில் படை அமைத்து வெள்ளையர்களுக்கு எதிராக போர்புரிந்து கொண்டு இருந்தார் அப்பொழுதே ராஸ் பிகாரி போஸ்க்கு 70 வயதிற்கு மேல் எனவே அவரால் சரியாக செயல் பட முடியவில்லை என நேத்தாஜியை அழைத்தார் அதன் பிறகே கல்கட்டாவில் இருந்த வீட்டில் இருந்து மாறுவேடத்தில் தப்பி அங்கே சென்று தலைமை தாங்கினார்.

எனவே அவருக்கு முன்னரே ஒரு களம் உருவாக்கபட்டு விட்டது ,அந்த நிலையில் அவருக்கும் வேறு வழி இல்லை. அப்படி இருக்கும் போது நேத்தாஜியை தீவிரவாதிகளுடன் எல்லாம் ஒப்பிடுவது சரித்திரம் தெரியாமையா இல்லை அறியாமையா?

Unknown said...

//அதாவது $elvan சார் சொல்றது என்னான்னா, இராணுவம் எத பண்ணினாலும் நல்லதுக்கே பண்ணும்//

இதை நான் எங்கே சொன்னேன்னு சொல்ல முடியுமா?நான் சொல்லாததை ஏன் சொன்னதாக சொல்லுகிறீர்கள்?

// நம்ம கவுண்மெண்டு எத செஞ்சாலும் நம்ம நன்மைக்கே செய்யும். அது தப்பு பண்ணுச்சின்னா தப்புன்னு ரெண்டு நாளு உண்ணாவிரதம் இருங்க. அது திருந்திடும். //

இதையும் நான் எங்கே சொன்னேன்னு சொல்ல முடியுமா?நான் சொல்லாததை ஏன் சொன்னதாக சொல்லுகிறீர்கள்?

//
மேதா பட்கரை பாத்தோமே. அட நேபாளத்துலையும் நார்த் ஈஸ்டுலையும் எதுக்கு சார் மாவோயிஸ்டு துப்பாக்கி தூக்கினாங்கின்னாச்சு யோசிச்சு ஒரு பதில சொல்லுங்களேன்.//

நேபாளம் எனக்கு சம்பந்தமில்லாத விஷயம்.வடகிழக்கில் படிக்காத பழங்குடி மக்கள் ஜாஸ்தி.அவர்களில் சிலர் சாரு மஜூம்தார் போன்றவர்களின் கவர்ச்சி பேச்சுக்கு மயங்கியும்,ஆள்கடத்தல்,மாமூல் ஆகியவற்றில் காசு வருவதாலும் துப்பாக்கி தூக்கினர்.அப்போது ஆண்ட அரசுகள் சரியாக அவர்களை கவனிக்கவில்லை.இப்போது அவர்களுக்கு மக்கள் ஆதரவு கிஞ்சித்தும் கிடையாது.பர்மாவிலும்,பூடானிலும் பதுங்கி இருந்து டீ எஸ்டேட்டுகளில் மாமூல் வாங்கி காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்

//காந்தியும் கலாமும் சொன்னா மட்டும் எல்லாமே கரெக்டுன்னு ஆய்டுமா? சொந்தமா சொல்லுங்க. //

சொந்தமா தான் சொல்றேன்.மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததையா வந்து ஒப்பிக்கிறேன்?:-)))

//கதர்சட்டையகூட உங்க லோகோவா வெச்சுக்காம காக்கிசட்டைய வெச்சுருந்தீங்க. நீங்க அகிம்சை பத்தி சொல்றது ஹிம்சை பண்ணிச்சு. பேசிட்டேன். மன்னிச்சிடுங்க //

இப்ப சட்டையே இல்லாம ஒரு குட்டி பையன லோகோ வெச்சிருக்கேன்.உடனே நான் குழந்தைகளின் நலம் விரும்பின்னு ஆயிடுச்சா?இதுக்கு முந்தி கோழி படம் லோகோவா வெச்சிருந்தேன்.அப்ப நான் கோழி தின்னேன்னு நிருபணம் ஆயிடுச்சா?

எதேச்சையா ஒரு நடிகர் படத்தை லோகோவா போட்டேன்.அடுத்து சிம்ரன் படத்தை லோகோவா போடலாமான்னு ஐடியா இருக்கு.அதுக்கு எல்லாம் விளக்கம் குடுக்கணுமா?

ஆனாலும் ரொம்ப தான் குறும்பு சார் உங்களுக்கு

Unknown said...

//அவ்ளொதான்.நேதாஜீயின் வழிமுறை தீவிரவாதம்தானே.அதைத்தான் சொன்னார்கள்.

என்ன நினைக்கிறீங்க? //

நேதாஜி மக்கள் மீது போர் தொடுக்கவில்லை.அவரால் எந்த சாமானிய மக்களும் பாதிக்கப்படவில்லை.மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கவில்லை.தற்கொலை படைகளை அனுப்பி மக்களை கொல்லவில்லை.முறையாக படைதிரட்டி பிரிட்டிஷ் ஆர்மியுடன் யுத்த தருமப்படி நேருக்கு நேர் போர் புரிந்தார்.

மக்களுக்கு அவரால் எந்த துன்பமும் நேரவில்லை.அவர் போர்முறையை தீவிரவாதம் என்று சொல்லுவது சரியல்ல.

தற்போதைய தீவிரவாதிகள் மக்கள் கூடும் இடங்களில் குண்டு வைக்கின்றனர்.வழிபாட்டு ஸ்தலங்களில் குண்டு வைக்கின்றனர்.பெண்களை,குழந்தைகளை நிற்க வைத்து காக்கை குருவி சுடுவது போல் சுட்டு கொல்கின்றனர்.இதுதான் தீவிரவாதம்.இதை எல்லாம் நேதாஜி செய்தாரா என்று சொல்லுங்கள்.

Unknown said...

//இதெல்லாம் விளக்கமாக சொல்றதுல சில பிரச்சினைகள் உள்ளன.என் பதிவை படிச்சீங்களா? அதில் உள்ள
சந்திப்பின், தமிழ்சசியின் பதிவுகளை லிங்க்கில் படிச்சீங்களா?//

காஷ்மீர் பற்றி பதிவு போடுகிறேன்.நீண்ட கட்டுரையாக இருக்கும் என்பதால் பகுதி பகுதியாக பிரித்து ஆதி முதல் இன்று வரை அங்கு நடந்தது என்ன என்பதை எழுதுகிறேன்.

எழுத சிறிது தாமதமாகலாம்.ஏனெனில் எழுதினால் ஆதாரத்துடன் தான் எழுதுவேன்.ஆனால் கண்டிப்பாக எழுதுவேன்.

Muthu said...

//சொந்தமா தான் சொல்றேன்.மண்டபத்தில் யாரோ எழுதி கொடுத்ததையா வந்து ஒப்பிக்கிறேன்?:-)))
//

:))

Muthu said...

selvan,

i welcome your article on kashmir..but when you give evidences dont give evidences like tavleen singh's article...Without evidence is also OK.i want to know the facts..that is all

Muthu said...

vawwal,selvan and siva

just i want to put the difference between moderates and extremists..
nethaji also took arms..that is all i want to put..

அவரை கண்ட தீவரவாதிகளுடன் ஒப்பிட்டது நான் இல்லை.நீங்கள் ஏன் அவரை வழிப்பறி கொள்ளை அடிக்கம ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?
நலல நோக்கத்தடன் ஆயுதம் எடுத்து எடுத்தவர்களெ இல்லையா?

Unknown said...

what is wrong with thavleen singh's article?

I will write that article with many neutral sources and giving weightage to pakistan point of view too.But it will take time,since I want it to be impeccable.

Anonymous said...

$elvan தல நேதாஜி அப்படில்லாம் செஞ்ச ஜப்பானியரோடதான் கூட்டு வெச்சிருந்தாரு. மலேசியாவுல பர்மாவுல தாய்வான், கொரியாவுல கேட்டுப்பாருங்க.

He is a monster but our monster ன்னாங்களாம் ஸ்டாலினை பத்தி ஜோர்ஜியா மக்கள். நீங்க அந்த ரூட்லல்லா போகிறதா தோணுது

Muthu said...

selvan,

some of the criticisms on your views is based on the general impression that your articles gives to readers on reading..

but while giving explanations you are going by the specific words...
just i want to put it...

example: anony's comments on role of armies

also read roza's article on this.

Unknown said...

அவரை கண்ட தீவரவாதிகளுடன் ஒப்பிட்டது நான் இல்லை.நீங்கள் ஏன் அவரை வழிப்பறி கொள்ளை அடிக்கம ஆட்களுடன் ஒப்பிடுகிறீர்கள்?
நலல நோக்கத்தடன் ஆயுதம் எடுத்து எடுத்தவர்களெ இல்லையா? //

அருந்ததி ஆதரவு அளிப்பது நக்சலைட்டு,மாவோ,காச்மிர தீவிரவாதிகளுக்கு.இவர்கள் தான் வண்டி திருடி ஆட்கடத்தல் செய்பவர்கள்.இவர்களை தவிர வேறு எந்த தீவிரவாதியை பற்றியும் நான் இங்கு பேசவில்லை.இவர்களில் யாரும் நேதாஜிக்கு கிட்டே கூட வரமுடியாது.ஏனேனில் இவர்கள் கயவர்கள்.

நேதாஜியை இவர்களுடன் ஒப்பிடவில்லை என்று சொல்லிவிட்டதால் நேதாஜியை விவாதத்திலிருந்து ஒதுக்கி விடும்படி கேட்டுக்கொள்கிறேன்.மற்ற விஷயங்களை விவாதிப்போம்.

Unknown said...

I dont know which anony you refer to.There are so many here.

when people give some wrong examples I cannot take it at face value.For example one anony said sathyagraha means we shouldnt have army.Now without pointing out this blunder how can i refute this example?

I read rozavasanth's article.I dint write my article as a rebuttal to his,but I guess my article mentions some aspects which were unknown about her.I encourage people to read both articles on her and come to their own conclusions.

VSK said...

ஐயா 'அனானி' அவர்களே!
உங்களுக்கு நான் விரிவாக பதில் சொல்ல வேண்டும்.
இதில் நீங்கள் சொல்ல்கின்ற 'இரட்டைவேடத்தைப்' பற்றி சொல்லி, இதை நம்மிருவர் விவாதமாக மாற்ற விரும்பவில்லை, மு.த. மீது கொண்டிருக்கிற மதிப்பினால்.
தனிப்பதிவு போட்டு என்னுடைய வலைப்பூவில் விரைவில் வெளியிடுவேன்.
இங்கு வந்து சுட்டியும் கொடுக்கிறேன்.
இந்த விவாதத்தைத் திசை திருப்ப வேண்டாம் என்ற எண்ணத்தில்.
நன்றி.

Anonymous said...

பாஸ்டன் பாலாஜி கிண்டல் என்பதை முதலில் எழுதவில்லை, ஆனால் அந்தத் தொனி இருந்தது.ரோசாவிற்கு இது புரியவேயில்லை. அது புரிந்ததும், சிரிப்பிற்கு பதிலாக கோபம்
வந்தது.

தங்கத்தலைவிக்கு ஆதரவாக எழுதிவிட்டார். செல்வன் ஒரு வகை crackpot.ரோசா இன்னொருவகை
crackpot.முத்துவும்தான்,ரோசாப் போல், செல்வனைப் போல் அல்ல.
மூன்று கிறுக்கர்கள் அருந்ததியைப் பற்றி எழுதுவது, ஆறு குருடர்கள் யானைப்பார்த்த மாதிரி இருக்குது.

Anonymous said...

SK,

வாருங்கள், வந்து என்னென்ன உதாரணங்கள் கொடுக்க முடியுமோ கொடுங்கள். ஆனால் ஒன்று ஆன்மிகத்திற்கும் அருவாலுக்கும் நீண்ட இடைவெளி இருக்கிறது என்பதனை மறுப்பதற்கில்லை.

தொலைந்து போன பொருளையே முருகன் மீட்டுக் கொடுக்கிறான் என்றால் நம்மையும் நமது நாட்டையும் அவனே மீட்டுக் கொடுப்பான் என்று நம்பி அஹிம்சை வழியில் நடந்து நிம்மதியாக உயிர் நீக்கலாம்... எப்படியெனில் அமைதி ஏற்படுத்தும் வண்ணம் நல்ல உபநிடதங்களை எழுதுவது... எச் சூழலிலும் வன்முறை ஜெயிப்பதில்லை என்ற அழியாத உண்மையை எடுத்துரைப்பது.

இல்லை, தானும் ஒரு சக மனிதன் தான் எனும் பொருட்டு அதீதப் படியான ஆன்மீக வெளிக் கொணர்தலை சற்றே தள்ளி வைத்து விட்டு (ஏனெனில் அது முரண்பாடுகளை நடைமுறையில் அளித்து விடுகிறது என்பதால்), நன்கு அறிந்து புரிந்து கொள்ளும் வரையிலேனும் இந்த "dulaity" களுடன் வாழ்ந்து சலித்து பிறகு உண்மை இறை நம்பிக்கையுடன் உலகிற்கு நல்லது சொல்லலாம்.

அவன் கிரிஸ்துவோ, இஸ்லாமியனோ அல்லது இந்துவோ--- எல்லமே அவன் சொரூபம் என்றால் எப்படி கடவுளர்களை கடவுள்களே சாகடித்துக் கொள்ள முடியும்?

எல்லாம் சிவா(அணு குண்டு) மயம்!

Anonymous said...

//உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது.//

இப்படி சொல்லும் செல்வன் அவர்கள், ஏன் அருந்திராயைப் பற்றி இபபடி பேச வேண்டும்.

பார்த்து முற்போக்கு மேக்கப் கலைந்துவிடப்போகிறது.

Muthu said...

anony,

நீங்கள் தான் தெளிவாக எழுதுங்களேன்.

கிராக் பாட் முத்து

Muthu said...

selvan,

if you read tavleen singh's articles continuously you will come to know the shortcomings..
(mostly her views will reflect hindutva ideology and he is supporting bjp and company..iam not opposing that..again this requires separate post)

வஜ்ரா said...

//
and he is supporting bjp
//

முத்து சார்,

He is not a he, He is a she!! :)

ஆம் தவ்லீன் சிங் என்பவர் ஒரு பெண். !!

Unknown said...

//உன் வழி உனக்கு.என் வழி எனக்கு.சரியான வழி,நேரான வழி,ஒரே வழின்னு எந்த புண்ணாக்கும் கிடையாது

இப்படி சொல்லும் செல்வன் அவர்கள், ஏன் அருந்திராயைப் பற்றி இபபடி பேச வேண்டும்.//

அப்படி பேசுவதுதான் என் வழி.அதை நான் கடைபிடிக்கிறேன்.
இந்தியாவை விமர்சிக்க ராய்க்கு என்ன சுதந்திரம் உண்டோ அதே போல் அவரை விமர்சிக்கவும் எனக்கு சுதந்திரம் உண்டு.
அவர் விமர்சனத்தை அவர் செய்யட்டும்.என் விமர்சனத்தை நான் செய்கிறேன்.

அவர் வழி அவருக்கு.என் வழி எனக்கு.

//
பார்த்து முற்போக்கு மேக்கப் கலைந்துவிடப்போகிறது.//

நல்லவேளை ஞாபகப்படுத்தினீர்கள்.நான் முற்போக்குவாதி என தான் நினைத்துகொண்டிருந்தேன்.ஆனால் முற்போக்குவாதம் என்றால் என்ன என ஒரு முற்போக்குவாதி விளக்கியதும் "ஐயோ நமக்கு வேண்டாம் இந்த முற்போக்குவாதம்" என விலகிவிட்டேன்.

முற்போக்குவாதிகள் என்றால் யார் என நம் நண்பர் திருவாய் மலர்ந்தருளியது இதோ.

"ஒரு பெண்னின் Hymen tissue-- அளவுக்குக் கூட 'புனிதத்தனமை இல்லாத' "தேசியம்" என்கிற மேல்வர்க்க/மேல்சாதிய கருத்தாக்கத்தையும் - அதே போன்றதொரு பார்வையிலேயே பார்ப்பவர்கள்தான் உண்மையான முற்போக்காளர்களாக இருக்க முடியும்."

Unknown said...

//சரியாகச் சொன்னீர்கள் முத்து. இன்றைய தலைமுறைச் சமூகத்தில் அநேகம் பேருக்கு தேசிய உணர்வு பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் மேட்ச் நடக்கும் போது தான் வருகிறது. வருமான வரி கட்டும்போது ஓடி ஒளிந்துகொள்ளும் தேசியத்தைத் தேட வேண்டியிருக்கிறது. இதனைச் சொல்வதால் உங்களைப் போலவே என்னையும் தேசத் துரோகியாக யாரும் கருதத்தேவையில்லை. //

வருமான வரி கட்டுன்னு சொன்னா எதுக்குங்க தேசத்துரோகின்னு சொல்றாங்க.கட்டாதேன்னு சொன்னா வேணா அப்படி சொல்லுவாங்க.எல்லாரும் வருமானவரி கட்டணும்னு நீங்க ஒரு பதிவு போடுங்க.நான் ஆதரவு தெரிவிச்சு கண்டிப்பா பின்னூட்டம் போடறேன்.சரியா?

Muthu said...

sankar,

i know she is a woman..that is a spelling mistake..i read her articles in indian express (sunday) in mumbai edition,,

thanks

Anonymous said...

ஏனப்பா வஜ்ரா,

தப்பு ஏதாவது இருக்குமா ஒரு ஸ்மைலியெ போட்டு அறிவுக் கொழுந்தா ஆயிடுவோமான்னு அப்படி ஒரு அல்ப்ப ஆசை... கட் பண்ணி ஒட்டி காமிச்சு அவருதான்... இப்பிடி ஆரம்பிச்சு //(mostly >"her"< views will reflect hindutva ideology // தானே சொல்லி இருக்காரு... அவசர படாம பொருமையா இந்தியாவ காப்பத்துங்க... எங்கேயும் போயிடாது...

Muthu said...

ஹிஹி

அனானி நணபர்களே,

பலமுறை அரிய கருத்துக்களை அள்ளி விடுகிறீர்கள்.எனக்கு சந்தோஷம்தான்.

அதர் ஆப்சனை உபயோகப்படுத்தி ஏதாவது ரெகுலரான பெயரை போட்டால் நல்லா இருக்கும்ல.

கிராக் பாட்னு போடற அனானியும் வஜ்ரா விசயத்தில் புரிந்து உதவின அனானியும் ஒன்றா இல்ல வெவ்வேறான்னு எனக்கு எப்படின்னே தெரியும்? :))

Anonymous said...

"ஒரு பெண்னின் Hymen tissue-- அளவுக்குக் கூட 'புனிதத்தனமை இல்லாத' "தேசியம்" என்கிற மேல்வர்க்க/மேல்சாதிய கருத்தாக்கத்தையும் - அதே போன்றதொரு பார்வையிலேயே பார்ப்பவர்கள்தான் உண்மையான முற்போக்காளர்களாக இருக்க முடியும்."

$elvan who said this.Please reveal the name.It sounds very funny.

Anonymous said...

http://www.keetru.com/periyarmuzhakkam/
may06/kolattur_mani1.html

Do you have any comments on this Muthu and others D.Ts

வஜ்ரா said...

ரொம்ப சீரியஸா இருக்கே...ஒரு கடி ஜோக்கு போட்டுவிடுவோம் என்று Mrs. Doubtfire "dialogue" அடிச்சுவுட்டேன்...அதுக்கு தான் ஸ்மைலி.

//
தப்பு ஏதாவது இருக்குமா ஒரு ஸ்மைலியெ போட்டு அறிவுக் கொழுந்தா ஆயிடுவோமான்னு அப்படி ஒரு அல்ப்ப ஆசை...
//

எனக்கு அந்த எண்ணமே இல்லை அனானி ஐயா/அம்மா!! என்றைக்குமே நான் "அறிவுக் கொழுந்து" எல்லாம் ஆக மாட்டேன்...

ROSAVASANTH said...

முத்து, இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். ரொம்ப கொடுமையா இருக்கு! செல்வன்தான், அருந்ததி என்ன சொல்லியிருக்கிறார் என்று படிக்கவில்லை, அல்லது புரிந்து கொள்ளவில்லை. அவர் எதிர்க்கிறார், எதிர்ப்பவர்கள் எப்படி வேண்டுமானாலும் எதிராளி சொன்னதை எடுத்துக் கொள்ளலாம் என்ற வழக்கப்படி அவருக்கு அப்படி ஒரு கட்டாயம் கிடையாது. அருந்ததிக்கு ஆதரவாய் பேசும் நீங்களாவது அதை செய்ய வேண்டாமா?

http://www.wagingpeace.org/articles/1998/08/
00_roy_end-imagination.htm

அருந்ததி எங்கே செல்வன் சொன்ன வகையில் தனது வாதத்தை வைத்திருக்கிறார்? deterrence என்று இவர்கள் சொல்லும் வாதங்களுக்கும் அவர் பதில் சொல்லியிருப்பதை காணலாம். எந்த கருத்தையும் எதிர்க்கவும், விமரசனமும் நிச்சயமாய் செய்யலாம். அதற்கு முன் அதை உள்வாங்கவாவது வேண்டாமா?

மற்றபடி இந்த பிரச்சனை குறித்து விவாதம் என்ற பெயரில் நடந்த கோராமைக்கு பற்றி வேறு என்ன சொல்ல முடியும்! ஏற்கனவே என் பதிவில் சொன்னதுதான்.

Muthu said...

//மேலும் நான் அருந்ததியின் அனைத்து கருத்துக்களையும் ஆதரிக்கிறேன் என்று கூறி இதை எழுதவில்லை என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.//


ரோசா,

அருந்ததி என்ன சொன்னார் என்ற விஷயத்தில் ஆழ்ந்து நான் தலையிடவில்லை. அவர் பாணியிலான அரசியலின் தேவையை மட்டுமே நான் கூறினென்.

ROSAVASANTH said...

ஆதாரமில்லாமல் சொல்லியதாக யாரும் நினைக்கக் கூடாது என்பதற்காக.

ஏற்கனவே அருந்ததி தாலிபானை ஆதரித்தததாக செல்வன் அப்பட்டமாக புளுகினார். இங்கே நக்சலைட்டை முன்வைத்து ஜல்லியடிப்பது கடினமானது அல்ல.

அருந்ததி என்ன சொல்கிறார் என்பது மட்டையடி பார்வைக்கு அவ்வளவு எளிதாக புரிவது சாத்தியமில்லை. (ரவிஸ்ரீனிவாசையும் சேர்த்துதான் சொகிறேன்.)

But the longer you stay, the more you're enforcing these tribal differences and creating a resistance, which obviously, on the one hand, someone like me does support; on the other hand, you support the resistance, but you may not support the vision that they are fighting for. And I keep saying, you know, I'm doomed to fight on the side of people that have no space for me in their social imagination, and I would probably be the first person that was strung up if they won. But the point is that they are the ones that are resisting on the ground, and they have to be supported, because what is happening is unbelievable.

ROSAVASANTH said...

//அருந்ததி என்ன சொன்னார் என்ற விஷயத்தில் ஆழ்ந்து நான் தலையிடவில்லை. அவர் பாணியிலான அரசியலின் தேவையை மட்டுமே நான் கூறினென்.//

அருந்ததி சொன்னதாக செல்வன் பட்டியலிட்டதை அப்படியே எடுத்து கொண்டு நீங்களும் வாதத்தை முன்வைப்பதால் சொன்னேன்.

Muthu said...

//இங்கே நக்சலைட்டை முன்வைத்து ஜல்லியடிப்பது கடினமானது அல்ல. //

இதில்தான் அதிகம் நேரம் போனது...??

//அருந்ததி எங்கே செல்வன் சொன்ன வகையில் தனது வாதத்தை வைத்திருக்கிறார்? deterrence என்று இவர்கள் சொல்லும் வாதங்களுக்கும் அவர் பதில் சொல்லியிருப்பதை காணலாம்.//

நீங்கள் கொடுத்த இந்த லிங்க்கை படிக்கிறேன் இப்ப...

Muthu said...

பொயட்டிக்காக முடித்திருக்கிறார். நன்றாகவே சொல்லியுள்ளார் அருந்ததி.

சுட்டிக்கு நன்றி ரோசா

அனானி,

கீற்று தளத்தில் உள்ள சுட்டியை நான் என்ன செய்யட்டும்? தனிபதிவா போடுங்க..பார்ப்போம்...:))

Unknown said...

//ஏற்கனவே அருந்ததி தாலிபானை ஆதரித்தததாக செல்வன் அப்பட்டமாக புளுகினார்.//

அம்மையார் ஆதரவு தெரிவித்த JKLF காஷ்மிரில் மதுக்கடைகள்,அழகுநிலையங்கள்,சினிமா தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது பொய்யா?இல்லை ரூபையா சையத்தை கடத்தியது பொய்யா?இல்லை பண்டிட்களையும்,மற்ற அப்பாவி பொதுமக்களையும் கொன்றது பொய்யா?இதெல்லாம் செய்பவர்கள் தலிபான் கும்பல் இல்லாமல் காந்தியவாதிகளாங்கண்ணா?

//அருந்ததி என்ன சொல்கிறார் என்பது மட்டையடி பார்வைக்கு அவ்வளவு எளிதாக புரிவது சாத்தியமில்லை//

நான் புரிஞ்சுகிட்டது இதுதாங்கண்ணா

மாவோயிஸ்டுகள் ஜாதிய கொடுமைகளுக்கெதிராகவும்,
தலித்துகளுக்ககவும்,நிலபிரபுக்களையும்,
ஏகாதிபத்யத்துக்கும் எதிராக போராடுகிறவர்கள்.ஆனா மாவோயிஸ்டுகள் ரொம்ப ஏழைகள் தெரியுமா?வெறுங்காலில் துருப்பிடித்த துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு போரிடுகிறார்கள்.இராக்கில் அமெரிக்க படைகள் ஆக்கிரமிப்பு செய்ய என்ன காரணம் சொல்லுகிறதோ அவையே வடகிழக்கிலும்,காஷ்மிரிலும் சொல்லப்படுகின்றன.

எத்தனை நாள் இந்த இடங்கள் ஆக்கிரமிகப்படுகின்றனவோ அத்தனைக்கெத்தனை எதிர்ப்பு வளரும்.அந்த எதிர்ப்பை நான் ஆதரிக்க கடமைப்பட்டுள்ளேன்.மாவோயிஸ்டுகளின் போராட்டத்தை நான் ஆதரிக்கிறேன்.ஆனால் அவர்கள் கண்ணோட்டத்தை அல்ல(கண்ணோட்டம் =vision??).அவர்கள் ஜெயித்தால் லேசான அதிர்ச்சி அடையும் முதல் ஆள் நான் தான்.ஆனால் அடிமட்ட அளவில் போராடுகிறவர்கள் அவர்கள் தான் என்பதால் அவர்கள் ஆதரிக்கப்பட வேண்டியவர்கள்.

மொழிபெயர்ப்பு கரெக்டுங்களாண்னா?)

http://www.democracynow.org/article.pl?sid=06/05/23/1358250

ARUNDHATI ROY: Well, the Maoists are fighting on two fronts. One is that they are fighting a feudal society, their feudal landlords. You have, you know, the whole caste system which is arranged against the indigenous people and the Dalits, who are the untouchable caste. And they are fighting against this whole corporatization. But they are also very poor people, you know, barefoot with old rusty weapons. And, you know, what we -- say someone like myself, watching what is happening in Kashmir, where -- or in the northeast, where exactly what America is doing in Iraq, you know, where you're fostering a kind of civil war and then saying, “Oh, if we pull out, these people just will massacre each other.”

But the longer you stay, the more you're enforcing these tribal differences and creating a resistance, which obviously, on the one hand, someone like me does support; on the other hand, you support the resistance, but you may not support the vision that they are fighting for. And I keep saying, you know, I'm doomed to fight on the side of people that have no space for me in their social imagination, and I would probably be the first person that was strung up if they won. But the point is that they are the ones that are resisting on the ground, and they have to be supported, because what is happening is unbelievable.

Unknown said...

இதுவும் அம்மையார் சொன்னதுதான்.நீங்கள் இது தப்பு இல்லை என சொல்லலாம்.ஆனாலும் சொல்லியிருக்கிறார் என்பதை உறுதி படுத்திக்கொண்டு அடுத்த கட்ட விவாதத்துக்கு போகலாம்

Similarly, I mean, I keep saying this, but, you know, America, Israel and India, and China in Tibet, are now becoming experts in occupation, and India is one of the leading experts.

It's not that the American army in its training exercise is teaching the Indian army. The Indians are teaching the Americans, too, how to occupy a place. What do you do with the media? How do you deal with it? The occupation of Kashmir has taken place over years.

http://www.outlookindia.com/full.asp?fodname=20060525&fname=arundhati&sid=1&pn=8

(you might have to register for free in outlook to read the article)

Muthu said...

செல்வன்,

இது நான் நினைத்த பிரச்சினைதான். உங்களை பொறுத்தவரை நம்ம் ஆள் தவறே செய்தாலும் நம்ம ஆளைத்தான் ஆதரிக்கணும்கற பார்வை உங்களுது.அமெரிக்கா சுயநலமா இருப்பதுபோல் நாமளும் இருக்கணும் என்பது போன்ற பார்வை

மற்றவர்கள் இதில் இருந்து மாறுபடுகிறார்கள்.ஒவ்வொறு தனி செய்திகளிலும் உள்ள காம்ப்ளக்ஸ் ஆன விஷயங்கள் விஷயத்தை மேலும் சிக்கலாக்குகிறது.

ரோசாக்கூட என்னை குட்டினார். ஆனால் நான் உங்கள் பார்வையில் உள்ள அடிப்படை வித்தியாசத்தை மட்டுமே சுட்டினேன்.அது சரி என்று இப்போதும் நம்புகிறேன்.

நம்மிடம் விஷயத்தை அணுகுகிற முறையே வித்தியாசப்படுகிறது. ஆனால் மற்ற சிலர் (உடன்போக்கு அரசியல்வாதிகள்) அணுகிற அந்த முறையில் நீங்கள் இதை அணுகுவது எனக்கு ஆச்சரியம்.ஏனெனில் மற்ற சில விஷயங்களை நீங்கள் இந்த முறையில அணுகவில்லை.

(இதை விஸ்தாரமாக சொன்னால் நான் தேசத்துரோகியாகிவிடுவேன்:)
(பொடா, தடா பயம் எல்லாம் எனக்கும் உண்டு சாமி)

Unknown said...

முத்து

அவர் தப்பு செய்தாரா,என் பார்வை சரியா என்பதெல்லாம் பிரச்சனை இல்லை.காஷ்மீர்,வடகிழக்கு போன்ற பிரச்சனைகளை இந்த பதிவின் பின்னூட்டங்கள் வழியாக விவாதிக்க முடியாது.

அருந்ததியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆட்டம் போடுபவர்கள் என்ன காரணத்தினால் அவர் புகழ் பெற்றார் என்பதை அவ்வளவாக வெளியே சொல்லுவதில்லை.

இந்த விவகாரங்களில் அருந்ததி இந்த மாதிரி பேசியிருக்கிறார் என்பதை முதலில் வெளிப்படுத்துவது என் தலையாய கடமை.அவரது நண்பர்கள் யார்,எதிரிகள் யார் என்பதை தெளிவாக முதலில் மக்களுக்கு என்னால் இயன்ற வரை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டேன்.

நான்கு பதிவுகளில் அவர் விவாதிக்கப்பட்டார்.அவரை ஓரளவு புரிந்துகொள்ள இந்த விவாதங்கள் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்.

அவர் நிலையை ஆதரிப்பவர்கள் இனி அவரை தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடட்டும்.எதிர்ப்பவர்கள் எதிர்க்கட்டும்.அவரை ஏன் கொண்டாடுகிறார்கள் என்பது இனி தெளிவாகி விடுமல்லவா?

விஷயம் அவ்வளவே.

அவரை பற்றி பதிவு இட்ட அனைவருக்கும் என் நன்றி.

அன்புடன்
செல்வன்

Unknown said...

இதை விஸ்தாரமாக சொன்னால் நான் தேசத்துரோகியாகிவிடுவேன்:)//

அருந்ததி இதை விஸ்தாரமாக சொல்கிறார்.

ஆகவே அவர்----------(fill in the blanks)

That's all your honor.

With this I conclude my arguments.

நன்றி முத்து

Muthu said...

செல்வன்,

பிரச்சினையின் அடிநாதத்தை கடைசி பின்னூட்டத்தில் தான் தொட்டு உள்ளீர்கள்.

விஸ்தாரமாக சொல்லக்கூடாத விஷயத்தை நான் சொன்னால் தேசதுரோகி என்று முத்திரை குத்தப்படுவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.அதே பாணியில்தான் தான் அருந்ததியையும் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று புரிகிறது.அதைத்தான் நர்ன ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.

மற்றபடி அருமையான விவாதத்திற்கு நன்றி. அமைதியாக கண்டு களித்தவர்களுக்கும் நன்றி.

நன்றி செல்வன், வவ்வால், ரோசா

Unknown said...

//விஸ்தாரமாக சொல்லக்கூடாத விஷயத்தை நான் சொன்னால் தேசதுரோகி என்று முத்திரை குத்தப்படுவேன் என்பதுதான் அதற்கு அர்த்தம்.அதே பாணியில்தான் தான் அருந்ததியையும் நீங்கள் பார்க்கிறீர்கள் என்று புரிகிறது.அதைத்தான் நர்ன ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறேன்.//

தவறு முத்து.பிரச்சனை என் பார்வையில் இல்லை.யார் பார்வையில் அவர் தவறு செய்தவராகிறார் என்பதையும் நீங்களே சொல்லி உள்ளீர்கள்.

//(பொடா, தடா பயம் எல்லாம் எனக்கும் உண்டு சாமி)//

Muthu said...

//(பொடா, தடா பயம் எல்லாம் எனக்கும் உண்டு சாமி)//

நிஜமாத்தான் செல்வன்...

நான் ஏற்கனவே சொன்னதுதான். அரசாங்கத்தின் பார்வையை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பதுதான பிரச்சினை.

Unknown said...

//நான் ஏற்கனவே சொன்னதுதான். அரசாங்கத்தின் பார்வையை அப்படியே ஏற்றுக்கொள்வது என்பதுதான பிரச்சினை//

சில விஷய்ங்களில் பெரும்பான்மை மக்களின் பார்வை அரசாங்கத்தின் பார்வையோடு ஒத்துப்போகும்போது வேறு என்ன செய்ய முடியும் முத்து?

மெஜாரிட்டி ஜெயிப்பது தான் ஜனநாயகம்.அதை நாம் அனைவரும் இருப்பதில் சிறந்த முறை என ஏற்றுக் கொண்டுள்ளோம்.

Anonymous said...

அருந்ததி ராய் அரசை விமர்சிக்கிறார், ஆனால் அவர் காஷ்மீரில் யாசின் மாலிக் இயக்கம்
செய்தவற்றை கண்டித்திருக்கிறாரா.ஈராக் குறித்து கண்ணீர் விடும் அவர் காஷ்மீரில் இஸ்லாமிய
தீவிரவாதிகள் செய்யும் வன்முறைகளை கண்டித்திருக்கிறாரா.
"The occupation of Kashmir has taken place over years".
காஷ்மீர் என்ன ஈராக்கா,
இந்தியா என்ன அங்கு அமெரிக்க ஈராக்கில் செய்தது போல் ஆட்சி கவிப்பு செய்து ஆக்ரமித்திருக்கிறதா. வடகிழக்கு மாநிலங்களில் பிரச்சினை உள்ளது, அதையும்
ஈராக்கையும் ஒப்பிட முடியுமா.
காஷ்மீர் தனி நாடாக மாறி யாசின் மாலிக்கள் ஆட்சி செய்வதைத்தான் அவர் விரும்புகிறாரா.
மாவோயிஸ்ட்கள் இந்தியாவில் அப்பாவிகளைக்
கொல்லவேயில்லையா, உளவு சொன்னார்கள் என்று சந்தேகம் எழுந்தால் கொலைதானே
செய்கிறார்கள்.ராயின் பிரச்சினை என்னவென்றால் அவரது எதிர்ப்பும், ஆதரவும் ஒருதலைப் பட்சமாக இருப்பதுதான். நான் அரசைத்தான் விமர்சிப்பேன், யாசின் மாலிக்களை, மாவோயிஸ்ட்களைப் பற்றி விமர்சிக்கவே மாட்டேன் என்றால்
அதை எப்படி ஐயா ஏற்க முடியும்.
தேச பக்தி என்பது அரசு விசுவாசம் அல்ல. அரசை விமர்சிக்கலாம், தேச பக்தியுடன். அருந்ததியிடமும், அவரது ஆதரவாளர்களிடமும் இல்லாத ஒன்று நாட்டுப் பற்று. அதுதான்
இங்கு தெளிவாகியிருக்கிறது

Muthu said...

anony,

கருத்துக்கு நன்றி.

(ஏனோ அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசப்பக்தி என்ற புகழ்பெற்ற வாசகம் ஞாபகம் வருகிறது)

இந்த வாசகம் சரியா இல்ல ஏதாவது ஸ்பெல்லிங் மிஸ்டேக் விட்டுட்டனா?

Anonymous said...

ஏனோ அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசப்பக்தி
substitute தேசப்பக்தி
with dravidaபக்தி , it is
very right.

Muthu said...

thanks anony

முத்துகுமரன் said...

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் - அரசியல் :-)

Anonymous said...

உள்ளத்தில் உள்ளதை முகமூடி ஏதும் போட்டுக்கொள்ளமல் சொல்லப் போனால் அதுவே தீவிர"வாதம்" உள்ளதை உள்ளபடியே... நாம் வளரும் பொழுது எப்படி பிழைத்துக் கொள்வது என்பதனையும்தான் சேர்த்து ஒரு survival strategy-யாக சிறு குழந்தை பருவம் தொட்டே பழகிக் கொள்கிறோம். அப்படி இருக்கும் பொழுது எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, எந்த பக்கம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து கொள்வதில் வியப்பொன்றுமில்லைதான்.

யாரோ ஒருவர், ராய் அங்கில இனைப்பு வார்த்தையாக "you know, you know" என்பதை இத்தனை முறை பயன்படுத்தி இருப்பதாக வேலையத்துப் போய் உட்காத்து எண்ணி அது எரிச்சலுட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ராய் போன்ற உணர்வுள்ள யாவருக்கும் Emotional ஆவது தவிர்க்க முடியாதது, எனெனில் அவரின் பேச்சுக்கள் சந்தர்ப்ப "வாத" பேச்சுக்கள் கிடையாது, (இங்கு பட்டை அடித்துக் கொண்டு "வன்முறை" பேசும் ஆன்மிகவாதிகள் போல்...) அப்படி இருக்கும் பொழுது வார்த்தைகள் கிடைக்காது தடுமாறும் பொழுது சுவாசிக்கும் ஒரு இடைவெளியே அந்த "you know." இதில்லென்ன நகைச்சுவைக்கோ, இல்லை எரிச்சலுட்டுவதற்கே இருக்கிறது.

காலின் பவல் (அமெரிக்க Defense Secretary) ஈராக்கின் மீது பொய்களை அடுக்கும் பொழுது தட்டு தடுமாறலே இல்லாமல் பேப்பர்களையும், படங்களையும் ஏற்கெனவே திட்டமிட்டு தயாரித்து சொல்ல வந்த பொய்யை சொல்வதற்கு சொல்லும் போது அவர் அசடு வழிவதை தவிர்க்க முடியவில்லை, இருப்பினும் அவர் கையில் வைத்திருந்த அந்த தயாரிப்புகள், diplomatic-ஆக காப்பற்றின.

ஆனால் இங்கு ஒருவர் உண்மையை அடுத்த மனிதரின் மனோநிலையிலிருந்து பேசும் பொழுது, அதனை உணர்ந்தவருக்குத்தான் அந்த காட்சி மனக் கண்ணில் வந்து போகும்... நம்மை போன்ற "வாழ்ந்தாருக்கு மாரடிக்கும்" சந்தர்ப்ப வாதிகளுக்கு அல்லெ.

ராய், கிடைத்த பணத்தைக் கொண்டு எனக்கென்னெ என்று செல்வம் சொல்லும் ஸ்டாக்கில் பணத்தைப் போட்டு எல்லா Elites-களுடன் ஓடியிருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும், ஒருவர் அந்த கூட்டத்தில் "எல்லாம்" இருந்தும் மந்தையிலிருந்து விலகி இருப்பதே இப்பொழுது நானும், நீயும் அவரைப் பற்றி விமர்சிக்கக் காரணம்.

எது எப்படியோ செல்வம்... வுமக்கு வேலை நிச்சயம் நிறையெ பணம் பண்ணலாம், கவலை வேண்டாம்... அதனை அடையெ 'நேர்வழி, குறுக்கு வழி, அப்படின்னு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.' வாயி உள்ள பிள்ளை.........

மீண்டும் அந்த ஆன்மீக வாதி.

ரவி said...

//அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் - அரசியல் :-)//

எல்லாரையும் சொல்லாதீங்க...

Unknown said...

ஏனோ அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசப்பக்தி என்ற புகழ்பெற்ற வாசகம் ஞாபகம் வருகிறது)//

"Politics is the last refuge of scoundrels"

சொன்னவர் ஜார்ஜ் பெர்னார்ட்ஷா

Unknown said...

//உள்ளத்தில் உள்ளதை முகமூடி ஏதும் போட்டுக்கொள்ளமல் சொல்லப் போனால் அதுவே தீவிர"வாதம்" //

அது தீவிரவாத ஆதரவு.தீவிரவாதம் என்பது செயல்,சொல்லல்ல

//உள்ளதை உள்ளபடியே... நாம் வளரும் பொழுது எப்படி பிழைத்துக் கொள்வது என்பதனையும்தான் சேர்த்து ஒரு survival strategy-யாக சிறு குழந்தை பருவம் தொட்டே பழகிக் கொள்கிறோம். //

அப்படி பழகாவிட்டால் பிழைக்க முடியாது.This is true for every living being.

//அப்படி இருக்கும் பொழுது எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, எந்த பக்கம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து கொள்வதில் வியப்பொன்றுமில்லைதான்.//

அதுக்கு பெயர் தான் ஜனநாயகம்.

//யாரோ ஒருவர், ராய் அங்கில இனைப்பு வார்த்தையாக "you know, you know" என்பதை இத்தனை முறை பயன்படுத்தி இருப்பதாக வேலையத்துப் போய் உட்காத்து எண்ணி அது எரிச்சலுட்டுவதாகவும் கூறியிருந்தார்.//

அக்குற்றத்தை இழைத்தவனும் அடியேன் தான்.

//ராய் போன்ற உணர்வுள்ள யாவருக்கும் Emotional ஆவது தவிர்க்க முடியாதது, எனெனில் அவரின் பேச்சுக்கள் சந்தர்ப்ப "வாத" பேச்சுக்கள் கிடையாது, (இங்கு பட்டை அடித்துக் கொண்டு "வன்முறை" பேசும் ஆன்மிகவாதிகள் போல்...) அப்படி இருக்கும் பொழுது வார்த்தைகள் கிடைக்காது தடுமாறும் பொழுது சுவாசிக்கும் ஒரு இடைவெளியே அந்த "you know." இதில்லென்ன நகைச்சுவைக்கோ, இல்லை எரிச்சலுட்டுவதற்கே இருக்கிறது.//

தப்பான விஷயத்துக்கு எமோஷனல் ஆனா எனக்கு எரிச்சல் வரும்.சிரிப்பும் வரும்.என்ன செய்ய?

//ஆனால் இங்கு ஒருவர் உண்மையை அடுத்த மனிதரின் மனோநிலையிலிருந்து பேசும் பொழுது, அதனை உணர்ந்தவருக்குத்தான் அந்த காட்சி மனக் கண்ணில் வந்து போகும்... நம்மை போன்ற "வாழ்ந்தாருக்கு மாரடிக்கும்" சந்தர்ப்ப வாதிகளுக்கு அல்லெ.//

எனக்கும் குண்டு வெடித்து செத்த,வெட்டிக்கொல்லப்பட்டு செத்த ஆயிரக்கணக்கானோரின் நினைவு வருகிறது.அவர்கள் இறந்தது போல இப்போது வாழ்பவர் நிலையும் ஆகக்கூடாது என்பதற்காகத்தான் 'வாழ்ந்தாரை ஆதரிக்கிறேன்"

//ராய், கிடைத்த பணத்தைக் கொண்டு எனக்கென்னெ என்று செல்வம் சொல்லும் ஸ்டாக்கில் பணத்தைப் போட்டு எல்லா Elites-களுடன் ஓடியிருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும்,//

அதெல்லாம் ரிசர்வ் வனப்பகுதியில் பங்களா கட்டி சந்தோஷமாகத்தான் இருக்கிறார்.அதில் எல்லாம் ஒரு குறைச்சலும் இருப்பது போல் தெரியவில்லை.

//எது எப்படியோ செல்வம்... வுமக்கு வேலை நிச்சயம் நிறையெ பணம் பண்ணலாம், கவலை வேண்டாம்... அதனை அடையெ 'நேர்வழி, குறுக்கு வழி, அப்படின்னு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.' வாயி உள்ள பிள்ளை.........//

நன்றி.

இங்கு நேர்வழியில் உழைத்தாலே பிழைக்க ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.

I believe in making money in the old fashioned way.

Muthu said...

யப்பா முத்துகுமரன்,

சேம்சைடு கோலுங்கறது இதுதானா?

பாருங்க நண்பர் செந்தழல் ஆட்சேபிக்கிறார்.

நன்றி செந்தழல் அவர்களே

Muthu said...

selvan,

Bernardshaw ok.தேசபக்தி பத்தி இந்த மாதிரி ஒரு பொன்மொழி இருக்கு.
"அரசு பயங்கரவாதம் தேசபக்திங்கற பெயரில் வரும்" என்பது மாதிரி..எனக்கு சரியா ஞாபகம் இல்லை

Muthu said...

ஆன்மீக அனானி,

அந்த u know வுக்கு நீங்க சொன்ன விளக்கம் எனக்கு ரொம்ப பிடிச்சது.

நாம் ஓரளவு ஒத்த கருத்துடையவர்கள் என்று உங்கள் பின்னூட்டத்தில் தெரிகிறது.கருத்துக்கு நன்றி.

Muthu said...

//ஃஃ//அப்படி இருக்கும் பொழுது எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, எந்த பக்கம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து கொள்வதில் வியப்பொன்றுமில்லைதான்.//

அதுக்கு பெயர் தான் ஜனநாயகம்.ஃஃ//

இது தவறு செல்வன்...

//அதெல்லாம் ரிசர்வ் வனப்பகுதியில் பங்களா கட்டி சந்தோஷமாகத்தான் இருக்கிறார்.அதில் எல்லாம் ஒரு குறைச்சலும் இருப்பது போல் தெரியவில்லை.//

:)))

Anonymous said...

100.

gulf-tamilan said...

100!!??

அசுரன் said...

//அந்த அரசியலுக்கு பெயர் உடன்போக்கு அரசியல். ஆம்.உடன்போக்கு அரசியலுக்கு என்று எந்த தெளிவாக கொள்கையும் இருக்காது. நாடு போகும் போக்கில் உடன்போக்கு கொள்கை போகும். இன்று ஜனநாயகம் வாழ்க என்று குரல் கொடுக்கும்.நாளை முஸ்ராப் மாதிரி ஒரு சர்வாதிகாரி கையில் நாடு சிக்கினால் முஸ்ரப் வாழ்க என்று முதல் குரல் கொடுக்கும் குரலாகவும் இந்த உடன்போக்கு அரசியல்தான் இருக்கும்.உடன்போக்கு அரசியலின் ஒரே நோக்கம் தன் நிலையை காத்துக்கொள்வதுதான்.//


//$elvan you are still an baby when it comes to politics. get real. அறவழியோடு போராட அழைக்கும் உங்களுக்கு அணுக்குண்டு என்ன காந்தித்தாத்தா ராட்டையின் லேட்டஸ் வர்ஷனா தெரிகிறதா? பிபிசில்லாம் ரெபர் பண்ண சொல்றீங்க. மாவோயிஸ்ட் பத்தித்தான் தொடர்ச்சியா வருகிறதே வாசிச்சி பாருங்களேன் ஏன் அவுங்க ஆயுதம் தூக்கினாங்கின்னு.

மற்றபடி தீவிரவாதிகள் புனித காரணங்கள் செபூல்வார்கள்.புனிதமா இல்லையா, நியாயமா இல்லையா என்பதையும் நாம் பார்க்கத்தான் வேண்டும்.(நேதாஜீயும் வன்முறை பேபூராட்டம்தான் செய்தார்.விடுதலைபுலிகளும் வன்முறை பேபூராட்டம்தான் செய்கிறார்கள்)//

//விவசாயம் என்பது அவசியமாகிப் போனபோதே நவீனரக ட்ராக்டர் போன்றவைகளும் அவசியமாகிப் போனது.//


நேதாஜி விசயத்தில் $சல்வனின் அறச் சீற்றத்தை கவனித்தீர்களா முத்து.... இப்பொழுது தேவர் விசயத்தில் $சல்வனின் அடிப்படையற்ற வெறுப்பின் பின்னணி பற்றிய எனது சந்தேகம் அதிகமாக வலுப்படுகிறது.


// தத்துவ ரீதியில் ஒரு கற்பனாவாத நிலையில்தான் அவர் இருப்பதாக நான் கருதுகிறேன். அவர் அமெரிக்காவில் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்வதால், அவருடனான ஒரு உரையாடலில் நான் பொருள் முதல்வாதம் (மெட்டிரியலிசம் ) குறித்து கூறியபோது, அவர் அதை பற்றி கேட்டுள்ளேன். ஆனால் படிக்கவில்லை என்று கூறியிருந்தார். அதாவது, அமெரிக்கர்கள் மிகவும் உஷாரானவர்கள் எது சமூகத்தை முன்னேற்றுமோ, எது சமூக மாற்றத்தை கொண்டு வருமோ அதை மிக அழகாக தவிர்திடச் செய்திடுவர். ஆனால், அந்த இடத்தில் அதைவிட அழகான மாயாவாதம் ஒன்றை திணித்து பிரம்மிப்பை ஊட்டுவர். எனவே நன்பர் செல்வன் அமெரிக்க தத்துவ மாயா வாதத்தில் சிக்கி தவிக்கிறாரோ என்று தோன்றுகிறது.//

அது மட்டுமல்ல அவரிடம் பின் நாவீனத்துவத்தின் பாதிப்பும் உண்டு(அந்த வகையில் சந்திப்பின் - மாயவாதம் அவரை பாதித்திருக்கும் என்ற கருத்தில் எனக்கும் ஒப்புதலே), அதனால்தான் எந்த வார்த்தையையும் தனக்கு பிடித்த வகையில் பொருள் கூறி தான் பிடித்த முயலுக்கு எட்டு கால் என்று வாதிடும் போக்கு Selvanidam உள்ளது.


//உள்ளத்தில் உள்ளதை முகமூடி ஏதும் போட்டுக்கொள்ளமல் சொல்லப் போனால் அதுவே தீவிர"வாதம்" உள்ளதை உள்ளபடியே... நாம் வளரும் பொழுது எப்படி பிழைத்துக் கொள்வது என்பதனையும்தான் சேர்த்து ஒரு survival strategy-யாக சிறு குழந்தை பருவம் தொட்டே பழகிக் கொள்கிறோம். அப்படி இருக்கும் பொழுது எந்த பக்கம் காற்று அடிக்கிறதோ, எந்த பக்கம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறதோ அந்த பக்கம் சாய்ந்து கொள்வதில் வியப்பொன்றுமில்லைதான்.

யாரோ ஒருவர், ராய் அங்கில இனைப்பு வார்த்தையாக "you know, you know" என்பதை இத்தனை முறை பயன்படுத்தி இருப்பதாக வேலையத்துப் போய் உட்காத்து எண்ணி அது எரிச்சலுட்டுவதாகவும் கூறியிருந்தார்.

ராய் போன்ற உணர்வுள்ள யாவருக்கும் Emotional ஆவது தவிர்க்க முடியாதது, எனெனில் அவரின் பேச்சுக்கள் சந்தர்ப்ப "வாத" பேச்சுக்கள் கிடையாது, (இங்கு பட்டை அடித்துக் கொண்டு "வன்முறை" பேசும் ஆன்மிகவாதிகள் போல்...) அப்படி இருக்கும் பொழுது வார்த்தைகள் கிடைக்காது தடுமாறும் பொழுது சுவாசிக்கும் ஒரு இடைவெளியே அந்த "you know." இதில்லென்ன நகைச்சுவைக்கோ, இல்லை எரிச்சலுட்டுவதற்கே இருக்கிறது.

காலின் பவல் (அமெரிக்க Defense Secretary) ஈராக்கின் மீது பொய்களை அடுக்கும் பொழுது தட்டு தடுமாறலே இல்லாமல் பேப்பர்களையும், படங்களையும் ஏற்கெனவே திட்டமிட்டு தயாரித்து சொல்ல வந்த பொய்யை சொல்வதற்கு சொல்லும் போது அவர் அசடு வழிவதை தவிர்க்க முடியவில்லை, இருப்பினும் அவர் கையில் வைத்திருந்த அந்த தயாரிப்புகள், diplomatic-ஆக காப்பற்றின.

ஆனால் இங்கு ஒருவர் உண்மையை அடுத்த மனிதரின் மனோநிலையிலிருந்து பேசும் பொழுது, அதனை உணர்ந்தவருக்குத்தான் அந்த காட்சி மனக் கண்ணில் வந்து போகும்... நம்மை போன்ற "வாழ்ந்தாருக்கு மாரடிக்கும்" சந்தர்ப்ப வாதிகளுக்கு அல்லெ.

ராய், கிடைத்த பணத்தைக் கொண்டு எனக்கென்னெ என்று செல்வம் சொல்லும் ஸ்டாக்கில் பணத்தைப் போட்டு எல்லா Elites-களுடன் ஓடியிருந்தால் எல்லாம் சரியாக இருந்திருக்கும், ஒருவர் அந்த கூட்டத்தில் "எல்லாம்" இருந்தும் மந்தையிலிருந்து விலகி இருப்பதே இப்பொழுது நானும், நீயும் அவரைப் பற்றி விமர்சிக்கக் காரணம்.

எது எப்படியோ செல்வம்... வுமக்கு வேலை நிச்சயம் நிறையெ பணம் பண்ணலாம், கவலை வேண்டாம்... அதனை அடையெ 'நேர்வழி, குறுக்கு வழி, அப்படின்னு ஒரு மண்ணாங்கட்டியுமில்லை.' வாயி உள்ள பிள்ளை.........

மீண்டும் அந்த ஆன்மீக வாதி.//

அனானி சிறப்பாக வாதாடியுள்ளார்.

மற்றபடி இந்த பதிவு $சல்வனை புரிந்து கொள்ள உதவுகிறது.

அவரது உடன்போக்கு அரசியல் என்ற ஆளும் வர்க்க அரசியலை முத்து தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார்(உடன்போக்கு என்றால் மோசமான அர்த்தம் வருமே?). இதன் காரணமாகத்தான் அவரால் GAT பத்தியும் வருத்தப்பட்டு எழுத முடிகிறது. இதை populous politics(தமிழில் டக் என்று ஞாபகம் வரமாட்டேன்கிறது, சந்திப்புக்கு தெரிய வாய்ப்புண்டு) என்றும் சொல்வார்கள்.


சந்திப்பு செல்வனின் தத்துவ பலகீனத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

அனானி அவரது போலி விவாதத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.

சிறப்பான பதிவு


நன்றி,
அசுரன்

அசுரன் said...

//விவசாயம் என்பது அவசியமாகிப் போனபோதே நவீனரக ட்ராக்டர் போன்றவைகளும் அவசியமாகிப் போனது.//


சும்மா SK வுக்கு ஒரு உள்குத்து வைக்கலாமுனுதான் அந்த வரிகளை காப்பி செய்தேன் ஆனால் மறந்துவிட்டேன்.

இப்போ உள்குத்து:

அதெல்லாம் சரிதான் SK - விவசாயம் இருந்தால் டிராக்டர் இருக்கும்.

But, பாரின்ல ஏரோப்ளேன்ல விவசாயம் பன்றான். பல லட்சம் ஏக்கரல் பன்றான். இன்னும் இங்க துண்டு துக்கடாவா நிலத்துல பன்னிக்கிட்டு இருக்கானே? ஏன் SK? இதற்க்கு ஆன்மிக புத்தகங்களின் ஏதேனும் விளக்கம் உள்ளதா?

விவசாயத் துறையை நவீனப்படுத்தும், அனுகுண்டைவிட ஆபத்தான வேலையை ஏன் எந்த அரசும் செய்யவில்லை. விவசாயியை விரட்டாமல் இந்த வேலையை இந்தியாவில் செய்ய ஒரு ஐடியா கொடுங்களேன். நீங்கதான் எல்லா விசயங்க்ளப் பத்தியும் ஒரு கருத்து வைச்சிருப்பீங்களே?

நன்றி,
அசுரன்

Muthu said...

அசுரா,

ஏங்க..எஸ்.கே ஐயாவை சீரியசா எடுத்துகிட்டு...விடுங்க :))

அப்புறம் மனதை புண்படுத்தறீங்கன்னு ஆரம்பிச்சுடுவாங்க..:))