பல மாதங்களாக திமுகவை ஆதரித்துக்கொண்டு இருந்த ஆனந்தவிகடன் குழுமம் இப்போது ஆளுங்கட்சியை தாக்கி எழுத ஆரம்பித்துவிட்டது. நககீரன் கோபாலுக்கு எப்ப புத்தி வரும்னு தெரியவில்லை. எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. அது எண்பதுகளின் இறுதி அல்லது தொண்ணூறுகளின் ஞாபகம்.பத்தாவதோ என்னவோ படிக்கிறேன். நான் இந்த ஜீ.வி, தராசு,(நக்கீரன் அப்போது இருந்ததா என்று ஞாபகம் இல்லை) எல்லாம் படிக்க ஆரம்பித்த நேரம். ஒரு ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நான் என் தந்தையிடம் கேட்டேன்.
“என்னப்பா இது இந்த ஜீ.வி, தராசு எல்லாம் திமுக ஜெயிக்கறதுக்கு முன்னாடி கருணாநிதியை பாராட்டி எழுதினாங்க.இப்ப திட்டி எழுதறாங்க”
”எப்பவும் பத்திரிக்கைங்க ஆள்றவங்களை எதிர்த்துத்தான் கண்ணு எழுதணும்” என்றார் என் தந்தை ( anti-establishment என்ற வார்த்தையை உபயோகப்படுத்தினார்). சரியான உதாரணமாக எக்ஸ்பிரஸ் குழுமத்தை கூறினார்.
நல்லாத்தான் போய்கிட்டு இருந்தது. துக்ளக் சோ மாதிரி ஆளுங்க திமுக மாதிரியான கட்சிங்க எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதைப்பற்றியே தாக்கி எழுதறதை ஒரு பக்கம். அவர் தான் ஒரு தலைமுறையின் கோபத்தையும் ஆற்றுப்படுத்தும் புனிதப்பணியை செய்து வருகிறார். விடுங்க.
ஆனால் தமிழகத்தின் பல பத்திரிக்கைகளும் இப்போது சைடு எடுத்துவிட்டன.இந்த நக்கீரன் கோபால் ரொம்ப ஜால்ரா தட்டுகிறார். ஆட்சி மாற்றம் நடந்தால் கோபாலுக்கு விழும் ஆப்பு மிக ஆழமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. காசு பணம் சோ்ந்தாலே மனுசனோட கொள்கை கருமம் எல்லாம் காணாம போயிடுது. நெடுமாறன் பொசிசன் எடுத்துட்டாரு ( இவர் பத்திரிக்கை நடத்துல). இவர் தப்பிச்சாரு. காட்டுராஜா பணத்தை இவரே வச்சிக்கலாம்.ஒண்ணும் பிரச்சினை இல்லை. என்ன கொடுமைடா சாமி?
Sunday, March 27, 2011
Subscribe to:
Post Comments (Atom)



0 comments:
Post a Comment