Sunday, May 17, 2009

டிட் பிட்ஸ் - சில சுவையான தகவல்கள்

ராஜ கண்ணப்பனை பார்க்கவே பரிதாபமாக உள்ளது. சிதம்பரம் ராஜ்யசபா எம்பியாக கூட ஆகலாம். கண்ணப்பன் என்ன செய்வார் பாவம்? ஏதோ நடந்திருக்கிறது.

விஜயகாந்த் 100 கோடி முதல் 220 கோடி வரை காங்கிரசிடம் வாங்கிக்கொண்டு தான் தனியாக தேர்தலை சந்தித்ததாக தமிழகத்தில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் சராசரியாக 60000 ஓட்டு வாங்கியுள்ளார் கேப்டன். ஏழைகள் தேர்தலில் நிற்க முடியாது என்று ஸ்டேட்மென்ட் விட்டுள்ளார் கோடீஸ்வர வேட்பாளர்களை கொண்ட கல்லூரி அதிபர் விஜயகாந்த். இருந்தாலும் அவர் தில்லை நான் பாராட்டுகிறேன். திமுக ஓவராக ஆடினால் விஜயகாந்த் பக்கம் தமிழக மக்கள் திரும்பினாலும் தவறிலலை என்றுதான் நான் நினைக்கிறேன்.

பா.ம.கவினருக்கு ஆப்பை அதிமுகவும் திமுகவும் பேசி வைத்துக்கொண்டே சொருகியதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தங்கபாலு அவரே ஆப்பில் போய் அமர்ந்துக்கொண்டதாக நாடார் சங்கத்தினரும் காங்கிரசு கட்சியினரும் தெரிவிக்கின்றனர்.

தோழர்களுக்கு ஒரே கேள்வி. திமுக வையும் அதிமுக வையும் எதிர்த்தே மூன்றாவது சக்தியாக வந்துள்ள விஜயகாந்த் இரண்டே தேர்தலில் 10 சதவீத வாக்கு வாங்கும்போது பல வருடமாக கட்சி நடத்தும் நீங்கள் ஏன் விஜயகாந்த வீட்டு வாசல், ஜெ வீட்டு வாசல் என்று காவல் காக்கிறீர்கள்?
சந்திப்பு அப்ஸ்காண்ட் என்று எனக்கு தெரியும். தேசிய அளவில் ஆப்பு என்றால் சும்மாவா என்ன?

நக்கீரன் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு நன்றாக வந்துள்ளது. வாழ்த்துக்கள்.

சில கலக்கலான சம்பவங்கள். வட மாவட்ட ஒன்றில் திமுகவினர் பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணத்தை பா.ம.கவினர் கைப்பற்றி வெற்றி பெருமிதப்பட்டனராம். ஆனால் அது நெல் விற்ற பணம் என்றும் திருடப்பட்டது என்றும் உடன்பிறப்பு புகார் கொடுக்க சம்பந்தப்பட்ட பா.ம.கவினர் கைது செய்யப்பட்டனராம்.


கடைசிகட்டத்தில் அதிமுகவும் பா.ம.கவும் பணத்தை இறக்கிவிட்டாலும் பட்டுவாடா செய்யும் தொழில்நுட்ப திறனும் ஆள்பலமும் இல்லாமல் போயிற்றாம்.


கொங்குமுன்னேற்றபேரவை சில ஓட்டுக்களை வாங்கியுள்ளது. கள்ளக்குறிச்சி தொகுதியில் நின்ற ரமேஷ் என் பள்ளித்தோழன். எல்.கே.ஜீ முதல் 12 ம் வகுப்பு வரை. சுமார் பதினைந்தாயிரம் ஓட்டு வாங்கியுள்ளான். எல்லா கவுண்டர்களும் சாதி பார்த்து ஓட்டு போடவில்லை என்று தெரிகிறது.இந்த சமூகத்தினர் பா.ம.கவை பார்த்து அது போல் தாங்களும் ஆகவேண்டும் என்றே அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளனர். பி.சி.ஆர் சட்டம் ஒழிப்பு ( தலித்துக்கள் இவர்கள் மேல் பொய் புகார் கொடுப்பதை தடுக்கணுமாம்), கள் இறக்க அனுமதி ( காட்டை வித்து கள்ளை குடிச்சாலும் ஹிஹி ) போன்ற உயரிய கொள்கைகளோடு களத்தில் இறங்கினர். சட்டசபை தேர்தலிலும் கலக்குவோம் என்கிறார்கள். ஜனநாயகம் நாடு. அவங்களுக்கும் உரிமை உண்டு.

ஆங்கில தொலைக்காட்சி பரதேசிகள் இன்னமும் திமுக வெற்றியை ஜீரணிக்கமுடியாமல் கழிந்துக்கொண்டி இருக்கின்றனர். ( வார்த்தை பிரயோகம் கேவலமாக தான் இருக்கிறது.ஆனால் காண்டு அதற்கு மேல் உள்ளது). எல்லா ஆங்கில சேனலிலும் வந்துகொண்டிருந்த அதிமுக தகவல் தொடர்பாளர் சோவை காணோம். அடுத்த துக்ளக் இதழ் படிக்க நான் ஆவலாக உள்ளேன்.


அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர். திமுக அது போல் லூசுத்தனங்களை செய்யக்கூடாது. கனிமொழி அன்புமணியின் இலாகாவை வாங்கலாம் என்று நான் நினைக்கிறேன்.


இந்த கூட்டணி வென்றதை வைத்து இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிடவே கூடாது என்று மக்கள் கூறுவதாக மத்திய காங்கிரஸ் கேனத்தனமாக எடுத்துக்கொள்ளாது என்று நினைக்கிறேன். கருணாநிதி இந்த விஷயத்தில் உணர்ச்சிவசப்பட்ட விமர்சனங்களை புறந்தள்ளி செயலாற்ற வேண்டும்.

5 comments:

மதுரைசிங்கம் said...

மு.க.அழகிரி மந்திரியா? அடங்க மாட்டியா நீ?

Darren said...

//அழகிரி மத்திய அமைச்சராவார் என்று பேதி கிளப்புகின்றனர்.//


Railway minister.

Anonymous said...

அன்றைக்கும் இன்றைக்கும் நக்கி பிழைப்பவர்கள் யார் என்று எல்லோருக்கும் தெரியும் அன்று எம்ஜிஆரை நக்கி பிழைத்தார்கள் இன்று ஜெயலலிதாவை

Anonymous said...

அழகிரி போக்குவரத்து துறையை கேட்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லக்கிலுக் said...

அஞ்சாநெஞ்சனுக்கு ராணுவ அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும். ராஜபக்‌ஷே கொட்டை நசுக்கப்பட வேண்டும்.