Thursday, July 16, 2009

துரோகிகள் பலவிதம் - ஆதவன்,சுகுணா மற்றும் பலர்

பாகம் 1


புலிகளை விமர்சிப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். ஜெயமோகனும்,சாருவும் சாத்வீக யோகிகளாக மாறி ஒத்த கருத்தினை சொலகிறார்கள்.ராயகரன்,சிரிரங்கன்( ம.க.இ.க போன்ற) அவர்கள் ஒரு பார்வையில் விமர்சிக்கிறார்கள். அ.மார்க்ஸ் முதலானவர்கள் ஒரு புறம்...

தமிழ்நதிக்கும் ஆதவனுக்குமான பிரச்சினையை பார்க்கும்போதும் சரி, சுகுணாவின் பதிவினை பார்க்கும்போதும் சரி, பலரும் இன்று தங்களை தங்கள் நிலைப்பாடுகளை காத்துக்கொள்வதற்காகவே இந்த போராட்டத்தின் தோல்விக்கான காரணங்களை பற்றி பேசக்கூடாது என்று மற்றவர்களுக்கு வாய்ப்பூட்டு போடுகிறார்கள் என்றே தோன்றுகிறது.துரதிஷ்டவசமாக தமிழின போராட்டம் ஒரு மாபெரும் பின்னடைவை சந்தித்திருப்பது இவர்களுக்கு ஒரு காரணமாகிவிட்டது.

ஆனால் எத்தனை காலம் இதை பேசாமல் நாம் இருக்கமுடியும்? ஆதவன் - தமிழ்நதி விவாதத்தில் ஆதவன் "நேற்று விமர்சித்த போது களத்தி்ல் இருக்கிறார்கள் என்றீர்கள். இன்று விமர்சித்தால் துக்கத்தில் இருக்கிறேன் என்கிறீர்கள், எப்போது இதை பேசமுடியும்?" என்று எழுதுகிறார். அவர் கண்டிப்பாக மானுட விரோதி அல்ல அவர்.மனு விரோதி மட்டுமே. "நான் ஒரு மனு விரோதன்" என்று புத்தகம் எழுதி பின்னர் தம்மையறியாமலே ஆணாதிக்க சிந்தனை தமக்கு வருகிறது என்று கூறி "நான் ஒரு மனு விரோதி" என்றுதான் தன் புத்தகம் இருந்திருக்க வேண்டும் என்று பேசியதாக கேள்விப்பட்டேன். அது போலத்தான் உணர்ச்சிவசப்பட்டு தலைவிரிக்கோலம் போன்ற வார்த்தைகளை விட்டுவிட்டார்.அதற்காக அவர் கேட்ட கேள்விகளை நாம் புறந்தள்ளமுடியாது.


ஒரு வகையில் பார்த்தோமென்றால் புலிகளின் மேல் நாம் வைத்த இந்த விமர்சனமற்ற ஆதரவு(கண்மூடித்தனமான ஆதரவு) வெளியுலக சிந்தனையை, ஒரு வெளிப்படையான பார்வையை புலித்தலைமைக்கு தராமல் தடுத்தது என்றும் எனக்கு தோன்றுகிறது. இதற்கு நாம் அனைவரும் கூட்டு பொறுப்பு எடுக்க வேண்டும். புலம்பெயர் தமிழர்களுக்கு புலிகளுக்கு அனைத்து வகையான சப்போர்ட்டும் தந்து வருகிறவர்கள் என்ற வகையில் அதிக பொறுப்பு இருந்தது.


அவர்கள் கள நிலையை புரிந்துக்கொள்ளவில்லை.தமிழக தலைவர்களை திட்டுவது, பிறகு(தேர்தலுக்கு பின்) தமிழர்களையே திட்டுவது என்றும் தான் இருந்தது. இதில் புலி ஆதரவாளர் என்று பெயர் எடுத்த நார்வே தலைவர் எரிக் சோல்கமும் தப்பவில்லை.


தமிழக தமிழர்களின் அழுத்தததையே புலிகளும் நம்பி இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதிலேயே பல உள்சிக்கல்கள் இருக்கின்றன.ராஜீவ் கொலையில் ஆரம்பித்து, தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற அரசியல் தலைவர்களிடம் புலிகளுக்கு உள்ள உறவு ( அமிர்தலிங்கத்தை கொல்ல வேண்டாம் என்று கருணாநிதி கேட்டுக்கொண்டும் அவர் கொல்லப்பட்டாராம் - குழலி பதிவில் பார்த்த ஒரு தகவல்) வரை பல விஷயங்களை பேசலாம்.மொத்தத்தில் இங்குள்ள நிலைமையை புலித்தலைமைக்கு எடுத்து சொல்லும் பொறுப்பு ஒரு விருப்பு வெறுப்பற்ற நடுநிலையாளருக்கே இருக்கும்.நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் அந்த தகுதி கிஞ்சித்தும் கிடையாது.


என்னளவில் கிளிநொச்சி விழ்ந்தபோதே புலிகளுக்கு போரின் போக்கு பிடிபட்டிருக்கவேண்டும்.புலிகள் மட்டும் மக்களை விட்டுவிட்டு பின்வாங்கி முல்லைத்தீவிற்கோ மற்ற பகுதிக்கோ வந்திருக்கலாம். மக்களுக்கான போராட்டம் என்பது மக்களை விலையாக வைத்தோ பிணையாக வைத்தோ நடத்தப்படக்கூடாது. ஐ.பி.கே.எஃப் தோற்றோடியதற்கு காரணம் அப்போது மக்களோடு கலந்து இருந்து போராடினர்கள் புலிகள்.


இலங்கையை சேர்ந்த ஒரு தமிழ் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள இந்த பதிவை பாருங்கள். இதில் உள்ள அனைத்தும் உண்மை என்று நான் சொல்லவில்லை. என்னுடைய சோர்ஸ் என்று கூறி அவர் சிலவற்றை கூறியிருக்கிறார். இதில் தமிழக மத்திய அமைச்சர் ( சிதம்பரம்?) மூலமாக கடைசி கட்ட பேசசுவார்த்தை நடந்தததாகவும் அப்போது புலிகள் நெடுமாறன் மற்றும் வைகோ பேச்சை கேட்டு அநத பேச்சுவார்த்தையை விட்டும் விலகியதாகவும் ஜெயராஜ் கூறுகிறார். தேர்தலி்ல் காங்கிரஸ் தோற்றால் இலங்கை ராணுவத்தின் நடவடிக்கை நிற்கும் என்று நம்பும் அளவிற்கு புலிகளை கொண்டு போனது யார்?அத்வானியே வென்றிருந்தாலும் கடைசி நாளில் குண்டு போட்டு முதலல மேட்டரை முடிங்க அப்புறம் பேசலாம் என்றுதான் கூறியிருப்பார்.இதை யாரும் யூகிக்கலாம்.ஏனென்றால் போரை நடத்துவது இந்திய அரசாங்கம்.காங்கிரஸ் அரசாங்கம் அல்ல.இப்படி கூறுவது தகவல் மட்டுமே.அரசுக்கான ஆதரவு ஆகாது.


இன்று வரை பிரபாகரன் மரணம் என்று இலங்கையோ இந்தியாவே அறிவித்ததற்கும் இப்போது புகைப்படம் மற்றும் வீடியோ ஆதரத்தோடு கொடுப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் இன்றும் மக்களை மாக்கான்களாக நினைத்துக்கொண்டு பேசுவது அருவெறுப்பாக இருக்கிறது.


என்னளவில் இந்திய அரசாங்கம் சரி என்றோ, புலியை விமர்சிப்பவர்கள் கூறுவது எல்லாம் சரி என்றோ கூற முடியாவிட்டாலும், புலிகள் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதும் தங்கள் மேல் சிங்களருக்கு உச்சக்கட்ட பயம் இருந்த காலத்தை சரியாக பயன்படுத்தாததும் (பேச்சுவார்த்தை காலம்) மிக தவறானது.

3 comments:

Thamiz Priyan said...

///நெடுமாறன்,வைகோ போன்றவர்கள் இன்றும் மக்களை மாக்கான்களாக நினைத்துக்கொண்டு பேசுவது அருவெறுப்பாக இருக்கிறது.///
உடன்படுகின்றேன்.. அழிவை நோக்கித் தள்ளிய மேதாவிகள் இவர்கள்..:((

Saravanan's blogs said...

Dear friend,
Its good to see so many now debates about the issue in blogs.
Let me clear something.When you are out to criticize someone, it should be balanced. And further more, what is the point in saying nedumaran and vaiko made us fools, since politicians are professional people to make us fools.
Would you able to direct the same comment to Vaiko and Nedumaran, I am ready to give their mobile numbers?

Muthu said...

saravanan,

please give their mobile number and at the same time give my blog address to them.