Sunday, May 30, 2010

பொதுக்குழு கூட்டல.....ஓட்டெடுப்பு நடத்தல.....

வரலாற்று கடமையை நிறைவேற்ற வந்து விட்டேன் :)

தமிழர் வாழ்வு காக்கவே அவதரித்த டாக்குடர் அய்யா கடைசியாக கருணாநிதி காலில் விழுந்துவிட்டார். இது முதலும் அல்ல. கடைசியும் அல்ல. கலைஞர் அண்ணன் உருவிய கோவணத்தை திரும்ப தந்துவி்ட்டாராம். கோவணத்தை மீட்ட மாவீரன் வாழ்க.


நமக்கு தோணிய சில சந்தேகங்களும் எதிர்காலத்தில் நடக்கப்போகும் சில நிகழ்வுகளும்.....


கூட்டணி திரும்பவும் வைக்க எந்த பொதுக்குழு கூடியது? ஓட்டெடுப்பு நடந்ததா?

காடுவெட்டி குரு இவ்வளவு அவமானத்திற்கு அப்புறமும் எப்படி அரசியல் செய்வார்? சரி சரி ராமதாசே அரசியல் செய்யும்போது அவருக்கு என்னங்கறீங்களா? விடுங்க..

எல்லாவற்றிற்கும் மேலாக ராஜ்யசபா சீட் 2011க்கு அப்புறம் என்று நேற்று செய்தி கேட்டதும் எனக்கு சிரித்து சிரித்து விக்கலே வந்துவிட்டது. இது உண்மையா? இல்ல கலைஞர் நக்கல் அடிக்கிறாரா என்றே தெரியவில்லை. இதைவிட ஒரு கட்சிக்கு பெரிய அவமானம் எதுவுமே இல்லை. ஆனா டாக்குடர் இதுக்கெல்லாம் அசைய மாட்டார். சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரம் திரும்பவும் அன்புச்சகோதரியுடம் பேச்சு வார்த்தை நடக்கும்.எப்படி பா.ம.க அடிமட்ட தொண்டர்கள் திமுகவை வெறுக்கிறார்கள் என்று அடிபொடிக்ள ஆதாரக்கட்டுரை எழுதுவார்கள்.என்ன கொடுமை சார் இது?

நாளைக்கு அய்யாவின் அறிக்கை மற்றும் ( அனேகமாக அந்த 2011 சீட் விவகாரத்தை டாக்குடர் அய்யா ரசிக்க மாட்டார்.என்ன பண்றது அய்யா? நம்ம _______ அப்படி?) பதிலை பார்த்துவிட்டு மீதி படத்தை ஓட்டலாம்.

3 comments:

Anonymous said...

நாளைக்கே நாங்க அதிமுக கூட்டணிக்கு போவோம். ஏன் விஜயகாந்த் கூடவும் சேருவோம். -பசுமை தொண்டன்

உண்மைத்தமிழன் said...

அதான பார்த்தேன். கட்சி எப்பேர்ப்பட்ட சிக்கல்ல மாட்டிருக்கு. இந்த நேரத்துல உயிருக்கு உயிரான உடன்பிறப்பு வரலையேன்னு நினைச்சேன்..

வந்துட்டீங்கண்ணே..!

நீங்கதாண்ணே உண்மையான உடன்பிறப்பு..!

Muthu said...

அப்படீங்களா உண்மைத்தமிழன் அண்ணாச்சி,

அம்மாகிட்ட சொல்லி ஏதுனாச்சும் போட்டுதர சொல்றன்..அப்படியே மெயின்டைன் பண்ணுங்க....

உங்க வயிறு எரிஞ்சா நல்லவங்களுக்கு நல்லதுதானே :) தமாசு தமாசு..